En Kathal Senorita
அத்தியாயம் 34:
என் வாழ்வெனும் வெற்றுக் காகிதத்தில்
உன் வருகை எனும் வண்ணம் தீட்டி
இதோ உயிர் பெற்று விட்டது காதல் ஓவியம்
என் மனதில் என்றுமே அழியா பொக்கிஷமாக!
கதவை திறந்த அருண் அங்கு நின்றிருந்த சஜனை பார்த்து “ஹலோ சஜன் வாட் அ ப்ளசன்ட் சர்ப்ரைஸ் வாங்க வாங்க” என்று அழைக்க சிறு புன்னகையுடன் உள்ளே நுழைந்தான் சஜன்....
அத்தியாயம் 33:
மலையில் பிறந்து கரடு முரடான
பாதைகளில் ஒடினாலும் இறுதியில்
கடல் அன்னை மடியில் இளைப்பாறும்
நதி போல என் காதல் நதியும் வலிகளில்
உழண்டாலும் கடைசியில் உன் மனமென்னும்
கடலில் சங்கமிக்கும் என்ற நம்பிக்கையில் நான்!
கண் இமைக்கும் நொடியில் நிகழ்ந்து விட்ட விபத்தில் என்ன செய்வது என்று அறியாமல் அசையாது நின்று கொண்டிருந்த விஷ்வா கீழே விழுந்த இளாவின்...
அத்தியாயம் 32:
அன்றில் பறவையாய் உன் பிரிவு
நேரும் நொடி உயிர் விட ஆசை கொள்கிறேன்
ஆனால் அதிலும் என் விதி சதி செய்ததோ?
அற்ப மனித பிறவியாக அல்லவா மாறிப் போனேன்!
அந்த புகழ்பெற்ற உணவகத்தின் பார்க்கிங் ஏரியாவில் தனது பைக்கை நிறுத்திய வினோத் உள்ளே செல்ல அங்கிருந்த அறையின் கடைசியில் ஒதுக்கு புறமாக இருந்த டேபிபிளில்...
அத்தியாயம் 31:
இருளை கிழித்து வெளிவரும்
கதிரவனின் ஒளி போல உன் மனதில்
இருக்கும் குழப்பத்தை கிழித்தெறிந்து
என் காதலெனும் ஒளியை உன்னில்
பரவ செய்வேன் என்னுயிரே!
கல்லூரியை அடைந்த சஜன் எக்ஸாம் முடிவதற்காய் வெளியில் தனது காரில் காத்திருக்க, மாணவர்களும் ஒவ்வொருவராய் வெளியில் வரத் தொடங்கினர். பத்து நிமிடங்களில் அந்த இடமே வெறிச்சோடி போக தியா மட்டும் இன்னும்...
அத்தியாயம் 30:
நீரானது நிலத்தை விட்டு விலகி
ஆவியாகி போனாலும் மீண்டும் மழையாக
பூமித்தாயின் மடியில் வீழ்வது போல்
உன்னை விட்டு நான் விலகி சென்றாலும்
என் உயிர் என்று உனையே சேரும்!
இளாவின் பார்வை தனுஷாவை ஊடுருவது போல் இருக்க, இதிலிருந்து விடுபட வேண்டுமே என்ற தவிப்பில் “நான் போகணும் வேலை இருக்கு” என்றவளின் குரல் அநியாயத்திற்க்கு குழைந்து...
அத்தியாயம் 29:
காதலுக்கு கண்ணில்லை என்னும் பழமொழியை
பொய்பித்து அதற்கு கண்ணோடு சேர்த்து உயிரும்
உண்டு என உணர்த்தும் வகையில் இதோ
உன் மேல் நான் கொண்ட காதல் உயிர் கொண்டு
துடிக்கிறது நம் குழந்தையாய் என் வயிற்றில்!
சஜன் அதிர்ந்து நின்றது ஒரு சில மணித்துளிகள் தான் அடுத்த நொடி தியா அனுமதிக்கப்பட்டிருந்த எஸ்.எஸ் மருத்துவமனை நோக்கி விரைந்தான். காரை செலுத்திக்...
அத்தியாயம் 28:
தன் ஒளிப்பிழம்பால் சுட்டெரிக்கும் சூரியன்
அதே ஒளியை நிலவுக்கு தந்து
நம்மை குளிர்விப்பது போல் ஒரு நாள்
உன் கோபத்தை மறந்து உனதன்பினில்
எனை குளிர்விப்பாய் என்ற நம்பிக்கையில் நான்!
தியாவின் ஸ்டடி லீவ் முடிய இன்னும் இரண்டு நாள் மட்டுமே பாக்கி இருந்தது. அன்று காலை சமையலறையில் கயல்விழியுடன் பேசிக் கொண்டே...
அத்தியாயம் 27:
தன் இணையை தொலைத்து விட்டு
செய்வது அறியாது இருளில் தனியாய்
தத்தளிக்கும் நிலவினை போல நானும்
தத்தளிக்கிறேன் பிரிவெனும் துயரில்
என் உயிரோடு கலந்துவிட்ட உனை நீங்கி!
சஜன் தியாவையே பார்த்துக் கொண்டிருக்க, ஏதோ ஒரு உருவம் தன் முன் நிழலாடுவது போல் தோன்றிய உணர்வில் சட்டென்று கண்களை திறந்த தியா அங்கு நின்றிருந்த சஜனை கண்டதும்...
அத்தியாயம் 26:
உன்னிடம் இருந்து என்னை மறைத்துக்
கொள்ள கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடினேன்.
இருந்தும் உன் கையில் சிக்கிக் கொண்ட போது
அது எப்படி சாத்தியம் என்று என்னை நானே
கேட்டு குழம்பி போனேன்; கட்டப்பட்டது என் கண்கள் தான்
உன்னுடையது அல்ல என்பதை மறந்து!
அன்று வெகு சீக்கிரமாகவே சஜன் வீட்டிற்கு வர ஆச்சர்யம் கொண்ட கயல் “என்ன...
அத்தியாயம் 25:
நீ பேசும் ஒவ்வொரு வார்த்தையும் என்னை
உயிர்ப்பிக்கிறது என்று சொன்னதற்காகவா
இப்படி சொன்னாய் இனி நீயும் நானும் வேறு என்று
ஆனால் அது என்னை உயிர்ப்பிக்கவில்லையடி
உயிரோடு அல்லவா கொள்ளியிடுகிறது!
அண்ணனிடம் இருந்து அழைப்பு வந்ததும் கிளம்பி தயாரனவள் கீழே வர அங்கு இளா ஹாலில் அமர்ந்து செய்திதாளை புரட்டிக் கொண்டிருந்தான். அன்று நடந்த பிரச்சனைக்கு பிறகு...
அத்தியாயம் 24:
என் மனமெனும் தீவினில்
உனை அறியாமல் கால் பதித்து
சென்றாய்! அதை நீ அறியாது போனாலும்
உன் கால் தடம் மட்டும் என் நெஞ்சில்
என்றும் அழியாத சிற்பமாய்!
தூரத்தில் இருந்தே சஜன் இருக்கும் இடத்தை கண்டு கொண்ட தனுஷா அவன் அருகில் வந்து “க்கும்” என்று செறும, அவளை நிமிர்ந்து பார்த்தவன் ஏதும்...
அத்தியாயம் 23:
அனலில் இட்ட மெழுகு உருகி
கரைந்தோடினாலும் அதன் துளிகள் இறுகி
மீண்டும் பழைய நிலை எய்துவது போல
உன் கோபம் எனை உருக செய்தாலும்
இறுகி மீண்டும் உனையே நெருங்கிடுவேன்!
சஜனின் கையணைவில் இருந்த சுகம் இன்னும் மனதில் இருந்து நீங்காமல் ஒரு வித பரவசத்தோடு திரிந்து கொண்டிருந்த தியாவை கண்டு மனதிற்குள் மகிழ்ந்த கயல்விழியின் முகம்...
அத்தியாயம் 22:
கடலில் விழுந்த மழைத்துளி போல
உன் புன்னகை என் மனதில் விழுந்தது
என நீ நினைத்தாய் அது சிப்பிக்குள் விழுந்த
மழைத்துளி முத்தாய் மாறி ஒளிவிடுவதை போல்
ஒளிர்வதை என்று அறிவாயோ?
சென்னை மாநகரின் அந்த புகழ் பெற்ற கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு கணிப்பொறியியல் சேர்ந்திருந்தாள் தனுஷா.முதல் நாள் கல்லூரிக்கு தனது வீட்டிலிருந்து...
அத்தியாயம் 21:
மழை வந்தால் வீசும் மண் வாசம்
வேண்டுமானால் மழை நின்றதும்
மறைந்து விடலாம் உன் மேல் நான்
கொண்ட நேசம் எனை விட்டு நீ
நீங்கினாலும் என் நெஞ்சில் ஓயாமல் வீசும்!
இளா அடித்ததை நம்ப முடியாமல் கன்னத்தில் கை வைத்தபடி அதிர்ந்து அவனை நோக்கி கொண்டிருந்தாள் தனுஷா. கோபப்படுவான் என்று நினைத்தாள் தான்...
அத்தியாயம் 20:
உன் காதல் பூக்களால் எனை
அர்ச்சிப்பாய் என நான் காத்திருக்க
நீயோ வார்த்தை கங்குகளை என் மேல்
வீசினாய் அப்போதும் பாழாய் போன
மனம் உனக்காகவே துடிக்குதடி!
காலை எழுந்தது முதலே மிகவும் உற்சாகமாக இருந்தான் இளா. நேற்று இரவு தனுவிடம் வம்பிழுத்ததை நினைத்து இப்போதும் உதடுகள் புன்னகையில் நெளிய அதே உற்சாகத்தோடு திரும்பி...
அத்தியாயம் 19:
சுடு நீர் ஊற்றி செடி வளர்ந்ததாக
வரலாறில்லை அதனால் தான்
சுடும் கண்ணீர் சிந்தி வளர்த்த என் காதல்
காவியமானதோ?
தியாவை இறக்கி விட்ட பின் தன் அலுவலகத்தை நோக்கி சென்று கொண்டிருந்த சஜனின் மனம் முழுதும் தியாவை பற்றி ஆராய்ந்து கொண்டிருக்க, ஒரு நிலைக்கு மேல் “ச்ச நான் எதுக்கு இப்போ தேவையில்லாம அவளை பற்றி...
அத்தியாயம் 18:
தெளிவாக ஓடும் நீரோடை
போலான என் வாழ்வில்
உன் வருகையினால் கல் எறிந்தாய்
அது சலனமா? இல்லை சங்கீதமா
குழப்பத்தில் நான்!
காலையில் எப்போதும் பரபரப்பாக சுற்றிக் கொண்டு வீட்டையே ரணகளப்படுத்தி சிறகடித்து பறப்பவள் இன்றோ பத்து நாள் பஞ்சத்தில் அடிபட்டது போன்றதொரு சோர்வை பிரதிபலிக்க, நேற்று இரவு முழுதும் அழுததன் பயனாய் முகம் மட்டும் செழிப்பாய் வீங்கியிருந்தது.
அவளை...
அத்தியாயம் 17:
பொங்கியெழும் கடலலை
கரை தாண்டி வந்து தீண்டுவது போல
உன் மேல் எனக்கிருக்கும் காதலும்
நின் பாதங்களை நினைக்கும்
என்ற நம்பிக்கையில் நான்!
“ஏன் இப்போ அமைதியா இருக்க. பிடிக்கலைனா பிடிக்கலைனு நேரடியா சொல்ல வேண்டியது தான. நீ சொல்ல மாட்ட அது ஏன்னும் எனக்கு தெரியும்” என்றபடி குனிந்திருந்த அவளின் முகத்தை நிமிர்த்த முயற்சி செய்ய, அவன்...
அத்தியாயம் 16:
நீ எனை மறுக்கும் ஒவ்வொரு
நொடியிலும் மறித்தாலும் மீண்டும்
எழுகிறேன் என்றாவது ஒரு நாள்
உன் கைகளில் எனை
ஏந்துவாய் என்ற நம்பிக்கையில்!
அலார்ம் அடித்த சத்தத்தில் கண்விழித்து பார்த்தவன் அங்கு அவனது சின்னு இருந்ததற்கான அடையாளம் ஒன்றுமே இல்லாததை கண்டு தலையில் தட்டிக் கொண்டவன் “ச்ச கனவா? அதானே பார்த்தேன் இப்போ அவளுக்கு...
அத்தியாயம் 15:
மண்ணில் புதைந்த செடியை
வேரோடு பிடுங்கினாலும் அதோடு
ஒட்டிக் கொள்ளும் மண் போல
என்னில் இருந்து உன்னை நீ விலக்கினாலும்
உனை விட்டு போகாது என் நேசம்!
மண்டபத்தில் அனைத்து சடங்குகளையும் முடித்த பின் தியாவை சஜனின் வீட்டில் கொண்டு போய் விடுவதற்கு தாமோதரினின் குடும்பமும் உடன் சென்றனர். தனுஷா தான் வரவில்லை என்று சொல்லிவிடலாம் என்று நினைத்திருக்க,...