Naan Ini Nee
நான் இனி நீ – 40
தீபனுக்கு அனுராகாவை சென்று
பார்க்கவேண்டும் என்றுதான் இருந்தது. அது எப்படி அவனுக்கு அவளைக் காணவேண்டும்
என்று தோன்றாது போகும். சொல்லப்போனால் வெளிவந்ததுமே அவன் நேரே அவளைக் காணச்
செல்லவேண்டும் என்றுதான் நினைத்தான்.
ஆனால், அவன் அவளிடம் என்ன
பேசுவான்..?!!
முதலில் அவள் இப்படியொரு விசயத்தை
செய்திருக்க, அவளை எதிர்கொள்ளவே தீபன் சக்ரவர்த்திக்கு பயமாய் இருந்தது.
பயம் தான்...
அவனுக்கு...
நான் இனி நீ – 38
அனுராகாவின் தீவிரம் யாருமே
எதிர்பார்க்காத ஒன்று. ஏன் அவளுமே கூட இதனை எதிர்பார்க்கவில்லை தான். சூழ்நிலைகள்
மாறுகையில், நம் திட்டங்கள் தவிடுபொடி ஆகுகையில், யார் தான் ஒருநிலையில் இருக்க
முடியும்.
இந்த மாடலின் மரணம் என்பது மிதுன் கிளப்பிவிட்ட
ஒன்றுதான் என்றாலும் கூட, அதுவும் ‘கொலை கேஸ்..’ என்கையில், யார்தான் பொறுப்பர்.
அரசியல் வாழ்வில் இதெல்லாம்...
நான் இனி நீ – 37
மிதுனுக்கு ஒன்று புரியவில்லை. தான்
இப்படி பிடிவாதமாய் இருப்பதன் மூலம், தன் குடும்பத்தினர் மொத்தமாய் தன்னை
வெறுக்கத் தொடங்கிவிட்டனர் என்று. இப்படி செய்தால், ஏதாவது ஒரு வழியில் தன்னை
அவர்கள் சமாதானம் செய்ய எண்ணுவார்கள், அப்பாவும் தம்பியும் இல்லை என்றாலும் கூட,
அம்மா வந்து பேசுவார் என்று பார்க்க, உஷாவோ அவன் இருந்த...
மிதுன் இன்னும் என்ன என்ன செய்து வைத்திருக்கிறானோ
என்று ஒவ்வொரு முறையும் யோசித்து யோசித்து தலை வெடிப்பது போலிருந்தது தீபன்
சக்ரவர்த்திக்கு.
உஷா பெயரில் இருக்கும் ஆறு
கல்லூரிகளிலும் வருவமான வரித்துறை ரெய்ட்.. நாளை விடிந்தால் தேர்தல் எனும்
நிலையில் இவர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.
அங்கே உஷாவோ தனியே அவரின்
பங்களாவில் இருக்க, யாராலும் உள்ளேயும் செல்ல முடியவில்லை. உள்ளிருப்பவர்கள்
எல்லாம் வெளியேவும் வர...
நான் இனி நீ – 36
செய்தியாளர்கள் சந்திப்பு
முடிந்ததுமே, சக்ரவர்த்தி செய்த முதல் வேலை, வீட்டினில் மனைவி மக்களோடு தனியே
அமர்ந்து பேச்சு வார்த்தை நடத்தியதுதான். இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ அரசியல்
பேச்சு வார்த்தைகள் செய்திருப்பார், ஆனால் இன்றோ, தான் அருமை பெருமையாய்
நினைத்திருந்த மகன்களில் ஒருவன் தன் குடும்பத்திற்கே எதிராய் இருக்க, அவரால்
அத்தனை எளிதாய் எதையும் ஆரம்பிக்க முடியவில்லை.
தீபன்...
“உன்னோட எனக்கு பேச எதுவுமில்ல.
அம்மாவைக் கூப்பிடு..” என்ற மிதுன் குரலில் களைப்பு தெரிந்தாலும், அதில் எவ்வித
ஒட்டுதலும் இல்லை.
முற்றிலும் எதிரியாகிப் போன இருவர்
பேசிக்கொண்டால் எப்படியிருக்குமோ அப்படித்தான் இருந்தது இருவரின் சம்பாசனையும்.
“அம்மா.. அப்பா .. யாரும் யாருமே வர
மாட்டாங்க மிதுன்.. டாக்டர் கூட நான் சொன்னா மட்டும்தான் வருவார்..”
“டேய்.. வேண்டாம்... என்னோட
வச்சுக்காத...” என்று மிதுன் குரலை...
நான் இனி நீ – 35
அனுராகாவும் தீபனும் சென்னை சென்று
சேர்வதற்குள் ஏகப்பட்ட பரபரப்புச் செய்திகள், அவனுக்கோ அழைப்புகள் வந்தவன்னம்
இருக்க, “தீப்ஸ் நான் டிரைவ் பண்றேன்...” என்றவள் காரினை அவளே தான் செலுத்தினாள்.
தீபனுக்கோ ஏகப்பட்ட டென்சன்..
தேர்தலுக்காக என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து இவன் செய்திருக்க, கடைசி
நேரத்தில் இப்படியான குளறுபடிகள் எல்லாம் இவர்களுக்கு பாதிப்பு கொடுக்கும் தானே.
நெற்றியை...
நான் இனி நீ – 34
“யாருமில்லா தனியரங்கு... நீயும்
நானும் தனியுலகில்...” இது மிக மிக பொருத்தம் தீபனுக்கும், ராகாவுக்கும். அதனை
இப்படித்தான் சொல்லிட வேண்டும்.
சுற்றிலும் இயற்கை.. இயற்கை..
இயற்கை மட்டுமே.. அதனோடு அவர்கள்..
அவர்களின் காதல்.. அவர்களின் ஸ்பரிசம்.. அவர்களின் சிருங்காரம்.. அவர்களின்
ஏகாந்தம்..
இங்கே யார் அவன், யார் அவள்..
இருவரும் அறிந்திடவில்லை.. நீயென்பது நானாகிய பின்னே, நாம்...
நான் இனி நீ – 33
சக்ரவர்த்தி, உஷாவிடமும்
சொல்லிவிட்டார், அனுராகா தான் தீபனுக்கு என்று. உஷாவிற்கு அப்படியொன்றும் இதில்
எகோபத்திய விருப்பம் இல்லை என்றாலும், இத்தனை தூரம் போனபின்னே மறுப்பதும்
சரியில்லை என்று “சரி...” என்றுவிட்டார்.
அதன்பின்னே தான் லோகேஸ்வரன்,
தாராவினை வரச் சொன்னது.
இதற்கு நடுவில் உஷா, தீபனோடு பேச
“ம்மா...” என்றவன் குரல் கேட்டவருக்கோ அப்படியொரு கோபம் வந்தது.
“பேசாதடா நீ.....
தீபன் ஏதோ ஒன்று நினைத்து
அனுராகவிடம் பேச, அது எதிலோ போய் முடிந்தது. அவளின் மனதிற்குள் இத்தனை
இருக்கின்றதா??!! இத்தனை வேதனைகளா, ஏக்கங்களா??!! இப்படியொரு கோணத்தில் அவன்
யோசிக்கவில்லை இதுநாள் வரை.
‘பிடிவாதக்காரி.. ஆத்திரக்காரி..’
இதெல்லாம் தான் அவன் எண்ணியிருந்தான்.
ஆனால் அதன் காரணங்கள் வேறாய்
இருக்கும் என்று இப்போது தான் புரிந்தது.. இன்னும் முழுதுமாய் அவள் எதையும்
சொல்லிடவில்லை. ஆனால் கேட்டது இதுவே போதும்...
நான் இனி நீ – 32
அனுராகாவும், தீபனும் ஒரே குடிலில்
இருந்தாலும், இரண்டு நாட்களாய் ஒருவரும் பேசிக்கொள்ளவில்லை. இருவருக்குமே மனதினில்
ஒருவித பிடிவாதம்.
‘என்னோட இருக்கிறப்போவே இவ்வளோ
பிடிவாதமா??!!’ இந்த எண்ணம் இருவருக்கும் இருந்தது.
இங்கிருந்து கிளம்பும் எண்ணமும்
இல்லை. ஒன்றாய் இருந்தாலும் அதில் ஒட்டுதல் இல்லை. இன்னமும் கூட தங்களுக்குள்
புரிதல் இல்லையோ என்றுதான் தோன்றியது. சில புரிதல்கள் எல்லாம் வாழ்ந்து...
நான் இனி நீ – 31
எல்லாம்.. எல்லாமே சக்ரவர்த்தியும்
ஆளுமைக்குள் வந்திருந்தது.. தீபனின் பொறுப்புகள் ஆகட்டும்.. மிதுனின் பொறுப்புகள் ஆகட்டும்.. எல்லாமே.
மகன்கள் செய்திருந்த பல
அண்டர்கிரவுண்ட் வேலைகளும் கூட அவரின் பார்வைக்கு வந்திருந்தது.
“ஏன்டா இதெல்லாம் செஞ்சாதான் நான்
பதவியில இருக்க முடியும்னு எவன் சொன்னது..” என்று அவ்வப்போது கேட்டு நாகாவையும்,
தர்மாவையும் வறுத்து எடுத்தார்.
அவர்களும் தான் என்ன செய்வர்,
அவர்களின்...
உஷாவிற்கு,
சக்ரவர்த்தி ஏன் இப்படியெல்லாம் பேசுகிறார் என்பது விளங்கவில்லை. பொதுவாய் உஷா
வீட்டில் அதுவும் இந்த ஆண்களிடம் வீட்டு விசயம் தவிர வேறெதுவும் பேசிட மாட்டார்.
அப்படியிருக்க, சக்ரவர்த்தி என்றுமில்லாத திருநாளாய் இப்படி சொல்லவும்,
“என்னாச்சுங்க...”
என்றார் புரியாது..
“என்ன
ஆகக் கூடாதுன்னு நினைச்சானோ.. அது தான் ஆச்சு.. நான் இருக்கப்போவே பதவி ஆசை
வந்திடுச்சு.. ஏன் நான் எதுவும் செய்யமாட்டேனா.. செய்யாமையா போயிடப்போறேன்... இல்லை
நான்...
நான் இனி நீ – 30
காதருக்கு
ஒன்றும் விளங்கவில்லை, இத்தனை காலை பொழுதில் சக்ரவர்த்தி ஏன் தன்னை வர சொல்கிறார்
என்று. பொதுவாய் தீபன் எதாவது மிக மிக முக்கியமான விசயம் என்றால் மட்டுமே நேரம்
காலாம் பார்க்காது அழைத்து வர சொல்வான்..
அப்படியில்லாது,
இப்போது இவர் அழைக்க, யோசனையோடு தான் அங்கே வீடு சென்றார்.
அப்படியொரு
அமைதி வீட்டினில். அந்த...
அனுராகா,
தன்னிடம் வரவில்லை. ஆனால் தன் இடத்தில் இருக்கிறாள் என்பது அறிந்த தீபனோ
என்னவிதமாய் தான் உணர்கிறோம் என்பதனைக் கூட உணர மறந்தான். நிஜமாய் வார்த்தைகள்
இல்லை..
ஒரே ஒரு
நொடியில் மனம் நிறைவதாய் இருந்தது அந்தத் தருணம். அவளைக் காணவில்லை. அவளை
ஸ்பரிசிக்கவில்லை.. இன்னும் எதுவுமே அவர்களுள் சரியாகிடவில்லை..
ஆனாலும்...!!!!!!
அவள்
அங்கே இருப்பதே, அவள் தன்னோடு இருப்பதாய் எண்ணினான். மனது அத்துனை நெருக்கம்
கொண்டது.
முகத்தினில்
வந்து...
நான்
இனி நீ – 29
அனுராகாவிற்கு
தான் ஏன் இங்கு வந்தோம் என்பதே விளங்கவில்லை. ஆனால் வீட்டிலிருந்து கிளம்பியதுமே
அவளின் மனதில் தோன்றியது D- வில்லேஜ் மட்டும்தான். வேறெங்கு செல்லவும் அவள் மனம்
இடம்கொடவில்லை..!!
அவள்
எண்ணியிருந்தால் வெளிநாடுகளுக்கு கூட செல்லலாம். எதையுமே அவளின் மனம் நாடவில்லை.
ஒன்று தீபனிடம் செல்லவேண்டும் இல்லை அவனது இடம் செல்லவேண்டும்.
தீபனிடம்
செல்ல, எதுவோ தடுத்தது, அதையும் தாண்டி...
நாகாவும் தர்மாவும் வந்துவிட்டனர்.
தீபனுக்குமே அவர்களை காணவும் தான் ஒரு புதிய தெம்பு வந்தது போலிருந்தது.
“என்னங்கடா...” என்றபடி அவர்களின்
தோளை தட்ட,
“இதுக்கு எதுக்கு போக சொல்லணும்..”
என்றான் நாகா.
தர்மாவும் அதையே சொல்லிப் பார்க்க,
“ஆனா இப்பவும் நான் வர சொல்லலையே. உங்களுக்கும் எதுவும் பிராப்ளம் ஆகிடக்
கூடாதுன்னு தான்..” என்றவன் “வேலை என்னாச்சு..” என,
“பக்கா.. அந்த சேட் யார்கிட்ட எங்க
என்ன...
நான் இனி நீ – 28
அனுராகா மனதில் மிதுன் மீது
சந்தேகம் எழுந்ததுமே, அதை தீபனிடம் சொல்லத்தான் எண்ணினாள். ஆனால் அடுத்த நொடியே
அது அத்தனை சரிவருமா என்பதும் அவளுக்குப் புரியவில்லை..
அவளுக்குத் தெரியும், மிதுன் மீது
தீபனுக்கு எப்படியான அபிப்ராயம் இருக்கிறது என்று. தான் இதை சொன்னால், இல்லை
கண்டிப்பாய் இதில் அந்த பிரஷாந்த் தான் உள்ளே புகுந்து விளையாடி...
ஆர்த்தி வீட்டினில் இல்லை, பல்ராம் வெளியிட
சொன்ன ஆதாரங்களும் இப்போது அந்த நபரிடம் இல்லை என்றதும் சேட்டிற்கு பயம்
வந்துவிட்டது. தீபன் ஏதும் செய்துவிட்டானா இல்லை இந்த ஆர்த்தியே எதுவும்
செய்கிறேன் என்று சொதப்பி இருக்கிறாளா என்று புரியவில்லை.
ஆர்த்தி பார்க்க சாதுபோல் இருப்பவள் தான்.
ஆனால் நிஜத்தில் அப்படியா என்றெல்லாம் சொல்லிடவே முடியாது. பல்ராம் சேட்டின்
உடன்பிறந்த தங்கையின் மகள் ஆர்த்தி....
நான் இனி நீ – 27
தீபனுக்கு கண்மண் தெரியாத கோபம்.. சுற்றி
இருக்கும் எதுவும் கருத்தினில் பதியவில்லை. காரினில் ஏறி அமர்ந்தவன் தான். எங்கே
செல்கிறோம், எங்கே செல்ல வேண்டும் இதெல்லாம் எதுவும் சிந்திக்காது அவன்பாட்டில்
காரைக் கிளப்பிவிட்டான்.
அத்துனை வேகம்.. எதை பிடிக்கவோ??!! இல்லை எதில்
இருந்து தப்பிக்கவோ..??!!
இரண்டுமே தெரியவில்லை..
ஆனால் அப்படியொரு வேகம்..
வீட்டிற்கு செல்லவோ, இல்லை அவனுக்கிருக்கும்
வேலைகள் பார்க்கவோ...