Monday, April 21, 2025

    Marakka Manam Kooduthillaiyae

    அத்தியாயம் – 1 சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே கஜானனம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம் உமாஸூதம் சோக வினாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்... மங்களகரமாய் கை கூப்பி நின்று இனிய குரலில் கணபதி மந்திரத்தைத் தெளிவாய் உச்சரித்துக் கொண்டிருந்த மகளைப் பெருமையும் புன்னகையுமாய் நோக்கிக் கொண்டே...
    அத்தியாயம் – 17 நாட்கள் கடந்திருக்க காரை சர்வீஸ் சென்டரில் விட்டுவிட்டு பேருந்து நிலையத்திற்கு வந்து நின்றாள் சஹானா. சர்வீஸ் விட வேண்டிய கிலோ மீட்டரைத் தாண்டி வெகு நாட்களாகி இருந்தது. வங்கிக்கு செல்வதற்கான பேருந்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவளின் கண்கள் சில நாட்களின் வழக்கம் போல் இன்றும் ஆவலுடன் சுற்றுப்புறத்தை ஆராய்ந்து, தேடியது காணாததால் ஏமாற்றத்துடன்...
    அத்தியாயம் – 30 பிரபா, ஆனந்தியின் குரல் வீடெங்கும் சந்தோஷமாய் ஒலித்துக் கொண்டிருக்க, அவர்களுடன் பேசிக் கொண்டே விருந்துக்கான ஏற்பாடுகளை தடபுடலாய் கவனித்துக் கொண்டிருந்தார் மீனாட்சி. சரவணன் ஹாலில் அமர்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்தான். புகுந்த வீட்டு விசேஷங்களை மகள் வாய் கொள்ளாமல் சொல்லுவதைக் கேட்டு அவருக்கு நிறைவாய் இருந்தது. அண்ணி காரியத்தில் கறாராய் பேசினாலும்...
    அத்தியாயம் – 6 “அண்ணா... அம்மா எவ்ளோ நேரமா சாப்பிட கூப்பிட்டு இருக்காங்க... கீழ வராம என்ன பண்ணிட்டு இருக்கே...” கேட்டுக் கொண்டே அண்ணனின் அறைக்குள் நுழைந்த பிரபா அவனது கோலத்தைக் கண்டு அதிர்ந்து போனாள். இரவெல்லாம் உறங்காத கண்கள் கொவ்வைப் பழமாய் சிவந்திருக்க தலையெல்லாம் கலைந்து ஆபீஸ் கிளம்ப வேண்டிய நேரத்தில் சோபாவில் எங்கோ வெறித்துக்...
    அத்தியாயம் – 31 “சஹா... எல்லாரும் வரத் தொடங்கியாச்சு... என் பேத்திய ரெடி பண்ணியாச்சா இல்லியா...” மீனாட்சி கீழிருந்து குரல் கொடுக்க, “இதோ வந்துட்டேன் அத்தை...” மாடியிலிருந்து எதிர்குரல் கொடுத்த சஹானா அடுத்த நிமிடத்தில் மாடிப்படியில் பிரசன்னமானாள். உடலைச் சுற்றியிருந்த பர்ப்பிள் வண்ண பட்டுப் புடவையும் கூந்தலில் சூடியிருந்த பூவும் மெருகேறியிருந்தவளை மேலும் அழகாய் காட்ட முகத்தில்...
    அத்தியாயம் – 2 “சஹா... இந்த மிக்ஸி ஓகே வான்னு பாரு...” அன்னையின் குரலில் திரும்பிய சஹானா கண்டதுமே மனதில் சாரல் வீசும் அழகோடு இருந்தாள். பளிச்சென்ற வெள்ளை சல்வாரில் நெற்றியில் ஒரே ஒரு கறுப்புப் பொட்டு தவிர எந்த அலங்காரமும் இல்லை. காது, கழுத்து எல்லாமே காலியாய் கிடக்க ஒளி வீசும் கண்களில் மட்டும்...
    அத்தியாயம் – 7 வேரற்ற மரமாய் கட்டிலில் சோர்ந்து கிடந்தவளைக் காணக் காண நிதினுக்கு நெஞ்சை அடைத்தது. கண்கள் அனிச்சையாய் கலங்க அசைவில்லாமல் கிடந்தவளைப் பார்த்துக் கொண்டே ஓரமாய் நின்றிருந்தான். சரவணன் நிதின் அப்படி நடந்து கொண்டமைக்கு காரணம் கேட்க எதுவும் அவன் காதைத் தாண்டி மனதுக்குள் செல்லாததால் பிறகு கேட்டுக் கொள்ளலாம் என்று அவனும்...
    அத்தியாயம் – 5 “நிதின்... இந்த இன்விடேஷன் டிஸைன்ஸ் பாரேன்... உனக்குப் பிடிச்சிருக்கா... உன்னையும் கூட வர சொன்னா வேலை இருக்குன்னு ஓடிட்ட...” அங்கலாப்புடன் சொல்லிக் கொண்டே அவனது கட்டில் மீது நான்கைந்து அழைப்பிதழ் டிஸைன்களை பரப்பினார் மீனாட்சி. “உங்களுக்கும், பிரபாவுக்கும் பிடிச்சாப் போதும்... சரவணன் வீட்டுலயும் கேட்டுடுங்க... பார்க்காமலே கையிலிருந்த டாகுமென்ட் எதையோ பார்த்துக் கொண்டு...
    அத்தியாயம் – 29 “நிதின், காபி கேட்டியே இந்தாப்பா...” டீவியில் பார்வையைப் பதித்திருந்த நிதின் அன்னை நீட்டிய காபி கோப்பையை வாங்கிக் கொண்டு புன்னகைத்தான். “அப்புறம் போன விஷயம் நல்லபடியா முடிஞ்சுதா...” அவர் கேட்கவும் அவன் முழிக்க, “”என்னடா முழிக்கற, புது ஆர்டர் விஷமா நாலு நாள் வெளியூர் போயிட்டு வந்தியே... என்னாச்சுன்னு கேட்டேன்...” என்றார் அவர். “ஓ......
    அத்தியாயம் – 16 அழகான மாலை நேரத்தின் இனிமையைக் கூட்ட மழை சாரலிட்டுக் கொண்டிருந்தது. ஜன்னலருகே நின்றிருந்த சஹானா வெளியே தூரத்தில் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள். ஏதேதோ நினைத்து அலைபாய்ந்து கொண்டிருந்த மனம் இன்றே அமைதிப்பட்டிருந்தது. அவளது பின்னில் காபிக் கோப்பையுடன் வந்து நின்ற சாதனா மெதுவாய் தோள் தொட திரும்பினாள். உடலும், மனமும் சோர்ந்திருப்பதை முகம்...
    அத்தியாயம் – 22 மகள் கல்யாணம் முடிந்து புகுந்த வீடு சென்று விட்டதால் பேசுவதற்கு ஆளில்லாமல் வீடே வெறிச்சென்று தோன்றியது மீனாட்சிக்கு. நிதினும் ஏதோ வேலை விஷயமென்று அடிக்கடி வெளியூர் சென்று விடுவதால் தொலைக்காட்சியின் உதவியோடு ஒவ்வொரு நிமிடத்தையும் தனிமையில் நெட்டித் தள்ளிக் கொண்டிருந்தார். கேரளா சென்றுவிட்டு நிதின் காலையில்தான் திரும்பி வந்திருக்க, வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான்....
    அத்தியாயம் – 21 புருவங்கள் முடிச்சிட கண்களில் சட்டென்று நீர் நிறைய யோசனையுடன் நிதினைப் பார்த்தாள் சஹானா. “இ...இவன் என்ன சொல்கிறான்... எனக்கு நடந்த கசப்பான, கொடூரமான விஷயம் இவனுக்குத் தெரியுமென்றா...” அவள் கண்ணில் துளிர்த்த நீருடன் தன்னையே அதிர்ச்சியோடு பார்ப்பதைக் கண்ட நிதின், “சஹி... நடந்ததுல உன் தப்பு எதுவும் இல்லையே... அப்புறம் எதுக்கு உனக்கு...
    அத்தியாயம் – 8 “டேய் மாப்ள... யாருடா அந்தப் பொண்ணு... கழுத்துல மாலை போட்டு லவ் யூன்னு சொல்லிட்டுப் போகுது... முன்னமே செட் பண்ணிட்டியா... எங்ககிட்ட சொல்லவே இல்ல...” என்ற நண்பனுக்கு பதில் ஏதும் சொல்லாமல் திகைப்புடனே அமர்ந்திருந்தான் நிதின். “ஓஹோ... பேய் அடிச்சா மட்டுமில்ல... தேவதை மாலை போட்டாலும் மந்திரிச்சு விட்ட போல ஆயிடுவாங்க போலருக்கு...”...
    அத்தியாயம் – 27 வயிற்றுக்குள் ஏற்றுமதி செய்திருந்ததை இறக்குமதி செய்யும் வேலையில் டாய்லட் உள்ளே இருவர் இருக்க, வெளியே சோர்ந்து காத்திருந்த மற்றவர், முன்னில் நின்ற நால்வரைக் கண்டதும் புதிதாய் ஒரு ஹார்மோன் அச்சத்தை சுரக்க வியர்த்துப் போயினர். நிதினைக் கண்டதும் மிரண்டு விழித்தவர்களுக்கு விஷயம் புரிபட பயத்தை மறைத்து கோபத்துடன் முறைத்தனர். “ஏய், யாரு நீங்கல்லாம்......
    அத்தியாயம் – 12 “சேச்சி... ஏட்டன் டியூசன் சென்டரில் போயோ...” கல்லூரியில் இருந்து வந்த நிர்மலா டியூஷனுக்கு கொண்டு செல்ல வேண்டிய புத்தகங்களை பாகில் எடுத்து வைத்துக் கொண்டே அக்கா நிஷாந்தியிடம் கேட்டாள். சந்தன நிறத்தில் அழகாய் இருந்தவள் இடுப்புக்கு கீழ் நீண்டிருந்த கருகரு கூந்தலை    தளர்வாய் பின்னலிட்டிருந்தாள். (அவர்கள் மலையாளத்தில் பேசிக் கொண்டாலும் நாம்...
    அத்தியாயம் – 26 காலையில் முதல் ஆளாய் சிட்டிக்கு வெளியே இருந்த ஆகாஷின் இரும்பு குடோனுக்கு வந்த ஷிவா திறந்திருந்த முன் கேட்டில் செக்யூரிட்டியைக் காணாமல் உள்ளே செல்ல குடோனும் திறந்திருக்கவும் திகைத்தான். “ஆகாஷ் என்னைத்தானே செக்யூரிட்டி கிட்ட சாவி வாங்கிட்டு, அவனுக்கு ரெண்டு நாள் லீவ் குடுத்து அனுப்பிட்டு குடோனைத் திறக்க சொன்னான்... இப்ப யார்...
    அத்தியாயம் – 19 வெகுநேரம் பூஜையறை முன்பு அம்பாளின் சிலையையே கண்ணெடுக்காமல் தீர்க்கமாய் பார்த்துக் கொண்டு மனதில் ஏதோ கலக்கத்துடன் அமர்ந்திருந்த யசோதா ஹால் சோபாவில் தனது அலைபேசி சிணுங்கும் சத்தத்தைக் கேட்டும் எழுந்திருக்கவில்லை. ஹாலில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது பூஜா ஓடிச் சென்று அலைபேசியை எடுத்தவள் அதில் ஒளிர்ந்த ஆகாஷின் புகைப்படத்தைக் கண்டு உற்சாகமானாள். “ஆகாஷ்...
    அத்தியாயம் – 4 “ஸ்ரீக்குட்டி... அம்மாக்கு ஒரு முத்தா குடு...” சாதனா கன்னத்தைக் காட்டிக் கேட்க குழந்தை பச்சக்... என்று அவள் அழகுக் கன்னத்தில் ஈரத்துடன் முத்தமிட்டு சிரித்தது. “என் செல்லக்குட்டி... வெல்லக் கட்டி...” அவளை அணைத்துக் கொண்டு கொஞ்சியவள் அன்னையின் அழைப்பில் திரும்பினாள். “சாது... அபார்ட்மென்ட் முன்னாடி இருக்குற கடைக்குப் போயி கீரை வாங்கிட்டு வந்திடறியா...” “ஏன்மா... நேத்தே...
    அத்தியாயம் – 3 புது ஆர்டர் விஷயமாய் கம்பெனி மானேஜர் ஒருவரைக் காண வந்திருந்தான் நிதின். “சார்... இந்த ஆர்டர் தீபாவளிக்குள்ள முடிச்சு மும்பை அனுப்பனும்... அப்புறம் ஒரு மாசத்துக்கு போனஸ் வாங்கிட்டு ஊருக்குப் போற லேபர்ஸ் யாரும் ஒழுங்கா வேலைக்குத் திரும்ப மாட்டாங்க... அதுக்குள்ளே உங்களால முடிக்க முடியுமா...” நிதினுடன் பேசும்போதே அலைபேசி சிணுங்க எடுத்து...
    அத்தியாயம் – 13 திமிறிக் கொண்டு நின்றவளை ஆகாஷ் காருக்கு தள்ளிச் செல்ல முயல்கையில் பிரகாசமாய் வெளிச்சத்தை சிந்திக் கொண்டு அவர்களை நோக்கி வேகமாய் வந்தது கார் ஒன்று. சட்டென்று திகைத்தவன் சுதாரிப்பதற்குள் அருகில் வண்டி நிற்க காரைத் திறந்து வேகமாய் இறங்கினாள் சாதனா. “மேடம்... ஹெல்ப் மீ மேடம்... இவன் என்னைக் கடத்திட்டுப் போகப் பார்க்கிறான்...”...
    error: Content is protected !!