அத்தியாயம் - 2

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
கதம்பவனம் -2
சூரியன் உச்சியில் நின்று கூர்ந்து பார்த்தாலும் அவனது பார்வை சற்று இதமாகத் தான் விழுந்தது சுந்தரம் வீட்டின் தோட்டத்தில். சிறு சிறு பழ மரங்கள்,காய்கள்,ரோஜா,முல்லை,செம்பருத்தி,பிச்சி செடிகள் என்று பல வண்ண மலர்களை கொண்ட அழகிய தோட்டம் பார்க்கவே ரம்மியமாக இருந்தது.அக்காலத்தின் கலா ரசிகன் போலும் நம் சுந்தரம் அவரது இளமையில் பூர்வீக சொத்தை ரசித்து ரசித்து அமைத்திருக்கிறார்.

வெயிலின் வெட்பமும்,ஈரப் பதம் பொருந்திய மண்ணின் காற்றும் சேர்ந்து இதமாக வீச.அதில் சுந்தரம் வீட்டு சுந்தரிகளின் மாநாடு பார்க்கவே ரம்மியமாக இருந்தது.அமுதா காய் நறுக்க,தாமரை பூ தொடுக்க,சற்று தள்ளி சீதா(சீதை) கீரை ஆய்ந்து கொண்டு இருந்தாள்.

ஓரகத்திகள் ஒன்றாக உட்காந்து செய்யும் காட்சி கண்ணை பறிக்க தான் செய்தது.சீதாவும்,அமுதாவும் கண்களால் ஜாடை பேசி கொண்டு இருந்தனர் பின் மெதுவாக "நீ கேளு அமுதா”

“நீங்க கேளுங்க்கா” இருவரும் ஒருவரை ஒருவர் மெதுவான குரலில் சொல்லி கொள்ள அவர்களது தள்ளு முள்ளை பார்த்து தாமரையே “என்னக்கா” என்று கேட்டாள்


அவள் கேட்டது தான் தாமதம் சீதா கோபமாக அவளிடம் “என்ன என்னக்கா? நேத்து மாமா சீட்டை கேட்கும் போது ஏன் எனக்கு ஒன்னும் வேண்டான்னு சொன்ன எதுவுமே தேவையில்லையா உனக்கு” சீதாவின் கேள்விக்கு தலையைக் குனிந்து கொண்டாள் தாமரை என்ன சொல்ல முடியும் அவளால்…

அமுதா,“ஏய் தாமரை என்ன பார்” அவளது தாடையைப் பற்றித் தூக்க கண்ணீர் துளிர்க்க பார்த்தவளை “அழுத கொன்னுடுவேன் போன தீவாளிக்கு கொடுத்த ரவிக்கை இன்னும் வாங்கல புருசனும்,பொண்டாட்டியும் என்ன நெனச்சுக்கிட்டு இருக்கீங்க ஏன் செல்வம் தம்பி இரண்டு நாளா வீட்டுக்கு வரல?”

அதற்கும் தாமரை தலையைக் குனிந்து கொண்டு இருக்க சீதா ஆவேசமாக “எங்கள உன் அக்காவா நெனச்சா சொல்லுவ கோபமாக அமுதாவிடம் திரும்பி அமுதா இனிமே நமக்கு மரியாதை இல்ல இனி அவங்க விஷியத்துல தலையிட வேண்டாம்” போலியாக அவர்கள் எழுந்து செல்ல பார்க்க அழுது கொண்டே அவர்களின் கை பற்றிய தாமரை

"ஏன்க்கா இப்படி?....என்ன சொல்ல சொல்லுறீங்க என்ன?அவர் ஓவர் டைம் பார்க்கிறார் அதான் வீட்டுக்கே வரல.அவர்கிட்ட என் தேவைகளைச் சொல்ல கஷ்டமா இருக்கு மாடு மாதிரி உழைக்கிறார் மனுசன்.அவர் கொடுக்கிற காசு வீட்டு செலவுக்கே சரியா இருக்கும் அதான் மாமாகிட்ட எங்களுக்கு எதுவும் வேண்டான்னு சொல்லிட்டேன்"

“அவர் என்கூட பேசியே ஒரு வாரம் ஆகுது.... சரியா பேசி ஒரு வருஷம் ஆகுது….அதாவது எனக்கு கல்யாண ஆனா நாளுல இருந்து இப்படி தான் இருக்கார்.அவர்கிட்ட பேசவே பயமா இருக்கு இதுல அது வேணும் இது வேணும் எப்படி கேட்கிறது”துக்கம் தொண்டையை அடைக்க அவள் பேசியதை கேட்ட அமுதாவும்,சீதாவும் அதிர்ச்சியாக ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

“என்னடி சொல்லுற” அமுதாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது இவள் உண்டாகவில்லை என்று மாதங்கி அவ்வபோது குத்தி கிழிக்கப் பார்க்க கதை இப்படி போகிறது...... தாமரை சொல்லுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை பெண்கள் இருவராலும்.

செல்வம் நல்ல குணமுடையவன் தான் ஆனால் கண்ணன்,ராமன்,ரங்கனை போல் அமைதி கிடையாது ராஜனும்,செல்வமும் கொஞ்சம் முரட்டுக் குணமுடையவர்கள் அதிலும் ஓர் நேர்மையும்,அன்புமும் இருக்கும்.

தாமரை அவனிடம் பேசவே பயம் கொள்வாள் இந்த ஒரு வருடத்தில் அவர்கள் பேசிய வார்த்தையைக் கை கொண்டு எண்ணி விடலாம் அந்த அளவிற்கு இருக்கும் இருவரது நடத்தையும்.

இவர்கள் பேச்சில் அதிர்ந்து நின்றது பங்கஜமும் தான் பொறுமை காற்றில் பறக்க கோபமாக பெண்களை நெருங்க.அங்கு தனது மாமியாரை எதிர் பார்க்காத மூவரும் கலவரமாகப் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.பின்ன மாமியார் போலவா அவர் பார்த்தார் பெற்ற தாய்க்கு நிகராகத் தாங்குபவரிடம் மறைக்கலாமா……….

அத்தை என்று தாமரை மென்று முழுங்க "பேசாத உங்கிட்ட எனக்குப் பேச்சே இல்ல அமுதா நீ சமையலை பார் சீதா மாமா காப்பிக் கேட்டார் கொண்டு போமா"

"சரிங்க அத்தை" தாமரையிடம் அவர் தனித்துப் பேச விரும்புவதை எண்ணி மற்ற இருவரும் மாமியாரின் பேச்சுக்கு எதிர் வாதமில்லாமல் அவரிட்ட பணியைச் செய்ய விரைந்தனர்.

இருவரும் தாமரையை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே செல்ல அவர்கள் சென்றதை அறிந்தவர் தாமரையை நெருங்கி “அவன்கிட்ட அவங்க அப்பாவ பேச சொல்லட்டுமா” வேகமாகத் தலையை ஆட்டி தன் மறுப்பைத் தெரிவித்தவள் அவரது கைகளைப் பற்றி “அத்தை இன்னும் கொஞ்சம் நாள் அவர் வேலைல முன்னுக்கு வரட்டும் அது வரைக்கும் பேச வேண்டாம்”

இன்னும் நன்றாகத் தாமரை முறைத்து பார்த்து சென்று விட்டார். அவருக்குத் தாமரையைக் கடிந்து பேச முடியவில்லை வாய் பேசா மடந்தை, சொல்லுவதைச் செய்யும் பதுமை போல் வளம் வரும் அப்பெண்ணிடம் கோபத்தைக் காட்ட இயலவில்லை அவரால்.

அவர் மனநிலை புரிந்தாலும் தாமரைக்குத் தனது கணவனை விட்டு கொடுக்க மனமில்லை.செல்வமாகப் பிறந்த வீட்டில் வளர்ந்த தாமரை செல்வத்திற்காக அத்தனையும் தூக்கி எறிந்தாள்.

தாமரையின் தந்தை செல்வத்திற்குச் சொற்ப சம்பளமாக இருந்தாலும்.அவனது திறமைக்காகவும் குணத்திற்காகவே அவளைத் திருமணம் செய்து வைத்தார் பிற்காலத்தில் செல்வம் நல்ல நிலைமையில் இருப்பான் என்பது திண்ணம் எனவே தனது செல்ல மகளை மனப்பூர்வமாகவே தாரை வார்த்தார் (இதனை அறிந்து தான் செல்வம் உழைக்கின்றானோ?)

திண்ணையில் அமர்ந்து இருந்தாலும் வீட்டில் நடப்பவை அனைத்தும் சுந்தரத்திற்கு அத்துபடி செல்வத்தைப் பற்றி மட்டும் தெரியாமல் போகுமா என்ன எதுவரை இருவரும் செல்கிறார்கள் என்று தான் பார்த்தார்.அதிலும் அமுதாவும்,சீதாவும்,தாமரையை உரிமையாய்த் திட்டியது அவர்க்கு அத்தனை நிம்மதி.

இந்த ஒற்றுமைக்காகத் தானே தவிக்கிறார் இவ்வீட்டில் மாதங்கியும் ஒன்றிப் போனால் தங்களைப் போல் சொர்கம் கொண்ட வாழ்க்கை யாருக்கும் கிட்டாது எண்ணியவர் ஒரு பெருமூச்சுடன் நகர்வலம் கிளம்பினார் (அனைத்தும் சொர்க்கமாக அமைந்தால் கடவுளுக்கு வேலை ஏது)

இன்று வீடே அமைதியாக இருந்தது மாதங்கியும் கண்ணனும் திருமண நாளை கொண்டாட தங்கள் பிள்ளைகளுடன் வெளியில் சென்று விட்டனர் மீதி இருக்கும் சுட்டிகளைப் பள்ளிக்கு அனுப்பி ஆயிற்று எஞ்சி இருப்பது மாமியாரும்,மருமகள்கள் மட்டுமே இன்னும் சிறுது நேரத்தில் கடை குட்டிகள் இருவரும் வந்துவிடுவார்கள் என்று எண்ணியவாறே சென்றார் சுந்தரம்.

அவர் எண்ணியது போலே விஜியும்,ராஜாவும் வந்தார்கள் இன்று ராஜாவிற்கு இறுதி தேர்வு இனி வேலை தான் முகத்தில் அத்தனை நிறைவு.இதோ குடும்பத்தின் சுகமான பாரத்தைச் சுமக்க நானும் தயார் என்பது நிறைவான புன்னகையுடன் நின்றிருந்தான் காளை.
பங்கஜத்தின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான் கண்கள் தானாக முடியாது சொர்கத்தின் தலை வாசலில் இருக்கும் எண்ணம் கண் மூடி அதனை அனுபவித்தான்.

தலையைக் கோதிய வாரே "என்ன ராஜா எப்போ அப்பா சொன்ன வேலைக்குப் போகப் போற"

“இன்னைக்குத் தானேம்மா தேர்வு எழுதி இருக்கேன் இன்னும் ஒரு வாரம் சென்று தான் போவேன்” அவனுக்கு உள்ளுக்குள் அத்தனை கோபம் தனது முயற்சி கொண்டு வேலை தேடி கொள்ள வேண்டும் என்று எண்ணினால் அதற்கு முன்பே மாதங்கியின் தந்தை சுந்தரத்திடம் அந்த வேலையை வாங்கிக் கொடுத்து விட்டார் அதனால் தான் அவனுக்கு வேலை கிடைத்த மகிழ்வே இல்லை.

என் திறமையின் மீதும் என் மீதும் நம்பிக்கை இல்லாதவர் எதற்கு பெண் தர வேண்டும்? கோபத்தை கட்டு படுத்த முடியாமல் தாயிடம் முறையிட்டான் "ஏன்ம்மா?......அப்பா இப்படி இருக்கார் எனக்கு அந்த அவளை பார்த்தா கோபமா வருது எனக்கு புடிக்கல நீங்களாவது சொல்லுங்க அப்பாகிட்ட" ராஜனது பேச்சில் அவனை கலக்கமாக பார்த்தவர்.

“அப்படியெல்லாம் சொல்லக்கூடாது ராஜா பாவம்! உங்க அப்பா வாக்கு கொடுத்த நாளுல இருந்து அந்த பொண்ணு ஆசையா இருக்கும் அப்பாக்கும் தலை குனிவு நீ புரிஞ்சுக்க முயற்சி பண்ணு கண்ணு" தாடையை பிடித்து கொஞ்சியவர் கைகளை தட்டிவிட்டு எழுந்து சென்றான்.

இவர்களது பேச்சை கேட்டு வீட்டில் உள்ள அத்தனை பெண்களும் கலங்கி போய் இருந்தனர்.ஏற்கனவே ஒருவன் திருமணம் ஆகியும் பற்று இல்லாமல் இருக்கிறான்.

இதில் பிடிக்காத பெண்ணை ராஜன் திருமணம் செய்தால் வெகு நாள் சென்று பங்கஜம் தன்னை மறந்து கண்ணீர் விட்டு அழுகிறார் இத்தனை வருட வாழ்க்கையில் ஒரு நாள் கூட அவர் கண்கலங்கியது இல்லை.

அந்த அளவிற்கு சுந்தரம் தாங்கினார் ஆனால் இன்று தான் பெற்ற பிள்ளைகளால் அழுது தீர்த்தார் சும்மாவா சொன்னார்கள் "தென்னையை பெற்றால் இளநீர்,பிள்ளைகளை பெற்றால் கண்ணீர்" என்று
**********************************************
அங்கு மாதங்கி தனது அம்மாவிடம் செல்லம் கொஞ்சி கொண்டு இருந்தாள் திருமண நாள் என்பதால் வெளியில் சுற்றி விட்டு தாய் வீட்டுக்கு வந்தவள் வழமை போல் திருமணம் பற்றியும் பேசி கொண்டு இருக்க அவளது தங்கை விமலாவிற்குக் கோபமாக வந்தது.
சேகர்க்கும் - இன்ப மணிக்கும் இரு பெண் பிள்ளைகள் ஒன்று மாதங்கி இளையவள் விமலா.விமலாவை பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் ஒரே வாக்கியம் தான் மாதங்கியின் எதிர் பதம் அவள்.விமலாவுக்கு ராஜாவை பற்றித் தெரியும் தனது அக்காவை பார்த்தாலே அவனது முகம் பாறையாக மாறும் தங்கள் குடும்பத்தைப் பற்றி அவன் மதிப்பிட்டே தனி இதில் அவனைப் போய் நான்.

அவனை நினைத்தாலே கை கால்கள் எல்லாம் உதறல் எடுத்தது.அக்காவின் மேலும் கோபம் வந்தது மாதங்கிக்கு சிறு வயதில் இருந்தே பொறுமை என்பதே கிடையாது.இதில் தாய்க்குத் தலைச்சம் பெண் மேல் கண்மூடி தனமான பாசம் வேறு.

எதோ அந்தக் குடும்பம் என்பதனால் அவள் வண்டி ஓடுகிறது அதிலும் கண்ணன் போல் ஒரு கணவன் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் அவள் செய்கையால் தன் குடும்பத்தையே வெறுக்கும் ராஜனுடன் நான் ஐயோ!.........

தந்தை முடிவெடுத்து விட்டார் இனி என்ன சொன்னாலும் தனது பேச்சுச் சபையில் எடு படாது திருமணத்திற்குத் தன்னை வெகுவாகத் தயார் செய்து கொள்ள வேண்டும் எண்ணம் இன்னும் வலுப்பெற்றது கலக்கத்தோடும் பயத்தோடும் தனது திருமணத்தை எதிர் நோக்கினாள் விமலா அதாவது ராஜனின் ராணி.


இவன் (ராஜன்) முள் உள்ள மென்மையான ரோஜா வகையோ!.....
 

Nirmala senthilkumar

Well-Known Member
கதம்பவனம் -2
சூரியன் உச்சியில் நின்று கூர்ந்து பார்த்தாலும் அவனது பார்வை சற்று இதமாகத் தான் விழுந்தது சுந்தரம் வீட்டின் தோட்டத்தில். சிறு சிறு பழ மரங்கள்,காய்கள்,ரோஜா,முல்லை,செம்பருத்தி,பிச்சி செடிகள் என்று பல வண்ண மலர்களை கொண்ட அழகிய தோட்டம் பார்க்கவே ரம்மியமாக இருந்தது.அக்காலத்தின் கலா ரசிகன் போலும் நம் சுந்தரம் அவரது இளமையில் பூர்வீக சொத்தை ரசித்து ரசித்து அமைத்திருக்கிறார்.

வெயிலின் வெட்பமும்,ஈரப் பதம் பொருந்திய மண்ணின் காற்றும் சேர்ந்து இதமாக வீச.அதில் சுந்தரம் வீட்டு சுந்தரிகளின் மாநாடு பார்க்கவே ரம்மியமாக இருந்தது.அமுதா காய் நறுக்க,தாமரை பூ தொடுக்க,சற்று தள்ளி சீதா(சீதை) கீரை ஆய்ந்து கொண்டு இருந்தாள்.

ஓரகத்திகள் ஒன்றாக உட்காந்து செய்யும் காட்சி கண்ணை பறிக்க தான் செய்தது.சீதாவும்,அமுதாவும் கண்களால் ஜாடை பேசி கொண்டு இருந்தனர் பின் மெதுவாக "நீ கேளு அமுதா”

“நீங்க கேளுங்க்கா” இருவரும் ஒருவரை ஒருவர் மெதுவான குரலில் சொல்லி கொள்ள அவர்களது தள்ளு முள்ளை பார்த்து தாமரையே “என்னக்கா” என்று கேட்டாள்

அவள் கேட்டது தான் தாமதம் சீதா கோபமாக அவளிடம் “என்ன என்னக்கா? நேத்து மாமா சீட்டை கேட்கும் போது ஏன் எனக்கு ஒன்னும் வேண்டான்னு சொன்ன எதுவுமே தேவையில்லையா உனக்கு” சீதாவின் கேள்விக்கு தலையைக் குனிந்து கொண்டாள் தாமரை என்ன சொல்ல முடியும் அவளால்…

அமுதா,“ஏய் தாமரை என்ன பார்” அவளது தாடையைப் பற்றித் தூக்க கண்ணீர் துளிர்க்க பார்த்தவளை “அழுத கொன்னுடுவேன் போன தீவாளிக்கு கொடுத்த ரவிக்கை இன்னும் வாங்கல புருசனும்,பொண்டாட்டியும் என்ன நெனச்சுக்கிட்டு இருக்கீங்க ஏன் செல்வம் தம்பி இரண்டு நாளா வீட்டுக்கு வரல?”

அதற்கும் தாமரை தலையைக் குனிந்து கொண்டு இருக்க சீதா ஆவேசமாக “எங்கள உன் அக்காவா நெனச்சா சொல்லுவ கோபமாக அமுதாவிடம் திரும்பி அமுதா இனிமே நமக்கு மரியாதை இல்ல இனி அவங்க விஷியத்துல தலையிட வேண்டாம்” போலியாக அவர்கள் எழுந்து செல்ல பார்க்க அழுது கொண்டே அவர்களின் கை பற்றிய தாமரை

"ஏன்க்கா இப்படி?....என்ன சொல்ல சொல்லுறீங்க என்ன?அவர் ஓவர் டைம் பார்க்கிறார் அதான் வீட்டுக்கே வரல.அவர்கிட்ட என் தேவைகளைச் சொல்ல கஷ்டமா இருக்கு மாடு மாதிரி உழைக்கிறார் மனுசன்.அவர் கொடுக்கிற காசு வீட்டு செலவுக்கே சரியா இருக்கும் அதான் மாமாகிட்ட எங்களுக்கு எதுவும் வேண்டான்னு சொல்லிட்டேன்"

“அவர் என்கூட பேசியே ஒரு வாரம் ஆகுது.... சரியா பேசி ஒரு வருஷம் ஆகுது….அதாவது எனக்கு கல்யாண ஆனா நாளுல இருந்து இப்படி தான் இருக்கார்.அவர்கிட்ட பேசவே பயமா இருக்கு இதுல அது வேணும் இது வேணும் எப்படி கேட்கிறது”துக்கம் தொண்டையை அடைக்க அவள் பேசியதை கேட்ட அமுதாவும்,சீதாவும் அதிர்ச்சியாக ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

“என்னடி சொல்லுற” அமுதாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது இவள் உண்டாகவில்லை என்று மாதங்கி அவ்வபோது குத்தி கிழிக்கப் பார்க்க கதை இப்படி போகிறது...... தாமரை சொல்லுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை பெண்கள் இருவராலும்.

செல்வம் நல்ல குணமுடையவன் தான் ஆனால் கண்ணன்,ராமன்,ரங்கனை போல் அமைதி கிடையாது ராஜனும்,செல்வமும் கொஞ்சம் முரட்டுக் குணமுடையவர்கள் அதிலும் ஓர் நேர்மையும்,அன்புமும் இருக்கும்.

தாமரை அவனிடம் பேசவே பயம் கொள்வாள் இந்த ஒரு வருடத்தில் அவர்கள் பேசிய வார்த்தையைக் கை கொண்டு எண்ணி விடலாம் அந்த அளவிற்கு இருக்கும் இருவரது நடத்தையும்.

இவர்கள் பேச்சில் அதிர்ந்து நின்றது பங்கஜமும் தான் பொறுமை காற்றில் பறக்க கோபமாக பெண்களை நெருங்க.அங்கு தனது மாமியாரை எதிர் பார்க்காத மூவரும் கலவரமாகப் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.பின்ன மாமியார் போலவா அவர் பார்த்தார் பெற்ற தாய்க்கு நிகராகத் தாங்குபவரிடம் மறைக்கலாமா……….

அத்தை என்று தாமரை மென்று முழுங்க "பேசாத உங்கிட்ட எனக்குப் பேச்சே இல்ல அமுதா நீ சமையலை பார் சீதா மாமா காப்பிக் கேட்டார் கொண்டு போமா"

"சரிங்க அத்தை" தாமரையிடம் அவர் தனித்துப் பேச விரும்புவதை எண்ணி மற்ற இருவரும் மாமியாரின் பேச்சுக்கு எதிர் வாதமில்லாமல் அவரிட்ட பணியைச் செய்ய விரைந்தனர்.

இருவரும் தாமரையை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே செல்ல அவர்கள் சென்றதை அறிந்தவர் தாமரையை நெருங்கி “அவன்கிட்ட அவங்க அப்பாவ பேச சொல்லட்டுமா” வேகமாகத் தலையை ஆட்டி தன் மறுப்பைத் தெரிவித்தவள் அவரது கைகளைப் பற்றி “அத்தை இன்னும் கொஞ்சம் நாள் அவர் வேலைல முன்னுக்கு வரட்டும் அது வரைக்கும் பேச வேண்டாம்”

இன்னும் நன்றாகத் தாமரை முறைத்து பார்த்து சென்று விட்டார். அவருக்குத் தாமரையைக் கடிந்து பேச முடியவில்லை வாய் பேசா மடந்தை, சொல்லுவதைச் செய்யும் பதுமை போல் வளம் வரும் அப்பெண்ணிடம் கோபத்தைக் காட்ட இயலவில்லை அவரால்.

அவர் மனநிலை புரிந்தாலும் தாமரைக்குத் தனது கணவனை விட்டு கொடுக்க மனமில்லை.செல்வமாகப் பிறந்த வீட்டில் வளர்ந்த தாமரை செல்வத்திற்காக அத்தனையும் தூக்கி எறிந்தாள்.

தாமரையின் தந்தை செல்வத்திற்குச் சொற்ப சம்பளமாக இருந்தாலும்.அவனது திறமைக்காகவும் குணத்திற்காகவே அவளைத் திருமணம் செய்து வைத்தார் பிற்காலத்தில் செல்வம் நல்ல நிலைமையில் இருப்பான் என்பது திண்ணம் எனவே தனது செல்ல மகளை மனப்பூர்வமாகவே தாரை வார்த்தார் (இதனை அறிந்து தான் செல்வம் உழைக்கின்றானோ?)

திண்ணையில் அமர்ந்து இருந்தாலும் வீட்டில் நடப்பவை அனைத்தும் சுந்தரத்திற்கு அத்துபடி செல்வத்தைப் பற்றி மட்டும் தெரியாமல் போகுமா என்ன எதுவரை இருவரும் செல்கிறார்கள் என்று தான் பார்த்தார்.அதிலும் அமுதாவும்,சீதாவும்,தாமரையை உரிமையாய்த் திட்டியது அவர்க்கு அத்தனை நிம்மதி.

இந்த ஒற்றுமைக்காகத் தானே தவிக்கிறார் இவ்வீட்டில் மாதங்கியும் ஒன்றிப் போனால் தங்களைப் போல் சொர்கம் கொண்ட வாழ்க்கை யாருக்கும் கிட்டாது எண்ணியவர் ஒரு பெருமூச்சுடன் நகர்வலம் கிளம்பினார் (அனைத்தும் சொர்க்கமாக அமைந்தால் கடவுளுக்கு வேலை ஏது)

இன்று வீடே அமைதியாக இருந்தது மாதங்கியும் கண்ணனும் திருமண நாளை கொண்டாட தங்கள் பிள்ளைகளுடன் வெளியில் சென்று விட்டனர் மீதி இருக்கும் சுட்டிகளைப் பள்ளிக்கு அனுப்பி ஆயிற்று எஞ்சி இருப்பது மாமியாரும்,மருமகள்கள் மட்டுமே இன்னும் சிறுது நேரத்தில் கடை குட்டிகள் இருவரும் வந்துவிடுவார்கள் என்று எண்ணியவாறே சென்றார் சுந்தரம்.

அவர் எண்ணியது போலே விஜியும்,ராஜாவும் வந்தார்கள் இன்று ராஜாவிற்கு இறுதி தேர்வு இனி வேலை தான் முகத்தில் அத்தனை நிறைவு.இதோ குடும்பத்தின் சுகமான பாரத்தைச் சுமக்க நானும் தயார் என்பது நிறைவான புன்னகையுடன் நின்றிருந்தான் காளை.
பங்கஜத்தின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான் கண்கள் தானாக முடியாது சொர்கத்தின் தலை வாசலில் இருக்கும் எண்ணம் கண் மூடி அதனை அனுபவித்தான்.


தலையைக் கோதிய வாரே "என்ன ராஜா எப்போ அப்பா சொன்ன வேலைக்குப் போகப் போற"

“இன்னைக்குத் தானேம்மா தேர்வு எழுதி இருக்கேன் இன்னும் ஒரு வாரம் சென்று தான் போவேன்” அவனுக்கு உள்ளுக்குள் அத்தனை கோபம் தனது முயற்சி கொண்டு வேலை தேடி கொள்ள வேண்டும் என்று எண்ணினால் அதற்கு முன்பே மாதங்கியின் தந்தை சுந்தரத்திடம் அந்த வேலையை வாங்கிக் கொடுத்து விட்டார் அதனால் தான் அவனுக்கு வேலை கிடைத்த மகிழ்வே இல்லை.

என் திறமையின் மீதும் என் மீதும் நம்பிக்கை இல்லாதவர் எதற்கு பெண் தர வேண்டும்? கோபத்தை கட்டு படுத்த முடியாமல் தாயிடம் முறையிட்டான் "ஏன்ம்மா?......அப்பா இப்படி இருக்கார் எனக்கு அந்த அவளை பார்த்தா கோபமா வருது எனக்கு புடிக்கல நீங்களாவது சொல்லுங்க அப்பாகிட்ட" ராஜனது பேச்சில் அவனை கலக்கமாக பார்த்தவர்.

“அப்படியெல்லாம் சொல்லக்கூடாது ராஜா பாவம்! உங்க அப்பா வாக்கு கொடுத்த நாளுல இருந்து அந்த பொண்ணு ஆசையா இருக்கும் அப்பாக்கும் தலை குனிவு நீ புரிஞ்சுக்க முயற்சி பண்ணு கண்ணு" தாடையை பிடித்து கொஞ்சியவர் கைகளை தட்டிவிட்டு எழுந்து சென்றான்.

இவர்களது பேச்சை கேட்டு வீட்டில் உள்ள அத்தனை பெண்களும் கலங்கி போய் இருந்தனர்.ஏற்கனவே ஒருவன் திருமணம் ஆகியும் பற்று இல்லாமல் இருக்கிறான்.

இதில் பிடிக்காத பெண்ணை ராஜன் திருமணம் செய்தால் வெகு நாள் சென்று பங்கஜம் தன்னை மறந்து கண்ணீர் விட்டு அழுகிறார் இத்தனை வருட வாழ்க்கையில் ஒரு நாள் கூட அவர் கண்கலங்கியது இல்லை.

அந்த அளவிற்கு சுந்தரம் தாங்கினார் ஆனால் இன்று தான் பெற்ற பிள்ளைகளால் அழுது தீர்த்தார் சும்மாவா சொன்னார்கள் "தென்னையை பெற்றால் இளநீர்,பிள்ளைகளை பெற்றால் கண்ணீர்" என்று
**********************************************
அங்கு மாதங்கி தனது அம்மாவிடம் செல்லம் கொஞ்சி கொண்டு இருந்தாள் திருமண நாள் என்பதால் வெளியில் சுற்றி விட்டு தாய் வீட்டுக்கு வந்தவள் வழமை போல் திருமணம் பற்றியும் பேசி கொண்டு இருக்க அவளது தங்கை விமலாவிற்குக் கோபமாக வந்தது.
சேகர்க்கும் - இன்ப மணிக்கும் இரு பெண் பிள்ளைகள் ஒன்று மாதங்கி இளையவள் விமலா.விமலாவை பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் ஒரே வாக்கியம் தான் மாதங்கியின் எதிர் பதம் அவள்.விமலாவுக்கு ராஜாவை பற்றித் தெரியும் தனது அக்காவை பார்த்தாலே அவனது முகம் பாறையாக மாறும் தங்கள் குடும்பத்தைப் பற்றி அவன் மதிப்பிட்டே தனி இதில் அவனைப் போய் நான்.


அவனை நினைத்தாலே கை கால்கள் எல்லாம் உதறல் எடுத்தது.அக்காவின் மேலும் கோபம் வந்தது மாதங்கிக்கு சிறு வயதில் இருந்தே பொறுமை என்பதே கிடையாது.இதில் தாய்க்குத் தலைச்சம் பெண் மேல் கண்மூடி தனமான பாசம் வேறு.

எதோ அந்தக் குடும்பம் என்பதனால் அவள் வண்டி ஓடுகிறது அதிலும் கண்ணன் போல் ஒரு கணவன் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் அவள் செய்கையால் தன் குடும்பத்தையே வெறுக்கும் ராஜனுடன் நான் ஐயோ!.........

தந்தை முடிவெடுத்து விட்டார் இனி என்ன சொன்னாலும் தனது பேச்சுச் சபையில் எடு படாது திருமணத்திற்குத் தன்னை வெகுவாகத் தயார் செய்து கொள்ள வேண்டும் எண்ணம் இன்னும் வலுப்பெற்றது கலக்கத்தோடும் பயத்தோடும் தனது திருமணத்தை எதிர் நோக்கினாள் விமலா அதாவது ராஜனின் ராணி.

இவன் (ராஜன்) முள் உள்ள மென்மையான ரோஜா வகையோ!.....
Nirmala vandhachu
Nalla irrukku ma update konjam perusa podunga pa seekirama mudinjathu pola irrukku
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top