Monday, April 21, 2025

    Karaiyum Kaathalan 39

    0

    Karaiyum Kaathalan 38

    0

    Karaiyum Kaathalan 37

    0

    Karaiyum Kaathalan 35

    0

    Karaiyum Kaathalan 36

    0

    Karaiyum Kaathalan

    அங்க நான் உள்ள போகும்போது நீயும் என்கூட தான வருவ?" என்றாள் பதட்டமாய். "நிச்சயமா நான் உன்கூட தான் இருப்பேன். நான் என் உடம்புக்குள்ள போறதை நீ பார்க்க வேண்டாமா?" என்றான் ஆசையாய். "நீ உயிரோட வர போறதை நினைச்சா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு." என்றாள் ஷன்மதி. "ஆனா நான் உன்கூட வந்தாலும் என்னால எதுவும் பண்ண...
    "நாங்க என்னடா பண்ணமுடியும்? தெளிவா சொல்லு" என்றான் நந்து ஒன்றும் புரியாமல். "சொல்றேன். ஆனா எல்லாத்தையும் இப்போ சொல்ல நேரமில்லை. நீங்க ரெண்டு பேரும் முதல்ல கொல்லிமலை கிளம்புங்க" என்றான் ஷ்ரவன். "என்னது கொல்லிமலையா? எதுக்கு அங்க?" என்றனர் இருவரும். "என்னை உயிரோட கொண்டு வரப்போற ரகசியம் அங்க தான் இருக்கு" என்றான் ஷ்ரவன் மெல்ல கவலையாய் சிரித்து. "என்னது...
    "அண்ணா! இங்க வாங்க. உங்க கைய காட்டுங்க" என்று நந்துவின் கரத்தினை இழுத்து அருகினில் அமரவைத்தாள். "என்னை ஏன் பார்க்கிறிங்க? உங்க பிரென்ட் எதிர்ல தான் இருக்கார். அவரை பார்க்க போறீங்க. சோ கண்ணை மூடிக்கோங்க" என்றாள் ஷன்மதி. "சரி ஷன்மதி" என்று தன் பதட்டமான நெஞ்சோடு விழிகளை மூடி  நடுங்கும் கரங்களை  நீட்ட அவனின் கரங்களை எடுத்து...
    இவ்வளவு நடந்தும் எதுவுமே நடக்காதது போல் எதிரில் அமர்ந்து தன்னை பார்த்து சிரித்து கொண்டிருக்கும் ஷ்ரவனை முறைத்தவள். “டேய்! எரும பார்த்துட்டு தான இருக்க? நீ என்கூட தான் இருக்கன்னு நான் சொன்னா நம்பமாட்டேங்கிறாங்க. ஒழுங்கு மரியாதையா நீயே இவங்க முன்னாடி வந்து சொல்லு” என்றாள் ஷர்வனின் கண்களை நோக்கி. “ஹுஹஊம் ... நீயே தான் சொல்லணும்...
    “இப்போ தான் என்னை உங்க தங்கச்சின்னு சொன்னிங்க. அதுக்குள்ள நீ யாரு பொய் சொல்றன்னு சொல்றிங்களே? நான் பொய் சொல்லி என்ன ஆகபோகுது? உங்ககிட்ட என் புருஷனுக்கு சேர வேண்டிய சொத்தை கேட்டா உங்க முன்னாடி வந்து நின்னுருக்கேன். இல்லையே?” என்றாள் அழுகையை கட்டுபடுத்தி. “நீ போலாம். என் நண்பன எங்க இருந்தாலும் நான்...
    14 “ஹலோ! நான் அகல்யா பேசுறேன்” என்றாள் மெதுவாக. சில நிமிடம் அமைதியாக இருந்த எதிர்முனை, “அம்மாடி அகல்யா. எப்படிடா இருக்க? இப்போ தான் இந்த அம்மா ஞாபகம் வந்ததா?” என்றார் கேவியபடி. “நான் நல்லா இருக்கேன்மா. நீங்க எப்படி இருக்கீங்க?” என்றாள் கண்ணீருடன் இவளும் அன்னையின் குரலில் தெரிந்த ஆனந்தத்தை கண்டுகொண்டு.        “எனக்கென்ன இருக்கேன் நல்லா தான்.”...
    13 "ஹேய் பொண்டாட்டி ! பார்த்தியா அன்னைக்கு நான் உனக்கு கார் ஓட்ட கத்து கொடுத்தப்ப. நான் கத்துக்க மாட்டேன்னு சொன்ன? ஆனா இப்ப பாரு நீயே வண்டி ஒட்ற? " என்று பேசிக்கொண்டு வந்தான் ஷ்ரவன்.  "ஆமா ஷ்ருவ். அன்னைக்கு எனக்கு பயமா இருந்தது.  ஆனா நான் சொல்ல சொல்ல கேக்காம கண்டிப்பா கத்துக்கிட்டே ஆகணும்னு சொல்லி எனக்கு கத்துக்கொடுத்த....
    12 தட்டிலிருந்த தாலியை கையில் எடுத்து "கெட்டிமேளம்! கெட்டிமேளம்!" என்று கூறிக்கொண்டு மணமகனிடம் நீட்டினார். அங்கிருந்த யாரும் எதிர்பார்க்காத நேரம் ஐயருடன் வந்திருந்த இருவரில் ஒருவன் அந்த தாலியை வெடுக்கென பிடுங்கி அகல்யாவின் கழுத்தில் கட்டினான். ஏற்கனவே நந்து வரவில்லை என்ற ஏமாற்றத்தில் இருந்தவள் ஒருநொடி என்ன நடக்கிறது என்று ஊகிக்கும் முன் அவள் கழுத்தில் மங்கள நான்...
    11 நள்ளிரவு மணி இரண்டை தான்டி இருக்கும். மொபைலின் ஒலி நந்துவை தூக்கத்திலிருந்து எழுப்பிட. ‘இந்த நேரத்துல யார் போன் பண்றாங்க? ஒருவேளை ஷ்ரவனா இருக்குமோ?’ என்று எண்ணியபடி தூக்கக்கலக்கத்தில் போனை எடுத்து பார்க்க அது அடிப்பதை நிறுத்திக்கொண்டது. “நம்பர் தான இருக்கு. யாரா இருக்கும்?” என்று தூக்கத்தில் இருந்து எழுந்து அதே நம்பருக்கு டையல் செய்தான். சுவிச் ஆப்...
    10 "ஹை சூப்பர்! நந்துவும் உங்க தங்கச்சி அகல்யாவும் கல்யாணம் பண்ணிகிட்டாங்களா? அவங்களை நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லையே? நந்துவை பத்தி நீங்க எதுவும் சொன்னதே இல்லையே? அப்போ ஏர்போர்ட்ல என்னை பார்த்துருகேன்னா? என்னை அதுக்கு முன்னாடிலர்ந்து காதலிக்கிறியா? எனக்கு தலையே வெடிச்சிரும் போல இருக்கு. எனக்கு எல்லாத்தையும் சொல்லு ஷ்ரவன்" என்றாள் மூச்சுவிடாமல். "நில்லு நில்லு......
    9 “இல்லடா உன்னை நம்பி வேற என் பிசினெசை விட்டுட்டு வந்துட்டேன். ஒழுங்கா பார்த்துபேன்ற கவலை வேற எனக்கு அதிகமா இருக்கு” என்றான் போலியான வருத்தமாய். “ஆமா இவரு பெரிய அம்பானி. இவரு பிசினெஸ் இப்போ நம்பர் ஒன்ல இருக்கு. நான் தான் லாஸ் பண்ணப்போறேன். போடா பக்கி.” என்று திட்டினான் நந்து. “சரி. என் தங்கச்சியை கண்டுபிடிச்சிட்டியா?”...
    நாலடி முன்னே வைத்தால் தன்னை முழுங்கிவிடும் என்று பெரியவர்களே பயந்து நிற்க,  நாலே எட்டில் பின்னே ஓடும் தண்ணீரை தாவிபிடிக்க ஓடும் பயமென்றால் என்னவென்றே தெரியாத நாலு வயது குழந்தையின் விளையாட்டை ரசித்து கொண்டிருந்த நந்துவை கலைத்தது ஷ்ரவனின் குரல். “அணைக்கும் தூரத்தில் இருக்கும் உன்னை ஒரு முறையேனும் தொட்டு விடும் ஆசைகொண்டு ஓடி வரும் என்னை விட்டு விலகி ஓடும் உன்னை தீண்டும் வரை ஓயாமல் தொடர்ந்து...
    “சொல்லு… என்கிட்டே சொல்ல என்ன தயக்கம் ஷ்ரவன்? நீ என்ன சொன்னாலும் கேப்பேன்டா. தயங்காம சொல்லு” என்றாள் மதி. “நீ இங்க அங்க வேலை பாக்கிறதுக்கு பதில்..” என்று முழுவதும் கூறாமல் இழுத்தான். “அதுக்கு பதில்..?” என்றாள் நெற்றியை சுருக்கி. “அதுக்குபதில் பேசாம நம்ம கம்பனிக்கே வந்துறேன்.” என்று வேகமாய் சொல்லி முடித்தான். “என்ன சொல்ற ஷ்ரவன்? நான்...
    ஷன்மதி பயந்துகொண்டிருக்க அவளை தாங்கிப்பிடித்து கொண்டிந்தான் யார் விழிகளுக்கும் தெரியாத ஷ்ரவன். “மதிம்மா.. நான் சொல்றதை நல்லா கேளு. நடக்கிற எல்லாமே நல்லதுக்குதான். இங்க என்ன நடந்தாலும் நான் இருக்கேன் உனக்கு என்னைக்கும். புரியுதாடா” என்று அவளின் நெற்றியில் இதழ் பதிக்க, அந்நேரம் பார்த்து அவளின் நெற்றியில் இருந்த குங்குமத்தை அழித்து தலையில் இருந்த பூவையும்...
    error: Content is protected !!