Sunday, April 20, 2025

    Mayanga Therintha Manamae

    அதற்குள் ஆட்டோ ஒன்றை அழைத்து வந்தான் வீரா, அதில் லாவன்யா, விக்ரா, நாச்சி என மூவரையும் ஏற சொல்லிவிட்டு, இன்னொரு ஆட்டோவில் சமரசு மற்றும் மூன்று மகன்களும் வந்தனர். “அத்தை, என்னை எங்க வீட்டில் விட்டுடுங்களேன்” யாரிடமோ பேசுவது போல் வந்தது குரல். நாச்சியும் விக்ராவும் இவளை அதிர்ந்து பார்த்து “ஏன் அங்கே போகனும்ங்கிற?” ஒரே நேரத்தில்...
    “அப்பா அவனை அடிக்காதீங்க பா.. வேணாம் பா” என தடுக்க வந்த லாவன்யாவை தள்ளிவிட இவளும் ஓரிடத்தில் போய் விழுந்தாள் மடார்ரென. களவரபூமியானது சிறிது நேரத்தில் “இவன் இருக்க கூடாது, இருந்தா என் பொண்ணை வாழ விட மாட்டான்” என கேட்டிற்கு பின் வைக்கப்பட்டிருந்த கடப்பாரையை எடுத்து கொண்டு வர, வேடிக்கை பார்த்திருந்த தெருக்காரர்கள் இருவரையும்...
    அத்தியாயம் 17 லாவாவின் அறை கதவு பூட்டியிருக்க, லேசாய் தட்டினான். “அம்மாவா அப்பாவா?” என தயங்கி போய் இவள் கதவை திறக்க, இவளை தள்ளிக்கொண்டு உள்ளே வந்து கதவை தாளிட்டான். எப்போதும் ஊஃபரில் பாட்டு கேட்டு கொண்டே இருக்கும் அவளது அறையில். இன்றோ  உயிரோட்டத்தை தொலைத்து அமைதியாய் இருந்தது. “இங்க இப்போ எதுக்கு வந்த, கிளம்பிடு விக்ரா”  மென்குரல் வந்த...
    “என்னைய கொழம்பு வப்பியாக்கும் நீ.. புளுகனாலும் பொருந்த புளுகனும்டி, நீ புளுகுடி புளுகு! உங்கொப்பன் புளுகு வண்டில வரும், உன் புளுகு பிளேன்ல இல்ல வரும்” குடும்பத்தையே இழுத்தார் பர்வதம். “ஆமாம் நான் புளுகு வண்டி, நீ பெரும பீத்தகளையம்.. போடி.. போக்கத்தவளே.. பெரும பீத்தகளையமாம், குடிக்குறது ஓட்ட களையாமாம், யாருகிட்டடி விடுற ரீலு” சிலுப்பினார்...
    அத்தியாயம் 16 சமரசுவை நெருங்கிய ராஜசேகர் “உங்களை நம்பி தானே, என் ஆத்தா அப்பன் கிட்ட கூட விடாமல் இங்கே விட்டுட்டு போனேன். ஏதோ சிநேகிதமா பழகுறானேனு வீட்டுக்குள்ள விட்டா, உன் மகன் பண்ணின வேலைய பார்த்தியா” மச்சான் என்பதற்கு வேறு சொல்லை கூட தேடாதவர் இன்று வா போ என பேச, சமரசு கண்களை...
    ராஜசேகர் சமரசு இருவரும் ஊர்கதை உலக கதை என முழுதாய் ஒரு பத்து நிமிடங்கள் வரை பேசிய பின் தான் தனக்கு இடப்புறமாய் அமர்ந்திருந்த விக்ராவிடம் திரும்பினார். “நீ எப்படிடா இருக்க. ஹைதராபாத்ல வேலைனு கேள்வி பட்டேன். பேசாம நீயும் ஆர்மி வந்திருக்கலாம் விக்ரா. பாடி நல்லா மெயின்டெய்ன் பண்ற மேன்” என எதிர்பாரத நேரம்...
    அத்தியாயம் 15 “ஏன்மா என்கிட்ட சொல்லலை நீ..” தாயின் காதை கடித்து கொண்டிருந்தான் விக்ரா. “உன்னய நேரில் பார்த்து சொல்லனும்னு அம்பூட்டு ஆசை பட்டேன். யாருவே அவசரகுடுக்கை கெணக்கா போட்டு விட்டது, எல்லாம் அந்த மீனாவாதேன் இருக்கும், இருக்கு அவளுக்கு” என பொய்யாய் கோபம் கொள்ள நாச்சியின் தோளில் கைபோட்டு, “தேங்க்ஸ்மா.. எதிர்பார்க்கவே இல்லை” “ஆனா நான் எதிர்பார்த்தான்டா...
    இவனுடன் சாதாரணமாய் சிரித்து பேசியபடி வந்தவளை கண்டு “யப்பா, சரிபண்ணிட்டியா விக்ரா! இப்போ தான் சிரிச்ச மூஞ்சா இருக்கா, நாளைக்கு இவ அப்பா வராரே வந்து “புள்ள இப்படி கலை இல்லாமல் இருக்கா என்னத்த புடுங்குறன்னு” என்னைய பாடா படுத்துவாருன்னு பயந்திட்டு இருந்தேன். நல்ல வேளை அவளை நார்மல் ஆக்கிட்ட நீ” என மீனா...
    அத்தியாயம் 14 “இன்னைக்கு விஜய்கிட்ட நீ பேசயிருந்தா, அவனோட இன்டன்ஷன் என்னன்றது கண்டிப்பா தெரிஞ்சிருக்கும், செல்லத்தை வர வச்சது தப்போ” இவன் யோசிக்க “அவன் வந்ததுனால தான் நான் தப்புச்சேன். இல்லை கோவிலில் அசிங்கபட்டு இருப்பேன்” குரல் கம்ம கூறினாள். தோளில் கைபோட்டு “சரி விடு” என தேற்றினான்  இவன். ஏமாந்ததை, ஏமாற்றபட்டதை நினைத்து இருவருமே கவலை கொண்டனர்....
    “எனக்கு வேணாம்” எங்கோ பார்த்துக்கொண்டு இவள் கூற “ஒன்னு பத்தாது, இரண்டு வாங்கிட்டு வான்னு கத்துவ, என்ன ஆச்சு உனக்கு?” நின்றிருந்தவளின் கை பிடித்து இழுத்து அருகே அமர்த்திகொள்ள, இவளும் பொத்தென இவன் அருகே அமர்ந்தாள். “ஏண்டி என்னை பிளாக் பண்ண?” பிடித்திருந்த அவளது கையை முகத்தருகே கொண்டு சென்று அதில் முத்தம் வைக்க, பட்டென கையை உருவிக்கொண்டு...
    அத்தியாயம் 13 அடுத்து இவனும் மீட்டிங்கில் பிசியாகிவிட்டான். மதியம் போல தான் வாட்ஸ்அப்பை ஓபன் செய்ய, ‘நாளைக்கே அவனுக்கு ஓகே வாம்' என லாவன்யாவிடமிருந்து வந்து குதித்தது மேசேஜ். பதிலுக்கு இவன் போன் அடித்து விட்டான். இவளும் எடுத்திட “ஏண்டி என் நம்பரை பிளாக்கில் போட்ட” எடுத்த எடுப்பிலேயே இவன் கேட்க “நீ நீ..” ஏதோ சொல்ல வந்தவள்...
    அத்தியாயம் 12 இவள் வர தாமதமாகிக்கொண்டே இருக்க, இவன் இவளுக்கு போன் அடித்தும் எடுக்கவில்லை. ‘அத்த நீங்க கூப்பிட்டு பாருங்களேன்' என மீனாவையும் இழுத்துவிட்டான்.  தாயின் அழைப்பை உடனே எற்றாள். அவரோ வழக்கம் போல கிழித்து தள்ள, அவருக்கு பயந்து வீட்டிற்கும் வந்து சேர்ந்தாள். “ஏண்டி இம்புட்டு நேரம்” என திட்டிய அன்னையை கண்டு கொள்ளாது, விக்ரா வந்திருப்பது...
    அத்தியாயம் 11 வீரா, கண்மணி சொந்தமில்லையென்றாலும் ஒரே ஊர், ஒரே இனம் என்பதால் சரியாக ஒரு வருடம் முன்பு இவர்களது திருமணம் பற்றி பேச்சு எடுத்த போது, போகையிலும் வருகையிலும் கண்மணி மீது பார்வை விழுந்ததில் அவனுள்ளும் விழுந்துவிட்டாள்.  லேசாய் பிரியமும் முளைவிட தொடங்கிட திருமணத்திற்கு வீரா உடனே ஒப்புக்கொண்டு விட, கண்மணியோ அவனது முரட்டு தோற்றத்தை...
    “இவனை உனக்கும், உனக்கு இவளையும் தான்”  இப்போதும் இருவருக்குமாய் இவன் பதில் கூறினான். அதை கேட்ட அடுத்த நொடியே “ச்சைய்..” என அவளும் “ச்சை ச்சை“ என டபுள் ‘ச்செய்’ களோடு வீராவும் முகம் சுளிக்க வீராவையே வைத்த கண் வாங்காமல் பார்த்த விக்ரா, ‘ச்சைய்யா.. இருக்குடா உனக்கு' இம்முறை கோரசாய் நினைத்தது விக்ராவும் அவளும் தான். “கண்மணி அவன்...
    அத்தியாயம் 10 தனக்கு முன்பாய் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தார் மீனா. சமையலறையில் மீனா இருப்பதை உணர்ந்து சத்தம் செய்யாமல் நைசாய் தன் அறைக்குள் சென்று புகுந்து கொண்டாள். ஆனால் அவளுக்கு முன்பாக ‘மியாவ்' என சவுண்ட் கொடுத்து இவளை பாவமாய் பார்த்திருந்தது ஷினி.. வண்டாண்டா மறுபடியும் கம்ளைண்ட் பண்றதுக்கு.. “எல்லாம் உன்னால தான் ஷினி. ஒழுங்கா நீ உண்டு...
    “குறை சொல்லனுமேன்னு விக்ராவை சொல்லாதீங்கண்ணே, அவனை நீங்க மட்டும் தான் குறை சொல்லிட்டு கிடக்கீக. வீராவோ விக்ராவோ, எம் மவ இந்த வீட்டு மருமவளானாலே போதும் எனக்கு” சமரசுவிடம் கூறிவிட்டு, நாச்சியின் கையை பிடித்து தன் கைக்குள் வைத்து “எங்க எம்மேல இருக்குற கோபத்தில் சம்பந்தம் வேணாமுனு சொல்லுவீங்களோனு வெசனப்பட்டுடேன் மயினி” பிடித்த கையை...
    அத்தியாயம் 9 அந்நேரம் சரியாய் “அண்ணே” என குரல் கொடுத்தபடி மீனா சமரசு வீட்டிற்குள் நுழைய ”அய்யோ அத்தை” என வேகமாய் லாவாவை ஒரு பார்வை பார்த்து இவன் சோபாவை விட்டு விலகி, “வாங்கத்தை” என வரவேற்க, “வா மீனா ஏன் அங்கனயே நின்னுட்ட?” சமரசுவும் வரவேற்பில் கலந்து கொள்ள, பின்னோடு வந்தார் பாரிஜாதம். “இதென்ன பாரிஜாதமும் வந்திருக்கா!”...
    அப்படி பார்த்து கொண்டிருந்தவனின் விழிகள் லாவா அழுக்கு கூடையில் தேட துவங்க, “ஐய்யய்யோ அழுக்கு கூடையில தேடுறாளே, பாட்டிலை பார்த்தா, இருக்குற கோபத்துக்கு சமரசுகிட்ட போட்டு கொடுத்துருவாளே” நேற்று இரவு மறைத்து வைத்த பாட்டிலை தேடி பாய்ந்தோடினான் லாவாவிடம். அழுக்கு கூடையை இழுத்து தன் புறம் வைத்தபடி, “அதுக்குள்ள பூனை இல்ல” என வேறு பக்கம்...
    அத்தியாயம் 8 அதிகாலை வேளை குடும்பமாய் ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்த பூனைகளை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான். வேறு யார் எல்லாம் நம் விக்ரா பய தான். முதலில் மினி, அதன் மேல் கால்களை போட்டபடி ஷினி,  ஷினியை அடுத்து, பிறந்து இருபதே நாட்களான மூன்று குட்டி பூனைகள் வரிசைகட்டி படுத்திருந்தை பார்த்தவன். புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து நேத்து...
    “ம்க்கும், ஏண்டா பாண்டிகளா இதுக்கு தான் இத்தன அலம்பலா.. நான் கூட ஏதோ பண்ண போறீயளோன்னு நினச்சுபுட்டேன்டா” கூட்டத்தில் ஒருவன் கத்த “ஏன், என்ன பண்ணனும்கிற” செல்லம் வழக்கம் போல சிலுவிழுக்க “அதான் வரிசை கட்டி நிக்கிறீகளே, அப்படியே ஒரு  பேஷன் ஷோவ போடுறது” என ஏற்றிவிட, ஆர்ப்பரித்தது அந்த இடம் “பேஷன் ஷோ தானே நடத்திடுவோம்” எதற்கும்...
    error: Content is protected !!