Oonjalaadum Thanimaikal
அத்தியாயம்
– 10
ஆகிற்று மேலும் பத்து நாட்கள்..
ராதிகாவும் அத்துவும் அவர்கள் வீடு திரும்பியிருக்க, நிரஞ்சனன் இல்லம் இப்போது
பெரும் அமைதியை சூடியிருந்தது. சுந்தரி வாய்விட்டே சொல்லிவிட்டார்,
“வீட்ல ராதிகாவும், அத்துவும்
இருந்தது வீடே நிறைஞ்சு இருந்துச்சு..” என்று.
நித்யாவிற்கே தெரிந்தது, தானும்
இங்கிருந்து திருமணம் முடிந்து சென்றுவிட்டால், அம்மாவும் அண்ணனும் ஒரே வீட்டினில்
இருந்தாலும் ஆளுக்கு ஒரு திசையில் முகம் பார்த்து அமர்ந்திருப்பர் என்று.
கவலையாய்...
அத்தியாயம் – 13
அடுத்து என்ன செய்வது என்று
யோசிப்பதற்குள், அரவிந்த், அவனின் அப்பா கணபதி, அம்மா சியாமளா வீட்டினுள்ளே
வந்திருக்க, சுந்தரியும் நித்யாவும்
சென்று அவர்களை வரவேற்க, மகனை தூக்கி வைத்து நின்றிருந்த நிரஞ்சனனும் சரி,
திகைத்து நின்றிருந்த ராதிகாவும் சர், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள,
சட்டென்று நிரஞ்சனன் சுதாரித்து
“வாங்க.. வாங்க..” என்று வந்தவர்களை வரவேற்க, ராதிகாவோ முள்ளின் மீது நிற்பதாய்
உணர்ந்தாள்.
வந்தவர்கள்,...
அத்தியாயம் - 15
குணசேகரன் இருந்திருந்தால்....
இந்த இரண்டு வார்த்தைகளும்,
ஒவ்வொருவர் மனதில் ஒவ்வொரு எண்ணங்களைக் கொடுக்க, நிரஞ்சனன், ராதிகா இருவருமே ஒரே
எண்ணத்தை கொடுத்தது..
‘அப்பா மட்டும் இருந்திருந்தா
இதெல்லாம் நடந்தே இருக்காது..’ என்று அவனும்..
‘மாமா மட்டும் இருந்திருந்தா..
கண்டிப்பா இந்நேரம் எல்லாமே நல்லபடியா இருந்திருக்கும்..’ என்று அவளும்
நினைத்தனர்.
அதுவும் இப்படியானதொரு நினைப்பு
வருவதற்கு காரணமே சுந்தரி கேட்ட ஒரு விசயம் தானே..
மகளின் திருமணத்தை முன்னிட்டு...
அத்தியாயம்
– 17
‘அம்மாடி... என்ன இது??!!!
இப்படியொரு வார்த்தையா??!!’ அப்படித்தான் நினைத்தாள் ராதிகா.
‘மகனைக் காட்டி இவனை
இழுக்கிறேனா??!!!’
“ஐயோ..!!” என்று தான் அவளுக்கு
நெஞ்சு அடைத்தது.
எத்தனை பெரிய வார்த்தை இது. அதுவும்
அவனின் மனைவியிடம்.. பிள்ளையைக் காட்டி இவனை இழுக்க அப்படியென்ன பெரிய காரணம்
இருக்கப் போகிறது. சரி அப்படியே செய்தால் என்ன??!! ராதிகா நிரஞ்சனனின் மனைவிதானே.
தன் கணவனை தன்னோடு சுமுகமாக்கிக்கொள்ள அவள்
முயற்சித்தால் அதென்ன...
அத்தியாயம் – 1
“மூஷித வாகன மோகன ஹஸ்த
சியாமள கர்ண விளம்பர சூத்ர
வாமண ரூப மஹேஸ்வர புத்ர
விக்ந விநாயகா பாத நமஸ்தே....”
பூஜையறையில் இருந்து மலர்களின் வாசத்தோடும், ஊதுபத்தி,
சாம்பிராணி மனத்தோடும், சுந்தரியின்
குரலும் கசிந்துகொண்டு வெளியே வந்தது. கண்களை மூடி, உதடுகள் மட்டும்
ஜபித்துக்கொண்டு இருக்க, அவரின் முகத்திலோ எண்ணிலடங்கா உணர்வுகள்.
அவ்வுணர்வுகளின் அத்தனை கேள்விகளுக்கும் பதில் அனைத்து
வினைகளையும் தீர்த்து, முழு முதர்கடவுளாய் விளங்கும் விக்ன...
அத்தியாயம் – 8
நிரஞ்சனனுக்கு உறக்கம் இல்லை.
சிறிது நேரத்திற்கு முன்னம் தானே நன்கு உறங்கிப்போனான். அவனுக்கே அது ஆச்சர்யம்
தான். இடைப்பட்ட பொழுதில் அவனுக்கு உறக்கமா?? அதுவும் அத்தனை ஆழ்ந்து?? உறங்கும்
வேளையில் கூட அப்படி உறங்க முடியாதே.
‘ம்ம்ம்...’ என்று தனக்கு தானே
தலையை ஆட்டிக்கொண்டான்.
வீடே அமைதியாய் இருந்தது. இதற்கு
முன்னமும் இப்படிதான் இருக்கும்.. ஆனால் அந்த அமைதியில் ஒரு வெறுமையும்
சூழ்ந்திருக்கும்....
அத்தியாயம் – 19
ராதிகா, நிரஞ்சனன் இருவரின்
மனதிலும் எதிர்காலம் பற்றிய புதிய கண்ணோட்டமும்,
தங்கள் குடும்ப வாழ்வை பற்றிய புரிதலுடன் கூடிய ஆசையும் மனதில் தோன்ற,
ஒருமுறை முயன்று பார்ப்போமே என்றுதான் நினைத்தனர்.
நம் அனைவருக்குமே வாழ்வில் இந்த
நிலை வரும். நமக்கு மிக மிக பிடித்த ஏதோ ஒன்றை தவறவிட்டு இருப்போம். அதை சிலகாலம்
கழித்து பின்னே நினைக்கையில்,
‘ஒருமுறை முயன்று...
அத்தியாயம் – 3
ராதிகாவிற்கு ஒருவழியாய்
அங்கிருந்து கிளம்பினால் போதும் என்றாகிவிட்டது. என்னவோ இந்த முறை அவள் மனதினில்
ஒரு தடுமாற்றம். ஆக கிளம்பியே ஆகவேண்டும் என்று
கிளம்ப, சுந்தரியோ விடாது “சாப்பிட்டு
போ...” என்றார்..
“இல்லத்தை ஏற்கனவே நேரமாச்சு..
இன்னிக்கு ஒரு மீட்டிங் வேற இருக்கு.. சோ நான் கிளம்புறேன்...” என்றவள், அவரின்
அறையிலேயே தன் உடையை சீர் செய்துகொண்டு கிளம்ப
“அண்ணி...
அத்தியாயம் – 12
நாட்கள் அதன் போக்கில் நகர்ந்து
மாதமும் கூட தொட்டிருந்தது. அவரவர் வேலையில் ராதிகாவும் சரி, நிரஞ்சனனும் சரி
தங்களை மூழ்கடித்துக் கொண்டனர். காரணம் மற்றவரின் நினைவும், கடந்த காலமும் மனதில்
வலம் வராது இருக்க. அவர்களின் அன்றாடம் இந்நினைவுகளால் ஸ்தம்பிக்கிறது இருக்க,
என்ன செய்திட முடியுமோ அதனை செய்துகொண்டு இருந்தனர்.
அதாவது மனதிற்குள்ளே அவர்களோடே
அவர்கள் போராடிக்கொண்டு இருந்தனர்.
என்னதான் வேலை...
அத்தியாயம் – 24
“இப்போவாது வாயை தொறந்து பேசேன்டி..”
என்று கடிந்துகொண்டு இருந்தார் ராணி மகளிடம்.
மணிவண்ணனோ “ராணி...” என,
“அட எப்போ பாரு என்னையே
சொல்லாதீங்க.. இவ்வாளோ தூரம் வந்தாச்சு.. பத்திரிக்கைல பேர் போட்டிருக்காங்க.. ஆனா
இவ ஒருவார்த்தை நம்மக்கிட்ட சொன்னாளா. நம்ம என்ன வேணாம்னா சொல்லிட போறோம்.. நல்லது
நடந்தா சரின்னு தானே இருக்கோம்..” என்று ராணி தாங்கலாய் பேச,
ராதிகாவிற்கு நிரஞ்சனன்...
அத்தியாயம்
– 18
ஆகிற்று முழுதாய் இரண்டரை நாட்கள்
ராதிகா கண்விழித்துப் பார்க்க. மருத்துவமனையில் தான் மொத்த குடும்பமும் இருந்தது.
அவள் கண் விழிக்கும் வரைக்கும் யாராலும் நிம்மதியாய் இருந்திட முடியவில்லை. எப்படி
இருக்க முடியும்..??
நிரஞ்சனன் ஆடித்தான் போனான்..
சுந்தரி, ராதிகாவை சென்று எழுப்ப,
அவளோ அசையாது இருக்க, என்னவோ என்று
பதறியவர், உடனே மகனுக்குத்தான் அழைத்தார். யாரின் நல்ல நேரமோ நிரஞ்சனன் வீட்டின் அருகில்...
அத்தியாயம் - 9
அனைத்தையும் கடந்து வந்தாகிவிட்டது,
இனி மகனுடைய எதிர்காலம் தான் தன்னின் பிடிப்பு என்று எண்ணியிருந்தவளுக்கு, அவளின்
வார்த்தைகளே அதிர்ச்சியைக் கொடுக்க, கையில் இருந்த உணவு அப்படியே இருக்க, அந்த
இரவு நேர அமைதியையும் தாண்டி அங்கே மேலுமொரு அமைதி குடியேறியது.
நித்யா மற்ற இருவரையும் பார்த்தவள்
மெதுவாய் அவளின் அறைக்குள் சென்றுவிட்டாள். அதற்குமேல் தான் இங்கிருப்பது...
அத்தியாயம் – 26
ராதிகாவை சமாதானம் செய்வதற்குள்
போதும் போதும் என்றாகிப்போனது நிரஞ்சனனுக்கு.. முதல் நாள் இரவு அவனோடு அப்படி
மூழ்கித் திளைத்தவள், ஊருக்கு கிளம்பும் நேரம் வர வர, முகம் தவிப்பாய் மாற,
“ஹேய்.. நம்மள யாரும் தப்பா
நினைக்கப் போறதில்லை..” என்று அவனும் எத்தனை முறை சொன்னாலும், அவள் கேட்பதாய்
காணோம்.
விமான சேவை அப்போதும்
நிறுத்தப்பட்டு தான் இருந்தது. மழை...
அத்தியாயம் – 23
இதோ ராதிகா இந்தியா வந்துவிட்டாள்.
அவளை அழைக்கவென்று நிரஞ்சனன் நித்யா மற்றும் அத்து மூவரும் விமான நிலையம்
வந்திருக்க, நேற்றே நிரஞ்சனன் அவளிடம் சொல்லிவிட்டான்
“வந்து நேரா நம்ம
வீட்டுக்குத்தான்..” என்றிட
ராதிகாவிற்கு இவன் எந்த முறையில
அழைக்கிறான் என்ற குழப்பம் வந்துவிட்டாது. அவளின் அப்பா அம்மா வருவதற்கு இன்னமும்
இரண்டு தினங்கள் இருக்க, அவள் போய் தான் இனி...
அத்தியாயம் – 6
அன்றைய இரவு நிரஞ்சனனின் உறங்கா
இரவாகிப்போக, மறுநாள் அவனின் அலுவலகம் வந்தவனோ
“சஞ்சீவ்... இன்னிக்கு முடிக்க வேண்டிய பேலன்ஸ் சீட் எல்லாம் டேலி
பண்ணியாச்சா??” என்று கேட்டபடி வந்தவனை
ஒருவித பயம் கலந்த பார்வையோடு தான் பார்த்துவைத்தான் சஞ்சீவ்.
நிரஞ்சனன் இந்த ஆடிட்டிங் கம்பனி
ஆரம்பித்த நாள் முதலாய் அங்கே வேலைக்கு என்று இருப்பவன் சஞ்சீவ். அங்கிருக்கும்
மற்றவர்களை விட சஞ்சீவ்...
அத்தியாயம் – 5
ராதிகாவிற்கு எப்போதடா நிரஞ்சனன்
வருவான் என்றிருந்தது. அவனோடு பேச ஆயிரம் இருந்தது அவளுக்கு. அவளைப் பார்த்த
சுந்தரி கூட , “என்ன ராதிம்மா??” என்றார் வந்த சிரிப்பை விழுங்கி..
“இல்லத்தை நேரமாச்சா அதான்...”
என்றவளுக்கும் லேசாய் அசடு வழிய,
“ம்ம் ம்ம் அண்ணி... ஒரு போன்
போட்டு கூப்பிடுறது...” என்றாள் நித்யாவும் கிண்டலாய்.
“ம்ம்ம் பண்ணிட்டேன்.. ஆனா
எடுக்கலை...” என்று முகத்தை...
அத்தியாயம் – 16
முடிந்தது.. அனைத்தும் முடிந்தது..
குணசேகரன் என்ற மனிதரின் வாழ்வில் எல்லாம் முடிந்தது. கணவனாய், அப்பாவாய்,
குடும்பத்துத் தலைவராய் அவரின் பங்கை அவர் சிறப்பாக செய்தே சென்றிருக்க, அவரின்
இடத்தில் இருக்கும் வெறுமை இனியாராலும் சரி செய்ய முடியாது எனும்வகையில் இருந்தது
அங்கே.
அனைத்து சாங்கியங்களும்
முடிந்திருக்க, வீடே அமைதியில் இருந்தாலும், வீட்டில் ஆட்கள் நிறைய பேர்
இருந்தனர். ஏழாம் நாளே காரியம்...
அத்தியாயம் – 22
விமானம் ஏறி பறந்தது போலானது ஒரு
வராமும். ராதிகாவும் சிங்கப்பூர் வந்து ஆறு நாட்கள் ஆகியது. இதோ நாளைக்குக்
கிளம்பிட வேண்டும். இன்று அவளுடைய ட்ரைனிங் எல்லாம் முடிந்து அதற்கான அனைத்து
பார்மாலிட்டியும் முடிந்து வெளிவர, கொஞ்சம் ஷாப்பிங் செய்யலாம் என்று சுற்றிக்கொண்டு
இருந்தாள்.
புதிய இடம்.. புதிய மக்கள்..
எல்லாமே புதிது. முதல் நாள் தான் அவளுக்குக்...
அத்தியாயம் – 11
யார் என்ன சொல்லியும் நிரஞ்சனன்
கேட்பதாய் இல்லை. மருத்துவமனையில் இருந்து மகனை தான் தான் அழைத்துச் செல்வேன்
என்பதில் பிடிவாதமாகவே இருந்தான். அத்துவின் அந்த அரைத்தூக்க ‘ப்பா...’ என்றதொரு அழைப்பு,
நிரஞ்சனனை வேறெதுவும் சிந்திக்கவே விடவில்லை.
என் மகனுக்கு நான் அப்பா.. மற்றது
எல்லாம் பின்னே தான்..!!
ஆனால் ராதிகாவோ, அத்துவிற்கு
இப்படியானது கண்டு மனம் துடிக்க, நிரஞ்சனனின் இந்த மாற்றம்...
அத்தியாயம் – 2
“ம்மா... ஜோ ஜோம்மா...” என்று சிணுங்கிய மகனை வம்படியாய்
கமலி தூக்க, ராணியோ “பாவம் டி குழந்தை
தூக்கட்டுமே...” என்றார் அந்த அதிகாலை பொழுதில்.
“ம்மா.. ஏழு மணிக்கு அங்க ஹோமம்.. இப்போ இவனை கிளப்பி,
கூட்டிட்டு போனாதான் சரியா இருக்கும்...” என்றபடி மகனை தூக்கி தன் தோளில் போட,
அவனோ நன்றாய் இருக்கும் தூக்கத்தினை இப்போது...