Pirayillaa Pournami
பௌர்ணமி 6:
“எனக்கு அவ்வளவு
தான் சார் தெரியும்..!” என்று சொல்லி
முடித்திருந்தாள் கயல்விழி.சர்வ மீனாட்சியின் தோழி.
“அவங்க கல்யாணம்
எப்படி நடந்தது...அதில் ஏதும் பிரச்சனை வந்ததா..?” என்றான்
குமரன்.
“இல்லை சார்..!
அப்படி எந்த பிரச்சனையும் நடக்கலை..சொல்ல போனா சேகர் அவங்க அம்மா அப்பா பார்த்த
மாப்பிள்ளை.மீனாட்சியும் சந்தோஷமாதான் சரின்னு சொன்னா..அவங்க கல்யாணமும் ரொம்ப
கிராண்டா தான் நடந்தது...ஆனா இவ்வளவு சீக்கிரம் அவர் மீனாவை விட்டு போவார்ன்னு
நாங்க...
பிறை 5:
“லல்ல லல்ல
லல்லலே லா....லாஆ.... லல்ல லல்ல லல்லலே லா....” என்று தாளம் போட்டுக் கொண்டே வீட்டினுள்
நுழைந்தாள் மீனாட்சி.
செய்த
காரியத்தின் சுக துக்கம் தெரியாமல்..தன் போக்கில் சந்தோஷமாக வீட்டினுள் வந்த
மீனாட்சியைப் பார்த்த தேவகிக்கு....அவ்வளவு கடுப்பு.
“அம்மா..பசிக்குது..!” என்றபடி பேக்கை தூக்கிப் போட....
“நான் என்ன இந்த
வீட்டு சமையல்காரியா...?” என்று தேவகி
கடுப்புடன் கேட்க....
“இல்லம்மா...அப்பாவுக்கு
வீட்டுக்காரி...! ஒய் இப்போ ஆங்கிரி...நான் என்ன பண்ணேன்...!”...
பிறை 4:
சேகர் இறந்து இன்றோடு இரண்டு நாட்கள் முடிந்திருந்தது.ஆனால் அந்த
வீட்டில் எந்த மாற்றமும் இன்றி...அவன் இறந்த சோகம் அப்படியே இருந்தது.யாரும்
யாரையும் பார்த்து பேசக் கூட பிடிக்காமல்..அழுது கொண்டிருந்தனர்.
மகனின் இழப்பை மின்னல் கொடியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பாண்டியராஜன்
அதற்கும் மேலாக தளர்ந்து போனவராய் அமர்ந்திருந்தார். இருக்கிற அவரது
சொத்துக்களுக்கு எல்லாம் அவன் ஒருவன் தானே ஆண் வாரிசு.
தனது...
பௌர்ணமி வர்ணம் – 25
வீடே சந்தோஷ கோலம் கொண்டது... மறுநாள் ஈஸ்வர் தீபியை அழைத்துக் கொண்டு செக்கப் சென்று வந்தான்.
சுந்தரியும் கதிரேசனும் வந்து பார்த்து சென்றனர்... சுந்தரிதான் “நாங்க கொஞ்ச நாள் கூட்டி போயிட்டு கொண்டுவந்து விடுறோம் சம்பந்தி...” என்றார்.
ஆனந்திதான்... “நீங்க ஐந்தாம் மாசம் வேண்ணா கூட்டி போங்க... நான், முதல் ஐந்து மாசம்...
பிறை 3:
கல்யாண வேலைகள் ஒரு வழியாக ஓய்ந்து முடிந்திருக்க...வீட்டில் இருந்த ஆரவாரம் கொஞ்சம் குறைந்திருந்தது.
அன்று திங்கட்கிழமை .....
விடிந்து எட்டு மணியாகியும் எழுந்து கொள்ளாமல் சுகமாக உறங்கிக் கொண்டிருக்கும் மீனாட்சியைப் பார்த்து அவள் அம்மா தேவகிக்கு ஆத்திரம் வரவில்லையென்றால்..அவர் எப்படி சிறந்த அம்மாவாக இருக்க முடியும்.
"ஏய் எருமை..எந்திருடி....அங்க அம்மா கத்திட்டு இருக்காங்க...இங்க நீ என்னடான்னா இப்படித்...
பிறை 2:
“முன்னால் நீதிபதியின் மகன் சேகர் திடீர் மரணம்...” என்ற செய்தி அன்றைய எல்லா நாளிதழ்களிலும் பிரசுரிக்கப்பட்டு....அவர்கள் குடியிருந்த ஏரியா முழுவதும் ஒரே கூட்டமாக இருந்தது.
நீதித்துறையில் பலவருடங்களாக பழம் தின்று கொட்டை போட்டவராக பாண்டியராஜன் இருந்ததால்..ஆளும் கட்சி,எதிர்க்கட்சி...என பலதரப்பட்ட ஆட்களும் வந்து போய் கொண்டிருந்தனர்.
அனைத்து செய்தி சேனல்களிலும்...இந்த செய்தியே பெரிய விவாதமாய் ஓடிக் கொண்டிருக்க....
சேனலின்...
பிறை 1:
“கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி
குமரி பொண்ணுக்கு மாலை வந்தது
குளைஞ்சு குளைஞ்சு கும்மியடி
வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது
வளஞ்சு வளஞ்சு கும்மியடி
எங்க வீட்டு தங்க விளக்கு
ஏங்கி நிக்குது கும்மியடி
எண்ணெய் ஊத்தி திரிய தூண்ட
ஆளு வந்தது கும்மியடி...”
சென்னையின் பரபரப்பான அந்த காலை வேளையில்....செழுமைக்கு கொஞ்சமும் குறைவில்லாத அந்த திருமன மண்டபத்தில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலைக்...