அத்தியாயம் 11 - சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

Advertisement

Yaazhini madhumitha

Well-Known Member
அத்தியாயம்-11

ஒவ்வொரு படிகளாக
எண்ணியெண்ணி ஏறியவள்
கடைசியாக தங்கள் அறை வந்துவிட
அப்படியே நின்றாள்.. கோபமாக
இருப்பானோ என்றும் யோசித்தவள்..
சரி எப்படியும் உள்ளே போய் தானே
ஆகனும் என்று எண்ணிக் கதவைத்
திறந்து உள்ளே சென்றாள்.
அறைக்குள் நுழைந்து கதவைத்
தாழிட்டுவிட்டுத் திரும்ப அவன்
இல்லாததைக் கண்டவள் பால்கனி
பக்கம் சென்று பார்க்க அவள்
நினைத்த படியே அங்கே தான்
அவளுடைய பிரஷர் குக்கர்
நின்றிருந்தான்.

அங்கு நின்று யாருடனோ போனில்
பேசிக் கொண்டு இருந்தான் கார்த்திக்.
போனை அணைத்தவன் இவள்
நின்றிருந்ததைப் பார்த்து "என்ன?"
என்று வினவினான்.

"தூங்க வரலையா?" என்று
மெதுவானக் குரலில் பால்கனிக்
கதவைப் பிடித்தபடி மது கேட்டாள்.

"நீ போய் படு" என்றுத்
திரும்பிவிட்டான்.

இரண்டு நிமிடம் அங்கேயே நின்றவள்
திரும்பி வந்து லைட்டை அணைத்துப்
படுத்துவிட்டாள். ஆனால்
தூங்கவில்லை. ஒருமணி நேரம்
கழித்து உள்ளே வந்தவன் லைட்டை
ஆன் செய்ய மது தலையை மட்டும்
திருப்பி அவனைப் பார்த்தாள். அவள்
பார்ப்பதைக் கண்டவன் எதுவும்
பேசாமல் பின் லைட்டை அணைத்து
விட்டு வந்து கையை மடக்கி
தலையின் மேல் வைத்துப் படுத்து
விட்டான். கோபமாக இருந்தாலும்
ஏதாவது பேசுவான் என்றிருந்த
மதுவிற்கு அழுகை தான் வந்தது.
அவனுக்கு முதுகுக் காட்டி
படுத்திருந்தவளுக்கு அவன் பேசாமல்
இருந்ததில் முகம் சுருங்க சும்மா
கண்களை மூடிப் படுத்திருந்தாள்.

கார்த்திக்கும் தூங்கவில்லை..
கண்ணை மூடிப் படுத்திருந்தானே
தவிர சிறிதும் அவனுக்கும் தூக்கம்
வரவில்லை. நேரம் செல்ல ஏதோ
உறுத்தக் கண்ணைத் திறந்தவன் தன்
அருகில் மறுபறம் திரும்பிப் படுத்து
மது சத்தமில்லாமல் குலுங்கி
அழுவதைக் கவனித்தான். சத்தம்
கேட்காமல் இருக்க எழுந்து
பால்கனிக்குச் செல்லலாம் என
நினைத்தவளை, திடீரென
கார்த்திக்கின் கரங்கள் வந்து மதுவின்
இடையை அணைத்து அவன் புறம்
திருப்பியது. அவன் அவளைத் தன்
பக்கம் திருப்பி அணைக்க மது அவன்
மார்பில் புதைந்து அழுது விட்டாள்.

"ஸாரி...ஸாரி.." என்று அவன் மார்பில்
புதைந்ந படியே முணுமுணுத்தபடி
கண்ணீர் விட்டாள் அவனது
மனையாள்.

"ஓகே ஓகே.. ஹே அழாதே மது இப்போ
எதுக்கு அழுகை.." என்று
அணைத்தபடியே கேட்டான் கார்த்திக்.
அவளைத் தேற்றத் தெரியாமல்
விழித்தவனுக்கு மது தந்த பதில்
நெஞ்சில் பனியை இறக்கியது.

"ஸாரி இன்னிக்கு ஈவ்னிங் ஏதோ
பொஸசிவ்னெஸ்ல அப்படி
பண்ணிட்டேன்" என்று தன்னை
மறந்து கண்ணீருடன் மது கூற,
கார்த்திக்கிற்குத் தான் மிதப்பது போல
இருந்தது.. தன்னையும் ஒருத்தி
இப்படி உருகி உருகி காதலிப்பது
அவனுக்கு குலுகுலுவென இருந்தது
உண்மை தான். ஆனால் அவள் அழுவது என்னவோ போலும்
இருந்தது. அவள் அழுவதை அவனால்
ஏதோ ஏற்க முடியவில்லை.

"சரி சரி... நானும் ஸாரி..உன்னைத்
திட்டிவிட்டேன்.. அழதே மது .. எனக்கு
என்னமோ மாதிரி இருக்கு" என்று
கூறி தேம்பி அழுத அவளின் முதுகைத்
தேய்த்து விட்டான்.

எழுந்து உட்கார்ந்து அவளையும்
உட்கார வைத்து கண்களையும்
கன்னத்தையும் துடைத்து விட்டு, முகம்
கழுவி வரச் சொன்னான். "நான் கோபப் பட்டா இப்படி அழுவியா மது?",
உனக்கு என்னை ஏன் தான் இப்படி
புடிக்குதோ?". என்று மனதிற்குள்
நினைத்தபடி அமர்ந்திருந்தான்.

முகம் கழுவி வந்தவள், "சாப்பிடப்
போவோமா?" என்றாள் வாய்
எல்லாம் பற்கலாகக் கேட்டாள்.

"நீ சாப்பிடவில்லையா?" எனக் கேட்க
மது இல்லை என்று தலை ஆட்டினாள்.

"லூசு" என்று அவளைக் கடிந்தவன்,
கீழே அவளைக் கூட்டிக் கொண்டு
சென்றான். கீழே வந்த பின் மது
தோசை சுட்டுப் பொடி வைத்துக்
குடுக்க, சமையல் மேடையில்
உட்கார்ந்து அவளுக்கும் ஊட்டி
விட்டபடியே தானும் உண்டு முடித்தான்.
உண்டு முடித்துவிட்டு இருவரும்
அறைக்கு வந்து படுக்க மது சீக்கரமாக
உறங்கிவிட்டாள். ஆனால் கார்த்திக்
தான் அவளைப் பார்த்த படி
படுத்திருந்தான்.

குழந்தை போல உறங்கிக் கொண்டு
இருந்தவளைப் பார்த்தவனுக்கு
புன்னகை அரும்பியது. அரைமணி
நேரம் முன் அவளைத் தன் கைக்குள்
வைத்து இருந்தவனுக்கு, இப்போது
தான் அவளின் அருகாமையையும்
அவளின் மேல் வீசிய தன்
மனைவியின் வாசனையையும்
உணர்ந்தான். அதை உணர்ந்தவன்
அவளிடம் மயங்கி தன்னைத்
தொலைத்து அவளின் அருகில் செல்ல
அப்போது எங்கு இருந்தோ வந்த
பறவையின் ஒலி அவனை
சுயநினைவிற்கு கொண்டு வந்தது.

"ச்ச என்ன இது.. இப்படி
பண்றோம்.. ஏதாவது நடந்திருந்தால்
என்ன நினைத்திருப்பாள் நம்மை"
என்று தன்னைத் தானே கடிந்தவன்
அவளைப் பார்த்தான். தான் பக்கத்தில்
வந்ததைக் கூட அறியாமல்
உறக்கத்தில் இருந்தளைப்
பார்த்தவனுக்கு அப்போது தான்
தங்கையிடம் தன்னை விட்டுக்
கொடுக்காமல் பேசியது நினைவு
வந்தது. இவளுக்கு ஏன் இப்படி நம்
மேல் இவ்வளவு காதல் என்று
யோசிக்க "ஏன் உனக்கும் தானே"
என்று அவன் மனம் கேள்வி
எழுப்பியது அவனிடம். அவனுக்கும்
எப்போது வந்தது எதனால் வந்தது
என்று யூகிக்க முடியவில்லை. அவள்
முகத்தையே பார்த்துக்
கொண்டிருந்தவன் ஆராய்ச்சியில்
மூழ்கினான்.

முன்பு இருந்ததிற்கு இப்போது லேசாக
உடம்பு ஏறி இருந்தது மதுவிற்கு.
கன்னங்கள் கூட அழகாய்
இருப்பதைக் கண்டான். பின் அவள்
அருகில் தள்ளி மெத்தையில் திரும்பிப்
படுத்தவன் அவளது தூக்கம்
கலையாமல் ஒன்றை விரலால் அவள்
கன்னத்தை தொட்டுப் பார்த்தான்.

"மினுமினுக்கும் மின்மினிப்பூச்சி
போல பளபளக்கும்
உன் கன்னங்களால்
சிதறிப்போகிறது என்
சிந்தனைகள்...
உன் இரு கன்னங்களை
எனக்குத் தந்து
என்னை சரி செய்து விடு
என் ராட்சசியே....!!!

என்று அவளது கன்னத்தை மெதுவாக
வருடினான். தன் செயலில்
கார்த்திக்கிற்கே வெட்கம் வந்தது.
(ஆணின் வெட்கம் என்பது
எழுதப்படாத கவிதை)..

பின் எப்போது உறங்கினான் என்று
அவனுக்கே நினைவில்லை.

காலையில் குளித்துவிட்டு
வந்த மது கார்த்திக்கை எழுப்பினாள்.
எழுந்து அரை தூக்கத்தில்
உட்கார்ந்தவனிடம் "அத்தை மாமா
எல்லாம் கிளம்பிட்டாங்க. நம்ம தான்
லேட்...சீக்கிரம் கிளம்புங்க"என்று
ஈரத் தலையை துடைத்த படியே
கூறினாள். அவன் அப்படியே
அவளைப் பார்த்துக் கொண்டு எழுந்து
நிற்க "என்ன?" என கேட்டாள்.

"மது உன் கன்னத்தில் ஏதோ இருக்கு"
என்றபடி அருகில் சென்று தூசு
இருப்பது போல் துடைத்துவிட்டு
அவன் ஆசையை நிறைவேற்றிக்
கொண்டவன் குளிக்க உள்ளே
சென்றுவிட்டான்.

மது குளித்துவிட்டுக் கடைசியாக
பாத்ரூம் கண்ணாடியில் முகத்தைப்
பார்த்து விட்டு தான் வெளியே
வந்தாள். அப்போது எதுவும்
இல்லையே என நினைத்தாள். அவன்
செய்கை புரியாது நின்றவள் பின்
மணி ஆகக் கிளம்பத் தயாரானாள்.
பின் அவன் குளித்து முடித்து வெளிவர
மது கண்ணிற்கு ஐலைன்னர்
வைத்துக் கொண்டு இருந்தாள் மது.

"காதல் சொன்ன கணமே அது
கடவுளைக் கண்ட கணமே.. காற்றாய்
பறக்குது மனமே.. ஓஓஓஓஓஓ!" என்ற
பாடலை மெதுவாக வாயில் அசை
போட்டபடி ஐ லைனர் மூடியை
திருகியபடியே நடந்து கொண்டு
இருந்தாள்.

அவள் பாடியதைக் கேட்டவன்
"ப்ப்ப்பாபாபா.... என்ன வாய்ஸ்" என்று
கிண்டலாகச் சிரித்தான்.

"ஏன் என் வாய்ஸிற்கு என்னக்
குறைச்சல்" இடுப்பிற்கு கைகளைக்
கொடுத்தபடி வினவினாள்.

"என்னக் குறைச்சலா.. அஹான்ன்...
இந்தத் தகர டப்பாவில் கல்லைப்
போட்டு உருட்டினால் ஒரு சத்தம் வரும்
கேள்விப்பட்டிருக்கிறாயா?" என்று
சிரிப்பை அடக்க முடியாமல்
வினவினான்.

"ம்கும்.. உங்களுக்குப் பாட வருமா
பர்ஸ்ட்.. என்னைய சொல்றீங்க" என்று
புகைந்தவளிடம் "ஏன் எனக்கு பாட
வராது.. இப்போ பார்" என்று
யோசித்தவன்... "காலையில காதல்
சொல்லி மதியானம் தாலி கட்டி
சாயங்காலம் தேன் நிலவு போலாம்
வரியா" என்று தலையை
ஆட்டிக்கொண்டே தான் உடுத்த
வேண்டிய சட்டையை எடுத்தபடிப் பாட,
மதுவோ "ஆமாம் காதலைச் சொன்ன
உடனே கல்யாணம் பண்ணிக்
கொள்வீங்களோ.. சரிதான்" என்று
யோசித்தபடி நக்கலாகப் பேச.. "அப்படி
இல்லை தான்.. ஆனால் நீ
சொன்னால் நாளைக்கே ஹனிமூன்
கிளம்ப நான் ரெடி" என்றவன் "என்ன
சொல்ற?" என்று இரண்டு முறை தன்
புருவத்தை ஏற்றி இறக்கினான்.

அவன் கேட்டதில் என்ன சொல்வது
என்று தெரியாமல் மது திக்கு
முக்காடித்தான் போனாள்.

இருமல் வருவது போலப் பாவனை
செய்து விட்டு அறையில் இருந்த
தண்ணீர் பாட்டிலை நோக்கிச் சென்று
அவனிற்கு முதுகைக் காட்டி நின்றாள்.
"இதுல மட்டும் விவரமா இருடி நீ"
என்று நினைத்துச் சிரித்தான்
கார்த்திக். பின்பு கார்த்திக் தலையைத்
துடைத்து விட்டு வர மதுவும் ரெடியாகி
முடித்தாள்.

தலையைக் கோதிவிட்டு வந்து
வாட்ச்சை கட்டிக் கொண்டு
இருந்தவனை கண் இமைக்காது
பார்த்துக் கொண்டு இருந்தாள் மது,
பெட்டில் அமர்ந்தபடி. வைட் ஷர்ட்டிலும்
லைட் ப்ளூ ஜீன்ஸிலும் இருந்தவனை
மேல் இருந்து அளவெடுத்து சைட்
அடித்துக் கொண்டிருந்த மதுவிற்கு
கண்களில் மின்னல் வெட்டியது.
கோவிலில் அவனைப் பார்த்தது
நினைவு வந்தது. 'அந்த ஒரு நொடி
பார்த்த முகத்தை ஒவ்வொரு நொடியும்
நினைத்துக் கொண்டு இருந்ததும்'
நினைவு வந்தது. மனம் அவனிடம்
மனதளவில் லயித்து இருந்த
நாட்களுக்குச் சென்றது.

அவனையே பார்த்து பழைய
நினைவுகளில் இருந்தவளைக்
கார்த்திக்கின் குரல் தான் கலைத்தது.
"என்ன மது மார்க் போட்டாச்சா? நான்
பாஸ் தானே?" என்று அவளைக்
குறும்பாகப் பார்த்துக் கேட்டான்.

அவனின் கேள்வியில் திடிரென
விழித்தவள் "எ..என்ன?" என்றுத்
தடுமாறினாள்.

அவளின் அருகில் வந்து குனிந்தவன்
பெட்டில் அவள் இருபக்கமும் கையை
ஊன்றி "இல்ல என்னைப் பார்த்துட்டே
இருக்கியே மது. அதான் கேட்டேன்..
என்ன மார்க் மது? " என்று கண்களைக்
கூர்மையாக்கிக் கேட்டான்.

அவன் அவ்வளவு அருகில் இருப்பது
நன்றாக இருந்தாலும் ஏதோ ஒன்று
அவளைத் தடுத்தது. தலையைக்
குனிந்து கொண்டு அவன் கேட்ட
கேள்விக்கு என்ன சொல்வது என்று
தெரியாமல் திணறினாள் மது.
கார்த்திக்கின் பார்வையும் அவன்
அருகில் சென்று குனிந்த போது மது
பின் சாய அப்போது லேசாக விலகி
அவளின் இடைப் பகுதியை மதுவின்
சேலைக் காட்ட அவன் கண்கள்
அங்கேயே நின்றன. இதை எதையும்
அறியாமல் தலையைக் குனிந்தபடி
சிலை போல அமர்ந்திருந்தாள்
மதுமிதா.

தடுமாறித் தான் போனான் அவளின்
மணாளன். பின் அவன் என்ன
சாமியாரா? இல்லை முற்றும் துறந்த
முனிவரா?

"மது கிளம்பிவிட்டீர்களா?" என்று
ஜானகி கீழ் இருந்து குரல் கொடுத்தார்.

"அ.... வந்துட்டோம் அத்தை" என்று
அதான் சமயம் என்று கீழே
ஓடிவிட்டாள் மது.

மனதிற்குள் சிரித்து விட்டு
கார்த்திக்கும் கீழே வர நால்வரும்
காரில் கிளம்பினர்.
 

Yaazhini madhumitha

Well-Known Member
மது வீட்டில் அனைவருக்கும் பலத்த
வரவேற்பு.. எல்லோருடும் கார்த்திக்
நன்றாகவே பேசினான். வருணும்
கார்த்திக்கும் நன்றாகப் பேசியதில்
மதுவிற்கு நிம்மதியாக இருந்தது.

"ஏன் மாப்பிள்ளை நீங்கள் ஹனிமூன்
எங்கும் செல்ல வில்லையா?" என்று
திருமுருகன் கேட்க மது
திருதிருவென்று விழித்தாள்.
காலையில் இருந்து இந்த வார்த்தைத்
தன்னைப் பாடுபடுத்துவதை
உணர்ந்தாள் மது.

"இல்லை மாமா.. கல்யணத்தை ஒரு
மாதத்தில் வைத்ததால் அந்த
அலைச்சலில் நிறைய வேலை சேர்ந்து
விட்டது.. மதுவிற்கும் இப்போது லீவ்
கிடைக்காது என்றாள். அதான்
இன்னும் சில நாட்கள் கழித்து
செல்லலாம் என்று முடிவு செய்து
விட்டோம்" என்று சாதரணமாக பதில்
அளித்து சமாளித்து விட்டான்.
கணவனை மனதிற்குள் மெச்சியவள்
மது தண்ணீர் குடிக்கச் செல்வது
போலச் சென்று விட்டாள்.

மது டைனிங் ஹாலில் தண்ணீர்
குடித்து விட்டுத் திரும்ப உமா
மகேஸ்வரி கேள்வியானப்
பார்வையோடு மதுவைப் பார்த்துக்
கொண்டு இருந்தார். சமாளித்துக்
கொண்டு "என்ன அம்மா அப்படி
பார்க்கிறீர்கள்?" எனக் கேட்டாள் மது.

"சந்தோஷமாக இருக்கிறாய் தானே
மது?" என உமா கேட்கும் போதே
மதுவிற்கு உள் உணர்வு மணி
அடித்தது.

"என்னைப் பார்த்தாள்
தெரியவில்லையா அம்மா, உங்கள்
மருமகன் என்னை எப்படி
வைத்திருக்கிறார் என்று" எனத் தன்
அன்னையை எதிர்க் கேள்வி கேட்டு
சிரித்தாள்.

"அதெல்லாம் மாப்பிள்ளை உன்னை
நன்றாக வைத்திருக்கிறார் என்று
உன்னைப் பார்த்தாலே தெரிகிறது. நீ
மாப்பிள்ளையைச் சந்தோஷமாக
வைத்திருக்கிறாயா?" என்று
உடைத்துக் கேட்டுவிட்டார் உமா.

தன் அன்னை நேரிடியாக இப்படிக்
கேட்பார் என்று மது
எதிப்பார்க்கவில்லை. "என்னம்மா
கேள்வி இது" என்று அன்னையிடம்
சலித்தாள் மது.

"பின்னே ஏன் சித்தப்பா ஹனிமூன்
பற்றிக் கேட்ட போது ஒருவிதப் பயமாக
மாறியது முகம். எல்லாப் புது
தம்பதியரிடமும் கேட்கும் கேள்வி
தானே இது" என்று கேட்டார் அவர்.
அவரின் பார்வை வேறு மதுவை மேல்
இருந்து கீழ் வரை துளையிட்டது.

"என்ன அம்மாவும் பெண்ணும்
இரகசியம் பேசிட்டு இருக்கீங்க?"
என்று கேட்டபடி ஜானகி அம்மாள்
ராதாவுடன் வர உமா அந்தப் பேச்சை
நிறுத்தினார்.

"அங்கே வீட்டில் வேலை
செய்கிறாயா எனக் கேட்டுக்
கொண்டிருந்தேன்?" என்று உமா
சமாளித்தார்.

"அதெல்லாம் மது தங்கமாக
இருக்கிறாள்" என்று மதுவின்
தாடையைப் பிடித்து ஆட்டியபடிச்
சொன்னார் ஜானகி.

ஆனால் அவர்களது பேச்சை ஸ்டோர்
ரூமில் எதையோ வருணுடன் எடுக்க
வந்த கார்த்திக் கேட்டுவிட்டான். "என்
அறைக்குச் செல்கிறேன்" என்று தன்
அன்னையிடம் இருந்து தப்பித்து,
மேலே உள்ள அறைக்கு மது செல்ல
சிறிது நேரம் கழித்து கார்த்திக்கும்
மேலே சென்றான்.

மேலே சென்று பால்கனியில் நின்ற
மதுவிற்கு மனம் உறுத்தியது.
அவளுடைய அம்மா கேட்டது முகத்தில்
அறை வாங்கியது போல இருந்தது.
ஏதோ குற்ற உணர்வு மறுபடியும் தலை
தூக்கியது. அவனைக் காதலித்ததைத்
தவிர இன்று வரை அவனிற்காக
என்ன செய்து இருக்கிறோம். இந்தக்
காலத்தில் யார் இப்படி இருப்பா?
உண்மைதானே தன் உணர்விற்கு
மதிப்பு அழித்து அவன் தன்னிடம்
இன்று வரை கண்ணியமாக இருப்பது
என்று எண்ணி வருந்திக் கொண்டு
இருந்தவள் யாரோ வரும் சத்தம்
கேட்டுத் திரும்பிப் பார்க்க, கார்த்திக்
பின்னால் நின்று அவளைப் பார்த்துக்
கொண்டு இருந்தான்.

அவனைப் பார்த்தவள் "ஏன்? எதாவது
வேண்டுமா?" என்று தன்
சிந்தனைகளையும் மீறிக் கேட்டாள்.

"எதுவும் வேண்டாம் மது.. ஆனால் ஏன்
உன் முகம் ஒரு மாதிரி இருக்கு?"
என்று கேட்டபடி அருகில் வந்து
நின்றான்.

"ஒன்றுமில்லை" என்று
திரும்பிவிட்டாள்.

டக்கென்று மதுவைப் பற்றி தன் கை
வளைவிற்குள் நிறுத்தி விட்டான்.
"ஷ்ஷ் மது... நான் சொல்வதை மட்டும்
கேள்.. கொஞ்ச நேரம் இப்படியே நில்"
என்று ஏதோ கேட்க வந்த மதுவைத்
தடுத்துக் கூறினான்.

மதுவிடம் உமாமகேஸ்வரி பேசத்
துடித்துக் கொண்டு இருந்ததை
கார்த்திக் கண்டான். மேலும் உமா
ஏதாவது கேட்டு மது மேலும் முகம்
வாடுவதை அவன் விரும்பவில்லை.
அதனால் தான் மதுவிடம் பேச
எண்ணி அவளின் அறைக்குச்
சென்றான். அப்போது மேலே யாரோ
வரும் சத்தம் கேட்டது. உமா
மகேஸ்வரியாகத் தான் இருக்கும்
என்று யூகித்தவன் டக்கென்று ஒரு
ஐடியா தோன்ற மதுவைக் கை
வளைவிற்குள் நிறுத்திவிட்டான்.
வந்து பார்ப்பவருக்கு கார்த்திக்கின்
முதுகும் அவன் மதுவைப் பிடித்து
தலையை மதுவை நோக்கி குனிந்து
நிற்பது மட்டும் தான் தெரியும்.

கணவன் சொன்னதைக் கேட்ட
மது..என்ன ஏது என்று கூட கேட்காமல்
அவனைப் பிடித்தபடி அப்படியே
நின்றுவிட்டாள். அறையின் கதவு
திறந்திருக்க மது உள்ளே தான்
இருக்க வேண்டும் என்று எண்ணி
அறைக்குள் நுழைந்த உமா
மருமகனும் மகளும் நிற்பதைக் கண்டு
முகம் சிவந்தவர், தன் கேள்விக்கு
வேலை இல்லை என எண்ணி கீழே
வந்து விட்டார்.

அன்னை வந்து சென்றதை
உணர்ந்தவளுக்கு அப்போது தான்
கணவனின் ஐடியா விளங்கியது.
கார்த்திக் அவளை விலக்கியவுடன்
டக்கென்று சிரித்து விட்டாள். "ஓ
இதற்குத்தானா... எனக்கு முதலில்
புரியவில்லை" என்று தலையை
சொறிந்தபடிக் கூறினாள். அவளின்
அருகாமையையும் விரும்பியே அவன்
அப்படி செய்தான் என்பதை அவள்
அறியவில்லை.

"இந்த... நுனி மூக்கில் மச்சம்
இருந்தால் இப்படித்தான் கொஞ்சம்
மக்கு அப்புறம் முன்கோபியாக
இருப்பார்கள்" என்று மதுவின் நுனி
மூக்கில் இருந்த மச்சத்தை சுட்டிக்
காட்டிச் சொன்னான்.

"நான் மக்கா?" என்று இடுப்பில் கை
வைத்தபடி கோபமாகக் கேட்டாள்
மதுமிதா.

"பார்த்தாயா கோபம் கூட வருது"
என்று மேலும் அவளைச் சீண்டினான்
கார்த்திக்.

இருவரும் கீழே வர விருந்து தயாராக
இருந்தது. சாப்பிட்டு முடித்து விட்டு
எல்லாரும் அரட்டை அடிக்க வருண்
மதுவின் சிறுவயது ஆல்பத்தை
எடுத்து வந்து கார்த்திக்கிடம் தந்தான்.
அதில் அவள் குழந்தையாக இருந்த
போட்டிவில் இருந்து இருந்தது.
வருணை மது முறைக்க அதைக் கண்ட
கார்த்திக் மதுவை நோக்கி அவளது
மூக்கின் மச்சத்தை சுட்டிக் காட்டி
"கோபம் வருகிறது" என்று
நக்கல் செய்து சிரித்தான்.

அவன் ஆல்பத்தைப் பிரித்தவுடனே
மது அங்கிருந்து அகன்று விட்டாள்.
அதில் அவள் சிறுவயதில் செய்த
அனைத்து குறும்புச் சேட்டைகளை
எல்லாரும் படம் புடித்து
வைத்திருந்தனர். ஒரு போட்டோவில்
ஆட்டுக்குட்டி ஒன்றுடன் சேற்றில்
விழுந்து ஆடிக் கொண்டு
இருந்தவளைக் கண்டு விழுந்து
விழுந்து சிரித்தான். போட்டோவில்
அவளது சேட்டைகளைப் பார்த்துக்
கொண்டே வந்தவன் ஒரு
போட்டோவில் மது குழந்தையாக
அவளின் அம்மாவின் கையில்
இருந்ததைப் பார்த்தான். அதில்
மதுவிற்கு சரியாகப் பல் கூட முழுதாக
முளைக்கவில்லை. ஒன்றரை வயது
இருக்கும் என்று எண்ணினான்.
ஆனால் அதில் அவள் சிரித்துக்
கொண்டிருந்ததும், நேற்று முகம்
கழுவிய பின் வந்து சாப்பிட
போவோமா என்று கேட்ட முகமும் ஒரே
மாதிரித் தெரிந்தது அவனுக்கு. அந்த
போட்டாவைப் பார்த்துக் கொண்டே
இருந்தவன் "வருண் இந்த போட்டோ
இன்னொரு காப்பி எனக்கு வேணும்"
என்றான்.

"சரி மாமா. இரண்டு நாள்ல தரேன்"
என்றான் வருண்.

பின்பு திருமுருகன் அங்கு வந்து சேர
மூவரும் பேசினர். கார்த்திக் தான்
எண்ணிய ஒரு விஷயத்தை சொல்லிக்
கேட்க "அதெல்லாம் எங்களிடம் கேட்க
வேண்டுமா மாப்பிள்ளை
கண்டிப்பாகச் செய்து விடலாம்"
திருமுருகன்.

அவர்கள் மூவரும் பேசிக் கொண்டு
இருக்கும் போது மது உள்ளே வர
மூவரும் பேச்சை நிறுத்தினர்.
அவர்கள் பேச்சை நிறுத்த "என்ன
எனக்குத் தெரியாமல் ரகசியம்?"
என்றபடி மூவரையும் கேள்வியாய்
நோக்கினாள் மது.

"அது ஒன்றுமில்லை.. சின்ன வயதில்
உன் சேட்டை எல்லாம் எப்படி தாங்கிக்
கொண்டார்கள் என்று கேட்டுக்
கொண்டிருந்தேன்.." என்று
மதுவை கார்த்திக் சீண்ட வருண்
சிரித்துவிட்டான்.

"நானா..." என்று ஏதோ சொல்ல
வந்தவளை கார்த்திக் அவன் மூக்கின்
நுனியை தொட்டு மதுவின் மூக்கின்
நுனி மச்சத்தை நியாபகப்
படுத்தினான்.

"வாவ் நாங்க என்ன சொன்னாலும்
திருப்பிப் பேசுவ.. இப்ப என்ன இப்படி
அமைதி ஆயிட்ட.. மாமா.. சபாஷ் மாமா
சாபஷ்.. இவளை இப்படி ஒரே
பார்வையில் அமைதி
ஆக்கிட்டிங்களே" என்று வருண்
கார்த்திக்கிடம் ஹைபை கொடுத்து
மேலும் மதுவைச் சீண்ட "பாருங்கள்
சித்தப்பா" என்று திருமுருகனிடம்
சிணுங்கினாள் மது.

மாலை ஆனதும் வீட்டிற்குத் திரும்பி
விட்டனர் நால்வரும். இரவில் மது
அடுத்த நாள் உடுத்த வேண்டிய
உடையை எடுத்து வைத்துக் கொண்டு
இருந்தாள்.

கட்டிலில்.. தலையைக் கையில்
வைத்துத் தாங்கியபடி மதுவைப்
பார்த்தபடி படுத்திருந்தவன் "மது
உன்னை எத்தனை பேர் ப்ரபோஸ்
செய்து இருக்கிறார்கள்?" என
மதுவிடம் சாதரணமாகக் கேட்டான்.

"என்னக் கேள்வி எல்லாம் பலமா
இருக்கு?" என்று கண்ணை
உருட்டியபடி மது கேட்டாள்.

"சொல்லேன் மது" என்று ஆவலானக்
குரலில் வினவினான் கார்த்திக்.

"இரண்டு பேர்" என்று சுருக்கமாக
சொன்னவள், சில துவைத்த
துணிகளை அடுக்கி வைக்கத்
துவங்கினாள்.

"நீ என்ன சொன்னாய் மது?" என்று
மேலும் துருவினான் கார்த்திக்.

"என்ன சொல்வேன். விருப்பமில்லை
என்று சொல்லி விட்டேன்" என்றாள்
மது துணிகளை அடிக்கி வைத்தபடியே.

"ஏன்?" என கார்த்திக் வினவ,
காலையில் இருந்து அவன் சீண்டியது
நினைவு வர "என்ன செய்வது.. நான்
தான் ஒரு மடையன் மேல்
பைத்தியமாக இருந்தேனே" என்று
மது சிரிப்பை அடக்கியபடியே
கூறிவிட்டாள்.

அவன் ஏதாவது சொல்லுவான் என்று
எதிர்பார்த்த மது, அவன்
சத்தமில்லாமல் இருப்பதை உணர்ந்து
திரும்பியவள், அவன் தன் அருகில்
கண்களில் சிரிப்புடன் நிற்பதைப்
பார்த்துச் சற்று திகைத்தாள்.

"தேங்க்ஸ் மது" என்றவன் அவள் எதிர்பாராத தருணம் அவளது
கன்னத்தில் அழுத்தமாக தன்
இதழைப் பதித்து ஒரு முத்தத்தை
தந்துவிட்டு உற்சாகமாகக் கதவைத்
திறந்து வெளியே சென்று விட்டான்.
மதுதான் கையில் வைத்திருந்த
துணியுடன் அப்படியே நின்று விட்டாள்.
அவனது மீசை கன்னத்தில் குத்தியது
வேறு குறுகுறுத்தது.

அவனின் முதல் முத்தம்
சந்தோஷத்தை அல்லவா தர
வேண்டும்.. மாறாக அவளுக்கு ஏதோ
தயக்கத்தைத் தந்தது. துணிகளை
அடுக்கி வைத்துவிட்டு சென்று
படுத்து கண்களை மூடியபடி படுத்தாள்.
உறக்கம் வர மறுத்தது . அன்று
வெகுநேரம் கழித்தே கார்த்திக்
அறைக்கு வந்தான். வந்தவன் அவள்
தூங்காமல் கண்களை மட்டும்
படுத்திருப்பதைப் பார்த்து அவள்
தூங்கவில்லை என்பதை கண்டு
கொண்டான். ஏதோ கேட்கலாம் என
நினைத்தவன், வேண்டாம் என்று
முடிவு செய்து லைட்டை அணைத்து
படுத்துவிட்டான்.

அடுத்த இரண்டு நாட்கள் மது
கார்த்திக்கிடம் சற்று விலகியே
இருந்தாள். முகத்தைப் பார்த்துக் கூடச்
சரியாகப் பேசவில்லை.. இல்லை
இல்லை பேசமுடியவில்லை.. ஏதாவது
பிடித்து வைத்து கேட்டவனிடம் பதிலை
மட்டும் சொன்னாள். அவன் எப்பவும்
போலதான் உள்ளான். தன்னால் ஏன்
அப்படி இருக்க முடியவில்லை என்று
எண்ணினாள். அவனின் அருகாமை
பிடித்திருந்தாலும் ஏன் தன்னால்
அதற்கு மேல் முடியவில்லை என்று
குழம்பினாள். ஏதோ ஒன்று அவளைத் தடுக்கிறது என்று யோசித்து
யோசித்து தலை வலி தான் வந்தது
மதுவிற்கு. அன்று இரவு தலை வலி
என்று சீக்கிரம் படுக்கைக்கு வந்து
விட்டாள்.

வழக்கம் போல ஒரு நாள் தூங்கிக்
கொண்டிருந்த மதுவிற்கு கனவு
வந்தது.. யாரோ ஒருத்தன் அவளைத்
துரத்துவதைப் போல... ஒரு நிலையில்
அவன் அவளைப் பிடித்து விட பயந்து
வீறிட்டு எழுந்தாள் மது. மது அலறி
எழுந்ததில் கார்த்திக்கும் பதறி எழுந்து
விட்டான்.

மதுவோ கார்த்திக் என்று அவனைப்
பிடித்துவிட்டாள்.. அவளின் உடல்
நடுங்கியதை கார்த்திக் உணர்ந்தான்..
அவள் உதடு 'கார்த்திக் கார்த்திக்'
என்று உச்சரித்து நடுங்கியது.

"ஒன்றுமில்லை ஒன்றுமில்லை மது
ரிலாக்ஸ்" என்று மதுவைத் தேற்ற
முயன்றான்.

"அந்தக் கனவு...." என்று மது
நடுங்கியபடி சொல்ல கார்த்திக்கிற்குப்
புரிந்து விட்டது. கார்த்திக் எழ அவன்
கையை விடாது பிடித்து இருந்தாள்.
"ஒரு நிமிடம் மது" என்றவன் எழுந்து
லைட்டைப் போட்டு மதுவைப்
பார்த்தான்.

மதுவின் முகமோ வியர்த்து வடிந்தது..
தண்ணீரை எடுத்துப் பருக
வைத்தவன். "மது நான் உன் கூட
இருக்கும் போது என்ன பயம்.. நான்
தான் கூட இருக்கேன்ல.. என்னைத்
தாண்டி தான் எதுவும் உன்னை
நெருங்க முடியாது" என்று அவள்
கைகளைத் தன் கைக்குள் வைத்து
அழுத்தமாகப் பேசி சமாதானம்
செய்ய கொஞ்சம் நிதானமானாள் மது.

"என்னால் உங்களுக்குக் கஷ்டம்
பாருங்கள்.. இப்படி நடு இரவில் கத்தி
உங்களின் தூக்கத்தைக் கலைத்து
விட்டேன்" என்று கண் கலங்க மது
வருத்தப்பட்டு.

"ச்ச.. லூசி மாதிரி பேசாதே மது..
உன்னால் எனக்கு ஒன்னும் கஷ்டம்
இல்லை.. இப்படிப் பேசதே" என்று
கடிந்தவன், பிறகு குரலைத் தாழ்த்தி
"சரி தூங்கு.. இல்லைனா வா..
மொட்டமாடிக்குப் போயிட்டு வரலாம்"
என்று அழைக்க வேண்டாம் என்று
மறுத்தவள் தலையணையில் தலை
சாய்த்தாள்.

பிறகு அவளைத் தூங்க வைத்து
தானும் படுக்கையில் விழுந்தவன்
யோசனையில் ஆழ்ந்தான். நீண்ட
நேரம் யோசித்தவன் ஒரு முடிவை
எடுத்த பின் நித்திரையில் ஆழ்ந்தான்.

அந்த முடிவு மதுவிற்கு சாதகமாக
இருக்குமா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top