Monday, April 21, 2025

    Pirayillaa Pournami

    பிறை 2: “முன்னால் நீதிபதியின் மகன் சேகர் திடீர் மரணம்...” என்ற செய்தி அன்றைய எல்லா நாளிதழ்களிலும் பிரசுரிக்கப்பட்டு....அவர்கள் குடியிருந்த ஏரியா முழுவதும் ஒரே கூட்டமாக இருந்தது. நீதித்துறையில் பலவருடங்களாக பழம் தின்று கொட்டை போட்டவராக பாண்டியராஜன் இருந்ததால்..ஆளும் கட்சி,எதிர்க்கட்சி...என பலதரப்பட்ட ஆட்களும் வந்து போய் கொண்டிருந்தனர். அனைத்து செய்தி சேனல்களிலும்...இந்த செய்தியே பெரிய விவாதமாய் ஓடிக் கொண்டிருக்க.... சேனலின்...
    பௌர்ணமி 9: வீட்டிற்கு வந்திருந்தவர்களைப் பார்த்து மீனாட்சிக்கு கொஞ்சம் அதிர்ச்சியும் ஆச்சரியமும்.அந்த நாளில் அவர்களை அவள் எதிர்பார்க்கவில்லை என்பது அவளின் முகத்தில்  இருந்தே தெரிந்தது. கோபாலனுக்கு தான் ஒன்றும் புரியவில்லையே தவிர...தேவகிக்கு நன்றாக புரிந்தது.அவர்கள் வந்திருப்பதற்கான காரணம். ராஜ்மோகனும்,செல்லமாவும் சுற்றி வளைத்து பேசாமல் நேரடியாக மீனாட்சியைப் பெண் கேட்டனர். “என்னடா இப்படி வந்து கேட்குறோம்ன்னு நீங்க தப்பா நினைக்கக் கூடாது.எங்க பையன் மீனாட்சி மட்டும் தான் அவனுக்கு மனைவியா வரமுடியும்ன்னு தீர்மானமா...
    பிறை 4: சேகர் இறந்து இன்றோடு இரண்டு நாட்கள் முடிந்திருந்தது.ஆனால் அந்த வீட்டில் எந்த மாற்றமும் இன்றி...அவன் இறந்த சோகம் அப்படியே இருந்தது.யாரும் யாரையும் பார்த்து பேசக் கூட பிடிக்காமல்..அழுது கொண்டிருந்தனர். மகனின் இழப்பை மின்னல் கொடியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பாண்டியராஜன் அதற்கும் மேலாக தளர்ந்து போனவராய் அமர்ந்திருந்தார். இருக்கிற அவரது சொத்துக்களுக்கு எல்லாம் அவன் ஒருவன் தானே ஆண் வாரிசு. தனது...
    பௌர்ணமி 8: அவளின் பதிலில் ஓராயிரம் வலிகளும்,வேதனைகளும் அடங்கியிருக்கும் என்று அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.சில நிகழ்வுகளின் போது அவன்... சம்பந்த பட்ட இடத்தில் இருந்திருந்தால்.. தன் காதலையே காப்பாற்றி இருப்பானே..! தன் காதலையும், காதலியையும் காப்பாற்ற முடியாமல் போன அவனுக்கு மற்ற நிகழ்வுகள் எப்படி தெரியும்...? “நீங்க என்ன சொல்ல வரீங்க..? நிம்மதியா இருக்கான்னா..?” என்ற கேள்வியுடன் நிமிர்ந்தவன்....அங்கிருந்த மகாவின் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்தான். “இது எப்ப நடந்தது..?”...
    பௌர்ணமி 10: செந்தில் குமரன் எதுவும் தனக்குத் தெரிந்ததாக காட்டிக் கொள்ளவே இல்லை.அவனின் மூளைக்குள் யோசனைகள் ஓடிக் கொண்டே இருக்க...அந்த யோசனையில் மீனாட்சியை மறந்தான். அவனும் வம்பு செய்வானோ..? திருமண இரவை எதிர்நோக்க வேண்டுமோ..என்ற அச்சத்துடன் இருந்தவளுக்கு...அவ்வளவு நிம்மதியாக இருந்தது.அவன் அவளிடம் எதையும் எதிர்பார்க்காதது ஒரு பக்கம் நிம்மதி தான் என்றாலும்...மனதின் ஓரத்தில் ஒரு சின்ன வருத்தம் அவளறியாமல். அதற்கு அடுத்து வந்த நாட்களிலும்...அவன் அப்படியே நடந்து...
    பிறை  1: “கும்மியடி பெண்ணே கும்மியடி கூடி குலவையும் போட்டு கும்மியடி குமரி பொண்ணுக்கு மாலை வந்தது குளைஞ்சு குளைஞ்சு கும்மியடி வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது வளஞ்சு வளஞ்சு கும்மியடி எங்க வீட்டு தங்க விளக்கு ஏங்கி நிக்குது கும்மியடி எண்ணெய் ஊத்தி திரிய தூண்ட ஆளு வந்தது கும்மியடி...” சென்னையின் பரபரப்பான அந்த காலை வேளையில்....செழுமைக்கு கொஞ்சமும் குறைவில்லாத அந்த திருமன மண்டபத்தில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலைக்...
    பிறை 3: கல்யாண வேலைகள் ஒரு வழியாக ஓய்ந்து முடிந்திருக்க...வீட்டில் இருந்த ஆரவாரம் கொஞ்சம் குறைந்திருந்தது. அன்று திங்கட்கிழமை ..... விடிந்து எட்டு மணியாகியும் எழுந்து கொள்ளாமல் சுகமாக உறங்கிக் கொண்டிருக்கும் மீனாட்சியைப் பார்த்து அவள் அம்மா தேவகிக்கு ஆத்திரம் வரவில்லையென்றால்..அவர் எப்படி சிறந்த அம்மாவாக இருக்க முடியும். "ஏய் எருமை..எந்திருடி....அங்க அம்மா கத்திட்டு இருக்காங்க...இங்க நீ என்னடான்னா இப்படித்...
    error: Content is protected !!