Un Kannil En Vimbam
அத்தியாயம் 12
அடுத்து வந்த நாட்களில் எதுவுமே நடக்காத மாதிரி தான் ரிஷியின் நடவடிக்கைகள் இருந்தது. காலையில் ஆபீஸ் கிளம்பிச் செல்வபவன் இரவில் வீடு வருவதும், ப்ரதீபனுடன் அமர்ந்து சாப்பிடுவதும், யாழிசையோடு இழைவதும் என்று நாட்கள் செல்ல அவனின் கொஞ்சல் மொழிகள் முற்றாக காணாமல் போய் முகத்தில் ஒரு இறுக்கம் குடி கொண்டிருந்தது.
யாழிசையின் மேல் இருக்கும்...
அத்தியாயம் 15
இரவில் வெகு நேரமாக கண்விழித்திருந்த கயல்விழி எப்பொழுது தூங்கினாலோ அவளின் செல்ல மகன் அவளை முத்தமிட்டு எழுப்பிக் கொண்டிருக்க, ஊட்டி குளிர் வேறு அவளை மேலும் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கச் சொல்லி கட்டளையிட்டுக் கொண்டிருந்தது.
"மா எந்திரிமா. மா எந்திரிமா" ஸ்ரீராம் அவளை எழுப்ப அவனையும் இழுத்து போர்வைக்குள் புகுத்தி அணைத்தவள் அவனின்...
அத்தியாயம் 4
பெண் என்பவள் மகளாய் பிறந்து, சகோதரியாய் வாழ்ந்து, மனைவியாய் உறவாடி, அன்னையாய் வரம் பெற்று, மாமியாராய் பதவி ஏற்கின்றாள். இதில் மனைவி என்பவள் வாழ்க்கை பயணத்தை சரியாக கணவன் என்ற துணையோடு தான் பயணிக்க வேண்டி உள்ளது. இருவரும் மனமொத்து, புரிந்து வாழ்ந்தால் தானே! சந்தோசம் நிலைக்கும்.
விடிந்தால் கல்யாணம். அந்த சந்தோசம் யாழிசையின்...
அத்தியாயம் 26
ஏப்ரல் மாதம் தொடங்கும் போதே வண்ண வண்ண பூக்கள் பூத்துக் குலுங்க குயில் கூவும் இன்னிசை ரம்யமாக கேட்க ஆரம்பிக்கும். தொலைக்காட்ச்சியிலும் "அவ்ருது கீத" எனும் நெஞ்சை மயக்கும் புத்தாண்டு மெல்லிசை பாடல்கள் ஒளிபரப்பப்படும்.
நாடெங்கும் பட்டாசு வெடிக்க சிங்கள, தமிழ் புதுவருடத்தை வரவேற்றனர் நாட்டு மக்கள். தமிழர்கள் சித்திரை புத்தாண்டாக கொண்டாட சிங்களவர்கள்...
அத்தியாயம் 13
ரிஷி சென்னைக்கு சென்று பத்து நாட்களாகி இருக்க அவனிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. போனாவது பண்ணி யாழிசையிடம் பேசவுமில்லை. அவன் இருக்கும் போது உடல் ரணமாவதென்றால் இல்லாத போது மனம் ரணமாக துடிதுடித்துத் தான் போனாள் யாழிசை.
அவன் எங்கே போய் இருக்கின்றான் என்பதும் அவளுக்கு தெரியாது. ப்ரதீபனிடம் சென்று கேட்கவும் பயமாக இருந்தது....
அத்தியாயம் 5
ரிஷி எதையும் திட்டமிட்டு, நன்றாக யோசித்து, சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து செய்து முடிப்பதில் கில்லாடி. யாழிசையை எப்படியாவது அடைந்தே தீரனும் என்று முடிவு செய்து தான் வந்திருந்தான். இதுவரை எந்த பெண்ணிடமும் காதல் என்று போய் நின்றதும் இல்லை. ஐ லவ் யு என்ற வார்த்தையை பாவித்ததும் இல்லை. அவனிடம் காதல்...
அத்தியாயம் 8
எதிர்பார்த்து காத்திருந்து ஏமாற்றமடையும் பெண்ணின் மனதில் மேலும் பாரம் ஏறிக்கொண்டாள் அவளின் நிலை?
ரிஷி சென்று ஐந்து நாட்களாகி இருக்க, அவனின் அருகாமையும், வசீகர குரலும், சில்மிஷங்களும் இல்லாமல் தவிக்கலானாள் யாழிசை. சொல்லாமல் சென்றது கூட அவளின் மனதை பாதிக்க வில்லை. சென்றவனிடமிருந்து எந்த தகவலும் இல்லாது போகவே சதா கண்களில் கண்ணீர் வழிந்தவாறே...
அத்தியாயம் 6
குளித்து முடித்து தன்னை தயார்செய்து கொண்டு யாழிசையின் வீட்டுக்குள் நுழைய மங்கம்மா அவனை வித்தியாசமாக பார்க்க
"என்ன இவங்க இப்படி பாக்குறாங்க" என்று ரிஷி யோசிக்க
"மாப்புள நீங்க எப்போ வெளிய போனீங்க?" யோகராஜ்
"நான் அப்போ போனதுதான் மாமா இப்போ தான் வரேன்"
"அப்போ ரூம்ல யாரு இருந்தா" அவன் யோசிக்க ரிஷி கலவரமடைந்தான்.
"என்னங்க நீங்க நிக்கவச்சி...
அத்தியாயம் 7
அழகான ஊர், இதமான காலநிலை, காதலிக்க ஏற்ற சுகமான பொழுதுகள். மனதுக்கு பிடித்த பெண் எல்லாம் ஒரே நேரத்தில் அமைந்தால் வரம் தான்.
அறை வாசலிலேயே ஹோட்டல் ஊளியர்களுக்கு காசை கொடுத்து அனுப்பி விட்டு ரிஷி யாழிசையை அணைத்தவாறே அறைக்குள் வந்து கதவை தாளிட்டான்.
அவ்வறை சின்ன வரவேற்பறையோடு இடது பக்கத்தில் குளியலறையும், வலது பக்கத்தில்...
அத்தியாயம் 2
காதல் எங்கே? எப்போது? எவ்வாறு? ஏற்படும் என்பதை முன் கூட்டியே அறிந்திருந்தால் அதிலிருந்து தப்பிக்க வழியையும் கண்டு பிடித்திருந்திருப்பார்களோ!
ரிஷியின் மனமோ கொதித்துக் கொண்டிருந்தது. யாழிசை அவனை அடித்ததில் தாங்க முடியாத வலியோடு தட்டுத்தடுமாறி வண்டியை ஓட்டிக்கொண்டு பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தவன் நர்ஸை அழைத்து மருந்து போட சொல்லி ஆங்கிலத்தில் சொல்ல
எப்படி...
அத்தியாயம் 10
மும்பாய் இந்தியாவில் அதிக சனத்தொகையை கொண்ட பொழுதுபோக்கு நகரம். அதிகமான பணக்காரர்கள் வசிக்கும் நகரமும் கூட.
ரிஷி யாழிசையையும் அழைத்துக் கொண்டு வீடு வர காலை ஒன்பது மணியை தொட்டிருக்க, பிரதீபன் ஆபீஸ் செல்ல தயாராகி வெளியே வந்தான். அந்நேரத்தில் ரிஷியின் கார் உள்ளே நுழைவதை கண்டவன் வராந்தாவிலே நிற்க
வண்டி உள்ளே நுழையும் போதே...
அத்தியாயம் 14
கடவுளின் கைகளில் ஆடும் பொம்மைகள் நாம். அவனோ பெரிய பொம்மலாட்டக்காரன். அவனுக்கு யாரை ரொம்ப பிடிக்குமோ அவர்களுக்கு கஷ்டத்தை கொடுத்துக் கொண்டே சோதிப்பான்.
யாழிசை எழுந்துக்கொள்ளும் போது மதியம் தாண்டி இருக்க திரைசீலைகள் மூடி இருந்தமையால் அறை இருட்டாகவே இருந்தது. கை வலியும் கொஞ்சம் மட்டுப் பட்டிருக்க, மெதுவாக கண்விழித்தவளுக்கு முதலில் தான் எங்கே...
அத்தியாயம் 16
சிலு சிலுவென குளிர் காற்று, ஊட்டி முழுவதும் வீச காலை சூரியனும் சோம்பலை முறித்துக் கொண்டு வளம் வர அன்று பாடசாலை விடுமுறை என்பதால் திவ்யாவை இழுத்துக் கொண்டு சைக்கிள் ஓட்ட வேண்டும் என்று அடம்பிடித்து அழைத்து வந்திருந்தான் ஸ்ரீராம்.
ஸ்ரீராமுக்கு இணையாக அவனோடு விளையாடும் ஒரே ஜீவன் திவ்யா மாத்திரமே. திவ்யாவை அவன்...
அத்தியாயம் 18
ஒருவாறு மும்பை வந்து வீட்டையடைய மாலை மங்கி இருள் சூழ்ந்திருக்க கயல்விழியின் மனதில் வீட்டை பார்த்ததும் ரிஷியோடு முதல் முதலாக அந்த வீட்டுக்கு வந்த நியாபகம் மனதில் எழவே கண்களில் இருந்து கண்ணீர் எட்டிப் பார்த்தது.
தூங்கும் ஸ்ரீராமை தூக்கிக் கொண்டு பிரதீபன் முன்னாள் நடக்க திலகாவின் கையை பிடித்துக் கொண்டு நடந்து வந்த...
அத்தியாயம் 19
மாலை வீடு வந்த அமுதன் வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே வர ஓடி வந்த ஸ்ரீராம் அவன் மேல் மோதி விழப்போக, குழந்தை விழாது தூக்கி பிடித்தவன் ஸ்ரீராம் "தேங்க்ஸ் டாடி" என்றதில் கண்கள் கலங்கி ஸ்ரீராமை முத்த மழையில் நனைய வைத்தான்.
"இன்னும் எத்தனை நாள் அமுதானா இருக்கப் போற?" உன்னை நானறிவேன்...
அத்தியாயம் 9
யாழிசைக்கு இது முதல் விமானப் பயணம். ஏன் விமானத்தையே! இன்று தான் முதல் முதலாக நேரடியாக பார்க்கின்றாள். இராச்சத மீனின் வயிற்றுக்குள் இருப்பது போல் பிரம்மை தோன்றி மனதில் பயப்பந்தும் உருள ஆரம்பித்தது. ரிஷியின் கையை தனது கையால் இறுக பற்றிக்கொண்டு கண்களை மூடி கடவுளை அழைக்கலானாள்.
அவளை பார்த்த ரிஷிக்கோ சிரிப்பு பீறிட்டுக்கொண்டு...
அத்தியாயம் 3
ரிஷியின் நெற்றிக்காயம் ஆறவே நான்கு நாட்கள் சென்றிருந்தது. அந்த நான்கு நாட்களும் அறையிலேயே தங்கி இருந்தவன். முதலில் செய்தது யாழிசையின் வீட்டுக்கு அருகில் வாடகைக்கு வீடு தேடியது. எல்லாம் சாதாரண வீடாக இருக்க அவனுக்கு ஏற்றது போல் சரிவர ஒரு வீடும் அமையவில்லை. அவன் அதிஷ்டமோ! துரதிஷ்டமோ! நாற்பது லட்சம் இலங்கை ரூபாய்...