Tamil Novels
துளி – 2
‘சரவணன்..... மாமாவா... யாருடா அது... ஒருவேளை அந்த மோகினி தான் குரல் மாத்தி பேசுறாளோ...’ எண்ணியபடி திரும்ப, சரவணன் கண் முன்னே நிற்பவனோ, ஒரு பன்னிரண்டு வயது சிறுவன். வாயில் வைத்து அடைக்க முடியாமல், ஒரு சிக்கன் பர்கரை திணித்தபடி நின்றிருந்தான்.
‘யாரு டா இந்த பப்ளிமாஸ்...’ என்பதுபோல் பார்க்க,
“மாமா.. என்னை தெரியலையா.....
அத்தியாயம் –9
எதையும் யோசிக்காமல் வைபவ் சட்டென்று அவள் காதலை அங்கீகரித்தான். அவள் ஏதேதோ அவனிடம் பேசிவிட்டு போனை வைத்தாள். போனை வைத்தவள் மனம் சந்தோசத்தில் கொக்கரித்தது.
வைபவுக்கோ இப்படி நண்பர்களுக்கு கூட சொல்லாமல் சரியென்று விட்டோமே என்று நினைத்துக் கொண்டிருந்தான். மறுநாள் கல்லூரியில் இருவரையும் தனியே அழைத்து அவன் ஷர்மியின் காதலை ஏற்றுக் கொண்டதை...
துளி – 1
“ஆர் யு ப்லிர்ட்டிங் மீ...?? ”
“நோ நோ... சீரியஸ்லி... ஐம் லவ்விங் யு...”
“வாட்...???!!!!”
“லவ்... காதல்.... பியார்... ப்ரேமம்... இதெல்லாம் தெரியாதா...???” என்று அவன் கைகளை விரித்து சொல்ல, அவன் கண்களோ எதோ கதை சொன்னது...
முதல் முறையாய் பார்க்கும் ஒருவர் நம்மிடம் இப்படியெல்லாம் பேசினால் எப்படி இருக்கும்..?? முதலில் என்ன...
அத்தியாயம் –8
“ஹாய்” என்று அவன் முன் நின்றவளை திரும்பி பார்த்தான் கல்யாண். நெற்றியை சுருக்கி அவளை பார்த்தவன் ‘என்ன வேணும்’ என்பது போல் பார்த்தான்.
“ஹலோ என்ன வேணும்ன்னு தானே பார்க்குறீங்க, அதை வாயை திறந்து கேட்டா தான் என்ன” என்றாள் கார்த்திகா. “அதான் உனக்கு புரிஞ்சு போச்சுல, ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கும்...
அத்தியாயம் –7
“பேரை சொல்லுவியா மாட்டியா” என்றான் வைபவ். “நாங்கலாம் புண்ணியம் பண்ணவங்க....” என்று ஆரம்பித்து அவள் மீண்டும் இழுக்க, “அம்மா தாயே நீ பேரே சொல்ல வேணாம்” என்று அங்கிருந்து எழ முயன்றான் வைபவ்.
“சரி சரி சொல்றேன் கேட்டுக்கோங்க, என்னோட பேரு சரயு, என்னோட ஊரு தேனிக்கு பக்கத்துல இருக்கற போடி” என்றாள் அவள்....
அத்தியாயம் –6
“என்னடா வைபவ் தனியா சிரிச்சுட்டு இருக்க, என்ன விஷயம்ன்னு சொன்னா நானும் சேர்ந்து சிரிப்பேன்ல” என்றான் கல்யாண். வைபவ் சிரித்துக் கொண்டே குறிப்பேடை அவன் பக்கம் நகர்த்தினான்.
“என்னடா பில்கேட்ஸ் கருத்து சொல்லப் போறியான்னு கேட்டு இருக்கு, நீ யாரு என்னை கேள்வி கேட்க, வந்துட்டார் நாட்டமை என்னடா இதெல்லாம், அப்படி என்ன...
அத்தியாயம் 6:
ஒரு நிமிடம் தான்....ஒரே ஒரு நிமிடம் தான்.....வழி தெரியாமல் சென்றவள்.... அணையின் பாலத்தின் வழியாக செல்லாமல்....மாற்றுப் பாதையில் சென்றதால்....தடுப்புகள் இன்றி...கால் இடறி நீரில் விழுந்திருந்தாள்.
அது ஓரமான பகுதி தான் என்றாலும்.....அணையின் நீர் சாதாரண நீரைப் போல் இருக்காது.ஐஸ் கட்டி தண்ணீர் போல்...நீர் மிக குளுமையாய் இருக்கும்.
விழுந்த வேகத்தில்...தண்ணீரின் குளிர்ச்சி...அவளது உடலை எலும்புக் கூடாய்...
அத்தியாயம் –8
இருவர் மனமும் சந்தோசத்தில் இருந்தது. விடிந்த அந்த பொழுது குழந்தையின் பிறந்த நாள் என்பதால் மனோ நேரமாக எழுந்து குளித்தவள் குழந்தையையும் தயார்படுத்தினாள்.
பிரணவும் எழுந்து குளித்து வந்தவன் குழந்தையை கிளப்ப அவளுக்கு உதவி செய்தான். அழகாய் பட்டுவேட்டி சட்டையை அணிந்திருந்த அபராஜித் அவன் தந்தையை போலவே இருந்தான்.
பிரணவும் பட்டுவேட்டி சட்டை அணிந்திருந்தான். அப்பாவும்...
அத்தியாயம் –5
அவளை பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் வைபவ், “டேய் டேய் என்னடா எவ்வளவு நேரமா உன்னை கூப்பிட்டு இருக்கேன். வைபவ் டேய் வாடா போகலாம்” என்று கல்யாணின் நீண்ட அழைப்புக்கு பின் சுயஉணர்வுக்கு வந்தவன் “என்னடா” என்றான்.
“அவங்க அந்த பஸ்ல ஏறிட்டாங்க, வாடா போகலாம்” என்றான் கல்யாண். “டேய் அவ பஸ்ல போறவரைக்கும் பார்த்திட்டு...
அத்தியாயம் –4
“என்னடா சொல்ற நீ அந்த பொண்ணை விரும்பறியா”. நண்பனின் கேள்வியில் சற்று நேரம் மௌனித்த வைபவ் தொடர்ந்தான் “தெரியலைடா ஆனா அவளை கஷ்டப்படாம பார்த்துக்கணும்ன்னு தோணுதுடா கல்யாண்” என்றான் அவன்.
“என்னடா சொல்ற, நீ சொல்றது ஒண்ணுமே புரியலை, விளங்கற மாதிரி சொல்லுடா” என்றான் கல்யாண். “நான் அந்த பொண்ணை விரும்புறேனான்னு எனக்கு தெரியலைடா,...
அத்தியாயம் –3
அபிநயா அவள் அறையில் தனிமையில் சிந்தித்துக் கொண்டிருந்தாள், அவள் சிந்தனை எல்லாம் வைபவை பற்றியே இருந்தது. அவனை நினைத்து அவளுக்கு சிரிப்பு வந்தது. தனிமையில் அவள் சிரிக்கும் சத்தம் கேட்டு கற்பகம் வந்து எட்டிப்பார்த்து விட்டு சென்றார்.
‘கடவுளே என் மகள் மனம் விட்டு சிரித்து எவ்வளோ நாட்கள் ஆகிவிட்டது, இவளுடைய சிரிப்பு என்றும்...
அத்தியாயம் 5:
அங்கு நடந்து கொண்டிருந்த அவ்வளவு பரப்பரப்பான சூழ்நிலையிலும்.... தன்னை மறந்து நின்று கொண்டிருந்தாள் அபிராமி.
ஆசிட் பாதிப்புக்குள்ளான பெண் மிகவும் கவலைக்கிடமான நிலைமையில் மருத்துவமனையில் இருக்க....கேஸ் தீவிரமான விசாரனையை நோக்கி சென்று கொண்டிருந்தது.
ஆசிட் ஊற்றியவன் இவர்கள் டிப்பார்மென்ட் பையன் என்பதால்.... விசாரனை நேரடியாக இவர்கள் பகுதியில் இருந்து தொடங்கியது.
“அந்த பையனோட குளோஸ் பிரண்ட்ஸ் யாரு...?”...
அத்தியாயம் –7
பழனியில் இருந்து கிளம்பியவர்கள் கொடைக்கானல் நோக்கி திண்டுக்கல் வழியாக சென்றுக் கொண்டிருந்தனர். இடையில் மதிய உணவுக்கு பிரணவ் வண்டியை நிறுத்தச் சொல்ல மனோ பிடிவாதமாக வேண்டாமென்று மறுத்துவிட்டாள்.
“ஏன் ரதிம்மா சாப்பாடு வேண்டாங்கற?? எனக்கு பசிக்குதுடா அட்லீஸ்ட் நீ எனக்கு கம்பெனியாச்சும் கொடும்மா” என்றான் பிரணவ்.
“இல்லை ரித்திக் எனக்கு இப்போ சாப்பிட்டா மலையேறும் போது...