அனல் மேலே பனிதுளியானாய் நான்கு

Advertisement

Gayus

Writers Team
Tamil Novel Writer
Hii.. Frds&sis's 4th pottuvitten padithuvittu comments sollungapa:):)
அத்தியாயம் – 4

மயக்கம் கொண்டேனடி......
உன் ஒரு செய்கையிலே.....
மயக்கத்திலிருந்து வெளிவர நினைத்தாலும்
முடியவில்லை.....
இன்னும் வேண்டும் என எண்ணுகின்றேன்
நான்......

ஒருக்கையைக் கன்னத்திலும், மற்றொருக் கையில் லாலீபாப்பை வாயில் வைத்து சப்பிக்கொண்டிருந்தாள்...... இளா.... அதுவும் கண்களை முடிக்கொண்டே.... யாரும் வரமாட்டார்கள் என்ற தைரியம்....

தான் கதவைத் திறந்து உள்ளே வந்ததுக்கூடத் தெரியாமல் இன்னும் லாலீபாப்பின் சுவையில் லயித்திருந்தவளைக் கண்டவன், சிரிப்பை அடக்க பெரும்பாடுப்பட்டான்.... பின் அவளை ரசனையாகப் பார்த்துக் கொண்டிருந்தான்......
இருவரின் மோனநிலையைக் கலைக்கவென இளாவின் மொபைல் ஒலித்தது....
மொபைலை எடுத்துப் பார்த்தவள், கம்பெனி கால் என்றதும் கட் செய்துவிட்டு நிமிர்ந்துப் பார்க்க.... அதிர்ந்தாள்..... அப்படியே வாயில் உள்ள லாலீபாப்புடனே எழுந்தாள்.....
அவள் கண்ணைத் திறந்த உடனே தனது பார்வையை மாற்றிக் கொண்டு.... வந்த சிரிப்பையும் தனக்குள்ளே அடக்கிக்கொண்டான்.... ஆதி....
இவன் போலீசாக இருப்பான் என்று எதிர்ப்பாராத இளா மனதில் “அய்யோ இவன் போலீஸ்ன்னு தெரியாம ஒவராப் பேசிட்டோமே இப்போ என்னப்பன்றது....... ஆமா இவனுக்கு எப்படி நான் இங்க வேலை செய்யறது தெரியும்...... அடி மக்கு அவன் தான் போலீசாச்சே என்னை கண்டுப்பிடிச்சிருப்பான்....” என நினைத்துக்கொண்டே அவனை பயமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்...
ஏதோ நினைவு வந்தவளாக வாயில் இருந்த லாலீபாப்பை எடுத்துப் பின்னாடி மறைத்துக் கொண்டவள்... மறுபடியும் மனதில் “அய்யோக் கடவுளே இதுவேறயா...... இவன் முன்னாடி இப்படியா நிக்கணும்......” தன்னைத் தானே திட்டிக்கொண்டு நின்றிருந்தாள்..... இளா.....
இவளின் இந்த செய்கையிலும்..... உள்ளுக்குள் ரசித்துக்கொண்டும், சிரித்துக் கொண்டும் அவளைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்......
இவர்கள் இருவரும் பார்த்துக்கொண்டு நிற்க...... கதவைத் திறந்து உள்ளே வந்த அந்த நர்ஸ் ஆதியைக் கண்டு “சார் நீங்க இங்க என்னப் பண்றீங்க..... நீங்கப் பார்க்க வந்த டாக்டர் ஆப்போசிட் ரூம் சார்.....” என்று சொல்ல...
“ம்ம்ம்.... ஒகே.... அம் சாரி.....” என்றுப் பொதுவாக சொல்லிவிட்டு சென்றான்.....
“டாக்டர்..... உங்கள சரஸ்வதி டாக்டர் ரூம்க்கு வர சொன்னாங்க.....” என்று இளாவிடம் அந்த நர்ஸ் சொல்லிவிட்டு சென்றாள்.....
இப்போது தான் அவளுக்கு மூச்சே வந்தது.... “நல்ல வேலை இவன் நம்மளத்தேடி வரல.... அப்பா என்ன பார்வடா சாமி....” என்று நினைத்துக்கொண்டே சரஸ்வதி டாக்டர் ரூமிற்க்கு சென்றாள்......
ஆதி பாட்டியின் கண்டிஷன் பற்றி டாக்டரிடம் விசாரித்துக் கொண்டிருந்தான்..... டாக்டரோ “இன்னும் 24 ஹவர்ஸ் அவங்க மயக்கநிலையில் தான் இருப்பாங்க....” என்று சொல்ல.... “ஒகே டாக்டர் நான் நாளை வந்துப் பார்க்கிறேன்....” என்று சொல்லிவிட்டு சென்றான்....
விஷ்வா, தன்னை விடாதுப் பார்க்கும் பெண்ணைக் கண்டு மறுபடியும் “ஹலோ மிஸ்... எனி ஹெல்ப்” என்று சத்தமாக கேட்க.... அதில் சுயநினைவுப் பெற்றவள்... “ஆமா சார்.... வண்டி ஸ்டார்ட் ஆகமாட்டேங்குது....” என்று சொல்ல....
“தள்ளுங்க நான் பார்கிறேன்” என்று ஸ்டார்ட் செய்துக்கொடுத்தான்.... அவள் “தாங்யூ” என்று சொன்னதும்..... பதிலுக்கு அவன் “தாங்ஸ்ல்லாம் இருக்கட்டும் உன் நேம் என்ன...” என்று கேட்கவும்.... முகம் முழுக்க சந்தோஷத்துடன் “வைஷாலி....” என்று அவள் சொல்ல..... “இதோப் பார் வைஷாலி.... இன்னொரு தடவை என் பின்னாடி சுத்தரதப் பார்த்தேன்.... தூக்கி லாக்அப்ல வச்சிடுவேன்.... புரிஞ்சுதா.....” என்று அவள் பதிலை எதிர்ப்பாக்காமல் சென்றுவிட்டான்.....
பின்ன ஆறுமாதமாக தன்னைப் பின் தொடரும் பெண்ணை என்ன செய்வது என்று தெரியாமல் வாயில் வந்ததை சொல்லிவிட்டு வந்தான்.....
ஆனால், வைஷாலி “ஓ... இவ்வளவு நாளும் தன்னைப் பார்த்துக்கொண்டுதான் இருந்துருக்கிறான்....” என மனதில் நினைத்து.... சந்தோஷமாகத் தான் பணிப்புரியும் xxx மென்ப்பொருள் அலுவலகத்திற்கு சென்றாள்.....
ஆதி தனது வண்டியை அலுவலகத்தின் முன் நிறுத்திவிட்டு A.C.P ராஜனைப் பார்க்க சென்றான்.... அங்கே விஷ்வாவும் இருக்கவே கேஸ்ப் பற்றிப் பேச ஆரம்பித்தனர்....
ராஜன் “நீ சொல்லு ஆதி.... இந்த கேஸ் பற்றி உன்னோட கருத்து என்ன...” என்று கேட்க....
“ஏற்கனவே இந்த மாதிரி மூன்று அப்பார்ட்மென்ட்ல நடந்த தற்கொலைகள் மாதிரிதான்.... இதுவும் ந.டந்து இருக்குமோன்னு தோணுது சார்.... நாளைக்கு அந்தப் பொண்ணு ரிப்போர்ட்ல ப்ரக்நன்ட்டா இருக்கான்னு வந்துச்சின்னா அது கன்ஃபார்ம் ஆயிடும் சார்..... இறந்த எல்லாப் பெண்களோட ரிப்போர்ட்டும் அது தான் சொல்லுது...... இந்த தற்கொலைகளுக்குப் பின்னாடி எவனோ இருக்கான் சார்....” ஆதி சொல்ல....
விஷ்வா “ஆமா சார்... ஒவ்வொரு அப்பார்ட்மென்ட்லயும் மூன்றுப் பெண்கள் தற்கொலைப் பண்ணியிருக்காங்க.... அது கொலைதான்னு இதுவரைக்கும் எந்த எவிடன்சும் கிடைக்கல.... ஆனா அந்த மூணு அப்பார்ட்மென்ட் இருக்க இடம் பக்கத்து பக்கத்து ஏரியா.... இப்போ நடந்த சம்பவம்கூட அதே மாதிரி பக்கத்து ஏரியா தான் சார்.... சோ... எனக்கும் இதுக்கெல்லாம் பின்னாடி ஒருத்தன் இருக்கான்னு தோணுது சார்....”
ராஜன் “ஒகே ஆதி..... ரெண்டுப்பேரும் சொல்லி வச்ச மாதிரி.... ஒருத்தன்னு சொல்றீங்க....” என்று சிரித்துக்கொண்டே கேட்க....
ஆதியும், விஷ்வாவும் ஒருவர் முகத்தை ஒருவர்ப் பார்த்து.... புன்னகைத்து.... ராஜனைப் பார்த்து “எல்லாம் ஒரு கெஸ்ஸிங் தான் சார்.....” என்று கோரசாக சொல்லினர்....
“ஒகே.... ஆதி அண்ட் விஷவா.... நாளைக்கு ரிப்போர்ட் நீங்க சொன்ன மாதிரி வந்துச்சின்னா.... இந்த கேஸை தற்கொலைன்னு க்ளோஸ் செய்த மாதிரி ஒரு செட்டப் கிரியேட் பண்ணிடுங்க.... அதன் பிறகு இந்த ஆப்ரேஷன் ஸ்டார்ட் பண்ணலாம்... ஒகே....” என்று ராஜன் சொல்ல....
இருவரும் “ஒகே சார்....” என்று அவருக்கு ஒரு சல்யூட் வைத்துவிட்டு தங்களின் இதரவேலைகளை செய்யப் புறப்பட்டனர்.....
இளாவின் வீட்டில், அவள் அம்மா தன் கணவனிடம் “ஏங்க நம்மப் பொண்ணுக்கு கல்யாண வயசு வந்து ரெண்டு வருஷம் ஆச்சு.... நீங்க ஒரு ஸ்டெப் எடுக்காம இருக்கீங்க..... ரோஹித்துக்கும் வயசாகுதுங்க.... இவளுக்கு பண்ணாதான அவனுக்குப் பண்ணமுடியும்.....” என்று சொல்ல....
“ஒகேம்மா.... நானும் அதையே தான் உங்கிட்ட பேசலாம்னு இருந்தேன்.... நீயே பேசிட்ட..... நம்ம ரேஷ்மிய ரோஹித்துக்கு பேசி முடிக்கலாம்னு இருக்கேன்.... நீ என்ன சொல்ற....” என்று சீதாராம் கேட்க.....
“ரேஷ்மி எனக்கு மருமகளா வந்தா ரொம்ப சந்தோஷம் தாங்க.... ஆனா ரோஹித் எப்படி இதுக்கு சம்மதிப்பான்.... ரேஷ்மி வீட்ல என்ன நினைப்பாங்கன்னு தெரியலையே....” என்று சீதா வருத்தமாக சொல்ல....
“அட என் மக்குப் பொண்டாட்டி.... நம்மப் பையன் ரேஷ்மியை விரும்பறான்.... அவன் அந்தப் பொண்ணப் பார்க்கறப் பார்வையிலேயே நான் கண்டுப்பிடிச்சிட்டேன்.... நீதான் இன்னும் கண்டுப்பிடிக்காம இருக்க....”
“ஓ... அப்படியாங்க.... நம்மப் பையன் லவ் எல்லாம் பண்ணமாட்டான்னு நினைச்சேன்....” என்று சீதா பாவமாக சொன்னார்.....
“நீ எப்படி அப்படி நினைக்கலாம்.... அவன் என் பையன்..... நானும் ஒருப் பொண்ண லவ் பண்ணிக் கல்யாணம் பண்ண மாதிரி... அவனும் ஒருப்பொண்ண லவ் பண்றான்....” என்று தன் மனைவியை ரசித்துக்கொண்டே சொன்னார்....
அதில் வெட்கம் கொண்டவராய், அவர் தோளில் சாய்ந்து கொண்டார் சீதா.... பின் நிமிர்ந்து “ரேஷ்மி வீட்லப் பேசிட்டீஙகளா....” என்று அவர் கேட்க......
“பேசிட்டேன்மா... அவங்களும் சந்தோஷமா ஒத்துகிட்டாங்க.... ஆனா ரேஷ்மி ஜாதகத்துல நாலு மாசத்துக்குள்ள கல்யாணம் பண்ணணும்னு இருக்கான்.... அதான் கொஞ்சம் யோசிக்கிறேன்.....”
“இதுல யோசிக்க என்னங்க இருக்கு..... நம்ம இளாவுக்கும் மாப்பிள்ளைப் பார்த்துட்டா.... ரெண்டு கல்யாணமும் ஒன்னா பண்ணிடலாம்.... என்ன சொல்றீங்க.....” என்று ஆவலாக சொல்லும் மனைவியைக் கண்டு சிரித்துவிட்டு....
“சீதா... கல்யாணம்றது அவசரமா முடிவெடுக்குற விஷயம் காரியம் இல்ல.... ரொம்ப நிதானமா எடுக்க வேண்டிய விஷயம்.... எடுத்தோம் கவிழ்த்தோம்னு செஞ்சா.... அது நம்மலேயே அழிச்சிக்க வழிவகுத்துடும்.... சோ.... பொறுமையா இரு.... இளாவுக்குன்னு ஒருத்தன் எங்கயாவதுப் பொறந்து இருப்பான்.... ஒகே....” என்று தன் மனைவியின் கன்னம் தட்டி “மாமாவுக்கு சூடா ஒரு காஃபிப் போட்டு.... ஆபிஸ் ரூமிற்க்குக் கொண்டு வா...” என்று சொல்லி தங்கள் அறையில் உள்ள சிறு அறைக்கு சென்றார்.....
சீதாவும் சிரித்துக்கொண்டே கணவனக்கு காஃபி கலக்க சென்றார்....

-தொடரும்.
 
Last edited by a moderator:

Gayus

Writers Team
Tamil Novel Writer
Frds neenga comment pannunga...na Wednesday reply pandre I have no blce..kkk....happy reading....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top