அழகியல்
அழகியல் 24
தறியில் பங்க்ஷன் முடியவும் அங்கேயே அனைவருக்கும் உணவு ஏற்பாடாகி இருந்தது. ராமமூர்த்தி, ரகுராம் பரிமாற, அவர்களுடன் இணைந்து ஜனக்நந்தினியும் ஸ்வீட் வைக்க ஆரம்பித்தாள்.
தணிகைவேல்க்கு மகளின் செயல் மனதை குளிரத்தான் வைத்தது. ஏனோ என் பொண்ணு ஏன் பரிமாறனும் என்றெல்லாம் தோன்றவில்லை.
உணவு முடியவும் அருணகிரி வீட்டிற்கு வந்தனர். ஓய்வாக அமர, "நைட் சென்னை கிளம்பலாமா?"...
அருணகிரி இருக்க, உணவு நேரம் அமைதியாக முடிந்தது. கேரட் அல்வாவை பத்மா கொடுக்க, அருணகிரி போன் பேச சென்றார். ராமமூர்த்தி நேரே தணிகைவேல் முன் சென்று நின்றார்.
அவர் இப்போ என்ன என்று பார்க்க, "ஆஆ காட்டுங்க" என்று ஸ்பூன் நிறைய கேரட் அல்வாவை அவர் வாயில் வைக்க, தணிகைவேல்க்கு நெஞ்சடைத்து போனது.
பாரதி பதறி ஓடி...
அழகியல் 23
ஜனக்நந்தினி, ரகுராம் தம்பதி அறைக்கு சென்றுவிட, கீழே பெரியவர்களிடம் பெருத்த அமைதி. தணிகைவேல், பாரதி மௌனமாக உணவை உண்டு கொண்டிருந்தனர்.
பாரதியுடன் திருமணம் முடிந்து மறுவீடு வந்த நேரம் இப்படி மாமியார் வீட்டில் விருந்து உண்ட நினைவு தணிகைவேல்க்கு. பழையதை யோசிக்க, அவரின் மாமனார் தானே நினைவிற்கு வந்தார். மிகவும் நல்ல மனிதர்.
"என் விருப்பத்தை...
ரகுராம் மௌனித்தவன், தொண்டை செருமி கொண்டான். "நான்.. நான் மேனேஜ் பண்ணிப்பேன்ப்பா. இங்க இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு" என்றான்.
"அது அப்பறம் பார்த்துக்கலாம். நீ முதல்ல வேலையை கொஞ்சம் குறைச்சுக்கோ" என்றார் பத்மா.
"ம்மா.."
"ரகு.. முன்ன நம்ம நிலைமை வேற. இப்போ பரவாயில்லை. உனக்கு இல்லாம நாங்க பூட்டி வைச்சு என்ன பண்ண போறோம்" என்றார்...
அழகியல் 22
ஜனக்நந்தினி, ரகுராம் மட்டும் வெளியில் நின்றனர். மனைவி கணவனை ஒட்டி நின்றாள். "நான் கிளம்பவா?" அவன் கேட்க, பெண் தலை மட்டுமே அசைத்தாள். "என்னடி" என்று அவள் கை பிடிக்க, அமைதி.
"நான் அதிகமா ஏதும் பேசிடலை தானே. அப்செட் ஆகிட்டியா?" என்று கேட்டான்.
மொத்த பேச்சு வார்த்தையிலும் மனைவி மௌனமாக இருந்ததை கவனித்து தான்...
அருணகிரி தவிர்த்து, பத்மா, ராமமூர்த்தி தம்பதி வந்தனர். அதிலே பாரதிக்கு சுருக்கென இருந்தது. பத்மாவிற்கு அவ்வளவு கோவம். பணம் இருந்தால் இப்படி எல்லாம் நடந்து கொள்வார்களா? என்று.
பாரதி வரவேற்க, முகம் காட்டவில்லை. அதே நேரம் பழையபடியும் இல்லை. மஞ்சுளாவும் அமைதியாக தான் இருந்தார். மருமகள் தன் வீட்டினரை தன்னுடன் வைத்துக்கொண்டாள்.
ரகுராமும் வந்துவிட, பாரதி வாசலுக்கே...
அழகியல் 21
அதிகாலையில் மகளுடன் திருப்பூர் வந்து சேர்ந்தார் தணிகைவேல். எதற்காக அவர் சென்னை சென்றாரோ அந்த பார்ட்டிக்கே மனிதர் செல்லவில்லை.
ட்ரைவர் வண்டி ஓட்ட, வழியெல்லாம் ஒரு பொட்டு கண் மூடவில்லை. மனதிற்குள் பொருமி கொண்டே வந்தார். ஜனக்நந்தினியோ பின் சீட்டில் கால் நீட்டி வசதியாக படுத்துவிட்டாள்.
"உனக்கு எப்படி தூக்கம் வருது பாப்பா?" மனம் தாங்காமல்...
ஜனக்நந்தினிக்கு நிற்க நேரமில்லை. தணிகைவேல் "கிளம்பிட்டியா" என்று போன் செய்தே கொண்டே இருந்தார். அடித்து பிடித்து கடைசி நேரத்தில் செக் இன் முடித்து பிளைட்டில் அமர்ந்துவிட்டாள்.
ரகுராம் மெசேஜ் அனுப்பி கேட்க, பதில் சொன்னாள். கோயம்பத்தூர் தான் ஆர்த்தியின் அம்மா வீடு என்பதால், தணிகைவேலுடன் ஏர்போர்ட்டில் இருந்து நேரே அங்கிருக்கும் மருத்துவமனைக்கு சென்றாள்.
அண்ணியிடம் நலம் விசாரித்து,...
அழகியல் 20
ரகுராமின் எதிர்பாரா அணைப்பில் பெண் ஒரு நொடி அதிர்ந்து அவனோடு இணைவாக ஒன்றி கொண்டாள். கணவனின் இதய துடிப்பு அவளுக்குள் இறங்க, தன் முகத்தை உரசி அவனை விட்டு விலக போக, ரகுராமோ அவளை விட மறுத்தான்.
"என்னங்க" என்றாள் இருக்கும் இடம் கண்ணால் காட்டி.
ரகுராம்க்கு அதெல்லாம் எங்கு தெரிந்தது? மனைவி ஒருத்தியே அவன்...
இரண்டு நாளில் முடிவானது போல் சென்னை கிளம்பினர். தணிகைவேல் கொடுத்த சீர் ஒன்று விடாமல் பத்மா ஏற்றிவிட்டார். ராமமூர்த்தி, அனுஷா குடும்பம் வர, வேனில் பயணித்தனர்.
முந்தின இரவு சென்று சேர, இவர்களுக்கு முன் தணிகைவேல் குடும்பம் அங்கிருந்தது. ஆர்த்தி தவிர்த்து, ராஜேஸ்வரி, வேணி உட்பட,
பெண் "பாட்டி" என்று அவரை அணைத்து கொள்ள, ராஜேஸ்வரிக்கு கண்கள்...
அழகியல் 19
புது தம்பதிகள் தங்கள் வாழ்க்கையை தொடங்கி ஒரு வாரம் ஆகியிருக்க, ஜனக்நந்தினியும் மாமியார் வீட்டில் ஒன்ற ஆரம்பித்தாள். அசைவ விருந்தும், முக்கிய உறவினர்களின் விருந்தும் இந்த நாட்களிலே முடிந்திருந்தது.
"இன்றைக்கு எங்கும் கிடையாது. அவ்வளவுதான் விருந்து முடிஞ்சது" என்று பத்மா சொல்லிவிட, ரகுராம்க்கு ஆசுவாசம்.
அனுஷாவும், ராமமூர்த்தி தம்பதியும் அவர்கள் இருப்பிடத்துக்கு திரும்பினர். பத்மா வழக்கம்...
என்ன செய்வது என்று தெரியவில்லை. பாரதி மருமகளுக்கு குடிக்க எடுத்து வந்தவர், இருவரையும் கேள்வியாக பார்த்தார். ஆர்த்தி ஜுஸ் குடித்து சிறிது நேரம் படுக்க, ப்ரவீன் அம்மாவுடன் வெளியே வந்தான்.
"ரொம்ப பிரஷர் கொடுக்கிறாங்க போலம்மா" என்றான் தாங்காமல்.
பாரதிக்கு புரிந்தது. "என்ன செய்ய முடியும்ன்னு பார்க்கலாம் ப்ரவீன்" என்றார்.
"சீக்கிரம் செய்யணும்மா, இங்கேயே இருன்னா வேணாம்ங்குறா" என்றான்...
அழகியல் 18
அடுத்தநாள் காலையிலே ரகுராம் தம்பதி ஊட்டி செல்வதற்காக கிளம்பி கீழே வந்தனர். பாரதி இவர்களை ஆச்சரியமாக பார்த்தவர், அமர வைத்து காபி எடுத்து வந்தார்.
தணிகைவேல் வர, அவருக்கும் காபி கொடுத்தார். இருவரும் கிளம்பி இருக்க, பெற்றவர்கள் கேள்வியாக பார்த்தனர். ரகுராம் காபி முடியவும், "நாங்க ஊட்டிக்கு போலாம்ன்னு இருக்கோம்" என்றான்.
அவர்கள் அதிர்ந்து மகளை...
ரகுராம்க்கும், பாரதிக்கும் ஏதோ புரிந்தது. ஜனக்நந்தினி மிரட்சியுடன் அம்மா கை பிடித்து கொண்டாள்.
"உன்னை பேசாதன்னு சொல்லி தானே கூட்டிட்டு வந்தேன்" ஆர்த்தியின் அப்பா அவரின் மனைவியை சத்தம் போட்டார்.
"எல்லாம் என்னையே திட்டுறீங்க. நான் தப்பா ஒன்னும் சொல்லலை. இருக்கிறதை தான் சொன்னேன்" என்றார் அவர்.
"என் பொண்ணு நேத்து தாலி கட்டி, இன்னைக்கு அம்மா வீடு...
அழகியல் 17
அதிகாலையில் ரகுராமின் மொபைல் ஒலிக்க, மணமக்களுக்கு ஆழ்ந்த உறக்கம். சில நிமிட இடைவெளியில் திரும்ப ஒலிக்க, அப்போதும் இருவரும் அசைய கூட இல்லை.
"நல்லா தூங்கிட்டிருக்காங்க போல" என்றாள் அனுஷா அம்மாவிடம்.
"பூஜைக்கு போகணுமே" அவர் கைகளை பிசைய,
"என்னாச்சு" என்று வந்தார் அருணகிரி.
எல்லாம் குளித்து தயாராக இருக்க, முக்கியமானவர்கள் இன்னும் எழவே இல்லை. "அது பிள்ளைங்க...
ப்ரவீன், "நீங்க போய் ரெடி ஆகுங்க. நேரம் ஆச்சு" என்றான் ரகுராமிடம்.
ரகுராம் அறைக்கு செல்ல, அனுஷாவும், பத்மாவும் "எங்க போன? சீக்கிரம் கிளம்பு" என்றனர்.
ரகுராம் அங்கேயே ஒரு குளியல் போட்டு, புளூ பேண்ட், வொயிட் ஷார்ட் மட்டும் அணிந்து கொண்டான். மேல் கோட் அணியவில்லை. தணிகைவேல் எடுத்து கொடுத்த உடை. "அதையும் போட்டுக்கோங்க" என்று...
அழகியல் 16
திருமண சடங்குகள் தொடர்ந்து நடந்து முடிய, மணமக்கள் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர். ராஜேஸ்வரியிடம் வரும் போது, அவரின் கண்கள் கலங்காமல் இல்லை. பேத்திக்காகவே மனதார வாழ்த்தியவர், ஜனக்நந்தினியை தழுவி நெற்றியில் முத்தம் வைத்தார்.
அதை தொடர்ந்து மற்றவர் காலிலும் விழுந்து எழ, உறவுகள் சூழ்ந்து கொண்டனர். தொடர்ந்து மணமக்கள் உணவுக்கு சென்றனர்....
இன்று ஆர்த்தியை பார்க்க சென்ற போது அவன் மாமியார், "உங்க அம்மாக்கு அங்க வசதி எல்லாம் இருக்குமா மாப்பிள்ளை. நம்மளவு அவங்க இல்லைன்னு கேள்விப்பட்டேனே. பிறந்த வீடு எப்படியோ, உங்க அம்மாக்கு மாமியார் வீடு நல்லா வசதியா அமைஞ்சிடுச்சு" என்று கேட்டிருந்தார்.
அந்த கோவத்திலே சாப்பிட கூட மறுத்து தான் கிளம்பி வந்திருந்தான். இங்கு ராஜேஸ்வரி...
அழகியல் 15
சுந்தரம் சொன்னவற்றில் இரண்டு விஷயங்கள் தணிகைவேல்க்கு ஏற்புடையதாக இருந்தது. ஒன்று.. காதல் திருமணம் என்பது. இதுவும் கிட்டத்தட்ட அப்படி தானே?
பாரதி ஆரம்பித்து வைத்தது தான் என்றாலும், பின்னர் பாரதியுமே மகளிடம் தானே முடிவை விட்டுவிட்டார்.
எல்லா விதமான வேற்றுமையும் காதல் திருமணம் என்பதிலே அடிபட்டு போகிறதே!
பெரியவர்கள் தங்களுக்கு சமமாக பார்ப்பார்கள். இளையவர்கள் அப்படி இல்லையே?...
"சித்தப்பா"
"பின்ன என்ன ரகு. இதெல்லாம் ஒரு காரணம்ன்னு சொல்லிட்டிருக்கா" என்றார் அவர் அடங்கா கோபத்துடன்.
பாரதி அமைதியாய் இருக்க, "அத்தை.. நமக்காக நாம குரல் கொடுக்கும் போது கல்லடி படத்தான் செய்யும். கல்லடிக்கு பயந்து நீங்க வாயை மூடினா கல்லடி நின்னுடும் நினைக்கிறீங்களா?" என்று ரகுராம் கேட்டான்.
பாரதி இல்லையென்று தலையசைக்க, "நீங்க உங்க இடத்துல இருந்து...