"ஆசையையாய் ஒரு பொருளை
என் கண்கள் தழுவிநின்றாலே
அடுத்த நொடி
என் கரங்களில் வைத்திடுவார் அதை"
"கனவுகளில் வரும்
குட்டி தேவதையின் வாழ்க்கை போல்
துயரின்றி சென்றது வாழ்க்கை"
"துயரமாய் வந்தது ஒரு நாள்
நான் கண்விழிக்கையிலே
கனவிலும் கெட்ட சொப்பனம் காணவில்லை அன்று
அப்பா அவர் கைவிட்டுச்செல்லுவார் என்று"
"வீட்டினுள் நுழைகையிலே
நிறுத்தாமால் அழைப்பார் என் பெயரை
நிதமும் கேட்கும் அழைப்பு
நிற்கையிலே நெஞ்சு அடைத்தது எனக்கு"
"உயிர் பிரியும் நொடி கூட
என் மடி சாய்ந்து
என் கண்ணீர் கண்டு
அப்பாவிற்கு ஒன்றும் இல்லை எனக்கூறிய
அன்பிற்கு ஈடில்லை இல்லை இவ்வுலகில்"
"மண்ணில் பிறந்த மனிதனுக்கு
மரணம் நிச்சயம் தான்
மனம் அதை ஏனோ ஏற்க மறுக்கிறது
பாசம் வந்து பாதிவழியிலே தடுத்திடுவதால்"
"ஆயிரம் உறவுகளின் அரவணைப்பு இருப்பினும்
அன்பு மனம் தான் ஏங்குகிறது அப்பாவிற்காக"
"அறியாதவை எல்லாம்
அறிந்து கொண்டேன் அவரின் இழப்பில்"
"தனியே என்னை தரணியில்
என் அப்பா விட்டு சென்றது கூட
தன்னம்பிக்கை வளர்க்கத்தான் என
தாமதமாய் தான் தெரிந்து கொண்டேன்"
"தைரியமாய் நிற்கிறேன் இன்று
தவறுகள் நடக்கும் இடத்தில் தட்டிகேட்டு
தந்தையை இழந்தவள் இவள் எனும் பெயரை மாற்றி
இவள் தைரியமானவள் எனும் அடைமொழிகொண்டு"
"எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும்
இதயம் வந்துவிட்டது என்னிடத்தில்
என் மிகப்பெரிய இழப்பின் பின்னால்"
"கண்ணீரும்
தோல்விகளும்
சோகங்களும் கண்டு துவண்ட போது எல்லாம்
தோள் கொடுக்க தோழன் போல்
தந்தை உள்ளார் என்ற நம்பிக்கையில்
மழையில் நனைந்த கோழிக்குஞ்சாய்
அப்பாவின் அரவணைப்பில் இருந்தேன்"
"இன்று அரவணைக்க
அப்பா இல்லை என்பதால்
அழுகையையும் அடக்கிகொள்கிறேன்
அஞ்சாமல் நிற்கிறேன்
அதனால் தான் என்னவோ
தோல்விகளும் என்னை கண்டால் தூரமாய் செல்கிறது"
"அன்புள்ள அப்பா
அவனியிலே ஈடேதும் இல்லை உன் அன்பிற்கு
உன் இழப்பை விட
ஏதும் பெரிய துயரில்லை எனக்கு
என் மடி மீது உன் உயிர் பிரிந்த கணத்தைவிட
பெரிய நரகத்தை நான் அனுபவிக்க போவதில்லை"
"நீங்கள் விட்டு சென்ற இடத்தில்
வழியும் கண்ணீரின் விழி கொண்டு தேடினேன்
ஒரு வழி
வாழ்க்கைப்பாதை அதில் சென்றால்
வளமாகும் என்ற நம்பிக்கையோடு பயணிக்கிறேன்"
"அன்புள்ள அப்பா
உன் ஆன்மா ஏதேனும் ஒரு இடத்தில் நின்று
என்னை காத்துநிற்கும் என்ற நம்பிக்கையோடு
நாளைய விடியலிலே
நான் உன் மகள் என நிறுபிப்பேன் அப்பா"
"நிழனான நிரந்தரமற்ற உறவுகளுக்கு மத்தியில்
ஒரு நாள் உன் மகளின் புகழை உலகு அறியும்
அன்று கூறுவேன் அப்பா அனைவரின் முன்பும்
வெற்றியெல்லாம் என் அன்புள்ள அப்பாவிற்கு அர்ப்பணம் என்று"
என் கண்கள் தழுவிநின்றாலே
அடுத்த நொடி
என் கரங்களில் வைத்திடுவார் அதை"
"கனவுகளில் வரும்
குட்டி தேவதையின் வாழ்க்கை போல்
துயரின்றி சென்றது வாழ்க்கை"
"துயரமாய் வந்தது ஒரு நாள்
நான் கண்விழிக்கையிலே
கனவிலும் கெட்ட சொப்பனம் காணவில்லை அன்று
அப்பா அவர் கைவிட்டுச்செல்லுவார் என்று"
"வீட்டினுள் நுழைகையிலே
நிறுத்தாமால் அழைப்பார் என் பெயரை
நிதமும் கேட்கும் அழைப்பு
நிற்கையிலே நெஞ்சு அடைத்தது எனக்கு"
"உயிர் பிரியும் நொடி கூட
என் மடி சாய்ந்து
என் கண்ணீர் கண்டு
அப்பாவிற்கு ஒன்றும் இல்லை எனக்கூறிய
அன்பிற்கு ஈடில்லை இல்லை இவ்வுலகில்"
"மண்ணில் பிறந்த மனிதனுக்கு
மரணம் நிச்சயம் தான்
மனம் அதை ஏனோ ஏற்க மறுக்கிறது
பாசம் வந்து பாதிவழியிலே தடுத்திடுவதால்"
"ஆயிரம் உறவுகளின் அரவணைப்பு இருப்பினும்
அன்பு மனம் தான் ஏங்குகிறது அப்பாவிற்காக"
"அறியாதவை எல்லாம்
அறிந்து கொண்டேன் அவரின் இழப்பில்"
"தனியே என்னை தரணியில்
என் அப்பா விட்டு சென்றது கூட
தன்னம்பிக்கை வளர்க்கத்தான் என
தாமதமாய் தான் தெரிந்து கொண்டேன்"
"தைரியமாய் நிற்கிறேன் இன்று
தவறுகள் நடக்கும் இடத்தில் தட்டிகேட்டு
தந்தையை இழந்தவள் இவள் எனும் பெயரை மாற்றி
இவள் தைரியமானவள் எனும் அடைமொழிகொண்டு"
"எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும்
இதயம் வந்துவிட்டது என்னிடத்தில்
என் மிகப்பெரிய இழப்பின் பின்னால்"
"கண்ணீரும்
தோல்விகளும்
சோகங்களும் கண்டு துவண்ட போது எல்லாம்
தோள் கொடுக்க தோழன் போல்
தந்தை உள்ளார் என்ற நம்பிக்கையில்
மழையில் நனைந்த கோழிக்குஞ்சாய்
அப்பாவின் அரவணைப்பில் இருந்தேன்"
"இன்று அரவணைக்க
அப்பா இல்லை என்பதால்
அழுகையையும் அடக்கிகொள்கிறேன்
அஞ்சாமல் நிற்கிறேன்
அதனால் தான் என்னவோ
தோல்விகளும் என்னை கண்டால் தூரமாய் செல்கிறது"
"அன்புள்ள அப்பா
அவனியிலே ஈடேதும் இல்லை உன் அன்பிற்கு
உன் இழப்பை விட
ஏதும் பெரிய துயரில்லை எனக்கு
என் மடி மீது உன் உயிர் பிரிந்த கணத்தைவிட
பெரிய நரகத்தை நான் அனுபவிக்க போவதில்லை"
"நீங்கள் விட்டு சென்ற இடத்தில்
வழியும் கண்ணீரின் விழி கொண்டு தேடினேன்
ஒரு வழி
வாழ்க்கைப்பாதை அதில் சென்றால்
வளமாகும் என்ற நம்பிக்கையோடு பயணிக்கிறேன்"
"அன்புள்ள அப்பா
உன் ஆன்மா ஏதேனும் ஒரு இடத்தில் நின்று
என்னை காத்துநிற்கும் என்ற நம்பிக்கையோடு
நாளைய விடியலிலே
நான் உன் மகள் என நிறுபிப்பேன் அப்பா"
"நிழனான நிரந்தரமற்ற உறவுகளுக்கு மத்தியில்
ஒரு நாள் உன் மகளின் புகழை உலகு அறியும்
அன்று கூறுவேன் அப்பா அனைவரின் முன்பும்
வெற்றியெல்லாம் என் அன்புள்ள அப்பாவிற்கு அர்ப்பணம் என்று"