SivaBhairavi
அத்தியாயம் – 19
தினேஷ் வந்ததுமே ஜானிற்கு அத்தனை மகிழ்ச்சி “வாடா மச்சான்... வரமாட்டன்னு சொன்ன...” என்று சொன்னதுபடி, அவனை லேசாய் கட்டி விடுவிக்க,
“அட போடா.. நானும் இப்படி ஏதாவது ஒரு சிச்சுவேசன்ல வந்தா தான் உங்களை எல்லாம் ஒரே இடத்துல பார்க்க முடியுது..” என்றவன் “ஹேய் பைரவி, எப்படி பாடின? என்ன டல்லா இருக்க?”...
அத்தியாயம் – 18
பைரவிக்கு மனதினில் ஒருவித படபடப்பு இருக்கத்தான் செய்தது. எத்தனை மேடைகள், எத்தனை கச்சேரிகள், எத்தனை பாடல்கள் வலைதளங்களில், தொலைகாட்சிகளில் என்று பாடியிருந்தாலும், முதல்முறையாய் இசையமைப்பாளரின் பின்னணி இசையில் பாடுவது என்பது முற்றிலும் வித்தியாசமான உணர்வாய் தான் இருந்தது.
‘ம்மா என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க...’ என்று மானசீகமாய் சொல்லிக்கொண்டவள், அடுத்து சிவாவிற்குத்தான் அழைத்தாள். செல்வி...
அத்தியாயம் – 17
காதல் இத்தனை அழகானதா என்று இருந்தது சிவாவிற்கும் பைரவிக்கும். அவரவர் வேலைகளில் மூழ்கினாலும் கூட, கிடைக்கும் நேரத்தில் எல்லாம் இருவரும் பேசிக்கொள்ளவோ, இல்லை பார்த்துக்கொள்ளவோ தவறுவது இல்லை.
அதிலும் பைரவி சொல்லவே வேண்டாம். வீட்டினில் இருக்கிறாள் என்றால், கால் மணி நேரத்திற்கு ஒருமுறை சிவாவிற்கு அழைப்பாள்.
‘என்ன செய்றீங்க?’ என்று அடிக்கொரு முறை கேட்டுக்கொண்டே...
அத்தியாயம் – 16
பைரவி கோவா செல்லவில்லை. ஆனால் அதே நேரம் சிவாவோடும் பேசவில்லை அவள். நிஜமாகவே அவளுக்கு உடம்பிற்குத்தான் என்னவோ என்று ஜானும், அவளது மற்ற தோழமைகளும் நம்பிவிட, ஏற்கனவே மருத்துவமனைக்குச் சென்றுவந்தவள் தானே, அதனால் செல்வியும் நம்பிவிட்டார்.
ஆனால் பைரவிக்குத்தானே தெரியும். அவள் போகாமல் நின்றதன் காரணம். என்னவோ சிவாவிடம் தான் உன்னை அழைத்துப்...
அத்தியாயம் – 15
சிவாவிற்கும் சரி, பைரவிக்கும் சரி அன்றைய தினமென்று இல்லை, அடுத்து வந்த தினங்களிலும் கூட, இரவு உறக்கம் என்பது காணமல் போய்விட்டது. இருவருக்கும் மனம் விட்டு பேசும் நேரம் என்றால் அது இரவு நேரம் மட்டுமே. புதிய காதலர்களுக்கான அத்தனை சாராம்சங்களும் இவர்களுக்கும் உண்டு.
பகல் எல்லாம் இருவருக்குமே வேலைகள் சரியாய் இருக்க,...
அத்தியாயம் – 14
சிவாவைப் பார்த்ததும், பைரவிக்கு ஒரு இனிய படபடப்பு. அவன் தானா.. அவனே தானா என்று கண்களை லேசாய் தேய்த்துப் பார்க்க, அவள் அப்படி பார்த்த விதத்தில், அவனுக்கு புன்னகை பூக்க, அதே புன்னகையோடு தான் அவனைப் பார்த்துக்கொண்டே அமர்ந்து இருந்தாள்.
கடந்து செல்வானா, இல்லை பக்கம் வருவானா?!
நொடியில் மனது பட்டிமன்றம் நடத்த,...
அத்தியாயம் – 13
இதோ முப்பது நாட்கள் சிறகடித்துப் பறந்துவிட்டது. சிவாவின் மெக்கானிக் ஷெட்டின் மீது கட்டிடம் கட்டவும் ஆரம்பமாகி இருந்தது. அன்று தாமஸ் உடன் கடைக்கு வந்தவள், அவனைப் பற்றிச் சொல்லி வாய்ப்பு கேட்க, ஜானினது தம்பி என்றதுமே
“இவன் அண்ணனுக்குத் தெரியுமா?” என்றுதான் கேட்டான் சிவா முதலில்.
“தெரியாம என்ன? அவன் விஷயம் வேற,...
அத்தியாயம் – 12
காலம் யாருக்கும் காத்திருப்பதில்லையே. இதோ கண் மூடி திறப்பது போல் இருபது நாட்கள் ஓடிவிட்டது. பைரவி உடல் நிலை சரியில்லாது போகவும், முதல் ஒருவாரம் முழுக்க முழுக்க, வீட்டினில் தான் இருந்தாள். சிவா அன்றைய தினம் வந்து போனது மட்டும் தான் அதன்பின் வரவே இல்லை.
இதோ இப்போது வரைக்கும் கூட வரவே...
அத்தியாயம் – 11
எப்படியோ வீடு வந்தாகிவிட்டது. மாலை ஏழு மணிக்கு மேல் தான் அனுப்பினர்.
சிவா தான் கார் ஓட்டிக்கொண்டு வந்தான். மதியம் வரைக்கும் அங்கே மருத்துவமனையில் இருந்தவன், பைரவி முகத்தில் ஓரளவு தெளிவு கண்டபின் தான் கிளம்பினான். செல்வியை உடன் இருக்கும்படி சொல்லிவிட்டு வந்தவனுக்கு இன்னமும் அவளது யோசனை தான்.
‘அவளே போய் ஆஸ்பத்திரியில...
சிவபைரவி – 10
பைரவி அவளது வேலைகளில் மும்முரமாய் இருந்தாள். ஷூட்டிங் செல்வது, ரிக்கார்டிங் செல்வது, சம்மதித்திருந்த இசை நிகழ்ச்சிகளுக்குப் போவது என்று அவளது நாட்கள் வழக்கமாய் நகர, இதற்கிடையில் வீட்டில் இருக்கும் நேரமும், பாடல்கள் பாடி வலைத்தளத்தில் பதிவு செய்வது என்று அவளுக்கு வேறு எதுவும் நினைக்க நேரமில்லை.
செல்வியும் வழக்கம் போல் பைரவி...
சிவபைரவி – 9
தினேஷும், பைரவியும் பேசிக்கொள்ள, ஜானும் சந்தோஷியும் அமைதியாய்த் தான் பார்த்துக்கொண்டு இருந்தனர். ஜானுக்கு இதுவரைக்கும் தினேஷ் வீட்டில் பைரவியை திருமணம் பேசுவது தெரியாது. அதனால் சாதாரணமாய் தினேஷை அழைத்துக்கொண்டு வந்துவிட்டான்.
இப்போது பைரவியின் முக பாவனைகளைப் பார்த்துத்தான் அவனுக்கு ‘என்னவோ இருக்கிறது...’ என்று புரிய, சந்தோஷியிடம் ஜாடையில் கேட்டான்.
அவளோ ‘பொறுமையாய்...
சிவபைரவி – 8
பைரவிக்கு இப்போது ஜான் மீதுதான் கோபம் கோபமாய் வந்தது. தேவையே இல்லாது தினேஷை ஏன் இப்போது வரவழைத்து இருக்கிறான் என்று. தினேஷ் அம்மா பெண் கேட்ட விசயமே தெளிவு பெறாத போது, தினேஷை சந்திப்பது என்பது அவளுக்கு அவ்வளவு நல்லதாய் இல்லை.
சிறு வயது முதல் உற்ற நண்பனாய் இருக்கும் ஒருவனை,...
சிவபைரவி – 7
சிவாவிற்கு நேரம் போனது தெரியவில்லை...
கிட்டத்தட்ட இரவு மூன்று மணி இருக்கும். அலைபேசியில் பேட்டரி தீரவும் தான் அவனுக்கு இத்தனை நேரம் ஆகிறது என்பதே தெரிந்தது.
கண்கள் எறிவது கூட அப்போதுதான் உணர முடிவதாய் இருக்க,
‘இவ்வளோ நேரமா...’ என்று தலையில் தானே கை வைத்துக்கொண்டான்.
கிட்டத்தட்ட பைரவி பதிவேற்றி இருந்த பாதிக்கும் மேற்பட்ட வீடியோக்களை...
சிவபைரவி – 6
கிட்டத்தட்ட ஒருவாரம் கழிந்திருந்தது...
பைரவி சிவாவிடம் பேசவேண்டும் என்று எண்ணியதை முழுதாய் பேசவில்லை தான். சிவாவும் அவள் பேசிய விசயத்தை சாதாரணமாய் எடுத்துக்கொள்ளவில்லை தான். ஏன் நீ இப்படி சொன்னாய் என்று அவளிடம் கேட்கவேண்டும் என்று இருக்க, பைரவி ஒருவாரம் ஊரிலேயே இல்லை.
ஷூட்டிங் என்று கேரளா சென்றுவிட்டாள்.
ஒரு ஆல்பம் பாடலுக்கு...
சிவபைரவி – 5
சிவாவிற்கும் சரி, பைரவிக்கும் சரி தங்களை மறந்த உறக்கம். நடந்தவைகளில் இருந்து வெளிவர வேண்டும் என்று சிவாவிற்கும், நடந்ததை தாங்கிக்கொள்ள முடியாது அது கொடுத்த சுய அலசலும், தன் கழிவிரக்கமும் தாங்காது பைரவிக்கும் அப்படியொரு உறக்கம்.
மதியம் முடிந்து, மாலை கூட வந்துவிட்டது. சூரியனும் மறைந்துவிட்டான். இருள் சூழத் தொடங்க, செல்வி...
சிவபைரவி – 4
அதிசயமாய் மகன் வீடு வந்திருப்பது பார்த்து ரஞ்சிதம் கேள்வியாய் மகனை நோக்க, அவனோ வந்ததும் அப்படியே அங்கிருந்த இருக்கையில் பொத்தென்று அமர, நடந்த விஷயங்கள் எல்லாம் ஓரளவு ரஞ்சிதம் காதிற்கும் வந்திருந்தது தான். ஆனால் மகன் அதனை முன்னிட்டு இப்படி வீடு வருவான் என்றெல்லாம் யோசிக்கவில்லை.
இதுபோல் எத்தனை எத்தனை அவன்...
சிவபைரவி – 3
நிசப்தம்...!! அப்படியொரு நிசப்தம்... கன்னத்தை தாங்கி நின்ற சிவாவிற்கு கூட சட்டென பேச்சு வரவில்லை. ஒரு அதிர்ந்த பாவனை.
அங்கிருந்த அனைவருக்குமே அப்படித்தான். செல்வியோ நெஞ்சிலே கை வைத்து நின்றுவிட்டார்.
வெளியே நின்றிருந்த சிறுவர்களோ ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, ஜான் ஒரு திமிர் பார்வை தான் அப்போதும் சிவா மீது வீச, சிவாவிற்கு...
சிவபைரவி – 2
பைரவிக்கு,
எல்லாமே புதிதாய் இருந்தது. சொல்லப் போனால், சென்னை என்பதே அவளுக்கு கடந்த சில
மாதங்களாய் தான் தெரியும் அதிலும் கூட ஹோட்டல் வாசம் அல்லது, தோழிகள் இருவரோடு
பிளாட் தனியே எடுத்து தங்கியிருந்தாள்.. பிரபல தொலைக்காட்சி சேனல் நடத்திய இசைப்
போட்டியில், இறுதி சுற்று வரைக்கும் வந்து பங்கேற்று, தன் இசை திறமையை
வெளிப்படுத்தியவள். ...
சிவபைரவி – 1
“மீனாட்சி மீனாட்சி... அண்ணே காதல்
என்னாச்சி...” என்று FM-ல் பாடல் ஒலித்துக்கொண்டு இருக்க,
“யக்கா சவுண்டா வைக்கா...” என்று
வந்த குரலுக்கு,
“இட்லி வாங்கின்னு இடத்த காலி
பண்ணு... போ...” என்று எள்ளாய் வெடித்தார், செல்வி.
அந்த ஏரியா இளசுகளுக்கு செல்வியக்கா.
பெருசுகளுக்கு செலுவி.
காலை எட்டு மணி. பரபரப்பாய்
இயங்கிக்கொண்டு இருந்தது செல்வியின் சிறு உணவுக்...