சாந்தி கவிதா
Well-Known Member
விடை பெற
எண்ணும் மனமே!
விடை தேட எண்ணாததேனோ??
விலகி செல்லுவதில்
உள்ள வலிமை,
நின்று
நிலைப்பதில் இல்லையா??
வாழ்க்கை எனும் வெள்ளத்தில்
கரை சேர வழியா கிட்டாது??
மனதின் வலிமை தான் உடலையும் இயக்குவதாய்;
உடல் வீழ்ந்தாலும்
மனம் உண்டல்லோ;
பகலவன் மறைவது
புது பொழுது புலரத்தான்;
நம்பிக்கை எனும் துடுப்பில்,
வாழ்க்கை எனும் படகை
நகர்த்துவாய் மனமே!!!
நம்பிக்கை என்றும் விதையே;
அதை மரமாக்குவதோ
அல்ல உரமாக்குவதோ;
உன் கையில் மனமே!!!!
-சாந்தி கவிதா
எண்ணும் மனமே!
விடை தேட எண்ணாததேனோ??
விலகி செல்லுவதில்
உள்ள வலிமை,
நின்று
நிலைப்பதில் இல்லையா??
வாழ்க்கை எனும் வெள்ளத்தில்
கரை சேர வழியா கிட்டாது??
மனதின் வலிமை தான் உடலையும் இயக்குவதாய்;
உடல் வீழ்ந்தாலும்
மனம் உண்டல்லோ;
பகலவன் மறைவது
புது பொழுது புலரத்தான்;
நம்பிக்கை எனும் துடுப்பில்,
வாழ்க்கை எனும் படகை
நகர்த்துவாய் மனமே!!!
நம்பிக்கை என்றும் விதையே;
அதை மரமாக்குவதோ
அல்ல உரமாக்குவதோ;
உன் கையில் மனமே!!!!
-சாந்தி கவிதா