EPIOGUE OF KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

arasichelvan

Well-Known Member
அம்மா கலக்கல் ...
எல்லாத்தையும் அழகா தொகுத்து இருக்கீங்க

சமையல் ,சமுதாயம் ,சாதிக்கும் பெண்ணியம்
ஊடல் ,உழைப்பு, காதல் தாய்மை
அள்ள அள்ள குறையாத அன்பு என
அனைத்தும் நிறைந்த
அற்புதமான தொகுப்பு
 

fathima.ar

Well-Known Member
வாழ்கை ஒரு தரம்..
மனிதனாய் பிறப்பது ஒர் வரம்..

நல்ல குடும்பம் தரும் இதம்.
இயற்கையோடு வாழ்வது தனி சுகம்..

அன்பும் பண்பும் உயர்தரம்..
பெற்று வாழ்வோம் அனைவரும் ..
 

MythiliManivannan

Well-Known Member
: அன்பாலே அழகாகும் வீடு​
ஆனந்தம் அதற்குள்ளே தேடு
சொந்தங்கள் கை சேரும்போது
வேறொன்றும் அதற்கில்லை ஈடு


வாடகை வீடே என்று
வாடினால் ஏது இன்பம்
பூமியே நமக்கானது…. ஓ…..
சோகமே வாழ்க்கை என்று
சோர்வதால் ஏது லாபம்
யாவுமே இயல்பானது….
மாறாமல் வாழ்வுமில்லை
தேடாமல் ஏதுமில்லை
நம்பிக்கை விதையாகுமே
கலைகின்ற மேகம் போலே
காயங்கள் ஆறிப்போக
மலரட்டும் எதிர்காலமே….



பாசமே கோவில் என்று
வீட்டிலே தீபம் வைத்தால்
கார்த்திகை தினந்தோறுமே….
ஆ.. நேசமே மாலை என்று
நெஞ்சிலே சூடிக்கொண்டால்
வாசனை துணையாகுமே ஆ…
கூடினால் கோடி நன்மை
சேருமே கையில் வந்து
வாழ்ந்திடு பிரியாமலே
ஏணியே தேவையில்லை
ஏறலாம் மேலே மேலே
தோல்விகள் வெறும் காணலே…..
அன்பாலே அழகாகும் வீடு
ஆனந்தம் அதற்குள்ளே தேடு
சொந்தங்கள் கை சேரும்போது
வேறொன்றும் அதற்கில்லை ஈடு

அருமை பாத்திமா :)
 

Sri B

Well-Known Member
வாழ்கை ஒரு தரம்..
மனிதனாய் பிறப்பது ஒர் வரம்..

நல்ல குடும்பம் தரும் இதம்.
இயற்கையோடு வாழ்வது தனி சுகம்..

அன்பும் பண்பும் உயர்தரம்..
பெற்று வாழ்வோம் அனைவரும் ..
Instant ah kuduthuduringa fathi dr..super ah iruku
 

MythiliManivannan

Well-Known Member
பொன்ஸ் சகோதரி, தங்களின் கனவுகளின் சுயவரமே நாவல் பற்றி சில வார்த்தைகள், பொதுவாக நாவல் இருவகைப்படும். காதல்,காதல்சிக்கல் நாவல் ஒன்று, குடும்பம்,குடும்பஉறவுகள் என இருவகைபடும்.ஆனால் நீங்கள் தன்னம்பிக்கை,சமையல்குறிப்பு,காதல்,மோதல்,பாசம்,சோகம்,நகைசுவை,பிறஉதவிநாடமை,சுயமுன்னேற்றம் என நவரத்தினமாலை போல் நவரத்தின நாவல் படைந்துள்ளீர்.தங்களின் ஹீரோயின் இருவரும் கைம்பெண்கள். ஆம், நம்பிக்{கை] பெண்கள்தான்.மீனாக்ஷியம்மா,மித்ரா இருவரும் வயதில் இருதுருவம்,ஆனால் வாழ்வில் நேர்{மை}துருவம்.நம் அம்மா இப்படி இருக்கவேண்டும் என நினைக்கும் மீனாட்சி அம்மா. இப்படி இருக்கவேண்டும் என நினைக்கும் {விக்னேஷ்,வினி} பிள்ளைகள், நண்பர்கள்,குழந்தை,வேலைஆள்,திருத்தியஉறவுகள் என அனைவரும் அருமை. விக்னேஸ்வரன் அருமையான மனிதன். சிறந்த ஹீரோ.ஆனால் மீனாட்சிஅம்மாவின் பாத்திரம் பின்தான் தெரிகிறர்.நம்மைவிட அவருக்கு மிக சந்தோசம்ஏனெனில் அவர் அம்மாபிள்ளை. சதிஷ்-வினி ஜோடி மோதல் ஜோடி அருமை. ஆசிரியர் ஆகிய நீங்கள் ஒரு புது துறையே {IT} எங்களுக்கு புரியும் படி எழுதியுள்ளீர் அருமை. இரு வகை காதல்,இரு வகை காதல் கல்யாணம் என எழுதியது அருமை. சொத்து,சொத்து என அலையாதீர்,உங்களுக்கு சேரவேண்டியது இறைஅருளால் உங்களிடம் வரும் என போகிறபோக்கில் அசால்டாக கூறியுள்ளீர்.சிறந்த படிப்பாளிகள் குழப்பவாதிகள் என்ற மாயகருத்தை உடைத்து,சிறந்த படிப்பாளிகள் சிறந்த படைப்பாளிகள் என மீண்டும் உங்கள் மூலம் நிறுபனம் ஆகியிருக்கு.சில தெரியாத பழக்கவழக்கங்களை அறிமுகம்{தாலி செயின்}செய்துள்ளீர்.அருமை.ஒரே பதிவில் கண்ணீரையும்,.ஒரே பதிவில் நகைசுவையும் இயல்பாக வருகிறதுசகோதரி .மிக மிக சில இடங்களில் எழுத்து பிழை வருகிறது சகோதரி, அது என் கண் குறைபாடா அல்லது என் கவனகுறைபாடா தெரியவில்லைசகோதரி. ஒரு துளியோண்டு செய்தி சகோதரி,நிறைய உபசெய்திகளை இன்நாவலில் சேர்த்துள்ளீர்,இரண்டு,மூன்று நாவலுக்குதேவையானது. பின் நாளில் நீங்கள் எழுதும் கதைக்கு தேவை எதிர்பார்ப்பை எற்படுத்தும்.உங்களால் முடியும். இதயத்துக்கு இதம் தரும் நாவல் படைத்ததுக்கு நன்றிகள் சகோதரி அன்புடன் V.முருகேசன்.
சூப்பர் சகோ:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top