உதித்த முதல் நாளே- நான்
உந்தன் பாரமென தூக்கியெறிந்தாய்
உன்னில் சுகங்காண-வேறொருவன்
உன்னை சுமந்து வளர்க்க-நானோ
என்னில் தனிமையை உணர்ந்தேன்-
அத்தனிமைக் கொடுமையை
காதலெனும் கள்ளன்-
கள்ளச்சாவி போட்டு திறந்திட-
மூடிய அறையின் இருளுக்குள்-
முத்தமாகவும்-என்னை
மொத்தமாகவும் கொடுத்து
இன்பம் கண்டேன்...