என் காதல் தீ 17

Advertisement

lekha_1

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரென்ட்ஸ்...

ரொம்ப நாள் ஆகிறுச்சு... ரொம்ப சாரி... என்னால லாப்ல டைப் பண்ண முடியல. மொபைல்ல தான் டைப் செய்துருக்கேன். சின்ன அப்டேட் தான் எழுத முடிஞ்சுது. முடிந்தவரை விரைவில் கதையை முடித்து விடுவேன். அது வரைக்கும் கொஞ்சம் என் irregular அப்டேட்சை பொறுத்துக்கோங்கப்பா....




HelloGuruPremaKosame.jpg


அன்று இரவு வீட்டிற்கு வந்த கதிரை லேசாக திறந்திருந்த கதவு வரவேற்க, அதனை தாண்டி உள்ளே சென்றவன் கண்டது நடனமாடிக்கொண்டிருந்த நிரல்யாவைத் தான்.
என்றுமே நடனத்தில் தனி ஈடுபாடு உண்டு அவளுக்கு. இன்று வரிசையாகவும் வகைவகையாகவும் கண்டவள் கால்கள் தானாக தாளமிட, ப்ளேயரில் ஒரு அதிவேக இசையுடன் பாடலை ஒலிக்க விட்டு நடனமாட ஆரம்பித்துவிட்டாள். அந்த இசையோடு வழக்கமான துள்ளல் சேரவும், அவளுக்கு பாடலும் நினைவிலில்லை, வரிகளும் நினைவிலில்லை. ஆனால், அங்கே வந்த கதிர் கண்டதோ, காதலனை நினைத்து உருகும் காதலியாய் தன்னை எண்ணி ஆடிய நிரல்யாவை. (அவ கெட்ட நேரம், வேற்று மொழி பாடல் ஒன்றில் காதல் ஏக்கத்தை குத்துப்பாடல் போன்று பாடி வைத்திருந்தார்கள், அந்த மொழி கதிருக்கும் தெரிந்திருந்தது. அதனைக் கேட்டவன், நிரல்யா வருணை நினைத்துக்கொண்டிருக்கிறாள் என்று எண்ணிக்கொண்டான்.)
கதிர் வந்தது கூட அறியாமல் அவள் ஆடிக்கொண்டிருக்க, முதலிலேயே வருண் கூறியதை எண்ணி வந்தவனுக்கு இந்த வரிகள் மேலும் கோபமூட்ட, சோஃபாவில் இருந்த ஃபோனில் பாடலை அணைக்க, பின்பே திரும்பினாள் நிரல்யா.
அவனைக் கண்டதும்தான் தான் செய்த காரியம் உரைக்க, “சாரி! ஏதோ ஆடற எந்துசியாஸம்-ல உங்கள கவனிக்கல. இருங்க, தண்ணி எடுத்துட்டு வர்றேன்” என்று நகர்ந்தவளின் செவிகளைத் தீண்டியது, “நீ என்னைக்கு என்னை கவனிச்சிருக்க?” என்ற அவன் கேள்வி.
“அப்படின்னா?” என்று புரியாமல் கேட்டவளின் கேள்வியில் மேலும் கோபமுற்று, “ஒன்னுமே தெரியாது உனக்கு? நல்லா நடிக்கற” என்றவனை இப்பொழுது தானும் கோபத்துடன் பார்த்தாள் நிரல்யா.
“என்னன்னு எதுவா இருந்தாலும் வெளிப்படையா சொல்லுங்க. இப்படி எனக்கு புரியாத மாதிரியே பேச வேண்டாம்” என்று அவள் கூற,
“சரி, வெளிப்படையாவே சொல்றேன். நான் உனக்கு கூடிய சீக்கிரம் நீ கேட்கற டிவர்ஸ் வாங்கித்தர்றேன். ஆனா, அதுவரை இப்படி உன் லவ்வர சந்திக்காத. அதுக்கு பேர்” என்றவன் முடிக்கும்முன் தன் கண்ணத்தில் கைவைத்திருந்தான்.
ஆம்! அவனை நிரல்யா அடித்திருந்தாள். அவன் எதிரே காளியென நின்றிருந்தவளைக் கண்டவன் ஓரு நொடி கண்களை மூடித் திறந்தான்.
“என்னடா நினைச்சிட்டு இருக்க நீ? என்ன வேணா பேசுவியா? நீ பேசுறத எல்லாம் நான் கேட்டுட்டு இருக்கனுமா? எவ்வளவு தைரியம் உனக்கு என்னை அப்படி சொல்ல?” என்று சீறியவளிடம்,
“அப்போ, கல்யானத்துக்கு அப்புறம் புருஷன்மேல லவ் வருமா வராதான்னு ஆசிலேஷனோட எல்லாம் இருக்க முடியாது. எனக்கு இவங்க மேல தான் லவ் வரனும்னு கண்டிஷன் இருக்கக்கூடாதுன்னு சொன்னது?”
“அது எனக்கு முன்ன இருந்த ஒப்பினியன். இப்போ இருக்குன்னு சொன்னனா?”
“….”
“லவ் வருமா வராதான்னு ஒரு டவுட், ஒரு வேல கட்டுனவன் மேல வராத அந்த ஃபீலிங் வேற ஒருத்தங்க மேல வந்தா அது எல்லாருக்கும் கஷ்டம்னு ஒரு எண்ணம். இது எல்லாம் முன்ன. இப்போ அப்படின்னு சொன்னனாடா? நீ பாட்டுக்கு என்னென்னவோ பேசற?”
“அப்போ வருண்கூட எதுக்கு தனியா பேசிட்டு இருந்த நீ?”
கதிர் கேட்ட கேள்வியில் ஒரு நொடி வாயடைத்து போனவள், பின் மறைப்பது சரிவராது என்பதை உணர்ந்து, அனைத்தும் உரைக்க, அதனை நம்பாதவனோ, “ஓ… நீங்க ஒரு கதை சொல்லுவீங்க, அத நான் நம்பனும்?” என்று நக்கல் பாணியில் கேட்க, அங்கே இருவரது உறவும் சரிவை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தது.
“நீயெல்லாம்…. நான் இவ்வளவு சொல்லிகூட என்ன நம்பலைல்ல… உன்னைப் போய்…” என்றவள் அதற்குமேல் தாங்கமாட்டாமல் தன் கோபம் அனைத்தும் அழுகையாக மாற, அறைக்குள் ஓடினாள்.
“போடி, போ… ஊரு உலகத்துல வேற பொண்ணே இல்லாதமாதிரி உன்னைப் போய் கட்டுனேன் பாரு… அதுக்கு வேணும் எனக்கு… அவன் உனக்கு ப்ரபோஸ் பண்ணானாம், இவ அத ரிஜெக்ட் பண்ணாலாம்… இவ்வளவு சொல்றியே, ஏன்டி நமக்கு கல்யாணம் ஆனத மறைக்க சொன்ன? இதுல ஒரே வீட்டுல வேற இருக்கோம். அத அவன் கேட்டான்டி, நேரா முகத்துக்கு முன்னாடி கேட்கலைன்னாலும் என் முதுகு பின்னாடி கேட்டான்டி… இன்னும் எத்தனை பேரு இப்படி கேட்கப்போறாங்களோ? எல்லாம் உன்னால… இந்த பாழாப்போன காதலால” என்று அவன் கத்த, அவன் சொல்பவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தவள் மேலும் அழுக, அதனைக் கேட்டவன் கதவை அறைந்து சாற்றிவிட்டு வெளியேறினான்.
அறைக்கும் அழுதவளுக்கு அவன் கடைசியாக சொல்லிச் சென்ற வார்த்தைகளே தொடர்ந்து ஒலிக்க, அவன் முன்பு கூறிய அனைத்தும் மூளையில் பதியாமலே போய்விட்டன.
‘என்னை நீ எப்படி நினைக்குறன்னு இப்போ எனக்கு புரிஞ்சுருச்சு. உன்ன ஏன் காதலிச்சேனோ? இன்னையோட அத மறக்கறேன். இனிமேல் நீ யாரோ, நான் யாரோ’ என்று மனதில் உறுதி எடுத்தவளின் காதலின் கண்களை ஈகோ தன் இருக்கரம் கொண்டு மறைத்துவிட்டது.
கதிரின் நிலைமையும் அஃதே!
இருவரும் காதலை உரைக்கும்முன் ஏற்பட்ட இந்த பிரிவு நிரந்தரமா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top