En Kalla Kaamugane
12
மறுநாள் பொழுது விடிந்து சில மணி நேரங்கள் கடந்தே கண் விழித்தாள் நிம்மதி. உறங்கியதே அதிகாலையில் தான் என்பதால் கண்ணெல்லாம் உறக்கம் பத்தாமல் எரிந்தது. அதோடு, உடல் வேறு அடித்து போட்டதை போல எல்லா பக்கமும் வலி எடுக்க, சுனக்கமாய் எழுந்து அமர்ந்தவள் முகத்தில் மட்டும் கூடுதல் பொலிவு.
இன்னமும் வெட்கங்கள் மிச்சம் இருக்க, மூலையில்...
“ரசம் வச்சுருக்கேன், மறுசோறுக்கு போட்டுக்கோ” அவள் சொல்ல, மெல்வதையும் பிசைவதையும் நிறுத்திவிட்டு நிமிர்ந்தவன், “ஏன் தொன தொனங்குற?” என்றான் எரிச்சலாய். இதற்கு முன்னும் இவன் பேச்சு இப்படி தான் என்றாலும், இப்போது புதிதாய் அவளுக்கு முகம் வாடியது.
“சரி நான் பேசல, நீ தின்னு” முணுமுணுத்தாள்.
“நீ கிளம்பு, நான் பாத்துக்குறேன்” என்றவன், நீ போனால் தான்...
மருத்துவமனையில் சேர்ந்து மூன்று நாட்கள் முடிந்திருந்த நிலையில், அன்று காலை போல நிம்மதியை கைத்தாங்கலாய் நடத்தி பழக்கிக்கொண்டிருந்தான் அண்ணா. நந்தா அந்நேரம் உணவு கொண்டு வர, இருவரும் சாப்பிட அமர்ந்தனர்.
“வலிக்குதா? என்ன பண்ணுது?” மெல்ல அமர்ந்தவள் லேசாக புருவம் சுருக்கியதற்க்கே பதட்டமாய் கேட்டான் அண்ணாமலை. அவனை பதற வைக்க கூடாது என்றே வலித்தால் கூட...
13
நிம்மதியின் முகத்தில் இருந்த கடுகடுப்பு குறையவே இல்லை. நீடாமங்கலம் அருகே இருந்த அவனது குலதெய்வ கோவிலுக்கு அவனோடு சென்றபோதும் சரி, இதோ இப்போது ஊருக்கே கிடாவிருந்து போட்டுக்கொண்டிருக்கும்போதும் சரி, புது பெண்ணுக்குரிய அந்த வெட்கசிரிப்பு சுத்தமாக இல்லாமல் இறுகி போயிருந்தது.
ஆனால் அதற்கு எதிர்பதமாய் வழமையை விட இருமடங்கு சிரிப்புடன் வந்தவர்களை பார்த்து பார்த்து கவனித்துக்கொண்டிருந்தான்...
17
வாசல் தெளித்து கோலம் போட்டுவிட்டு உள்ளே வந்த நிம்மதி, இன்னமும் கூடத்தில் தலைகுப்புற படுத்து உறங்கிக்கொண்டிருந்த அண்ணாமலையை சலிப்பாக பார்த்தாள். சூரியனுக்கு முன்னே எழுந்து நொடிக்கூட நிற்காமல் வேலைகளை இழுத்துப்போட்டு செய்பவனை இப்போதெல்லாம் எழுப்பி உட்கார வைப்பதே இவளுக்கு பெரும் வேலையாக தான் இருந்தது. அதைவிட கொடுமை, ‘கடையே கதி’ என இருந்தவன் இப்போது...
22
ஆஸ்ரமத்தின் வெளியே இருந்த தோட்டத்தில் எல்லாரும் ஒன்றாக அமர்ந்திருந்தனர். பன்னிரண்டு குழந்தைகள் உட்பட, அறுபதை கடந்த நான்கு பெரியவர்கள் வாந்தி மயக்கம் என்று மருத்துவனைக்கு சென்று வந்திருந்தனர். அவர்கள் ஓரளவு தெளிய கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் ஆனது. இன்னமும் அவர்கள் பழைய நிலைக்கு மீண்டபாடில்லை. மருந்து மாத்திரை கொடுத்து ஓய்வெடுக்க சொல்லி அனுப்பியிருந்தனர்.
ஆஸ்ரம நிர்வாகியின்...
21
அந்த இரவு நேரத்தில் வாசலில் தேன்மொழியை கண்ட அண்ணாமலைக்கு திகைப்பானது. அதிலும் அவள் மூச்சுவாங்க படபடப்புடன் நின்ற தோற்றம் ‘என்னவோ ஏதோ’ என்று அவனை நினைக்க வைக்க, “யாரு வெளில?” என்று நிம்மதி கேட்டதும் தெளிந்தவன், “அது, அந்த பொண்ணு” என்று திணறும்போதே எழுந்து வந்துவிட்டாள் மதி.
அவளும் தேன்மொழியை கண்டு திகைத்து, “என்ன இந்த...
அவன் கோபம் யாருக்கு புரிந்ததோ இல்லையோ நிம்மதிக்கு நன்றாகவே புரிந்தது.
‘இன்னைக்கு தான் இறங்கி வந்தான், திரும்ப மலையேறிடுவானோ?’ என்ற பதைப்பில் அவள் இருக்க, “இப்ப நான் என்ன செய்யணும்?” என்றான் அவன் அடக்கி வைத்த ஆத்திரத்துடன்.
“என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கணும்” என்று தாஸ் சொல்ல, அவரை சில நொடிகள் அசையாமல் பார்த்தவன், “பண்ணிக்குறேன்!” என்றுவிட்டான்.
அவனிடம்...
3
“அண்ணே, நெஞ்சு பீசு ஒன்னு, காலு ஒன்னு!” இரு பயல்கள் வந்து நிற்க, “சாப்பிடவா? பார்சலா?” என்று கேட்ட பரத்தின் கரங்கள் ஏற்கனவே கேட்டவர்களுக்கு தட்டில் சில்லி சிக்கனை அளவாய் எடுத்து வைத்துக்கொண்டிருந்தது.
ஒரு பெரிய மரத்தின் நிழலில் தள்ளுவண்டி நிறுத்தி, அதில் மஞ்சள் நிற குண்டு பல்பு வெளிச்சம் கொடுக்க, எண்ணெய் சட்டியில் சுட...
“டேய் சேகரு, பின்னால கடலை போருக்கிட்ட இவளை கட்டிப்போடு! நான் கோழிய சுத்தம் பண்றேன்” என்ற அண்ணா மாட்டை அவனிடம் விட்டு, கிணற்றடியில் அமர்ந்து கோழியின் ரோமங்களை பொசுக்கிக்கொண்டிருந்த நந்தாவிடம் சென்றான்.
இரவு கடைக்காக இப்போதே கோழியை சுத்தம் செய்து துண்டாக்கி வேண்டிய மசாலாக்களை போட்டு ஊற வைத்துவிட்டால் தான், ஆறு மணிக்கு மேல் வரும்...
15
பிஸ்கட்டுகளுக்கு புது வடிவம் ஒன்றை யோசித்துக்கொண்டிருந்தாள் நிம்மதி. சுற்றி எல்லோரும் வேலை செய்துக்கொண்டிருக்க, “அம்மாடி, இந்தா காசு. இந்த மாச ஸ்கூல் கணக்கு முடிஞ்சுது” என்று நீட்டினார் தாஸ். ஒருமுறை பார்த்தவள், “சரியா கணக்கு பார்த்து வாங்கிட்டீங்களா ப்பா?” என்றாள்.
“ஆச்சும்மா! நீ ஒருக்க பாக்குறப்போ சரிபாத்துடு” என்று அவர் சொல்ல, “சரிப்பா... வீட்ல வச்சுடுங்க”...
10
ஏலம் ஆரம்பித்தபோது வீரப்பனுக்கு போட்டியாய் இன்னும் சிலரும் கேட்க ஆரம்பிக்க, விலை மூன்று லட்சத்தை நெருங்கியது. மூன்றை தாண்டியபோது, ஏலம் கேட்கும் குரல்கள் ஒன்று இரண்டாக குறைந்துப்போனது. மூன்று, மூன்றரை லட்சத்தை தொட்டபோது வீரப்பனின் குரல் தான் ஓங்கி ஒலித்தது.
அத்தனை நேரமும் குனிந்த தலை நிமிராமல் எதையோ யோசித்தவனாகவே அமர்ந்திருந்தான் அண்ணாமலை.
“காசு வச்சுக்கிட்டு ஏன்டா...
25
“யோவ்... யோவ்வ்வ்வ்” தனக்கு முதுகு காட்டி உறங்கிக்கொண்டிருந்தவனை சுரண்டிக்கொண்டிருந்தாள் நிம்மதி. ‘தூங்கு’ என்றுவிட்டு அவன் படுத்ததும் உறங்கிவிட்டான். அவளுக்கு தான் உறக்கம் ஒரு பொட்டு கூட இல்லை.
‘அவளை அவனுக்கு பிடிக்கும்’ என்பது அவளுக்கு ஸ்திரமாய் தெரிந்த ஒன்று தான். ஆனால் அதை அவன் வாய்மொழியாய் கேட்டுவிட வேண்டும் என்பது தான் அவளது நீண்ட நாள்...
4
தள்ளுவண்டி கடை வியாபாரத்தை முடித்து கடைக்கட்டிக்கொண்டிருந்தான் பரத். உடன் அவனுக்கு உதவியபடி நின்றிருந்த அண்ணாமலையிடம், “இன்னைக்கு இத்தினி மீந்துடுச்சேடா! என்ன பண்ணலாம்? வழக்கம் போல பண்ணிடலாமா?” என்று கேட்டான் பரத்.
திரும்பி அவன் கையில் இருந்த பாத்திரத்தை பார்த்தான் அண்ணாமலை. கணிசமான அளவு சிக்கன் பக்கோடா மீந்திருந்தது. அன்று ஏனோ இரவு வியாபாரம் சற்று டல்...
6
“ஏன்டா யோசிச்சு தான் பேசுறியா நீ!?” பரத் தன் முன்னே ஒரு முடிவுடன் அமர்ந்திருந்தவனை பார்த்து திகைப்பாய் கேட்க, மற்ற மூவரின் விழி மொழிகளும் அதே கேள்வியை தான் கேட்டது.
“யோசிக்காம தான் முடிவா சொல்றேனா நான்?” என்று திருப்பி கேட்டான் அண்ணாமலை.
“ஏற்கனவே கோழி, ஆடு, காடைன்னு நிக்காம ஓடிட்டு இருக்கோம். இதுல மீனும் சேர்த்து...
16
இரு நாட்கள் கழிய, அன்று காலையில் பொழுது புலர்ந்தும் புலராத நேரத்தில் மூச்சு வாங்க நிம்மதியின் வீட்டுக்கதவை தட்டினான் ஐயப்பன்.
அவன் தன் இல்லற யுத்தத்தை முடித்துக்கொண்டு கண்ணயர்ந்தே சில மணி நேரங்கள் தான் கடந்திருக்கும். அதற்குள் சத்தம் கேட்க, அவனால் கண்களை பிரிக்கவே முடியவில்லை. அப்படியே அவனை இருக்க விடாமல் மீண்டும் கதவு தட்டும்...
19
சொற்ப ஆயிரங்கள் அடங்கிய கவரை அந்த ஆதரவற்றோர் இல்ல நிர்வாகியிடம் நீட்டினாள் நிம்மதி. அவள் வாடிக்கையாய் கொடுத்துக்கொண்டிருக்கும் பிஸ்கட்களை அந்த மாதத்துக்கும் கொண்டு வந்திருந்தவள் எப்போதும் இல்லாததாய் பணத்தை நீட்ட, அதை வாங்க தயங்கினார் அவர்.
“செய்யுற உதவியே போதும்மா, பணம் இப்போதைக்கு தேவைப்படல” என்றவர் சொல்ல, “ஏன் அண்ணே, நான் குடுத்தா வாங்க மாட்டீங்களா?...
18
இப்போதெல்லாம் லோடு வண்டிக்கு தாஸ் அலைவதில்லை. மொத்தமாய் வெளி வேலையை அண்ணாமலையே பார்த்துக்கொள்ள ஆரம்பித்திருந்தான். அவன் பொறுப்பெடுத்தப்பின் நிம்மதிக்கு நிம்மதி கூடினாலும், மனதின் ஓரம் அரித்துக்கொண்டு தான் இருந்தது.
‘எங்கே இவன் இப்படியே தேங்கிவிடுவானோ?’ என்று!
கேட்டால் பதில் சொல்வது ஒரு ரகம். பதில் சொல்லாமல் விடுவது இன்னொரு ரகம். இவன் தான் புது ரகமாயிற்றே! தேய்ந்த...
“அவன் எவ்ளோ பதட்டமா வந்து சொல்றான். நீ என்னன்னா நாயை கண்ட மாறி விரட்டுற?” அவள் மெல்லிய குரலில் அழுத்தமாய் பேச, அண்ணாவின் கண்கள் அவளை முறைத்துப்பார்த்தன.
“என்னை எதுக்கு முறைக்குற?” என்றவள், “உடன்பொறப்பு, கூட்டாளிங்கன்னு அவனுங்களோட தானே இத்தனை வருஷமா கடந்த? இப்போ அதுல ஒருத்தனை காணோம்ன்னு சொன்னா பதறலியா உனக்கு?” என்று கேட்க,...
உள்ளே அயர்ந்த உருவில் கழுத்து வரை போர்வையுடன் தளர கிடந்தாள் நிம்மதி. கண்களில் அந்த ‘ஒளி’ மட்டும் அப்படியே! மருத்துவரிடம் ஏதோ மெல்ல பேசிக்கொண்டிருந்தாள்.
அவளை கண்டதும் அப்படியே நின்றுவிட்டான் அண்ணாமலை. அவள் கண்களும் அவன் நிற்கும் திசையில் நகர,
அவள் கண்களுக்கு, கண்ணீரை கொட்டவா? நிறுத்தவா? என்று நின்றிருந்த அண்ணா தான் தெரிந்தான் முதலில். அவள்...