En Kalla Kaamugane
15
பிஸ்கட்டுகளுக்கு புது வடிவம் ஒன்றை யோசித்துக்கொண்டிருந்தாள் நிம்மதி. சுற்றி எல்லோரும் வேலை செய்துக்கொண்டிருக்க, “அம்மாடி, இந்தா காசு. இந்த மாச ஸ்கூல் கணக்கு முடிஞ்சுது” என்று நீட்டினார் தாஸ். ஒருமுறை பார்த்தவள், “சரியா கணக்கு பார்த்து வாங்கிட்டீங்களா ப்பா?” என்றாள்.
“ஆச்சும்மா! நீ ஒருக்க பாக்குறப்போ சரிபாத்துடு” என்று அவர் சொல்ல, “சரிப்பா... வீட்ல வச்சுடுங்க”...
10
ஏலம் ஆரம்பித்தபோது வீரப்பனுக்கு போட்டியாய் இன்னும் சிலரும் கேட்க ஆரம்பிக்க, விலை மூன்று லட்சத்தை நெருங்கியது. மூன்றை தாண்டியபோது, ஏலம் கேட்கும் குரல்கள் ஒன்று இரண்டாக குறைந்துப்போனது. மூன்று, மூன்றரை லட்சத்தை தொட்டபோது வீரப்பனின் குரல் தான் ஓங்கி ஒலித்தது.
அத்தனை நேரமும் குனிந்த தலை நிமிராமல் எதையோ யோசித்தவனாகவே அமர்ந்திருந்தான் அண்ணாமலை.
“காசு வச்சுக்கிட்டு ஏன்டா...
23
‘சிவபிரகாசம் வழக்குரைஞர்’ என பெயரிட்ட அலுவலகத்தின் உள்ளே அமர்ந்திருந்தனர் அண்ணாமலையும் நிம்மதியும்.
அவள் கொடுத்த காகிதங்களை கையில் வைத்து புரட்டிக்கொண்டிருந்தார் அவர். அவர் முகத்தையே இருவரும் எதிர்ப்பார்ப்போடு நோக்க, தன் மூக்கு கண்ணாடியை சரிசெய்தவர், “இப்ப என்ன செய்யணும்ன்னு சொல்றீங்க?” என்றார்.
‘எதாவது செய்ய வேண்டும்’ என்று தான் இவரிடம் வந்தது. ஆனால் இவரோ ‘என்ன செய்யணும்?’...
“உன் வீட்டை இடிச்சுட்டு தான் கட்டிட்டு இருக்கேன்” அவளாக சொல்ல, “சரி” என்றவன் திரும்பக்கூட இல்லை.
“என்ன பிளானு? என்ன அளவுல வேலை நிக்குது? இப்படி ஒன்னுக்கூட கேட்க தோணாதா?” அவள் கேட்டதும், “தோணலையே” என்றான் அவன்.
“யோவ் உனக்கு என்னைய்யா அப்படி ஒரு வெட்டி வீம்பு? என்னவோ என்னை கட்டிக்கிட்டு கஷ்டப்படுற மாதிரி அந்த நாலு...
“ரசம் வச்சுருக்கேன், மறுசோறுக்கு போட்டுக்கோ” அவள் சொல்ல, மெல்வதையும் பிசைவதையும் நிறுத்திவிட்டு நிமிர்ந்தவன், “ஏன் தொன தொனங்குற?” என்றான் எரிச்சலாய். இதற்கு முன்னும் இவன் பேச்சு இப்படி தான் என்றாலும், இப்போது புதிதாய் அவளுக்கு முகம் வாடியது.
“சரி நான் பேசல, நீ தின்னு” முணுமுணுத்தாள்.
“நீ கிளம்பு, நான் பாத்துக்குறேன்” என்றவன், நீ போனால் தான்...
“சார் நீங்க இவ்ளோ வைலன்ட்டா பிகேவ் பண்ணா என்னால பேசவே முடியாது” அவர் சொல்ல, பரதனுக்கு நன்கு தெரிந்தது, நிம்மதி ஒருத்தி அன்றி வேறு யாராலும் இவனை நிறுத்த முடியாது என்று. அண்ணாவிடம் பேசுவதை விட, டாக்டரிடம் பேசிவிடலாம் என்று நினைத்து, “டாக்டர், நிம்மதிக்கு என்ன பண்ணனுமோ நீங்க பண்ணுங்க டாக்டர்” என்றான் பரதன்.
“புருஷனோ...
13
நிம்மதியின் முகத்தில் இருந்த கடுகடுப்பு குறையவே இல்லை. நீடாமங்கலம் அருகே இருந்த அவனது குலதெய்வ கோவிலுக்கு அவனோடு சென்றபோதும் சரி, இதோ இப்போது ஊருக்கே கிடாவிருந்து போட்டுக்கொண்டிருக்கும்போதும் சரி, புது பெண்ணுக்குரிய அந்த வெட்கசிரிப்பு சுத்தமாக இல்லாமல் இறுகி போயிருந்தது.
ஆனால் அதற்கு எதிர்பதமாய் வழமையை விட இருமடங்கு சிரிப்புடன் வந்தவர்களை பார்த்து பார்த்து கவனித்துக்கொண்டிருந்தான்...
மருத்துவமனையில் சேர்ந்து மூன்று நாட்கள் முடிந்திருந்த நிலையில், அன்று காலை போல நிம்மதியை கைத்தாங்கலாய் நடத்தி பழக்கிக்கொண்டிருந்தான் அண்ணா. நந்தா அந்நேரம் உணவு கொண்டு வர, இருவரும் சாப்பிட அமர்ந்தனர்.
“வலிக்குதா? என்ன பண்ணுது?” மெல்ல அமர்ந்தவள் லேசாக புருவம் சுருக்கியதற்க்கே பதட்டமாய் கேட்டான் அண்ணாமலை. அவனை பதற வைக்க கூடாது என்றே வலித்தால் கூட...
20
வண்டியில் ஆடுகளை ஏற்றிக்கொண்டு கிளம்பிய அண்ணாமலைக்கு மனமெல்லாம் ஏதோ போல இருந்தது. ஒருவித பாரமாய், ஏதோ தன்னை அழுத்துவதாய்... நிம்மதியின் அருகே அமைதியாய் சிறுது நேரம் இருக்க வேண்டும் போல கூட தோன்ற, தன்னை எண்ணி தானே சிரித்துக்கொண்டான்.
அவளை கண்டாலே காத தூரம் ஓடும் அவனுக்கு, இப்போது நிம்மதி தான் அவன் ‘நிம்மதி’ என்றால்,...
4
தள்ளுவண்டி கடை வியாபாரத்தை முடித்து கடைக்கட்டிக்கொண்டிருந்தான் பரத். உடன் அவனுக்கு உதவியபடி நின்றிருந்த அண்ணாமலையிடம், “இன்னைக்கு இத்தினி மீந்துடுச்சேடா! என்ன பண்ணலாம்? வழக்கம் போல பண்ணிடலாமா?” என்று கேட்டான் பரத்.
திரும்பி அவன் கையில் இருந்த பாத்திரத்தை பார்த்தான் அண்ணாமலை. கணிசமான அளவு சிக்கன் பக்கோடா மீந்திருந்தது. அன்று ஏனோ இரவு வியாபாரம் சற்று டல்...
அருகே செல்லும்போதே குழந்தைகள் சத்தம் ஆரவாரமாய் கேட்டது. ஏதோ விளையாட்டு போட்டு நடக்கிறது போல என்று தோன்ற, ஒற்றை பந்தை வைத்து சுற்றி சுற்றி ஓடி என்னவோ விளையாடிக்கொண்டிருந்தனர். பெரியவர்கள் நிழலில் அமர்ந்து அதை வேடிக்கைப்பார்க்க, அண்ணாமலை எங்கே என்று தேடினான் சேகர்.
அவன் தேடுவதைக்கண்டு, “பின்னாடி தோட்டத்துல இருக்கான் போ!” என்றொருவர் சொல்ல, வந்தவர்களை...
“அவன் எவ்ளோ பதட்டமா வந்து சொல்றான். நீ என்னன்னா நாயை கண்ட மாறி விரட்டுற?” அவள் மெல்லிய குரலில் அழுத்தமாய் பேச, அண்ணாவின் கண்கள் அவளை முறைத்துப்பார்த்தன.
“என்னை எதுக்கு முறைக்குற?” என்றவள், “உடன்பொறப்பு, கூட்டாளிங்கன்னு அவனுங்களோட தானே இத்தனை வருஷமா கடந்த? இப்போ அதுல ஒருத்தனை காணோம்ன்னு சொன்னா பதறலியா உனக்கு?” என்று கேட்க,...
25
“யோவ்... யோவ்வ்வ்வ்” தனக்கு முதுகு காட்டி உறங்கிக்கொண்டிருந்தவனை சுரண்டிக்கொண்டிருந்தாள் நிம்மதி. ‘தூங்கு’ என்றுவிட்டு அவன் படுத்ததும் உறங்கிவிட்டான். அவளுக்கு தான் உறக்கம் ஒரு பொட்டு கூட இல்லை.
‘அவளை அவனுக்கு பிடிக்கும்’ என்பது அவளுக்கு ஸ்திரமாய் தெரிந்த ஒன்று தான். ஆனால் அதை அவன் வாய்மொழியாய் கேட்டுவிட வேண்டும் என்பது தான் அவளது நீண்ட நாள்...
9
அன்று காலையில் இருந்து மட்டுமே ஒரு ஐம்பது முறையாவது அந்த ஐவரின் போனில் இருந்தும் ஆழியூர் அய்யாக்கண்ணுவுக்கு அழைப்பு போயிருக்கும். ஒருமுறை கூட தவறாது அழைப்பை எடுப்பவன், “இதோ வந்துட்டேன்... கிட்ட வந்துட்டேன்! காசெல்லாம் முன்னூறு ரூவா நோட்டா இருக்கு, அதை ஆயரூவா நோட்டா மாத்திட்டு நிக்குறேன்... நீ பத்து எண்ணிட்டு திரும்பிப்பாரு, உன்...
மேனேஜர் சைலேஷின் அகண்ட நெற்றி முழுக்க முத்து முத்தாய் வியர்வை அரும்பி இருக்க, காதோரத்தில் இருந்து கோடாய் இறங்கி ஓடிக்கொண்டிருந்தது உவர் நீர். அத்தனை பதட்டத்தில் இருந்தார். அவர் படபடப்பு நிமிடத்திற்கு நிமிடம் ஏறியது. காலையில் எடுத்துக்கொண்ட ‘பிபி’ மாத்திரை கூட வேலைக்கு ஆகவில்லை.
கையில் இருக்கும் அந்த வார இதழின் நடுப்பக்கத்தை விட, அதன்...
16
இரு நாட்கள் கழிய, அன்று காலையில் பொழுது புலர்ந்தும் புலராத நேரத்தில் மூச்சு வாங்க நிம்மதியின் வீட்டுக்கதவை தட்டினான் ஐயப்பன்.
அவன் தன் இல்லற யுத்தத்தை முடித்துக்கொண்டு கண்ணயர்ந்தே சில மணி நேரங்கள் தான் கடந்திருக்கும். அதற்குள் சத்தம் கேட்க, அவனால் கண்களை பிரிக்கவே முடியவில்லை. அப்படியே அவனை இருக்க விடாமல் மீண்டும் கதவு தட்டும்...
24
போலிஷ் ஸ்டேஷன் மரபெஞ்சில் மௌனமாய் அமர்ந்திருந்தாள் நிம்மதி. அழைத்து வந்ததில் இருந்து அவள் எதுவுமே பேசவில்லை. குறைந்தபட்சமாய், ‘நான் எந்த தப்பும் செய்யல, என்னை தயவுசெஞ்சு விடுங்க’ என்று அவள் இறைஞ்சுவாள் என எதிர்பார்த்த காவலர்களுக்கு அவளது இந்த மௌனமும் நிர்மலமான முகமும் பெருத்த ஏமாற்றத்தை தான் கொடுத்தது.
‘ஒரு கிராமத்து பிள்ளைக்கு போலிஸ் ஸ்டேஷன்...
3
“அண்ணே, நெஞ்சு பீசு ஒன்னு, காலு ஒன்னு!” இரு பயல்கள் வந்து நிற்க, “சாப்பிடவா? பார்சலா?” என்று கேட்ட பரத்தின் கரங்கள் ஏற்கனவே கேட்டவர்களுக்கு தட்டில் சில்லி சிக்கனை அளவாய் எடுத்து வைத்துக்கொண்டிருந்தது.
ஒரு பெரிய மரத்தின் நிழலில் தள்ளுவண்டி நிறுத்தி, அதில் மஞ்சள் நிற குண்டு பல்பு வெளிச்சம் கொடுக்க, எண்ணெய் சட்டியில் சுட...
அவன் கோபம் யாருக்கு புரிந்ததோ இல்லையோ நிம்மதிக்கு நன்றாகவே புரிந்தது.
‘இன்னைக்கு தான் இறங்கி வந்தான், திரும்ப மலையேறிடுவானோ?’ என்ற பதைப்பில் அவள் இருக்க, “இப்ப நான் என்ன செய்யணும்?” என்றான் அவன் அடக்கி வைத்த ஆத்திரத்துடன்.
“என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கணும்” என்று தாஸ் சொல்ல, அவரை சில நொடிகள் அசையாமல் பார்த்தவன், “பண்ணிக்குறேன்!” என்றுவிட்டான்.
அவனிடம்...
12
மறுநாள் பொழுது விடிந்து சில மணி நேரங்கள் கடந்தே கண் விழித்தாள் நிம்மதி. உறங்கியதே அதிகாலையில் தான் என்பதால் கண்ணெல்லாம் உறக்கம் பத்தாமல் எரிந்தது. அதோடு, உடல் வேறு அடித்து போட்டதை போல எல்லா பக்கமும் வலி எடுக்க, சுனக்கமாய் எழுந்து அமர்ந்தவள் முகத்தில் மட்டும் கூடுதல் பொலிவு.
இன்னமும் வெட்கங்கள் மிச்சம் இருக்க, மூலையில்...