Tuesday, April 22, 2025

    Sangeetha Swarangal

    சங்கீத ஸ்வரங்கள் அத்தியாயம் 16 மதிய உணவு முடியும் போதே... மூன்று மணி ஆகிவிட... பெரியவர்களைத் தவிர்த்து மற்றவர்கள், அவரவர் வீட்டிற்குச் சென்று, பிள்ளைகளுக்கு மட்டும் மாற்று உடை எடுத்துக் கொண்டு, தோட்டத்திற்குச் சென்றனர். இருப்பதிலேயே பெரிய தோட்டம் அரவிந்தனின் அப்பாவுடையது தான். அதனால் அங்கேதான் சென்றனர். வீட்டில் இருந்து தோட்டம் சற்றுத் தொலைவுதான்,...
      சங்கீத ஸ்வரங்கள் அத்தியாயம் 15 ஞாயிறு தான் விருந்து, இவர்கள் சனிக்கிழமையே சென்றுவிட்டனர். இரயிலில் தான் கோயம்புத்தூர் வரை சென்றனர். உடன் வைதேகி, அர்ச்சனா முகிலன் மற்றும் புவன். எல்லோரும் சேர்ந்து ரயிலில் செல்வதே மகிழ்ச்சியாக இருந்தது. விடியற்காலை கோயம்பத்தூரில் சென்று இறங்க.... அங்கே ரயில் நிலையத்தில், இவர்களுக்காக அரவிந்தனின் சித்தப்பா மகன் வீரா...
    சங்கீத ஸ்வரங்கள் அத்தியாயம் 14 பாவனாவின் மற்ற வகுப்புக்களுக்குத் திலோத்தமாவும் அவளுடன் கூடவே சென்று, அங்கே காத்திருந்து அழைத்து வருவாள். நிறைய வகுப்புகளிலும் சேர்க்கவில்லை. பாவனாவை காரத்தேயிலும், பாட்டு கிளாஸிலும் மட்டும் சேர்த்து இருந்தனர். எல்லாவற்றிற்கும் பாவனாவுக்குத் திலோத்தமா கால அட்டவணை போட்டுக் கொடுத்து விடுவாள். இந்த நேரம் விளையாட்டு, இந்த நேரம் படிப்பு,...
    சங்கீத ஸ்வரங்கள் அத்தியாயம் 13 ஞாயிற்றுக்கிழமை சமையல் செய்யும் பெண்மணிக்கு விடுமுறை. திருமணதிற்கு முன்பே அப்படித்தான். மதிய உணவுக்கு வைதேகி அழைத்திருந்தார். அதனால் அங்குச் சென்றனர். சாப்பிட்டதும் பாவனா கீழே பார்க்கில் பிள்ளைகள் விளையாடுகிறார்கள், தானும் போக வேண்டும் என அடம் பிடித்துச் சென்று விட்டாள். அரவிந்தனும் திலோவும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். “எப்பவும்...
    சங்கீத ஸ்வரங்கள் அத்தியாயம் 12 ஹோட்டலில் சாப்பிட்டு வீட்டுக்கு வரும் வழியிலேயே பாவனா உறங்கி விட... காரை நிறுத்திவிட்டு அவளை எழுப்பி நடக்க வைத்து கூட்டி வந்த அரவிந்த், மகளை உடை மாற்ற வைத்து, பாத்ரூம் சென்று வந்த பிறகே உறங்க விட்டான். அதற்குள் திலோத்தமாவும் பக்கத்து அறையில் நைட்டி மாற்றி வந்திருந்தாள். அரவிந்தன்...
    சங்கீத ஸ்வரங்கள் அத்தியாயம் 11 மாலை வைதேகி செய்த டிபன் சாப்பிட்டுவிட்டு இவர்கள் வீட்டிற்கு வந்துவிட்டனர். வீட்டிலேயே இருந்திருந்து அரவிந்தனுக்குப் போர் அடித்து விட்டது. “நான் வெளியப் போகப்போறேன். எதாவது வாங்கனுமா?” என்றான். “காய்கறி மளிகை சாமான் எல்லாம் இல்லை. நீயும் திலோத்தமாவும் போய் வாங்கிட்டு வர்றீங்களா?” காமாட்சி சொல்ல...பாவனா வேறு நிமிர்ந்து பார்க்க,...
    சங்கீத ஸ்வரங்கள் அத்தியாயம் 10 அர்ச்சனா கிளம்பும் போது பாவனாவையும் அழைக்க... வர மறுத்தவள் அரவிந்தனை தூக்க சொல்ல... அவனும் தூக்கி வைத்துக் கொண்டான். காமாட்சிக்கு கூடப் பாவனா அவள் மாமா வீட்டிற்குச் சென்றால்... பரவாயில்லை எனத் தோன்றியது. அர்ச்சனா எவ்வளவு அழைத்தும் பாவனா வர மறுக்க... “இருக்கட்டும் அர்ச்சனா, நாங்க வரும் போது...
      சங்கீத ஸ்வரங்கள் அத்தியாயம் 9 திலோத்தமா அங்கேயே சாப்பிட்டு வந்தேன் என்றதும், “அவரைச் சமைக்க வச்சு ,இப்படிச் சாப்பிட்டு வந்திருக்கியே, உனக்கு வெட்கமா இல்லையா?” என வைதேகி கேட்டார். “ஏன் மா என்னைத் திட்றீங்க?” “அன்னைக்கே உன் மாமியார் திரும்பத் திரும்ப என்கிட்டே சொன்ன விஷயம், மகன் சரியான உணவு இல்லாமல் கஷ்ட்டப்படுறாருன்னு தான்...
    சங்கீத ஸ்வரங்கள் அத்தியாயம் 8 திலோ சென்றதும் அரவிந்தன் கிளம்பி அர்ச்சனா வீட்டிற்குச் சென்றான். அன்று வித்யா பேசிய தினத்தில் கோபித்துக் கொண்டு வந்தவள், அதன் பிறகு எத்தனையோ முறை அரவிந்தன் கைபேசியில் அழைத்தும் எடுக்கவில்லை. இன்று அரவிந்தன் நேரிலேயே வந்து நிற்கவும், அவனை ஒழுங்காகவே வரவேற்றாள். அரவிந்தன் முகிலனோடு ஹாலில் உட்கார்ந்து பேச......
    சங்கீத ஸ்வரங்கள்   அத்தியாயம் 7 அரவிந்தனின் தங்கை வித்யா, தன் இரண்டு மகன்களை அழைத்துக் கொண்டு விடுமுறைக்கு அண்ணன் வீட்டிற்கு வந்திருந்தாள். அதற்காகத்தான் காமாட்சியும் முன்பே இங்கு வந்திருந்தார். வித்யாவை மதுரையில் திருமணம் செய்து கொடுத்திருக்கின்றனர். பெரிய குடும்பம் அவளுடையது. அதனால் அடிக்கடி வரமாட்டாள். வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ தான்...
      மாலினியின் அம்மாவும் எவ்வளவு நேரம்தான் மகளைக் கண்காணித்துக் கொண்டு இருப்பார். அவர் மதிய நேரம் சற்றுக் கண் அசந்து விட.... அர்ச்சனாவும் மருத்துவமனை சென்று இருந்தாள். மாலினி தன் அம்மாவின் கைப்பேசியை எடுத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்று மணியை அழைத்தாள். “அரவிந்தன் வேற ஊருக்கு போகலாம்ன்னு சொல்றார். இப்ப என்ன பண்றது?” என்றாள்....
    சங்கீத ஸ்வரங்கள்     அத்தியாயம் 6 காலை உணவு யாருமே சாப்பிடவில்லை. எல்லோருக்கும் என்ன செய்வது என ஒன்றும் புரியாத நிலை. வீட்டில் வேலை செய்யும் பெண் வர... ஆண்கள் இருவரும் வெவ்வேறு அறைகளில் முடங்கினர். மாலினியும் எழுந்து அரவிந்தன் இருந்த அறைக்குள் சென்றாள். அரவிந்தனுக்கு அவள் வந்தது தெரியும். அவன் எதுவும் பேசவில்லை. கண்ணை மூடி...
    சங்கீத ஸ்வரங்கள் அத்தியாயம் 5 மெத்தையில் வந்து படுத்து விட்டாலும், உறக்கம் வர வேண்டும் அல்லவா, அரவிந்தனின் மனம் அலைபாயும் போது, உறக்கம் எங்கிருந்து வரும். இத்தனை நாள் முயன்று மனதின் ஆழத்திற்குள் தள்ளியது எல்லாம், மனக் கண்ணில் தோன்றி அவனை வதைக்க ஆரம்பித்தது. அர்ச்சனாவும் அவனும் கல்லூரியில் படிக்கும் போதே நல்ல நண்பர்கள். பொது...
    சங்கீத ஸ்வரங்கள் அத்தியாயம் 4 மனதில் அரவிந்தனை நினைக்கத் தொடங்கி விட்டாலும், மேலே எப்படி அவனை அணுகுவது, அம்மாவிடம் எப்படிச் சொல்வது என்றெல்லாம் திலோத்தமாவுக்குத் தெரியவில்லை. ஆனால் அவளுக்கு உதவுவது போல அர்ச்சனா வந்தாள். அர்ச்சனாவுக்குத் திலோவின் படிப்பு, வயது மற்றும் குடும்பத்தை வைத்து பார்த்தால், அவள் அரவிந்தனுக்குச் சரி வருவாள் என்றே தோன்றியது....
    சங்கீத ஸ்வரங்கள் அத்தியாயம் 3 வைதேகியின் அருகில் வந்து படுத்த திலோத்தமா, உறங்கும் அவரையே பார்த்துக் கொண்டு இருந்தாள். தான் திருமணம் செய்யாதது அவருக்கு நிறைய மன வருத்தம் என்று புரிந்தது. தனக்குப் பிறகு மகள் எப்படி இருப்பாள் என்ற கவலை வைதேகிக்கு தான் இருந்தது. ஆனால் திலோத்தமா அந்த மாதிரி கற்பனை கூடச் செய்து...
    சங்கீத ஸ்வரங்கள்   அத்தியாயம் 2 தினமும் பார்க் சென்ற புண்ணியத்தில், சீக்கிரமே திலோத்தமா அம்மாவுக்கும் அரவிந்தன் அம்மாவுக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டது. பாவனா தான் அவரை அழைத்து வருவாள். அவளுக்குப் பார்க்கில் நண்பர்களுடன் விளையாட வேண்டும். பாவனாவின் பாட்டிக்கு மின்தூக்கியில் தனியாக வரத் தெரியாது. அதனால் பாவனாவோடு வந்துவிட்டு செல்வார். முன்பெல்லாம் பள்ளி முடிந்து...
    error: Content is protected !!