Manam Athu Mannan Vasam
மனம் அது மன்னன் வசம் – 8
“நம்ம எங்க நல்லாருக்கோம்...??!!”
உமையாளின் இக்கேள்வி, பசுபதிக்கு
தூக்கிவாரிப் போட்டது என்றுதான் சொல்லவேண்டும். சிறிதும் யோசிக்காது உமையாள்
சட்டென்று கேட்டுவிட, அதனை செவிகளில் வாங்கியவனுக்குத் தான், அப்படியொரு உணர்வு
பிழம்பு..
இவள் என்ன அர்த்தத்தில் சொல்கிறாள்
என்று??!!
‘இவள் என்னோடு நன்றாய் இல்லையா??!!’
அப்படியொரு எண்ணம் இருந்தால் தானே
இப்படியொரு வார்த்தை வரும்??!!
ஆக அதுவே மனதில் பதிந்து உமையாள்
‘நான்...
மனம் அது மன்னன் வசம் – 7
பசுபதிக்கு ஒன்றும் விளங்கவில்லை.
‘என்னடா இது...’ என்பது போன்ற சலிப்பே. வீட்டினில் பெண்களோடு பிறந்து வளர்ந்தவன்
தான். இருந்தும் மனைவியை எப்படி சரி செய்து சமாளிப்பது என்பது அவனுக்கு இன்னமும்
புரிபடவில்லை.
‘நீ அழகாய் இருக்கிறாய்..’ என்றால்,
எந்தவொரு பெண்ணும் மகிழ்ச்சி தான் அடைவாள். அதிலும் புதிதாய் திருமணமானவர்கள்
என்றால் கேட்கவே வேண்டாம். இங்கோ...
மனம் அது மன்னன் வசம் – 6
ஊர் வந்து சேரும் வரைக்கும் கூட
பசுபதி வேறெதையும் பேசவில்லை. பொதுவாய் சில பேச்சுக்கள். ஊருக்கு வந்த பின்னே
அவனுக்கு இருக்கும் வேலைகள் பற்றி சொன்னான். உமையாளும் கேட்டுக்கொண்டாள். பின் சில
குடும்ப பேச்சுக்கள். பிரச்சனைக்குறிய விசயங்களை தவிர்த்துவிட்டான்.
உமையாள் அப்படி பேசியதும்,
அவனுக்கும் சுள்ளென்று வந்ததுதான். கோபத்தை அடக்க பெரும்பாடாய் தான்...
மனம் அது மன்னன் வசம் – 5
சென்னை வந்திருந்தனர் உமையாளும், பசுபதியும். மறுவீட்டிற்காக.
மாணிக்கம் பிரேமாவிடம் கண்டிப்பாய் சொல்லியிருந்தார், எந்த முறையும் விட்டு
போய்விட கூடாதென்று.
பிரேமாவிற்கு அதற்குமேல் என்ன வேண்டும்..??!!
பார்த்து பார்த்து தான் செய்தார் எல்லாமே.
ஆனால் பசுபதிக்கு தான் அந்த சிறிய வீட்டினில் பொருந்திட முடியவில்லை.
சொல்லப்போனால் அவர்களது சிறு வீடெல்லாம் இல்லை. நான்கு பேர் தாராளமாய்...
மனம் அது மன்னன் வசம் – 4
உமையாளுக்கு தானா இப்படி
மாறிப்போனோம் என்று இருந்தது. அதுவும் இந்த ஒரே நாளில். புதிய இடம்.. புதியவனும் கூட, கணவன் என்றாலும் இன்னும் அத்தனை
தூரம் அந்த நெருக்கம் இல்லைதான். இருந்தும் இப்போதோ ஒவ்வொன்றிற்கும் அவனின் முகம்
பார்த்து நின்றாள்.
மதுரைக்கு தான் அழைத்து வந்திருந்தான். அவளின் வாழ் நாளில் முதல்...
மனம்
அது மன்னன் வசம் – 3
“ஹேய்.. என்ன நீ என் கை புடிக்கிற??”
என்று பசுபதி கேட்ட தொனியில், உமையாள் பட்டென்று அவன் கை விட்டு, அவனைப் பார்க்க,
அவள் பார்த்த பார்வையில், பசுபதிக்கு சிரிப்பினை அடக்க முடியவில்லை.
இருந்தும் இவள் எதுவும்
நினைத்துக்கொண்டால், என்ன செய்வது என்று சற்றே திணற, “இப்போ எதுக்கு அப்படி
சொன்னீங்க..?? இப்போ ஏன்...
மனம்
அது மன்னன் வசம் – 2
திருமணம் முடிந்திருந்தது....!!
பெரிய இடம், தடபுடலாய் திருமணம்
நடக்கும் என்று பார்த்தால், பசுபதி வீட்டு குடும்ப வழக்கப் படி, அவர்களின் குலசாமி
கோவிலில், மிக நெருங்கிய உறவினர்களை மட்டுமே அழைத்து, எளிய முறையில் திருமணம்.
விருந்து எல்லாம் தனியே மண்டபத்தில் நடந்துகொண்டு இருந்தது.
‘எங்க குடும்ப வழக்கப் படி தான்
கல்யாணம்...’ என்று முன்னமே சொல்லியிருக்க,...
மனம்
அது மன்னன் வசம் – 1
“ம்மா துர்கா தேவி... எனக்கொரு
தெளிவு கொடு...” என்று உமையாள் கண்கள் மூடி சுவாமி படங்களின் முன் நின்று வேண்டிக்கொண்டு இருக்க,
“உமையா....” என்று சற்றே குரலில்
அழுத்தம் கொடுத்து அழைத்தபடி வந்தார், பிரேமா.
பட்டென்று விழிகள் திறந்து “அ..
அத்தை...” என்று உமையாள் திரும்ப,
“என்ன முடிவு பண்ணிருக்க??” என்று
நேரடியாய்...