Thirumathi Thiruniraichelvan
முகூர்த்தம் 6
கனவுகளில் ஊடலா
கண்களில் கூடலா
தேடலில் காதலா
தெவிட்டா மோதலா….
”சார் என்ன சார் லீவ்னு சொன்னாங்க, வந்திருக்கீங்க” ,மைத்ரேயனை வங்கி வாசலில் எதிர்கொண்ட ப்யூன் சற்றே அதிர்வுடன் கேட்க, அவருக்கு பதிலளித்தபடியே உள்ளே நுழைந்தான் மைத்ரேய ராஜா.
“ஏன் வரக்கூடாதா” முகமும் அவனின் மொழியும் இயல்பாய் இல்லை.
“அதுக்கில்லை சார், நீங்க லீவுன்னு சொன்னீங்களே”
“ஆமா சொன்னேன்”
“வந்திட்டீங்க”
”நான் வரமாட்டேன்னு ஏதும்...
”நா இன்னிக்கு ரொம்ப சந்தோசமா இருக்கேன், நேத்து ஃபீஸ் கட்டமுடியலைன்னு டென்சனா இருந்தேன், இன்னிக்கு அந்த பிரச்சனை சரியாயிடுச்சு, யாரோ ஒரு புண்ணியவான் எனக்கு ஃபிஸ் கட்டியிருக்கார். கடவுளே அவர் நல்லாயிருக்கணும், நான் படிச்சு முடிச்சு சம்பாதிச்சு அந்த பணத்தை கண்டிப்பா திருப்பிக் குடுத்திடுவேன் அப்ப தான் என்னை மாதிரி கஷ்டப்படுறவங்களுக்கு அவர் உதவி...
முகூர்த்தம் 7
உனை தழுவும்
மழைச்சாரல்களில்
துளியாய் நான்
காதலாய் ஈரம்….
”ஹலோ” வெகு அடித்துக் கொண்டிருந்த போனை எடுத்தாள் மைவிழி.
“ஹலோ…..” அந்த புறம் வந்த குரல் பரிச்சயமாகவே இருந்தாலும் எண் புதியதாக இருந்தது.
“யாரு பேசுறது…” எதற்கும் கேடுவிடுவது நல்லது என்று கேட்டாள் மைவிழி.
“யாரு பேசுனா நீ ஒத்துக்குவ” இடக்காகவே வந்தது பதில்.
“ஹே பவி… நீயாடி….” அவளின் யூகத்தில்...
முகூர்த்தம் 9
காட்சியில் பிழையில்லை
கவனத்தில் குறைவில்லை
கண்களில் அவன் முகம்
கனவா நனவா காதல்…
நிகழ்ந்ததை இன்னும் அவளால் நம்பமுடியவில்லை, கனவாக இருக்குமோ என்றால் அவன் தட்டிப் போன கன்னத்தில் அவன் விரல்களின் ஸ்பரிசம் இன்னும் இருந்தது.
அவன் குடித்த காபி டம்ளரும், வாசல் வரை சென்று மருமகனை வழியனுப்பி விட்டு வரும் தந்தையும், கனவல்ல என உணர்த்தினாலும் இன்னும்...
முகூர்த்தம் 8
கன்னம் சிவக்கும்
கவினெழில்
பொழுதுகளில்
பூவாய் நீ
மணமாய் நான்
மழையாய் காதல்
காதலாய் ஈரம்….
”இவ்வளவு நேரமா டா பேங்கில இருந்து வர்றதுக்கு, உன் கூட வேலை பாக்குறவர் தானே பக்கத்துவீட்டில இருக்க அந்த கோமுவோ, சோமுவோ, அவரெல்லாம் எப்பவே வந்துட்டார் இவ்வளவு நேரமா எங்கடா ஊர் சுத்தீட்டு வர்ற” மகாலட்சுமியின் குரல் கேட்டு, ஒரு...
முகூர்த்தம் 10
சூழ்ந்திடும் குளுமையில்
உன் கனல்பார்வையில்
சூழ் கொண்டேனடி
காதலின் கதகதப்பிற்காய்…
காதலின் இதம் அளித்த சுகத்தில் ஒருவித நிம்மதியுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான் மைத்ரேய ராஜா. இரவின் கரங்கள் பூமியை அணைக்கத் துவங்கியிருந்த நேரமது.
சாலையோர மரங்களில் இருந்து உதிர்ந்த பூக்கள் இருமருங்கிலும் கிடக்க, தன் ஜீன்ஸில் கைகளை விட்டபடி, நடந்து சென்று கொண்டிருந்தான். தன்னைக் கடந்து செல்லும் மனிதர்களில்...
முகூர்த்தம் 12
வேடிக்கை பார்ப்பதென்ன
வெண்ணிலவே
இரவுகள் உன் தேடல்
ஏன் இந்த ஊடல்
சட்டையில் இருந்த இரத்தக் கறைகளை முடிந்த வரை சரி செய்ய பார்த்து தோற்றுக்கொண்டிருந்தான் சேதுபதி. சார் வாஷ் பண்ணாம போகாது உங்களுக்கு வேணும்னா நான் வேற சட்டை வாங்கிட்டு வரட்டுமா” தயங்கி தயங்கி கேட்டபடி நின்றிருந்தார் கான்ஸ்டபிள் வேலு.
“இல்லை வேலு வேண்டாம் வீட்டுக்குத்தானே போகப்போறேன்,...
முகூர்த்தம் 13
எனக்கான வார்ப்புகளில்
யார் நிரப்பியது உன்னை
உயரப்பறக்கும் சிறகில்
உதிர்ந்த ஓர் இறகாய்
எங்கிருந்து வந்தாய்….
”உன்னை எங்கெல்லாம் தேடுறது செல்வி, என்ன இதெல்லாம், நீ இப்படி ரியாக்ட் பண்ணுவைன்னு நான் நெனக்கலை” என்று தன் மகள் கிடைத்துவிட்டாள் என்ற மகிழ்ச்சியும் , அதே நேரம் ஏன் இப்படி செய்தாள் என்ற ஆதங்கமும் ஒருங்கே பொங்க நின்றிருந்தார் ராஜேந்திரன்.
“நீங்க யாரு”...
திருமதி.திருநிறைச்செல்வன்
இவள் வாழ்வில் வருமோ காதல்….
முகூர்த்தம் 19
தொலைக்காட்சியின் அத்தணை செய்தி சேனல்களிலும் முக்கியச் செய்திகள், பிரேகிங் நியூஸ், ஃப்ளாஸ் நியூஸ் என்ற வாசகங்கள் மின்னி மறைய அதன் பின்னே,
“பிரபல அரசியல்வாதி மர்மமான முறையில் மரணம்…” என்ற தலைப்புச் செய்திகள் இடம் பெற்றிருந்தது.
நதிக்கரையோரம் கிடந்த அடையாளம் தெரியாத மர்மமனிதன் வேந்தன் தான் என்ற அதிகாரப் பூர்வமான...
முகூர்த்தம் 11
சிறகு விரித்து பறக்கையில்
வானம் வியர்த்த தருணமாய்
பூமியெங்கும் காதல் மழை
விடிந்து விடியாத அதிகாலைப் பொழுதில், சாலையோரத்தில் அந்த முனகல் கேட்டுக் கொண்டிருந்தது. இரவு முழுவதும் வலியில் துடித்த அந்த ஜீவன் இன்னும் உயிரோடு இருக்கிறோம் என்று உணர முடியாமல் மயக்கமுற் நிலையிலும் முனகிக் கொண்டிருந்தது.
சாலையில் போவோர் வருவோர் அந்த சகதியில் புரண்டு மயக்கமுற்ற நிலையில்...
முகூர்த்தம் 18
எத்தனை இம்சிக்கிறது
அத்தனையும் தித்தித்திக்கிறதே
காதல்
”டேய் சேது, பூபதி எங்கடா போனீங்க, எங்க போய்த் தொலைஞ்சீங்க, ஸ்வாதிக்கு என்னாச்சுன்னு தெரியலை, எங்கடா எல்லாரும் டேய்” ராஜா கண்களைத் திறக்காமலே கத்திக் கொண்டிருந்தான்.
கைகளையும் கண்களையும் இறுக்க மூடிக் கொண்டிருந்தான். முழு வேகத்தையும் செலுத்தி கைகளை இறுக்கியதில் ஊசிகள் கிழித்து இரத்தம் வந்து கொண்டிருந்தது.
ஆனால் அவன்...
முகூர்த்தம் 26
வானதி அந்த காபி ஷாப்பிற்கு வந்து அரைமணி நேரம் ஆகியிருந்தது. ஆனாலும் அவளை வரச்சொன்ன ஸ்ரீராம் இன்னும் வந்திருக்கவில்லை. இதற்குமேல் யாரோ ஒருவருக்காக காத்திருக்கவேண்டிய அவசியமில்லை என்று எழுந்தவளுக்கு, கண்ணில் பார்த்திராத யாரோ ஒருவர் அழைத்ததும் ஏன் வந்தோம் என்று இந்நொடி வரை புரியவில்லை.
முந்தினம் அறிமுகமில்லாத புதிய எண்ணிலிருந்து அவளுக்கு அழைப்பு வந்திருந்தது....
முகூர்த்தம் 14
உயிர்த்துடிப்புகள்
நீயாகையில்
உள்ளக்கிடக்கைக்கள்
உயிர்கொள்கிறதே
அழகான மலர்களை ரசித்துக் கொண்டிருக்கையில் எங்கிருந்தோ வந்த ஒரு கலவரக்கூட்டம் அந்த பூஞ்சோலையையே இல்லாமல் செய்துவிட்டுப் போகும் திரைக்காட்சியைப் பார்ப்பது போலிருந்தது மைவிழிச்செல்விக்கு.
”நல்லாத்தானா போய்கிட்டு இருந்தது, இந்த கொஞ்ச நேரத்தில இந்த இடமே அடையாளம் தெரியாமல் மாறிப்போயிருச்சே”
பெரிய மரக்கட்டைகள் கிடத்திவைக்கப்பட்டிருந்த இடத்திற்குப் பின்னால் கையில் சிறு சிராய்ப்புகளோடு ராஜாவின் முதுகில் ஒட்டிக் கொண்டிருந்தாள்...
முகூர்த்தம் 15
காதலின் ஆழமதை கண்களில்
கண்டுகொள்ள
தேடலின் நீளமது தெளியாத
வானமானதேனோ
காதில் விழுந்த ஒவ்வொரு வார்த்தைக்கும் மைவிழியின் கண்கள் உதிரத்தை கசியவிட்டுக் கொண்டிருந்தது. பட்டாம்பூச்சியின் இறகுகள் அசைந்ததில் சுனாமி வந்த கயாஸ் தியரியை அவள் வாழ்வில் பிரதியிட்டது யாரோ.
தான் வைத்த சில அடிகளில் தன் உலகம் பெரிய சுழலில் சிக்கும் என அவள் எதிர்பார்க்கவில்லை.
பேசும் நிலையில் மட்டுமல்ல அசையக்கூட...
முகூர்த்தம் 20
ஸ்ரீராமிற்காக காத்துக் கொண்டிருந்த வானதியின் எண்ணங்கள் அவனையே சுற்றிக் கொண்டிருந்தது. அவனோ இவளைப் பற்றிய சிந்தனை துளியும் இன்றி பேசிக் கொண்டிருந்தான்.
அவன் எதிரில் சிவம் இவன் சொல்வதை நம்ப முடியாத அதிர்ச்சியுடன் கேட்டுக்கொண்டிருந்தார்.
அனைத்தையும் கேட்டு முடித்தவர், “இதுக்கு மேல இந்த கேஸ்ல நமக்கு வேலையே இல்ல, சரி விடுங்க, ரிலாக்ஸ் அண்ட் கோ...
முகூர்த்தம் 17
தலைப்பு செய்திகளில் இடம் பெற வேண்டும் என்ற வேந்தனின் தீராத கனவு நிறைவேறத் துவங்கியிருந்தது.
“ஆளுங்கட்சி அரசியல் பிரமுகரும், மத்திய அமைச்சரின் தம்பியுமான மதுராபுரி வேந்தன் திடீர் மாயம்”
கடந்த மாதம் சென்னைக்கு கட்சியின் முக்கிய பிரமுகர்களுடனான அவசரக்கூட்டத்திற்கு வந்திருந்த மதுராபுரி வேந்தன் அவர்கள், ஒரு வாரம் கட்சி ஏற்பாடு செய்திருந்த விடுதியில் தங்கி...
முகூர்த்தம் 16
கழிமுகம் தேடும்
நதியல்ல
புதிதாய் பிறந்த
ஊற்றாய் காதல்
அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜேந்திரனின் நிலையில் எந்த மாற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை. கொடுக்கப்படும் சிகிச்சைகளையும் மருந்துகளையும் அவரது உடல் ஏற்றுக் கொள்ள மறுத்தது. காரணம் புரியாமல் மருத்துவர்கள் யோசனையில் ஆழ்ந்திருந்தனர்.
இன்னொரு பக்கம் சிகிச்சையில் இருந்த ராஜாவைக் காணவில்லை என்ற பதற்றம் மருத்துவமனை முழுவதும்...
முகூர்த்தம் 21
”பேசுனது போதும், ரொம்ப நேரமாச்சு, அவனுக்கே வேற உடம்பு சரியில்ல, ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு பேசுங்கப்பா….” என்றபடி ராஜாவின் தாயார் மகாலட்சுமி வந்து நின்றார்.
“யாருக்குமா…? இவனுக்கா உடம்பு சரியில்ல…” என்று பூபதி கேட்க, “உனக்கு தெரியாதா தம்பி, யாரோ பெரிய அரசியல்வாதியாமே, அவங்க ஆளுங்க ஏதோ லோன் பிரச்சினையில தம்பிய அடிச்சு போட்டாங்கப்பா,...
முகூர்த்தம் 24
வானதிக்கு இன்னும் பதற்றம் குறையவேயில்லை. வருடங்கள் பல கடந்திருந்த போதிலும் இரவின் பொழுதுகள் அவளை நிம்மதியாக உறங்க விடுவதேயில்லை.
ஸ்வாதியை எப்பொழுது அப்படி ஒரு நிலையில் கண்டாளோ அதன்பின் என்ன முயன்றும் கண்களை மூடுகையில் ஸ்வாதியின் கோலம் கண்முன் வந்து போவதை அவளால் தடுக்க முடியவில்லை.
ஸ்வாதிக்கும் வானதிக்கும் இடையில் உயிருக்கு உயிரான நட்பு இல்லையென்றாலும்,...
முகூர்த்தம் 25
இன்னும் இரண்டு நாட்களே இருந்தது ப்ராஜெக்ட் சப்மிட் செய்வதற்கு. மைவிழி காலையிலிருந்து போன் அடித்துக் கொண்டிருக்கிறாள் தன் தோழியருக்கு. இருவருமே எடுத்தபாடில்லை.
இதற்கு மேலும் காத்திருந்தால் சரிவராது என முடிவு செய்ட்தவள் பேருந்தில் ஏறியிருந்தாள். குளித்தலையிலிருந்து திருச்சி சத்திரம் பேருந்து செல்லும் அந்த பேருந்து காவேரிப்பாலத்தை தாண்டும் போது இவளுக்கு ஒரு குறுஞ்செய்தி...