முகூர்த்த நேரம் முடியறதுக்குள்ள பொண்ணு மாப்பிள்ளைய அழைச்சிட்டு வாங்கோ...என்ற ஐயரின் குரலைக்கேட்ட நண்பர் கூட்டம் படையெடுத்தது மணமகன் அறையை நோக்கி…
கணேஷ்,பிரதாப் மற்றும் அருணால் மணமகன் அறையில் இருந்த கௌதமின் முகத்தைப் பார்த்து
எதுவும் கணிக்கமுடியவில்லை..
வாடா மச்சான் மூகூர்த்தத்துக்கு டைம்...
வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி.இன்று தான் நம் கதையின் நாயகன் கௌதமிற்கு திருமணம்.
"கௌதம் குமார் weds சந்தியா " என்ற பிரமாண்ட வரவேற்பு பேனர்களும் அலங்காரத் தோரணங்களும் அனைவரையும் வரவேற்றது.ஆனால் கௌதம் மட்டும் ஒருவரின் வரவிற்காக வழி மேல் விழி வைத்து காத்து இருந்தான்.அது வேறு யாருமல்ல. அவனின்...