Varam Tharum Vasanthamae
அத்தியாயம் பதினெட்டு:
கனி வெகு நேரம் அழுதுக்கொண்டு இருந்தும் ஆகாஷ் விழிக்கவில்லை. எப்படியோ ஒரு வழியாக அழுகையை நிறுத்தினாள்.
அவன் விழித்துக்கொண்டால் திட்டுவான், அவன் எழும்முன் படுக்கலாம் என்று கட்டிலை நெருங்கி அவனைத் தாண்டும் போது திடீரென்று குழந்தை அழுகையில் வீறிட பதட்டத்தில் அவன் மேலேயே விழுந்தாள்.
அவள் மேலே விழுந்ததில் விழித்துக்கொண்ட ஆகாஷ் குழந்தையின் வீறிடலையும் கேட்டான்.
அவன்...
அத்தியாயம் பதினேழு:
கனியின் கண்ணீர் துளிகள் கைகளில் விழுந்ததும் அவளை நிமிர்ந்து பார்த்தான் ஆகாஷ், அவள் எதையும் கவனிக்கவில்லை குனிந்த தலையும் நிமிரவில்லை.
அவளின் கைகளைப் பிடித்து அதை ஆதரவாக அழுத்திக்கொடுத்தான். அவளின் கைகளை பிடிக்கவும் தான் அவளின் உடம்பு சூடு தெரிந்தது.
அவளின் காய்ச்சல் இன்னும் விடவில்லை என்று புரிந்தான். அவளின் காய்ச்சலை மறந்த தன்னையே நொந்துக்...
அத்தியாயம் பதினாறு:
இவர்கள் பேசி முடிப்பதற்கு முன்பே செந்தில் கனியின் பெட்டிகள் பைகள் என்று எல்லாவற்றையும் காரில் வைத்து........ இவர்கள் வெளியே வந்தவுடன் வீட்டை பூட்டுவதற்காகக் காத்திருந்தான்.
“கிளம்பலாம் ஆகாஷ், டைம் ஆச்சு!”, என்று குரலும் கொடுக்க அவர்கள் வெளியே வந்தனர்.
“எதுக்குடா டைம் ஆச்சு”, என்றான் ஆகாஷ்.
“அங்க குழந்தை முழிச்சிக்கப் போறான், அதைச் சொன்னேன்!”, என்று சமாளித்தான்...
அத்தியாயம் பதினைந்து:
அதிகாலை நான்கு மணிக்கு உறங்க ஆரம்பித்தாள் கனி. குழந்தைக்கு அவளின் தேவை ஒரு ஆறுமணி போல இருக்க ஆகாஷ் சென்று அவளை எழுப்பி விட்டான்.
கனியாவது முன்பு ஒரு நான்கைந்து மணிநேரம், இப்போது ஒரு இரண்டு மணிநேரம் போலத் தூங்கினாள். ஆனால் ஆகாஷிற்கு ஒரு பொட்டுத் தூக்கமில்லை.
சிறிது நேரம் தூங்கேன் என்று அவனின் கண்கள்...
அத்தியாயம் பதினான்கு:
ஆகாஷின் கைகளில் கனி தொய்ந்தது சில நொடிகளே உடனேயே இருக்கும் நிலை உணர்ந்தவள், அவளின் இடையில் இருந்த அவனின் கைகளை பற்றி விலக்க முற்பட்டாள்.
இவ்வளவு நேரம் சுற்றுப்புறம் உணராமல் நடந்துக்கொண்டு இருந்தவள் இப்போது குழந்தையின் பத்திரத்தை அறிந்தப் பிறகு அவனிடம் இருந்து விலக முற்பட்டாள்.
ஆகாஷோ இப்போது அவளுக்கு நேர் மாறான மனநிலையில் இருந்தான்....
அத்தியாயம் பதிமூன்று:
கனி கால்கள் வேரோட அரை மயக்க நிலையில் இருக்க........ யாரும் கேட்கும் கேள்விகளுக்கும் அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
என்னக் கேட்கிறார்கள் என்றுக் கூட புரியவில்லை மலங்க மலங்க விழித்தாள். அவளின் நினைவு முழுக்க அவளின் மகனே இருந்தான்.
மாப்பிள்ளையைக் காணோம் என்ற சலசலப்பு வேறு..... எதற்கு கவலைப்படுவது என்றே கனியின் பெற்றோர்களுக்கு தெரியவில்லை, குழந்தை...
அத்தியாயம் பன்னிரெண்டு:
சென்னையை நோக்கி சென்றுக் கொண்டிருந்த போதே கனிமொழி ஆகாஷை அழைத்தாள்.....
ஆகாஷ் எடுக்கவும், “எங்க இருக்கீங்க”, என்றாள்.
“சென்னை போய்கிட்டு இருக்கேன்”,
“ஒஹ்! வெச்சிடறேன்”, என்றவள் வேறு ஒன்றும் பேசாமல் போனை வைத்துவிட்டாள்.
மறுபடியும் ஆகாஷ் போன் செய்ய எடுக்கவே இல்லை.....
இவனும் விடாமல் அடித்துக்கொண்டே இருந்தான். கோபம் வர ஆரம்பித்தது. ஒரு முப்பது காலுக்கும் மேலேயே இருக்கும், அத்தனைக்கும்...
அத்தியாயம் பதினொன்று:
கனிமொழி வீட்டில் இருந்து கிளம்பி வரும்பொழுது, “என்மேல கோபமா நான் ரொம்ப அதிகப்ரசிங்கித்தனமா நடந்துக்கிட்டேனா”, என்றாள் ராஜி ஆகாஷைப் பார்த்து......
ஆகாஷ் அதற்கு பதில் சொல்லும் முன்பே, “செய்யறது எல்லாம் செஞ்சிட்டு, அப்புறம் என்னக் கேள்வி”, என்று செந்தில் சத்தம் போட......
“விடு! அவளை எதுக்கு இப்போ திட்டுற! சொல்லிட்டா! இனிமே என்ன செய்ய முடியும்!...
அத்தியாயம் பத்து:
ராஜியின் பளிச் புன்னகை கனியைக் கவர்ந்தது. பதிலுக்குப் புன்னகைத்தாள்.
“எனக்கு ரொம்ப நாளா உங்களைப் பார்க்கணும்னு பேசணும்னு ஆசை அக்கா! இவங்க உங்களைப் பத்தி அடிக்கடி சொல்லுவாங்க!”, என்று செந்திலை காட்டியவள்...... “ஆனா சந்தர்ப்பம் அமையலை”, என்றாள்.
கனிக்கு என்னப் பேசுவது என்று தெரியவில்லை, பதிலுக்கு புன்னகைத்தவள், “நான் அக்காவா”, என்று மட்டும் நினைத்தாள்.
அப்போது...
அத்தியாயம் ஒன்பது:
“பத்த வெச்சிட்டுப் போயிடாண்டா”, என்பதைத் தவிர ஆகாஷால் ஒன்றும் நினைக்க முடியவில்லை. கனிமொழி அவனைக் கண்களாலேயே எரித்துக் கொண்டிருந்தாள்.
“நான் ஒண்ணும் பண்ணலை, அவன் தான் ரொமான்ஸ் அது இதுன்னு ஏதோ உளறிட்டு போறான்”, என்று ஆகாஷ் பேசுவதற்கு தடுமாறினான்.
அந்த தயக்கங்கள் எதுவும் கனியின் கண்ணில் படவில்லை. மீண்டும் அவனிடம் சண்டைக்கு கிளம்பினாள். “அவங்க...
அத்தியாயம் எட்டு:
அசோக் குழந்தையை லாவகமாக வாங்கி கனிமொழியிடம் கொடுத்து கண்ஜாடையில் அவளை உள்ளேப் போகச் சொன்னதை ரத்னம் பார்த்துக்கொண்டு தான் இருந்தான்.
“போங்கடா போங்க! அண்ணனும் தங்கச்சியும் எங்கேப் போயிடப் போறீங்க! என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாதுடா!”, என்று மனதிற்குள் கறுவிக்கொண்டான்.
அவன் அவர்களின் சொந்த பந்தங்களை கொண்டு அசோக்கையும் கனிமொழியையும் எடைப் போட்டான். ஒரு பிரச்சனை...
அத்தியாயம் ஏழு:
உறங்கும் கனிமொழியை விழிகளுக்குள் நிரப்பியவன்......... பிறகு குழந்தையை சென்றுப் பார்த்தான், யார் ஜாடையில் இருக்கிறது என்று. அவனுக்கு அதிகமாக பார்க்கத் தெரியாவிட்டாலும் கூட நன்றாக தெரிந்து குழந்தை கனியின் ஜாடை என்று.
“ஹப்பா”, என்று ஒரு நிம்மதி மூச்சு கிளம்பியது அவனிடமிருந்து....... அவன் பயந்துக் கொண்டே இருந்தான், “குழந்தை ஒருவேளை அவனின் தந்தையின் ஜாடையில்...
அத்தியாயம் ஆறு:
ஆகாஷ் கனிமொழியை பார்த்து, “நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா”, என்று கேட்ட விதம் அவளை அசைத்து தான் பார்த்தது.
ஆனாலும் சரியென்று அவளால் சொல்ல முடியவில்லை. அவளின் அமைதியை சம்மதமாக எடுத்துக்கொள்ள ஆகாஷால் முடியவில்லை.
அவள் பதில் சொல்லட்டும் என்று விடாமல் அவளை பார்த்திருந்தான் ஆகாஷ். அவனின் பார்வையை தவிர்த்தாள்.
“என்ன சொல்லி இவனுக்கு புரிய வைப்பது?...
அத்தியாயம் ஐந்து:
பக்கத்தில் நாமக்கல் தான் பெரிய ஊர் என்பதால் அங்கே வண்டியை விரட்டினான் அசோக்.
அங்கே இருந்த ஒரு ஹாஸ்பிடலில் அட்மிட் செய்ய நேரம் மணி ஏழு தான். அதனால் பெரிய டாக்டர்கள் யாரும் இல்லை. ட்யுடி டாக்டர் மட்டும் தான் இருந்தார்.
அவரின் சீஃப் டாக்டருக்கு போன் செய்தவர், “அவர் இப்போ வந்துடுவார், கத்தி குத்துன்றதால...
அத்தியாயம் நான்கு:
“வீட்டிற்கு வா உணவிற்கு”, என்று செந்தில் எவ்வளவோக் கேட்டும்.....
“இப்போ என்னால எங்கேயும் வர முடியாது”, என்று மறுத்து விட்டான் ஆகாஷ்.
வேறு வழியில்லாமல் உணவை அங்கேயே தருவித்துக் கொடுத்தான் செந்தில். அதையும் அறையும் குறையுமாக தான் உண்டான் ஆகாஷ்.
“எப்படி சிரித்த முகமாக இருப்பவன் இவ்வளவு இறுக்கமாக ஒரே நாளில் மாறிவிட்டான்”, என்றிருந்தது செந்திலுக்கு.
மாலைவரை செந்தில்...
அத்தியாயம் மூன்று:
செந்திலுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. “ஆகாஷ் என்ன பேசற நீன்னு தெரிஞ்சு தான் பேசறியா இது தப்பு.......”,
“எது தப்பு?”,
“நீ இப்படி அவ நெத்தில பொட்டில்லாம இருக்கறது உன் பிரச்சனை சொல்றது தப்பு. அவ நெத்தில பொட்டிருந்தா உனக்கென்ன இல்லைன்னா உனக்கென்ன?”,
“எனக்கு அது தெரியுது! ஆனா எனக்கென்னன்னு என்னால விட முடியலை!”,
“ஏண்டா ஏன்”...
அத்தியாயம் இரண்டு:
கனிமொழியை பார்த்தது பார்த்தப் படி நின்றான். மனதில் எண்ணங்கள் அலைமோதின. என்ன மாதிரியான எண்ணங்கள் வரையறுக்க முடியவில்லை. அவன் முகமும் இறுக்கமாக இருந்தது.
பார்வையை அகற்ற அவன் விழையவில்லை. அவன் அப்படி இமைசிமிட்டாமல் தன்னை பார்ப்பது கனிமொழிக்கு ஒரு மாதிரி இருந்தது.
செந்தில் ஏதோ ஆகாஷிடம் பேசினான்........ அது அவன் காதிலேயே விழவில்லை.
தன்னையே அவன் பார்ப்பதை...
அத்தியாயம் ஒன்று:
ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
ஆஆஆஆஆஆ.......... ஆஆஆஆஆஆ..........
தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே
தவழும் நிலவின் அலைதனிலே....... சுவைதனிலே.........
என்று கண்டசாலா லீலாவின் குரலில் ஒலித்த மாயா பஜார் படத்தின் பாடலை கேட்டுகொண்டே படுத்திருந்தான் ஆகாஷ். அவன் மேல் ஏறி படுத்திருந்தான் நந்தன்......... மணி நேரம் இரவு பன்னிரெண்டு...