Sunday, April 27, 2025

    Kannamaavin Kaanthan

    நங்கையின் சித்தி, நங்கைக்கு அவள் சொன்ன நிபந்தனைகளுக்கு உட்பட்ட வரனுடன் தான் வந்திருப்பதாக சொல்ல, அதை கேட்ட, தேவி பாட்டி தான் அதிக அதிர்ச்சியில் இருந்தார். தேவி பாட்டி இரண்டு நாள் முன்னர் தான் முத்தையா தாத்தாவிடம், செழியனை பற்றிய தகவலை கறந்து இருந்தார். நாற்பதைந்து வருடத்திற்கு மேலான, அந்நியோன்யமான திருமண வாழ்க்கையில், முத்தையா தாத்தா இவ்வளவு...
    ஒரு நிலையில் நிற்கும் வரை தானே, மனது அலைப்பாய்ந்து கொண்டிருக்கும். திருமணம் செய்து கொள்வது, என்று முடிவு எடுத்த பிறகு, செழியனின் மனது அமைதியில் திளைத்து விட்டது. தன் தினசரி வழக்கம் போல நங்கையின் தரிசனத்தோடு, அவள் வேலைக்கு சென்ற பிறகு, நன்மாறனின் உடல் நலத்தை விசாரித்து, அவனிடம் சிறிது நேரம் உரையாடுவதையும், தன் வாடிக்கையாக்கி...
    செழியன் தேவி பாட்டியிடம் பேசிவிட்டு வெளியே கிளம்பி செல்ல, சரியாக அதே சமயம், வீட்டிற்கு திரும்பி வந்தான் நன்மாறன். காலையில் வெயிலுக்கு முன்பே தன் நண்பர்களுடன், மட்டை பந்து விளையாட என்று சென்றிருந்த நன்மாறன், கலைத்து போய் அப்போது தான் வந்து சேர்ந்தான். வார நாட்களில் அலுவலகம் செல்வதால், வாரம் முழுதும் உடுத்திய தங்கள் இருவரின் துணிகளை,...
    சாதாரண கடைநிலை, இடைநிலை ஊழியர்கள் எல்லாம் அரக்கப்பறக்க அலுவகலம் சென்று அழுவலில் மூழ்கியிருக்க, அவர்களை மேற்பார்வையிடம் மேல்நிலை ஊழியர்கள், நிதானமாக வேலைக்கு, கிளம்பி கொண்டிருக்கும் நேரம். காலை பத்து மணி. 'தேவி காலனி' அது 'ப' வடிவத்தில் அமைந்திருக்கும் குடியிருப்பு. ஒரு பெரிய இரும்பு கதவு, அதன் உள்ளே நுழைந்தால், பக்கத்திற்கு இரண்டு என்ற வீதம், ஆறு வீடுகள்,...
    நங்கையின் சித்தி முகவரியை கண்டுபிடிக்க தான் எடுத்து கொண்ட இந்த இரண்டு நாட்களில், நங்கைக்கு ஒரு வரனுடன் அவர் வருவார், என்று சற்றும் எதிர்பாக்காத செழியனுக்கு ஆயாசமாக இருந்தது. "முறைப்படி பொண்ணு பார்க்க கூட வரல, வெறும் பேச்சு வார்த்தை தானே" என்று செழியன் தன்னை தானே தேற்றி கொள்ள முயன்றாலும், அவனின் மனதோ, "இந்த முறை...
    செழியன் சொற்ப பொருட்களையே கொண்டு வந்து இருந்தாலும், அதை அந்த சிறிய வீட்டில் ஒதுக்கி வைக்கவே, அவனுக்கு மதியத்திற்கு மேல் ஆகிவிட்டது. மதிய உணவை வீட்டிற்கே தருவித்து உண்டவன்,  முன்மாலை பொழுதில் வெளியே செல்ல கிளம்ப, சரியாக அந்த நேரம், தேவி பாட்டியின் கணவர் முத்தையா தாத்தா வந்து சேர்ந்தார். அந்த வயதிலும் சிறு தடுமாற்றம்...
    செழியன், தான் மடிக்கணினியில் பார்த்து கொண்டிருந்த வேலையை, ஓர் அளவுக்கு முடித்து நிமிரும் போது, மணி அதிகாலை நான்கை நெருங்கி கொண்டிருந்தது. கண்காணிப்பு அறைக்கு சென்று பார்க்க, வெற்றியும், தமிழும் அவர்கள் வேலை பார்த்து கொண்டிருந்த மேசையின் மீதே, தலை கவிழ்த்து உறங்கி கொண்டிருந்தனர். மேசையின் அருகே சென்று, அவர்களின் தலையை மெதுவாக, ஒரு தந்தையின் வாஞ்சையோடு...
    இருப்பதில் நிறையாமல், இன்னும் இன்னும் என பல சந்ததியினருக்கும் சேர்த்து உழைக்கும் பணக்காரர்களும், அடுத்த வேளை உணவிற்கு என்ன செய்வது என்று மருளும் அடித்தட்டு மக்களும் அசந்து உறங்கும் அர்த்தசாமம் தாண்டிய வேளை அது. பௌணர்மி முடிந்து சில நாட்கள் தான் ஆகி இருக்க வேண்டும் என கட்டியம் கூறும் வகையில், சற்று கரைந்து இருந்தாலும், ஒரு...
    ஆக சிறந்த துன்பம் என்பது எதுவெனில், நமது அன்புக்கு உற்றவர் வருந்தும் போது, அவருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல், மூன்றாம் மனிதர் போல தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பது தான். செழியனும் அப்படி பட்ட, அடிபட்ட மனநிலையில் தான் இருந்தான். தேவி பாட்டியிடம் தன் கோவத்தை காட்டிவிட்டு வந்து இருந்தாலும், நங்கை தான் அதை ஒரு விஷயமாக...
    பகலவன் யாருக்கும் காத்திருக்காமல், வழக்கம் போல தன் பவனியை கிழக்கில் தொடங்க, பல சிந்தனைகளில் மூழ்கி, நான்காம் சாமத்தின் இறுதியிலே உறங்க ஆரம்பித்த செழியனுக்கோ இன்னும் விடிந்ததிருக்கவில்லை. நங்கையோ, இரவு நடந்த சம்பவத்தின் தாக்கமோ, அல்லது சந்தித்த செழியனின் தாக்கமோ கிஞ்சித்தும் இல்லாமல், தன் வழக்கம் போல, அதிகாலை ஐந்தரை மணிக்கு எல்லாம் எழுந்திருந்தாள். தனக்கு...
    உள்ளத்தின் உளைச்சல் உடலில் தெரிவது இயல்பு தானே. செழியன் ஒன்றும் அதற்கு விதிவிலக்கல்லவே. ஏதோ தேவி காலனியில் இருந்து நடந்தே வந்தது போல, கலைத்து ஓய்ந்து போய், அந்த தனி வீட்டிற்கு வந்து சேர்ந்தான் செழியன். உள்ளே நுழைந்த செழியன், எதுவும் பேசாமல், அமைதியாக சென்று, சோபாவில் தளர்ந்து அமர்ந்தான். வெற்றி, தமிழுக்கு கண்ணை காட்ட, அவன்...
    செழியன், வெற்றி, தமிழ் மூவரும் தீவிரமாக ஆலோசித்து கொண்டிருக்கும் போது, கதவு தட்டும் ஓசை கேட்க, மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். செழியனின் கண்ணசைவில், தமிழ் சென்று கதவிடுக்கில் பார்க்க, கதவை தட்டிய நபர் கதவுக்கு முதுகை காட்டியபடி நிற்க, முகம் தெரியவில்லை. ஆனால் அணிந்திருந்த, காக்கி கால்சட்டையும், காலணியும் வந்திருப்பது காவல்துறையை சேர்ந்த நபர்...
    error: Content is protected !!