அத்தியாயம் - 4

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
சீமை சீயான் – 4

அரசு மருத்துவமனை தனி பிரிவு அறை எண்:108ல் தலைக்குக் கையை முட்டுக்கொடுத்து தனது விதியை நொந்து கொண்டு தனக்கு எதிரில் இன்னும் கண் விழிக்காமல் இருந்த சீயானை ‘கண்ண முழிடா மகனே’ இருக்கு உனக்கு என்ற ரீதியில் பார்த்து கொண்டு இருந்தான் நமது முத்து.

அறைக்கு வெளியில் பொன்னுரங்கனும்,முனியாண்டியும் காவல் துறை விசாரணைக்குப் பதில் கொடுத்துக் கொண்டு இருந்தனர்.அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பொன்னுரங்கத்தால் பதில் கொடுக்க முடியவில்லை.

அவருக்கு என்ன தெரியும் பாவம் விடியலில் முத்துவின் போன் வரவும் அதை காது கொடுத்தவர் அவன் சொன்ன செய்தியில் அடித்துப் பிடித்து ஓடிவந்து பார்க்க அங்கே சீயானும் வேம்புவும் தீவர சிகிச்சையில் இருந்தனர் முனியாண்டிக்கும் அதே நிலை தான் போலும்.

பெரியவர்கள் இருவரிடமும் கேட்ட ஒரே கேள்வியை விதமாக விதமாக கேட்டு காவல் அதிகாரிகள் படுத்தி எடுத்து கொண்டு இருந்தனர். பொன்னுரெங்கத்தால் சமாளிக்க முடியவில்லை.தற்போது மனதளவில் தளர்ந்து இருந்தவருக்கு இந்தக் கூத்து வேறு சூழ்நிலை கைமீறி செல்வதை உணர்ந்த முனியாண்டி இடையிட்டு.

"நாங்க தான் அவர்களைப் பிரித்துத் திருமணம் செய்து வைத்தோம் வேம்புவின் இழப்பை கூறி பின்பு இப்போதும் மறுமணத்திற்கும் எதிர்ப்புத் தெரிவித்தோம்.அதனால் தான் இவர்கள் இப்படி ஒரு முடிவு எடுத்து விட்டார்கள்" என்று சொல்லி அவர்களை நன்கு கவனித்து அனுப்பி வைத்தார் வேறு என்ன செய்ய பெற்றவர்கள் ஆயிற்றே.


சீயானுக்கு பக்கத்து அறையில் தான் வேம்புவையும் வைத்து இருந்தார்கள் இருவரும் இன்னும் கண் முழிக்கவில்லை காவல் அதிகாரிகளை அனுப்பி வைத்தவர் முத்துவை பார்த்து "டேய் எசக்கி! பாண்டி கண் முழுச்சுதும் சொல்லு நாங்க வந்து பார்க்கிறோம்" சரியென்று பவ்வியமாகத் தலையை மட்டும் ஆட்டியவனைக் கண்டு.

"நல்ல புள்ள மாதிரி தலையை மட்டும் ஆட்டு வை….. ஏன்டா எரும மாடே அவன் கூடவே தானே சுத்திகிட்டு திரியுற அந்த பைய என்ன பண்ணறானு உனக்குத் தெரியாது? இல்ல நீயும் கூட்டு களவாணியா” மகன் செய்து வைத்த செயலை அவரால் நம்ப முடியவில்லை.சண்டியர் போல் சுற்றித் திரிந்தாலும் நியாயம் உள்ள இடமே அவனது செயல் இருக்கும் என்பதால் முனியாண்டி சீயானை கண்டிப்பதில்லை ஆனால் இன்று….

முனியாண்டியின் கோபத்தில் பதறிய முத்து "ஐயோ! சித்தப்பு எனக்கு எதுவும் தெரியாது" அலறியவனை நம்பாமல் பார்த்தவர்

“எனக்கு எதுவும் புடிபடல போ பார்த்து சூதனமா இருக்க வேணாம் பொசக்கெட்ட பயலுகளா”

மகன் மேல் இருக்கும் கோபத்தை எல்லாம் தம்பி மகனிடம் காட்டிவிட்டு சென்றார் “தப்பு செஞ்சது அவிங்க மகன் போட்டுத் தள்ளுறது என்ன வீராயி என்ன தர்மத்துக்குப் பெத்து போட்டுருக்கான்னு கேக்குறேன்” மனதுக்குள் மட்டுமே எண்ணி கொண்டான்.

போகும் முனியாண்டியை பார்த்துக் கொண்டு இருந்தவன் அறையில் அரவம் கேட்கவும் சீயானிடம் விரைந்தான் அப்போது தான் கண்களை லேசாகத் திறந்த சீயான் முத்துவை நோக்கி சிறு புன்னகை இதழ் பிரியாமல் செய்ய கொதித் தெழுந்தான்.

“ஏன்டா உனக்கு இந்தக் கொலை வெறி ரொம்ப நல்லா வளர்த்து இருக்காங்கடா உன்ன ‘தானும் வாழ கூடாது அடுத்தவனும் வாழ கூடாது’ அதானே" அதற்கும் சிரித்து வைத்த சீயானை கண்டு காண்டான முத்து எண்ணையில் போட்ட பணியாரமாக குதித்தான்.

“ராவுல இருந்து மூக்குல டீயூப் போட்டு குடலு குந்தானிய உறிஞ்சியும் உனக்குக் கொழுப்பு குறையல பாரேன்" போலியாக வியந்தவன் மனம் நேற்றைய இரவில் தொக்கி நிற்க

"ஏன்டா எனக்கு அப்படி ஒரு மெசேஜ் போட்ட" ஆத்தமாட்டா தவனாக. புலம்பினான்.இரவு முழுதும் வயிற்றைச் சுத்தம் செய்யத் தொண்டையில் ட்யூப் போட்டதால் வலியில் முகம் சுளித்தவரே சிரித்தான் சீயான் அவனது வேதனை நெஞ்சை பிளக்க பார்த்திருந்தான்.

சீயானின் குறுஞ்செய்தி அந்த அளவிற்கு இருந்தது 'எனக்கு இன்று முதல் இரவு பங்காளி அரை மணி நேர செண்டு ஆம்புலன்ஸ் உடன் வா' அர்த்த ராத்திரியில் ஒருவனுக்கு இப்படி ஒரு செய்தி வந்தால் அவன் என்ன ஆவான்? முத்து என்ன கனவா கண்டான் முதல் இரவில் பாலுக்குப் பதில் இவர்கள் பால்டாயில் குடிப்பார்கள் என்று அது சரி முதல் இரவு என்றதே அதிர்ச்சி இதில்………

“ஏண்டா விளங்காத வெங்காயமே சாவனன்னு முடிவு பண்ணவேன் ஏன்டா எனக்கு மெசேஜ் போட்ட?அவனது கேள்வியில் மீண்டும் சிரித்து வைக்க “சிரிக்காம சொல்லுடா" விளையாட்டாகக் கேட்டாலும் சீயானின் செயல் கோபத்தைக் கொடுத்தது.


அதற்கும் சிரித்த சீயானை அடிக்கப் போகப் புயலாக உள்ளே வந்தாள் பிச்சி "சீயான் மாமா!.......கத்தியவள் கட்டிலில் குறை உயிராகப் படுத்திருந்தவன் அருகில் சென்று அவனது கைகளைப் பிடித்துக் கொண்டு சூப்பர்... சூப்பர் மாமா நீங்க..... என் மாமன் சிங்கமுள்ள.ஐயோ எனக்கும் கையும் ஓடல காலும் ஓடல அம்புட்டு சந்தோசமா இருக்கு”

ஏதோ உலக சாதனை செய்து விட்டது போல் அவள் துள்ளி குதிக்க அவளது செயலில் பொறுமை இழந்த முத்து "ஆமாடி உன் மாமே உலகச் சாதனை பண்ணியிருக்கான் பாரு அப்படியே புல்லரிச்சு போறதுக்கு தெரியாமத்தான் கேக்குறேன் குடும்பமே கிறுக்கு புடிச்சு திரியிறீங்களா? கூறுகெட்ட சிறுக்கி மூஞ்சிய பார் ஆமைய திருப்பிப் போட்ட மாதிரி"

அவனே சீயானின் மேல் கொலைவெறியில் இருந்தான் இதில் பிச்சி வேறு அதுக்குத் தூபம் போடவும் பொங்கி விட்டான். பட படவெனப் பொரிந்தவன் மீண்டும் சீயானிடம் திரும்பும் சமயம் வேம்பு விழித்துக் கொண்டாள் எனப் பக்கத்து அறையில் உள்ள செவிலி வந்து சொல்ல,

உடனே அவளது அறையை நோக்கி சீயான் விரைய துடிக்க அவனை அடக்கிய முத்து "எங்க சார் போறீங்க…. நல்ல வந்துரும் வாயுல படுத்து தொலைடா அவளை இங்கன மாத்த சொல்லுறேன் அப்படியே காதோல் பொங்கி வழியுது" பேச முடியாமல் "சீக்கரம் சொல்" என்றவன் வேதனையில் கண் மூடிக்கொள்ள வேம்புவிடம் விரைந்தான் முத்து.

செவிலியிடம் பேசாத பேச்செல்லாம் வாங்கி போராடி சீயான் அறைக்கு மாற்ற வேம்பு முதலில் பார்த்தது அவளுக்கு எதிரே படுத்து இருந்த சீயானை தான் இருவரது பார்வையும் கவ்வி கொள்ள அவர்கள் பார்வை உணர்ந்து “இரண்டும் ஒரே மாதிரியே இருக்குதுங்க பாரு..எங்க வந்து ரொமான்ஸ் இதெல்லாம் பார்த்து வைக்கனும் நான்…… என் நேரம் சாமி” கோபமாக முனு முனுத்து கொண்டான்.

வேம்புவிற்கு நேற்று இரவு சீயான் செய்த அனைத்தும் நியாபகம் வர கோவமாக அவனை முறைத்து பார்த்தாள்.பதிலுக்கு அவனோ ‘சரிதான் போடி’ என்பது போல் பார்த்து வைத்தான் அவர்கள் பார்வை பரிமாற்றத்தை தவறாகப் புரிந்து கொண்ட பிச்சி முத்துவை இழுத்துக் கொண்டு வெளியில் வந்தாள் திடீரென்று அவன் கை பற்றி இழுத்ததில் அதிர்ந்தவன்.

"ஏய்!...கைய விடு புள்ள யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க”

ஓ! .... அவ கைய புடுச்சுட்டு நின்னப்ப மட்டும் யாரும் பார்க்க மாட்டாங்களா ‘எவ கைய நான் புடுச்சேன்’ முதலில் அவள் சொல்லுவது புரியாது விழித்தவன் பின்பு புரிந்ததும்.

"எதுக்கு எதடி இணைக் கூட்டுறவ அடிச்சு பல்ல கலட்டிருவேன்” அதற்கு மேல் பிச்சியால் பொறுக்க முடியவில்லை “ஓ!..............” என்று கத்தி அழுக ஆரம்பித்து விட்டாள்.

அவளது அழுகையில் பதறியவன் “அடியேய் எதுக்குடி இப்ப ஒப்பாரி வைக்கிற”

"எப்ப பாரு என்னய வஞ்சுகிட்டே இருக்க என்ன கண்டாலே உன் மூஞ்சி முன்னூறு மயிலு அப்பால போகுது” தேம்பியவரே அவள் பேச முத்துக்கு அவளை பார்க்க பாவமாக இருந்த போதிலும் அவனது மனசாட்சி அவனுக்கு எச்சரிக்கை விடுத்தது ’வேணாமுடா முத்து பாவப்பட்ட ரவுடி உன்ன பாவமாக்கிடுவா’ என்று எண்ணியவன்.

அவளிடம் பேச போகும் தருவாயில் அங்காயி,வீராயி,பொன்னுரங்கம் அவரது மனைவி,முனியாண்டி என ஒரு பட்டாளமே திரண்டு வந்தது ஊர் பெரிய தலைகளும் அதில் அடக்கம்.

முனியாண்டி மூலம் அவர்கள் திருமணத்தைத் தடுத்ததால் தான் அவர்கள் தற்கொலைக்கு முயன்றார்கள் என்று ஒரே மாதிரியாக விடயம் சொல்லப்பட்டது முதலில் சீயான் தற்கொலைக்கு முயன்றான் என்பதே அதிர்ச்சி.

அவனா தற்கொலை செய்ய முயற்சிப்பான்? யாராலும் நம்ப முடியவில்லை ஆனால் கண் முன் சாட்சியாக மருத்துமனையில் உயிருக்கு இருவரும் போராடிய போது நம்பித்தான் ஆக வேண்டும் அல்லவா.

நடந்ததை முழுமையாக அறிந்தது முத்து மட்டும் தான் அதனால் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இருக்க வில்லை மேலும் அவர்கள் தோட்டத்து வீட்டில் இருந்தார்கள் என்பதற்கும் சாட்சி இல்லாமல் போய்விட்டது.அனைத்தும் சீயானின் தெளிவான திட்டமிடல் என்பதை அறிந்த முத்து.

"இப்படி திட்டம்போட்டு படித்து இருந்தா இந்நேரம் பெரிய பெரிய கட்டடம் கட்டி இருக்கலாம் அதைவிட்டு புட்டு,வேணான்னு சொல்லுற பொண்ணுகிட்ட கண்ணாலத்துக்குக் கெஞ்சிகிட்டு அவ பின்னாடி சுத்திகிட்டு இருக்கான் முட்டா பைய நீ வீட்டுக்கு வா டா அப்புறம் இருக்கு”

பொறியியல் படிப்பில் பதினான்கு அரியர் வைத்து இருக்கும் சீயானை கருவி கொண்டான். முத்துவுக்கு வேம்புவின் மேல் அத்தனை கோபம் அன்று ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் அனைவருக்கும் முன்னாள் தனது பெரியப்பன் குடும்பம் தலை வணங்கி நின்று இருக்காது.

என்ன முயன்றும் வேம்புவின் மீது முத்துக்குப் பாவம் என்று வரவில்லை, அவள் செய்த செயல் அப்படி அதற்காகச் சீயான் செய்ததும் சரியென்று ஆகாது என்ன செய்ய இது எங்க போய் முடியும்? என்பதை எண்ணும் போதே கண்ணைக் கட்டியது.

பழைய எண்ணங்களை விடுத்து என்ன நடந்தாலும் பொறுமையா இருக்கணும் என்று எண்ணிக் கொண்டான்.உள்ளே அனைவரும் பேசும் குரல் கேட்டது.அவரவர் மனதிற்கு ஏற்ப வேம்புவும்,சீயானும் அவர்கள் வாயில் அரைபட்டனர் பொன்னுரங்கம் மனைவியின் அழுகை சத்தமும்,அங்காயி குரலும் ஓங்கி ஒலித்தது.அதுக்கு மேல் நின்றால் தனது பொறுமை பறந்து விடும் என்று அறையை விட்டு வெளியில் வந்து விட்டான்.

அவர்களது முடிவு அவன் அறிவான் அல்லவா.அந்த முடிவு அவனுக்குப் பிடிக்கவில்லை என்பது மட்டும் திண்ணம் “சூடு சொரணை இல்லாத ஜென்மம்” சீயானை மனதுக்குள் திட்டியவாறே மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்தவன் கண்டது என்னவோ அழுது கொண்டே செல்லும் பிச்சியைத் தான் வேக எட்டுகளை எடுத்து வைத்து அவளைத் தடுக்க நடந்தவனின் இடையில் நீண்டு தடுத்தது அந்த மென் கரம்.


எவ அவ…………………… குரல் கொடுத்தவாரே நிமிர்ந்தவன் அதிர்ந்து நின்றான்





 

Nirmala senthilkumar

Well-Known Member
சீமை சீயான் – 4

அரசு மருத்துவமனை தனி பிரிவு அறை எண்:108ல் தலைக்குக் கையை முட்டுக்கொடுத்து தனது விதியை நொந்து கொண்டு தனக்கு எதிரில் இன்னும் கண் விழிக்காமல் இருந்த சீயானை ‘கண்ண முழிடா மகனே’ இருக்கு உனக்கு என்ற ரீதியில் பார்த்து கொண்டு இருந்தான் நமது முத்து.

அறைக்கு வெளியில் பொன்னுரங்கனும்,முனியாண்டியும் காவல் துறை விசாரணைக்குப் பதில் கொடுத்துக் கொண்டு இருந்தனர்.அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பொன்னுரங்கத்தால் பதில் கொடுக்க முடியவில்லை.

அவருக்கு என்ன தெரியும் பாவம் விடியலில் முத்துவின் போன் வரவும் அதை காது கொடுத்தவர் அவன் சொன்ன செய்தியில் அடித்துப் பிடித்து ஓடிவந்து பார்க்க அங்கே சீயானும் வேம்புவும் தீவர சிகிச்சையில் இருந்தனர் முனியாண்டிக்கும் அதே நிலை தான் போலும்.

பெரியவர்கள் இருவரிடமும் கேட்ட ஒரே கேள்வியை விதமாக விதமாக கேட்டு காவல் அதிகாரிகள் படுத்தி எடுத்து கொண்டு இருந்தனர். பொன்னுரெங்கத்தால் சமாளிக்க முடியவில்லை.தற்போது மனதளவில் தளர்ந்து இருந்தவருக்கு இந்தக் கூத்து வேறு சூழ்நிலை கைமீறி செல்வதை உணர்ந்த முனியாண்டி இடையிட்டு.

"நாங்க தான் அவர்களைப் பிரித்துத் திருமணம் செய்து வைத்தோம் வேம்புவின் இழப்பை கூறி பின்பு இப்போதும் மறுமணத்திற்கும் எதிர்ப்புத் தெரிவித்தோம்.அதனால் தான் இவர்கள் இப்படி ஒரு முடிவு எடுத்து விட்டார்கள்" என்று சொல்லி அவர்களை நன்கு கவனித்து அனுப்பி வைத்தார் வேறு என்ன செய்ய பெற்றவர்கள் ஆயிற்றே.


சீயானுக்கு பக்கத்து அறையில் தான் வேம்புவையும் வைத்து இருந்தார்கள் இருவரும் இன்னும் கண் முழிக்கவில்லை காவல் அதிகாரிகளை அனுப்பி வைத்தவர் முத்துவை பார்த்து "டேய் எசக்கி! பாண்டி கண் முழுச்சுதும் சொல்லு நாங்க வந்து பார்க்கிறோம்" சரியென்று பவ்வியமாகத் தலையை மட்டும் ஆட்டியவனைக் கண்டு.

"நல்ல புள்ள மாதிரி தலையை மட்டும் ஆட்டு வை….. ஏன்டா எரும மாடே அவன் கூடவே தானே சுத்திகிட்டு திரியுற அந்த பைய என்ன பண்ணறானு உனக்குத் தெரியாது? இல்ல நீயும் கூட்டு களவாணியா” மகன் செய்து வைத்த செயலை அவரால் நம்ப முடியவில்லை.சண்டியர் போல் சுற்றித் திரிந்தாலும் நியாயம் உள்ள இடமே அவனது செயல் இருக்கும் என்பதால் முனியாண்டி சீயானை கண்டிப்பதில்லை ஆனால் இன்று….

முனியாண்டியின் கோபத்தில் பதறிய முத்து "ஐயோ! சித்தப்பு எனக்கு எதுவும் தெரியாது" அலறியவனை நம்பாமல் பார்த்தவர்

“எனக்கு எதுவும் புடிபடல போ பார்த்து சூதனமா இருக்க வேணாம் பொசக்கெட்ட பயலுகளா”

மகன் மேல் இருக்கும் கோபத்தை எல்லாம் தம்பி மகனிடம் காட்டிவிட்டு சென்றார் “தப்பு செஞ்சது அவிங்க மகன் போட்டுத் தள்ளுறது என்ன வீராயி என்ன தர்மத்துக்குப் பெத்து போட்டுருக்கான்னு கேக்குறேன்” மனதுக்குள் மட்டுமே எண்ணி கொண்டான்.

போகும் முனியாண்டியை பார்த்துக் கொண்டு இருந்தவன் அறையில் அரவம் கேட்கவும் சீயானிடம் விரைந்தான் அப்போது தான் கண்களை லேசாகத் திறந்த சீயான் முத்துவை நோக்கி சிறு புன்னகை இதழ் பிரியாமல் செய்ய கொதித் தெழுந்தான்.

“ஏன்டா உனக்கு இந்தக் கொலை வெறி ரொம்ப நல்லா வளர்த்து இருக்காங்கடா உன்ன ‘தானும் வாழ கூடாது அடுத்தவனும் வாழ கூடாது’ அதானே" அதற்கும் சிரித்து வைத்த சீயானை கண்டு காண்டான முத்து எண்ணையில் போட்ட பணியாரமாக குதித்தான்.

“ராவுல இருந்து மூக்குல டீயூப் போட்டு குடலு குந்தானிய உறிஞ்சியும் உனக்குக் கொழுப்பு குறையல பாரேன்" போலியாக வியந்தவன் மனம் நேற்றைய இரவில் தொக்கி நிற்க


"ஏன்டா எனக்கு அப்படி ஒரு மெசேஜ் போட்ட" ஆத்தமாட்டா தவனாக. புலம்பினான்.இரவு முழுதும் வயிற்றைச் சுத்தம் செய்யத் தொண்டையில் ட்யூப் போட்டதால் வலியில் முகம் சுளித்தவரே சிரித்தான் சீயான் அவனது வேதனை நெஞ்சை பிளக்க பார்த்திருந்தான்.

சீயானின் குறுஞ்செய்தி அந்த அளவிற்கு இருந்தது 'எனக்கு இன்று முதல் இரவு பங்காளி அரை மணி நேர செண்டு ஆம்புலன்ஸ் உடன் வா' அர்த்த ராத்திரியில் ஒருவனுக்கு இப்படி ஒரு செய்தி வந்தால் அவன் என்ன ஆவான்? முத்து என்ன கனவா கண்டான் முதல் இரவில் பாலுக்குப் பதில் இவர்கள் பால்டாயில் குடிப்பார்கள் என்று அது சரி முதல் இரவு என்றதே அதிர்ச்சி இதில்………

“ஏண்டா விளங்காத வெங்காயமே சாவனன்னு முடிவு பண்ணவேன் ஏன்டா எனக்கு மெசேஜ் போட்ட?அவனது கேள்வியில் மீண்டும் சிரித்து வைக்க “சிரிக்காம சொல்லுடா" விளையாட்டாகக் கேட்டாலும் சீயானின் செயல் கோபத்தைக் கொடுத்தது.


அதற்கும் சிரித்த சீயானை அடிக்கப் போகப் புயலாக உள்ளே வந்தாள் பிச்சி "சீயான் மாமா!.......கத்தியவள் கட்டிலில் குறை உயிராகப் படுத்திருந்தவன் அருகில் சென்று அவனது கைகளைப் பிடித்துக் கொண்டு சூப்பர்... சூப்பர் மாமா நீங்க..... என் மாமன் சிங்கமுள்ள.ஐயோ எனக்கும் கையும் ஓடல காலும் ஓடல அம்புட்டு சந்தோசமா இருக்கு”

ஏதோ உலக சாதனை செய்து விட்டது போல் அவள் துள்ளி குதிக்க அவளது செயலில் பொறுமை இழந்த முத்து "ஆமாடி உன் மாமே உலகச் சாதனை பண்ணியிருக்கான் பாரு அப்படியே புல்லரிச்சு போறதுக்கு தெரியாமத்தான் கேக்குறேன் குடும்பமே கிறுக்கு புடிச்சு திரியிறீங்களா? கூறுகெட்ட சிறுக்கி மூஞ்சிய பார் ஆமைய திருப்பிப் போட்ட மாதிரி"

அவனே சீயானின் மேல் கொலைவெறியில் இருந்தான் இதில் பிச்சி வேறு அதுக்குத் தூபம் போடவும் பொங்கி விட்டான். பட படவெனப் பொரிந்தவன் மீண்டும் சீயானிடம் திரும்பும் சமயம் வேம்பு விழித்துக் கொண்டாள் எனப் பக்கத்து அறையில் உள்ள செவிலி வந்து சொல்ல,

உடனே அவளது அறையை நோக்கி சீயான் விரைய துடிக்க அவனை அடக்கிய முத்து "எங்க சார் போறீங்க…. நல்ல வந்துரும் வாயுல படுத்து தொலைடா அவளை இங்கன மாத்த சொல்லுறேன் அப்படியே காதோல் பொங்கி வழியுது" பேச முடியாமல் "சீக்கரம் சொல்" என்றவன் வேதனையில் கண் மூடிக்கொள்ள வேம்புவிடம் விரைந்தான் முத்து.

செவிலியிடம் பேசாத பேச்செல்லாம் வாங்கி போராடி சீயான் அறைக்கு மாற்ற வேம்பு முதலில் பார்த்தது அவளுக்கு எதிரே படுத்து இருந்த சீயானை தான் இருவரது பார்வையும் கவ்வி கொள்ள அவர்கள் பார்வை உணர்ந்து “இரண்டும் ஒரே மாதிரியே இருக்குதுங்க பாரு..எங்க வந்து ரொமான்ஸ் இதெல்லாம் பார்த்து வைக்கனும் நான்…… என் நேரம் சாமி” கோபமாக முனு முனுத்து கொண்டான்.

வேம்புவிற்கு நேற்று இரவு சீயான் செய்த அனைத்தும் நியாபகம் வர கோவமாக அவனை முறைத்து பார்த்தாள்.பதிலுக்கு அவனோ ‘சரிதான் போடி’ என்பது போல் பார்த்து வைத்தான் அவர்கள் பார்வை பரிமாற்றத்தை தவறாகப் புரிந்து கொண்ட பிச்சி முத்துவை இழுத்துக் கொண்டு வெளியில் வந்தாள் திடீரென்று அவன் கை பற்றி இழுத்ததில் அதிர்ந்தவன்.

"ஏய்!...கைய விடு புள்ள யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க”

ஓ! .... அவ கைய புடுச்சுட்டு நின்னப்ப மட்டும் யாரும் பார்க்க மாட்டாங்களா ‘எவ கைய நான் புடுச்சேன்’ முதலில் அவள் சொல்லுவது புரியாது விழித்தவன் பின்பு புரிந்ததும்.

"எதுக்கு எதடி இணைக் கூட்டுறவ அடிச்சு பல்ல கலட்டிருவேன்” அதற்கு மேல் பிச்சியால் பொறுக்க முடியவில்லை “ஓ!..............” என்று கத்தி அழுக ஆரம்பித்து விட்டாள்.

அவளது அழுகையில் பதறியவன் “அடியேய் எதுக்குடி இப்ப ஒப்பாரி வைக்கிற”

"எப்ப பாரு என்னய வஞ்சுகிட்டே இருக்க என்ன கண்டாலே உன் மூஞ்சி முன்னூறு மயிலு அப்பால போகுது” தேம்பியவரே அவள் பேச முத்துக்கு அவளை பார்க்க பாவமாக இருந்த போதிலும் அவனது மனசாட்சி அவனுக்கு எச்சரிக்கை விடுத்தது ’வேணாமுடா முத்து பாவப்பட்ட ரவுடி உன்ன பாவமாக்கிடுவா’ என்று எண்ணியவன்.

அவளிடம் பேச போகும் தருவாயில் அங்காயி,வீராயி,பொன்னுரங்கம் அவரது மனைவி,முனியாண்டி என ஒரு பட்டாளமே திரண்டு வந்தது ஊர் பெரிய தலைகளும் அதில் அடக்கம்.

முனியாண்டி மூலம் அவர்கள் திருமணத்தைத் தடுத்ததால் தான் அவர்கள் தற்கொலைக்கு முயன்றார்கள் என்று ஒரே மாதிரியாக விடயம் சொல்லப்பட்டது முதலில் சீயான் தற்கொலைக்கு முயன்றான் என்பதே அதிர்ச்சி.

அவனா தற்கொலை செய்ய முயற்சிப்பான்? யாராலும் நம்ப முடியவில்லை ஆனால் கண் முன் சாட்சியாக மருத்துமனையில் உயிருக்கு இருவரும் போராடிய போது நம்பித்தான் ஆக வேண்டும் அல்லவா.

நடந்ததை முழுமையாக அறிந்தது முத்து மட்டும் தான் அதனால் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இருக்க வில்லை மேலும் அவர்கள் தோட்டத்து வீட்டில் இருந்தார்கள் என்பதற்கும் சாட்சி இல்லாமல் போய்விட்டது.அனைத்தும் சீயானின் தெளிவான திட்டமிடல் என்பதை அறிந்த முத்து.

"இப்படி திட்டம்போட்டு படித்து இருந்தா இந்நேரம் பெரிய பெரிய கட்டடம் கட்டி இருக்கலாம் அதைவிட்டு புட்டு,வேணான்னு சொல்லுற பொண்ணுகிட்ட கண்ணாலத்துக்குக் கெஞ்சிகிட்டு அவ பின்னாடி சுத்திகிட்டு இருக்கான் முட்டா பைய நீ வீட்டுக்கு வா டா அப்புறம் இருக்கு”

பொறியியல் படிப்பில் பதினான்கு அரியர் வைத்து இருக்கும் சீயானை கருவி கொண்டான். முத்துவுக்கு வேம்புவின் மேல் அத்தனை கோபம் அன்று ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் அனைவருக்கும் முன்னாள் தனது பெரியப்பன் குடும்பம் தலை வணங்கி நின்று இருக்காது.

என்ன முயன்றும் வேம்புவின் மீது முத்துக்குப் பாவம் என்று வரவில்லை, அவள் செய்த செயல் அப்படி அதற்காகச் சீயான் செய்ததும் சரியென்று ஆகாது என்ன செய்ய இது எங்க போய் முடியும்? என்பதை எண்ணும் போதே கண்ணைக் கட்டியது.

பழைய எண்ணங்களை விடுத்து என்ன நடந்தாலும் பொறுமையா இருக்கணும் என்று எண்ணிக் கொண்டான்.உள்ளே அனைவரும் பேசும் குரல் கேட்டது.அவரவர் மனதிற்கு ஏற்ப வேம்புவும்,சீயானும் அவர்கள் வாயில் அரைபட்டனர் பொன்னுரங்கம் மனைவியின் அழுகை சத்தமும்,அங்காயி குரலும் ஓங்கி ஒலித்தது.அதுக்கு மேல் நின்றால் தனது பொறுமை பறந்து விடும் என்று அறையை விட்டு வெளியில் வந்து விட்டான்.

அவர்களது முடிவு அவன் அறிவான் அல்லவா.அந்த முடிவு அவனுக்குப் பிடிக்கவில்லை என்பது மட்டும் திண்ணம் “சூடு சொரணை இல்லாத ஜென்மம்” சீயானை மனதுக்குள் திட்டியவாறே மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்தவன் கண்டது என்னவோ அழுது கொண்டே செல்லும் பிச்சியைத் தான் வேக எட்டுகளை எடுத்து வைத்து அவளைத் தடுக்க நடந்தவனின் இடையில் நீண்டு தடுத்தது அந்த மென் கரம்.


எவ அவ…………………… குரல் கொடுத்தவாரே நிமிர்ந்தவன் அதிர்ந்து நின்றான்
Nirmala vandhachu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top