Sunday, April 20, 2025

    Mercuriyo,,, Mennizhaiyo...

    அத்தியாயம் - 3     எப்போதும் போல் அதிகாலையிலேயே விழிப்பு வந்துவிட்டது ஆராதனாவிற்கு.முதலில் தான் எங்கிருக்கிறோம் என்ற புரியாமல் அலங்க மலங்க விழித்தவளின் பார்வை அருகிருந்தவனை பார்த்ததுமே சகலமும் நினைவிற்கு வர ஒரு சிரிப்புடன் எழுந்து குளியலறை நோக்கிச் சென்றாள்.     குளித்து முடித்து வெளியில் வந்தவள் அவர்கள் அறையில் இருந்து வெளியே வர வெளியே இன்னமும் யாரும் விழித்திருக்கவில்லை....
    அத்தியாயம் - 5     மாத்திரையின் உதவியால் உறங்கியிருந்த யாழினி மாலையில் கண்விழிக்க சற்றே தெம்பாய் உணர்ந்தாள். எழுந்து குளியலறை சென்றவள் ஹீட்டரை ஆன் செய்து சுடுநீரில் ஒரு குளியலை போட உடலில் மிச்சமிருந்த அலுப்பும் எங்கோ பறந்தோடியது போல் உணர்ந்தாள்.     சபரீஷ் வந்துவிடுவான் என்று எண்ணியவள் பளிச்சென்ற நிறத்தில் ஒரு சேலையை எடுத்து உடுத்தினாள். அவர்கள் அறையில்...
    அத்தியாயம் - 4     ஆராதனா அவர்கள் அறையை சுத்தப்படுத்திக் கொண்டிருக்க சட்டென்று பின்னால் இருந்து அவளை அணைத்தான் அனீஷ். ஒரு நிமிடம் பயத்தில் உறைந்தவளுக்கு அது கணவனென்று புரிய இயல்பு நிலைக்கு திரும்பினாள்.     “என்ன பண்ணுற ஆரா??” என்றவன் அவளை வேலை செய்ய விடாமல் அவள் கழுத்தில் முகம் பதித்து அவள் கன்னத்தில் முத்தம் பதித்தான்.     “வேலை...
    அத்தியாயம் - 8     புலர்ந்தும் புலராத காலைப்பொழுதில் குளித்து முடித்து கண்ணாடி முன் நின்று தலைவாரி தன்னை லேசாய் அலங்கரித்துக் கொண்டவள் திரும்பி அருகிருந்த கட்டிலை பார்க்க அனீஷ் இன்னமும் உறங்கிக் கொண்டிருப்பது கண்ணில் பட்டது.     அவனருகில் சென்று உறங்கும் அவனின் கன்னக்குழியை ஆசை தீர தொட்டவள் அவனை எழுப்ப முனைய அனீஷோ அவளை இழுத்து தன்...
    அத்தியாயம் - 9   “மதுமிதா...” என்று அவன் சொன்ன பெயரை அவளும் வாய்விட்டு சொல்லிக்கொண்டு அவள் மொபைலில் இருந்த அவள் எண்ணை அந்த பெயர் கொண்டு பதிவு செய்து வைத்தாள்.     “அந்த பொண்ணு யாரு??” என்று அடுத்த கேள்வி கேட்டாள் ஆராதனா.     “அவங்க அம்மா தான் எனக்கு இப்போ சமைச்சு கொடுத்திட்டு இருக்காங்க. நான் தங்கியிருக்க வீட்டு பக்கத்துல...
    அத்தியாயம் - 6     யாழினியை ஊருக்கு கிளம்ப தேவையானவற்றை எடுத்து வைக்கச் சொல்லி விட்டு அவன் நேரே சென்றது எஸ்டி மருத்துவமனைக்கு தான். காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு அவன் உள்ளே நுழையவும் அவனை முன்னமே அறிந்திருந்தவர்கள் அவனுக்கு மரியாதை செலுத்த அவனும் தலையசைத்து அதை ஏற்றவாறே உள்ளே சென்றிருந்தான்.     அனீஷின் அறைக்கு அவன் செல்ல முனைய வரவேற்ப்பில்...
    அத்தியாயம் - 7     யாழினியுடன் சபரீஷ் அவளின் வீட்டிற்கு பயணப்பட்டான். அவனின் மாற்றம் நிகழப் போகுமிடம் அது என்பதை அறியாதவனாய் எப்போதும் போல் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டே அவளுடன் பயணப்பட்டான்.     யாழினியின் உடன்பிறந்த தமக்கை இலக்கியாவும் அவள் கணவர் அகிலும் அவர்களின் செல்ல மகள் ஆராத்யாவும் கூட அவர்களை வரவேற்கவென வந்திருந்தனர்.     யாழினி ஆராத்யாவை கண்டதும்...
    அத்தியாயம் - 30   ‘எதுக்கு இப்படி கடுகடுன்னு பேசுறார். நான் இல்லாம தவிச்சேன்னு சொல்லாம சொல்றார். ஆனா இப்படி முகத்தை உர்ர்ருன்னு வைச்சுட்டு இருக்கார். எப்போ மாறுவார், ஒரு வார்த்தை என்னை திட்டிட்டா கூட நிம்மதியா இருக்கும் போல இருக்கு’     ‘இப்படி அங்கொன்னும் இங்கொன்னுமா பேசுறார். என் பக்கத்துல படுத்தா என்னாவாம் நான் என்ன இவரை கடிச்சா...
    அத்தியாயம் - 11     “நாங்க இதுல பண்றதுக்கு என்ன இருக்கு சார். அவ நல்லா படிக்கற பொண்ணு ஏன் இப்படி லவ்ன்னு எல்லாம் ஆரம்பிச்சுட்டான்னு தெரியலை. அவங்க கிளாஸ் மிஸ் அந்த ரெகார்ட் நோட் பார்க்கலைன்னா எங்களுக்கும் விஷயம் தெரிஞ்சிருக்காது”     “அவளை கூப்பிட்டு அந்த லவ் லெட்டர் பத்தி கேட்டா ஆமா லவ் பண்றேன்னு சொல்றா. சம்மந்தப்பட்ட...
    அத்தியாயம் - 28     அன்று இரவு உணவின் போது நாளை ஊருக்கு செல்லப் போகிறேன் என்று அனீஷ் சொன்னது ஏதோ உறுத்தலாக தோன்றியது ஆராதனாவிற்கு. மல்லிகா ஆராதனவிற்கு நேரமாகவே உணவு கொடுத்துவிட அவனுக்கு முன்பாகவே சாப்பிட்டுவிட்டு அவள் சென்றிருந்தாள்.     மல்லிகா அவனிடம் “எப்படி தம்பி போகப் போறீங்க. டிரைனா!! இல்லை பிளைட்டா??” என்றதும் அவரை வித்தியாசமாய் நோக்கினான்...
    அத்தியாயம் - 29     அவள் ஏதோ சொல்ல வருவதும் பின் தயங்குவதும் புரிய “என்ன விஷயம்??” என்றான் அனீஷ்.     சட்டென்ற அவன் கேள்வியில் திடுக்கிட்டு அவனை ஏறிட்டாள் அவள். “ஏதோ சொல்லணும்ன்னு வந்த மாதிரி இருக்கு. அதான் கேட்டேன் என்ன விஷயம்??”     “இரு இரு அப்படியே இரு எவ்வளவு நேரம் காலை கீழ போட்டுக்கிட்டு இருப்ப!! ஒரு நிமிஷம்”...
    அத்தியாயம் - 22     கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்த சபரிக்கு யாழினி எதற்காக அழுகிறாள் என்றே புரியவில்லை. ‘நான் எதுவுமே செய்யவேயில்லையே இப்போ எதுக்கு இவ அழுத்துட்டு இருக்கா??’     ‘நாம பேசினது நினைச்சு நினைச்சு எதுவும் அழறாளா??ச்சே என்னடா இது’ என்று மனதிற்குள் சலித்தவன் “என்னாச்சு இப்போ எதுக்கு அழற??” என்றான் சிடுசிடுப்பாய்.     அவன் சிடுசிடுப்பு அவளுக்கு மேலும்...
    அத்தியாயம் - 12     ஆராதனாவின் மனதில் என்ன விதமான உணர்வு தோன்றுகிறது என்று அவளாலேயே கணிக்க முடியவில்லை. அவளின் இந்த உணர்விற்கு காரணம் வேறு ஒன்றுமல்ல தொலைக்காட்சியில் ஓடிய சில நிமிட விளம்பரப்படமே.     விளம்பரங்களை வெறுப்பவளில்லை அவள், ஆனால் அதில் அதிகம் விருப்பும் கொண்டவளில்லை. தலையில் கை வைத்து அமர்ந்தவளுக்கு தலையை வலிப்பது போல் இருந்தது.     அவளின் தலைவலிக்கான...
    அத்தியாயம் - 27     நித்யாவிடம் தான் அங்கு வருவதாக பேசிவிட்டு போனை வைத்தவன் நடந்துக் கொண்டிருந்த கலந்துரையாடலை வேறு ஒரு மருத்துவரை கூப்பிட்டு பார்க்க சொல்லிவிட்டு டிராவல்ஸ்க்கு போன் செய்து மங்களூருக்கு டிக்கெட் பதிவு செய்தான்.     பதினொன்று இருபதுக்கு அவனுக்கு பெங்களூர் செல்ல விமானத்திற்கு பதிந்திருக்க மருத்துவமனையில் இருந்து நேராக விமான நிலையம் சென்றவன் போகும் வழியிலேயே...
    அத்தியாயம் - 25     வீட்டிலிருந்து கிளம்பிய ராஜீவனுக்கு இன்னமும் குற்றவுணர்சியாகவே இருந்தது. அந்த பெண்ணிடம் ஒரு மன்னிப்பை கூட சொல்ல முடியவில்லையே என்று.     பேருந்தை பிடிக்க மெதுவாய் அவர்கள் வீட்டிலிருந்து எட்டி நடைப்போட்டவன் பிரேக் பிடித்தார் போன்று அந்த இடத்திலேயே நின்றான். அங்கிருந்த பார்க் ஒன்றில் நித்யா அமர்ந்திருப்பது கண்ணில் விழுந்து அவனின் நடையை தடை...
    அத்தியாயம் - 21     ஆராதனாவிற்கு இன்று ஸ்கேன் எடுக்கும் நாள், நேரமாகவே கிளம்ப வேண்டுமென்று மல்லிகா வந்து அவளை எழுப்பிவிட்டு சென்றார். படுக்கையில் இருந்து எழுந்தவளுக்கு இதற்கு முன் ஸ்கேன் செய்த அன்று அனீஷ் செய்த ஆர்ப்பாட்டம் கண் முன் வந்து போனது.     தான் குழந்தை உண்டானதில் இருந்து அவனுக்கு தான் எவ்வளவு சந்தோசம் எவ்வளவு ஆனந்தம்,...
    அத்தியாயம் - 16     ஆராதனாவுக்கு அந்த விஷயத்தை நினைத்து அதிக நேரம் சந்தோசப்பட முடியவில்லை. கொண்டவன் துணையிருந்தால் எதையுமே சமாளிக்கலாம் ஆனால் இப்போதோ இருவருமே இரு வேறு திசையில் அல்லவா நிற்கிறார்கள்.     இதை முதலில் யாரிடம் சொல்வது என்று யோசனை செல்ல கொஞ்சம் கூட தாமதியாது அவள் உள்ளம் சொன்னது முதலில் உன் மணாளனிடம் கூறு என்று....
    அத்தியாயம் - 24     “அண்ணா” என்று அழைத்துக்கொண்டு ராஜீவனின் தோளில் சாய்ந்து அழுதுக்கொண்டிருந்தாள் ஆராதனா. மதுவோ இருவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.     ஒருவாறு தன்னை சுதாரித்துக்கொண்டு “அண்ணா உள்ள வாங்க, அக்கா உள்ள வந்து பேசுங்க” என்று அழைக்கவும் இருவருமே உள்ளே வந்தனர்.     “நீங்க பேசிட்டு இருங்க நான் அண்ணாக்கு சாப்பிட ஏதாச்சும் கொண்டும் வர்றேன்” என்று...
    அத்தியாயம் - 26     அனீஷ் எதை நினைத்து சுனீஷிடம் பேசினானோ அது அவன் எண்ணியது போலவே நடந்தது. கோபத்தில் அறிவு வேலை செய்யாது என்பது எவ்வளவு உண்மை என்பதை அக்கணம் அவன் உணர்ந்தான்.     அவள் மேல் கோபத்தில் இருந்தவனால் அடுத்து அவள் என்ன செய்வாள் என்பதை யோசிக்க முடியாமல் அவன் கவனம் முழுதும் அவள் பேசிய பேச்சிலும்...
    அத்தியாயம் - 18     அனீஷ் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து வெளியில் வந்தவன் அப்போது தான் அவன் கைபேசியை உயிர்பித்தான். கிளம்பும் அவசரத்தில் ஆராதனாவை அவளின் தாய் வீட்டிற்கு அழைத்து செல்ல சொல்லி ராஜீவனுக்கு சொல்ல மறந்திருந்தான்.     அவன் கைபேசி உயிர்பெறவும் அவனுக்கு அழைப்பு வர ஆரம்பித்தது. அதில் தெரிந்த எண்ணை பார்த்தவன் பொத்தானை அழுத்தி இயல்பாய்...
    error: Content is protected !!