Ithazhini
*16*
உனக்காக பொறந்தேனே எனதழகா!!
பிரியாம இருப்பேனே பகலிரவா!!
நிலா அரைமயக்க நிலையில் மெதுமெதுவாய் கண் இமைகளை திறந்து பார்த்தபோது அவள் முன்னே ஜுசரில் சாத்துக்குடியை நிலாவென நினைத்து கோவத்தை காட்டி பிழிந்துக்கொண்டிருந்த இனியன் தெரிந்தான். பார்த்த கணத்தில் அவள் இதழ்கள் சிரிப்பில் வளைந்தது. எழுந்து அமர வேண்டி அவள் கடினப்பட்டு தன் உடலை அசைக்க,...
*24*
அன்று இனியன் விளையாட்டாய் சொன்னதாய் அனைவரும் நினைக்க, அவர்கள் நினைப்பை பொய்யாக்கும்படி, தீவிரமாக தன் திட்டத்தை செயல்படுத்தும் முனைப்பில் இறங்கியிருந்தான். நிவேதா தான் பயந்து போனாள். கோர்ட்டும், சட்டமும் அவளுக்கு அத்துப்படி என்றாலும், அங்கே வழக்காடுதல் என்பது முற்றிலும் புதிது. இனியனிடம், வேறு சீனியர் வக்கீலை அவள் பரிந்துரைக்க, அவன் பிடிவாதமாய் மறுத்துவிட்டான்.
‘யாரோ ஒருத்தரை...
*20*
உன்னிடம் சொல்வதற்கு, என் கதை பல காத்திருக்கு!
இரு கண்களின் தந்திகளால், அதை கடந்திட சொல் எனக்கு!!
மறுநாள் பொழுது விடிந்தபோது வீடே அமைதியாய் இருந்தது. கடந்த காலத்தின் தாக்கத்தில் வேணியின் தோள் சாய்ந்து, தேவி மௌனமாய் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தார். நேரம் நகர, தன்னறையில் இருந்து வெளியே வந்த நிலா, இனியனை காணாது, “அத்தே, இனியா எங்க?”...
*14*
உன் கண்ணில் உண்டான காதலிது! மூடிவிடும் எண்ணமோ?
என் நெஞ்சில் உண்டான காதலிது! நெஞ்சை விட்டு போகுமோ!?
சென்னையில் இருந்து கோயம்புத்தூரை தாண்டி இருக்கும் குட்டி கிராமத்துக்கு மிதமான வேகத்தில் கார் சீறி பாய்ந்தது. டிரைவர் சீட்டில் இருந்த இனியன் சாலையில் கவனமாய் இருந்தாலும் அவன் கண்கள் அலைப்புறுதலோடு தன்னவளிடமே நொடிகொரு முறை சென்றது.
அவன் பார்வையை உணர்ந்தாலும்...
*10*
பொட்டைகோழி புடிக்கவா? முறைப்படி சமைக்கவா?
எலும்புதான் கடிக்கையில் என்னைக்கொஞ்சம் நினைக்கவா?
“அண்ணனுக்கு அவரோட அரசியல் வாரிசா என்னை ஆக்கனும்ன்னு ரொம்ப நாள் ஆசை. வர தேர்தல்ல எனக்கு சீட் வாங்கி தரதா சொல்லிருந்தாரு. அது விஷயமா தலைவரை நான் ஒருமுறை நேர்ல சந்திச்சா நல்லா இருக்கும்ன்னு அவர் பிரியப்படவும், நான் டெல்லி கிளம்பி போனேன்! ஆனா திரும்பி...
*12*
எதுக்கிந்த கோவம்? நடிச்சது போதும்!
மறைச்சு நீ பார்த்தும் வெளுக்குது சாயம்!
குளித்து முடித்து வெளியே வந்த நிலா குனிந்த தலை நிமிராமல் தன் பொருட்களை ஹேன்ட்பேக்கிற்குள் சேகரித்துக்கொண்டிருந்தாள். இனியனுக்கு அவளை காண காண சிரிப்பாய் இருந்தது. தன் முகத்தை நேர்கொண்டு பார்க்க வெட்கப்பட்டுக்கொண்டே இவ்வாறு செய்கிறாள் என்றாலும், அதை அவள் மறைக்கும் அழகை...
*11*
தேடி சேர்த்த காசப்போல் காதல் இருக்குதா?
கொஞ்சமாக எடுக்குற! கஞ்சம் தடுக்குதா?
மசாலா வாசனையில் சொக்கி நின்ற நிலாவை தள்ளிக்கொண்டு உள்ளே சென்றான் கோகுல். “கான்ட் வெயிட், வோன்ட் வெயிட்” கத்திக்கொண்டே அவன் டைனிங் டேபிளை அடைய, சத்தம் கேட்டு கிட்செனில் இருந்து வெளியே வந்தான் இனியன். வெகு நேரமாய் அவன் அடுப்பருகே நிற்ப்பது வியர்வை பூத்திருந்த...
*5*
காலண்டரில் தேதிகளை எண்ணுகின்றேன் நாளும்!
தூரத்திலே கேட்கின்றதே நாதஸ்வரம்!!
“விடிஞ்சா விடிஞ்சுரும் சீரியலே முடியபோது, இன்னும் என் மருமவள காணோமே தேவி?” டிவியில் ஒரு கண்ணும் வாசலில் ஒரு கண்ணும் இருந்தாலும் பொரி உருண்டையை கொறிக்க தவறாமல் தேவியை கேட்டார் வேணி.
அதியன் மும்மரமாய் பப்ஜி விளையாடிக்கொண்டிருக்க, இனியன் அமைதியாய் அமர்ந்திருந்தான். வேணி கேட்டதும் தேவிக்கு என்ன சொல்வதென்று...
*9*
மூனான்ஜாமம் வீணாபோகும் முழுசா போத்திக்கவா!
ஓலப்பாயி கூச்சல் போடும் கதவை சாத்திட்டு வா!!
தன் கட்டிலில் கோவமாய் உட்காந்திருந்தாள் நிலா. சாற்றியிருந்த அறை கதவின் மீது சாய்ந்தபடி அவளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் இனியன். உள்ளே வந்து அரைமணி கடந்தும் அவனை நிலா ‘வா’ என அழைக்கவில்லை. அவனும் அவள் அழைக்காததால் உள்ளே வரவில்லை.
நிலாவின் கையில் பால்...
*17*
நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவையில்லை,
நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடலில்லை,
வண்ணப்பூக்கள் வேர்க்கும் முன்னே வரசொல்லு, தென்றலை!!!
“எதுக்காக இனியன் இப்படி ஒரு காரியம் செஞ்சுருக்கீங்க?” கேட்டவளின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
‘CENTRAL BUREAU OF INVESTIGATION’ என்று தங்க நிற எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருந்த முகப்பு வளையத்தை தாண்டி, உள்ளிருந்த பன்மாடி...
*19*
கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீதானே!
நின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான்தானே!!
“சர் நீங்க கேட்டது ரெடி பண்ணியாச்சு!!” மதன் ஒரு கவரை கொண்டு வந்து இனியனின் டேபிளில் வைத்தான்.
“குட்! நீங்க ஒருமுறை செக் பண்ணீங்களா? டு யூ ஆல் ஹேவ் எனி டவுட்!?” கவரை திறந்து உள்ளிருந்த டிவிடியை எடுத்தான் இனியன்.
முஸ்தபா, “அமைச்சர் வீட்டுல...
*13*
உன்னை எனக்கு பிடிக்கும், அதை சொல்வதில் தானே தயக்கம்!
நீயே சொல்லும்வரைக்கும் என் காதலும் காத்து கிடக்கும்!
ரெஜிஸ்டர் ஆபிசில் ‘அவள் பறந்து போனாளே’ என சோக கீதம் வாசித்து அதற்குள் பதினைந்து நாட்கள் ஓடிவிட்டதா என காலை எழுந்து காலண்டரில் தேதியை கிழிக்கும் போது ஆச்சர்யப்பட்டுபோனான் இனியன். சோம்பல் முறித்து, ‘இன்னைக்கு எக்ஸர்சைஸ்க்கு லீவு விட்டுடுவோம்’...
*22*
ஒரு கணம் நீ என்னை பிரிந்தாலும் கண்ணா,
மறுகணம் நான் உன்னை சேரும் வரம் வேண்டும்!!
நீ உறுதியானவன், என் உரிமையானவன்,
பசி ருசியை பகலிரவை பகிர்ந்துகொள்ளும் தலைவன்!
காலையில் கண் விழிக்கையில் உடல் அதிகமாய் அசதியுற்றதை போல் உணர்ந்தாள் நிலா. தலை சற்று பாரமாய் தோன்றியது. உடலில் சக்தியின்றி துவண்டு கிடப்பதை போல இருக்க, மெல்ல எழுந்து அமர...
*25*
போராடினால் நாம் வெல்லலாம்
வான் வீதியில் கால் வைக்கலாம்
பூலோகமே பேர் சொல்லலாம்
சாகாமலே நாம் வாழலாம்
“டேய் கதவை திறங்கடா கபோதிங்களா! எதுக்குடா என் வீட்லயே என்னை பூட்டி வச்சுருக்குறீங்க?”
மயக்கம் கலைந்து எழுந்த ஜெயானந்தன், தான் இருக்கும் இடம் உணரவே சில நிமிடங்கள் பிடித்தது. பின்னந்தலையில் ‘சுரீர்’ என்ற வலி விட்டு விட்டு வந்தது. எழுந்து நின்றதும், அவருக்கு...
*6*
அவள் வருவாளா? அவள் வருவாளா?
திருடி சென்ற என்னை திருப்பி தருவாளா?
அட ஆணைவிட பெண்ணுக்கே உணர்சிகள் அதிகம்! வருவாளே! அவள் வருவாளே!
அலாரம் ஒலி மட்டுமே அவளை இத்தனை நாள் துயிலெழுப்பியிருக்க, முதன் முறையாய் இரைச்சல் ஒலியில் கண் திறந்தாள் நிலா. ‘ப்ச்!’ சலிப்பாய் எழுந்தவள் தன் மொபைலை எடுத்து பார்க்க மணி ஆரை...
*7*
அடிக்கிற கை அணைக்குமா?
அடிக்காமலே நெஞ்சம் வலிக்கிறதே!!
கோடை சூரியன் உச்சத்தில் வந்து நின்றது. நிழல் எட்டிக்கூட பார்க்காத அந்த இடத்தில் வழியும் வியர்வையை துடைத்துக்கொண்டே ‘வருவியா? வரமாட்டியா? வரலன்னா உன் பேச்சுக்கா!’ என மனதுக்குள் பாடிக்கொண்டே நிலாவுக்காக காத்திருந்தனர் அனைவரும். இனியன் மட்டும் ஆதியோகி போஸில் இருந்து மாறவே இல்லை.
“அவ வரமாட்டா!” கோகுல்...
*15*
என் ஜீவன் ஜீவன் நீதானே! எனத்தோன்றும் நேரம் இதுதானே!
நீ இல்லை இல்லை என்றாலே, என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே!
ஊரிலிருந்து திரும்பி சென்னைக்கு போகும்போது இனியனும் நிலாவும் பெரிதாய் பேசிக்கொள்ளவில்லை. நடு இரவை தாண்டிய நேரத்தில் வீட்டினை அடைந்தவர்கள் அசந்து தூங்கி போயினர். காலையில் எழுந்ததும் நிலா ஆபிசுக்கு கிளம்ப, அணைத்து வைத்திருந்த தன் மொபைலை...
*23*
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை!!
“உங்க பாதுகாப்புக்கு தான் போலீசும், ஸ்பெஷல் ஸ்குவாடும் இருக்கு! அதையும் மீறி பொது இடத்துல பொது மக்கள் முன்நிலையில உங்க துப்பாக்கியை உபயோகிக்க வேண்டிய அவசியம் என்ன?”
கிட்டத்தட்ட இருபது பேர் அந்த அறையில் இருந்திருப்பர். நமக்கு பரிட்சையமான ஷீலா, அசோக், சுதீப் தவிர பிற புதுமுகங்கள்...
*18*
என் கண்ணில் உனைவைத்தே காட்சிகளை பார்ப்பேன்!
ஒரு நிமிடம் உனைமறக்க முயன்றதிலே தோற்றேன்!
நீயே என் இதயமடி! நீயே என் ஜீவனடி!
“என்னை இங்க விட்டுட்டு காலைல கிளம்பி போனவரு இன்னும் வரலை! அவர் சொல்லாமையா நீ சாப்பாடு கொண்டு வந்து குடுத்துருக்க? உண்மைய சொல்லு, இல்லனா ட்ரிப்ஸ் பாட்டில்ல உடைச்சு மூஞ்சில ஊத்திருவேன்!!” கட்டிலில் அமர்ந்தபடியே...
*8*
சிற்பம் போல செய்து என்னை சேவித்தவன் நீயே!
மீண்டும் என்னை கல்லாய் செய்ய யோசிப்பதும் ஏனடா சொல்!
நிலா தன்னை முறைத்துவிட்டு காரில் ஏறிவிட, இனியன் பிரீசாகி நின்றான். ‘நம்ம கன்னத்துல என்னைக்கு விழ போதுன்னு தெரியலையே!’ அவன் மனம் நினைக்க, வீடு வந்து சேரும் வரை பலத்த அமைதி நிலவியது.
இருவரையும் வீட்டின் வாசலில் நிற்க வைத்து...