Chathriya Vendhan
சத்ரிய வேந்தன் - 19 – காட்டாறு
கரைபுரண்டு ஓடும் காட்டாறு
கன்னியவளை அழைத்துச் செல்வது…
கானகம் நடுவினுலும்
துணை நிற்கும்
வீரனைக் காட்டிடவே...
சிவவனம் மிகவும் அடர்ந்த வனம். அந்த வனத்தின் உட்பகுதிகள் பெரும்பாலும் மனிதக் கால்தடம் படாத பகுதிகளே ஆகும். ஆங்காங்கே ஓடும் காட்டாறுகள், பலவகை செடி கொடிகள், ஆபத்தான விலங்குகள், இதுவரை கண்டிராத பறவை இனங்கள், சூரிய ஒளியை உள்ளே அனுமதிக்காத அளவு அடர்ந்து வளர்ந்த மரங்கள் என...
சத்ரிய வேந்தன் - 02 வைகாசி திருவிழா
விடியலில் மலர்ந்த மலர்களைப் போல
ஒளி வீசும் மக்களின் முகங்கள்...
தெளிந்த நீரோடையினைப் போல
நல்லுள்ளம் கொண்ட அமைச்சர்கள்...
கொலுசொலியின் கீதம் போல
சலசலத்தபடி ஓடும் வற்றாத ஜீவ நதிகள்...
பச்சை பட்டாடை உடுத்தியதைப்போல
நிறைந்திருந்த வயல்வெளிகளும், தோட்டங்களும்...
இதுவன்றோ நற்சான்று...
மருத தேசத்தின் வளத்திற்கும்,
வீரேந்திர மருதர் ஆட்சியின் சிறப்புக்கும்...
மருத தேசத்தின் கிழக்கு வாயிலிலும், வடக்கு வாயிலிலும் இருந்த கோட்டைக்கதவுகள் திசைக்கு மூன்றாக, மொத்தம் ஆறு இடங்களில் திறந்து வைக்கப் பட்டிருந்தது. ஆறு கோட்டைக்கதவுகளும் விண்ணை முட்டும் உயரத்துடனும், ஒரே நேரத்தில் அந்த வாயிலின் வழியாக முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் நுழைய ஏதுவான அகலத்துடனும் மிகவும் பிரமாண்டமாக இருந்தது.
அதிலும்...
சத்ரிய வேந்தன் - 16 – சத்ரிய வீரன்
சந்திர நாடு மிகவும் பழமையான, பாரம்பரியம் நிறைந்த நாடு. தென்னாற்றங்கரையோரம் கோட்டையை அமைத்து பல தலைமுறைகளாக ஆண்டு வந்தனர் சந்திர நாட்டின் மூதாதையர்கள். இதுவரை சந்ததி இல்லை என்ற நிலையே வந்திடாத நாட்டிற்கு, அருள் வேந்தருக்கு வாரிசுகள் இன்றி போகவே, இப்பொழுது இப்படி ஒரு இக்கட்டான...
சத்ரிய வேந்தன் - 11 – கனா கண்டேன்
இன்றைய அதிகாலை சொப்பணம்
என் பிணி தீர்க்கும் மருந்தாய்...
உன்னை எதிர் நோக்கும் ஆவலாய்...
என் விழி தேடும் வரமாய்...
நிலவின் ஆக்கிரமிப்பு முடியப்போகும் பின்னிரவு நேரத்தினில், செவ்விதழ்கள் இளமுறுவல் புரிய, ஏதோ ஒரு இனிய சொப்பணத்தில் தன்னையே மறந்து லயித்திருந்தாள் தோகையினி.
அவள் மெய் மறந்து உறங்கி, பல நாட்கள் ஆனது. இன்று அவளுடைய மெய் மட்டுமின்றி, உலகத்தையும் மறந்த உறக்க நிலையை அடைந்திருந்தாள். அவளுடைய...
சத்ரிய வேந்தன் - 20 – மதி மகள்
வாள் ஏந்திய கைகளால்
மலர்களை ஏந்த வைக்கின்றாய்...
இறுக்கம் கொண்ட முகத்தினில்
இதழ்கள் விரிய செய்கின்றாய்…
நாடாளும் வேந்தனை
உன் சேவகனாய் மாற்றுகின்றாய்…
அடர்ந்த மரங்கள் சூழ்ந்த சிவவனம், அது நண்பகல் வேளை என்பதனைக் கூட உணர விடாமல், மரங்களின் குளுமையால் நிறைந்திருந்தது. உச்சி வேளையில், திக்கு தெரியாத காட்டினில் தனித்து இருந்தனர் சந்திர நாட்டு அரசர் ரூபன சத்ரியரும், மருத தேசத்து இளவரசி சமுத்திர தேவிகையும்.
“கிளம்பலாம் தானே பெண்ணே!”...
சத்ரிய வேந்தன் - 28 – மருத கோட்டை
ரூபன சத்ரியர் மருத தேசத்து கோட்டையினை நெருங்கிக்கொண்டிருக்க, இதற்கு முன்பு மருத தேசம் வந்ததும், நவிரனோடு சண்டையிட்டதும் அவருடைய நினைவுகளில் வந்தது.
அவனைக் கொல்லும் அளவு அன்றைய மற்போர் சென்றுவிட்டதற்கு ரூபனர் ஒருபொழுதும் வருந்தியதில்லை. அதிலும், அவனைப் பற்றிய விவரங்களும், உண்மையும் தெரிந்தபிறகு வருத்தம் கொள்வதற்கு எந்த...
சத்ரிய வேந்தன் - 17 – பட்டாபிஷேக விழா
முரசொலி விண்ணை முட்ட …
மக்கள் மனதின் மகிழ்வு
முகத்தில் பிரதிபலிக்க …
வண்ண வண்ண மலர்களாலும்,
மஞ்சள் வண்ண அட்சதையாலும்,
சபையோர்கள் வாழ்த்த…
சத்ரிய வம்ச
மூதாதையர்களின் ஆசியோடும் …
சந்திர நாட்டினை
ஆண்ட மன்னர்களின் ஆசியோடும் …
அதர்மத்தை அழித்து …
தர்மத்தை நிலைநாட்டும் …
சிறந்த தலைவனாய்
பார் போற்றும் வேந்தனாய் …
முடி சூடுவாய் மாவீரனே!
சந்திர நாடு தமது துயர் களைந்து, துளிர்த்து எழும் தருணமாய் அமைந்தது ரூபனரின் பட்டாபிஷேக விழா. சந்திர நாட்டின் மன்னர் அருள் வேந்திரின் இழப்பு ஈடு செய்ய இயலாத பெரும் துயரம்தான். இருப்பினும் அவர் இரண்டு ஆண்டுகளாக படுக்கையில் பட்ட துயரத்தினை எண்ணிப்பார்க்கையில், மன்னரின் இழப்பினை...
சத்ரிய வேந்தன் - 26 – அரண்மனை சீரமைப்பு
உற்றவன் நீயே
உணரா பொழுது,
நீ உணரும் முன்பு
பிறரிடம் என்ன சொல்வேன்?
உன் விழிகளால்
என் உயிர் பருகுகின்றாய்…
உன் மென்னகையால்
வசியம் செய்தாய்…
நடமாடும் பதுமையானேன்!
உன் நினைவுகளினால்…
அந்தி மாலை வேளையில் நள்ளிருள்நாறி மலர்கள் மலர்ந்து மனம் வீசி, அந்த தோட்டம் முழுவதும் இதமான நறுமணத்தை பரப்பிக் கொண்டிருந்தது. இளவரசி சமுத்திர தேவிகை நள்ளிருள்நாறி மரத்தின் கீழே அமர்ந்தவாறு அந்த மலர்களை கைகளில் ஏந்தியபடி அமர்ந்திருந்தாள். இளம் பச்சை வர்ணத்தில் நீளமான காம்புகளுடன், மிக...
சத்ரிய வேந்தன் - 14 – வெகுமதி
உன் வீரம் வான்புகழ்
அடையட்டும்…
உன் திறமையும்,
விடாமுயற்சியும்,
பொறுமையும்
உன்னை சிறந்த
தலைவனாக செதுக்க
இறைவனின் அருளும்,
ஆசியும்
என்றும் உனக்கே…
தீட்சண்ய மருதர் வேங்கை நாட்டிலிருந்து புறப்பட்டு, சந்திர நாடு நோக்கி தமது பிரயாணத்தை தொடங்கினார். மருத சக்கரவர்த்தி வீரேந்திரரின் முன்னேற்பாட்டின்படி ஒவ்வொரு நாட்டைக் கடக்கும் பொழுதிலும் அந்தந்த நாட்டின் வீரர்கள் சிலர், தீட்சண்யருடன் இணைந்து அவர்கள் நாட்டின் எல்லை வரை பயணித்தனர்.
ஏற்கனவே தங்கை சமுத்திர தேவிகையுடனும், மருத...
சத்ரிய வேந்தன் - 22 – நேர்த்திக்கடன்
மாலை வேளையில் கதிரவன் தன் சேவையை முடிக்கத் தொடங்கியதுமே, சிவவனம் இருளில் மூழ்கியது. மருத இளவரசர் தீட்சண்ய மருதரின் கட்டளையை ஏற்று, கூடாரங்கள் அமைத்த காவலர்கள், ஆங்காங்கே கிடைத்த மரக்கிளைகளை கொண்டு நெருப்பு மூட்டியிருந்தனர்.
ஆற்றங்கரையின் அருகினில் மரங்கள் சூழ்ந்த பகுதியில் இரண்டு கூடாரங்களை நடுநாயகமாக அமைத்து, அதனை...
சத்ரிய வேந்தன் - 6 – ஜீவசுடர் நதி
மருத தேசத்தின் கீழே இயங்கும், மேற்கு மலைத்தொடர்களை ஒட்டியுள்ள, மன்னர் வேலவர் ஆளும் விஜயபுரி நாட்டினை வளம் கொழிக்க செய்து கொண்டிருந்தது, அந்த நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்திருந்த மலைத்தொடர்களில் இருந்து பாயும் ஜீவசுடர் நதி.
ஜீவசுடர் நதி, என்றுமே தன் ஜீவனை இழக்காமல் ஓடும் அதியற்புதமான...
சத்ரிய வேந்தன் - 13 – வீராதி வீரன்
உன் பாவங்களை
மன்னரும், மற்றவர்களும்
அறியாமல் செய்வதால்
நீ தப்பிக்கொள்ளலாம்
என எண்ணினாயா?
கடவுள் காணா
பிழையா???
உன்னை வதம் செய்ய…
உன் பாவக்கணக்கைத்
தீர்க்க…
உன் கர்வத்தை
தவிடு பொடியாக்க…
உன்னை நோக்கி
ஆயுதம் எரிந்துவிட்டான்…
நீ அழியும்
காலம் வெகு
தொலைவில் இல்லை…
இரை தேட தமது கூட்டிலிருந்து புறப்பட்ட பறவைகளின் சங்கீதத்திலும், ஆழ்ந்து உறங்கியதால் களைப்பு முழுவதும் நீங்கியதாலும், ரூபன சத்ரியர் தமது உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தான். கனவுகள் கூட தீண்டிடாத ஆழ்ந்த உறக்கம் கொண்டவருக்கு முகமும், உள்ளமும் மிகுந்த மலர்ச்சியாய் இருந்தது. அதே புத்துணர்வோடு அந்த நாளினைத் தொடங்கினான்.
அவர்...
சத்ரிய வேந்தன் - 15 – தகர்ந்த தடைகள்
மாதவமோ! யாகமோ!
பிரார்த்தனைகளோ! வேண்டுதல்களோ!
என்ன செய்தேன் நினைவில்லை…
எப்பிறவியில் செய்தேன் நினைவில்லை…
இருந்தும் வரமாய் நீ கிடைத்தாய்...
அதிகாலை சூரியன் தமது பயணத்தை தொடங்க, பறவைகளின் கீதம் சங்கீதமாக இசைத்திட, வேங்கை நாட்டின் பிரமாண்ட அரண்மனையின் விருந்தினர் அறையினில், இறைவனின் துதியினைப் பாடிக் கொண்டிருந்தாள் சமுத்திர தேவிகை.
சமுத்திராவைக் காண இளவரசி தோகையினியும், அவருடன் சேயோனின் மனைவி வருணதேவியும் விருந்தினர் அறைக்கு வந்தனர். அதிகாலை ஆதவனின்...
சத்ரிய வேந்தன் - 01 விஜயபுரி வீரன்
உனது வாள் பேசும் மொழி...
உனது விழி வழி கசியும் தீர்க்கம்...
உனது மௌனத்தில் மறைந்திருக்கும் மேன்மை...
புது வரலாறு படைக்கும் வீரனே!!!
ஏகாந்தமான மாலை மங்கிய வேளையில், விஜயபுரி நகரத்து கோட்டை, தீஞ்ஜுவாலைகளால் சுடர் விட்டுக் கொண்டிருந்த தீப்பந்தங்களின் துணையுடன் இருளை விரட்டத் தொடங்கியிருந்தது. பௌர்ணமியை நெருங்கிய நிலவின் வெண்ணிற ஒளியும்,...
சத்ரிய வேந்தன் - 8 – பிரயாணம்
மாலை மங்கும் வேளை, ஆதவன் தனது பொன்னிறக் கதிர்களை செந்நிறமாக்கி, கீழ்வானத்தின் மீதும் அந்த செம்மை நிறத்தினை தெளித்து, அந்த பொழுதினை மிகவும் ரம்மியமாக்கிக் கொண்டிருந்தான். வேங்கை நாட்டின் அரண்மனையில் அமைந்திருந்த மலர் தோட்டத்தின் மலர்கள் எல்லாம் அந்த பொன்மாலைப் பொழுதினில் மலர்ந்து மனம் வீசிக் கொண்டிருந்தது.
இத்தனை...
சத்ரிய வேந்தன் - 30 – ரூபனர் வருகை
என் விழி அரும்புகளை
முழுவதுமாய் மலரச் செய்கிறது
உன் திருமுகம்…
மலர்ந்த விழிகளை
மீண்டும் அரும்பச் செய்கிறது
உன் பார்வை...
மருத தேசத்து இளவரசர் தீட்சண்ய மருதருக்கும், வேங்கை நாட்டின் இளவரசி தோகையினிக்கும் திருமண ஏற்பாடுகள் அதிவேகமாக நடந்து வந்தது. திருமண ஏற்பாடுகளை மேற்பார்வையிட்ட மருத சக்ரவர்த்தி வீரேந்திர மருதருக்கு முழு திருப்தியாக இருந்தது.
வீரேந்திர மருதர் தீட்சண்யருடனும், முதன் மந்திரியாருடனும் திருமண ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டார். முதன் மந்திரியார்தான்...
சத்ரிய வேந்தன் - 21 – உதவிக்கரம்
பகல் பொழுதினில் விழிகளால் உணர முடியா விண்மீன்களையும், நிலவையும் இரவு புலர்ந்ததும் உணர முடிதல் போன்று, இத்தனை நேரமும் சமுத்திராவின் கூடவே இருந்தபொழுது உணர முடியா ஒரு இனம்புரியா உணர்வை, பிரிவு நெருங்குகையில் ரூபனரின் மனம் உணர்ந்து கொண்டு தவித்தது.
ஏனோ சமுத்திராவுடன் இருக்கும் இந்த நேரம் நீள...
சத்ரிய வேந்தன் - 12 – கரடு மலை
எத்தனை பாவங்கள்
செய்தால் என்ன?
உனக்கென இழப்பு
வரும் பொழுது,
நீயும் வருந்த
வேண்டும் அன்றோ!
உன் இழப்புகளின்
வலியே உனக்கு
சாதாரணமாய்
தோன்றுகிறதென்றால்…
நீ பிறருக்கு
இழைத்த அநீதிகளின்
அளவு???
தமது உடல்நிலை ஏற்கனவே தேறி வந்த நிலையில், மார்பில் ஏற்பட்ட காயங்களுக்கான சிகிச்சை மட்டுமே சில நாட்களாக ரூபன சத்ரியர் எடுத்து வந்தார். புதிதாக மருத தேசத்திலிருந்து வந்த வைத்திய குழுக்களின்...
சத்ரிய வேந்தன் - 31 – ஊடல்
மனம் முழுவதும் நிறைந்துள்ள நேசம்
மலர்ந்து மனம் வீசி,
உன் நெஞ்சில் துயில் கொள்ளும்
சொப்பணங்களை தந்து,
உன் பார்வையில் நனைந்து,
வாழ்வு முழுவதும் இதம் மட்டும் பரப்புமா?
உனக்காக,
உன் துயருக்காக,
உன் ஆபத்துக்காக
என் இதயமும், மனமும்
விழிகளும் கலங்குகிறது…
இது நேசத்தையும் தாண்டி
உயிர் வரை கலந்த உறவாய்...
பல நாட்களாக கண்ட கனவு மெய்ப்படும் தருணம், இந்த உலகையே வென்று விட்ட உவகையைக் கொடுக்கும். வேங்கை நாட்டு இளவரசி தோகையினியும் தற்பொழுது அந்த நிலையில்தான் இருந்தாள்.
மருத கோட்டையே விழாக்கோலம் பூண்டிருக்க, மருத கோட்டையினுள் அமைந்திருந்த சிவாலயம் வண்ண வண்ண மலர்களால் மிக நேர்த்தியாகவும், அழகாகவும் அலங்கரிக்கப்பட்டிருந்தது....
சத்ரிய வேந்தன் - 5 – மற்போர்
கிழக்கு முகம் சிவக்க தொடங்கும் முன்பு, அரண்மனை எங்கும் சூழ்ந்த இருட்டினில் ஆங்காங்கே எரியும் தீபங்கள் அழகாய் சுடர்விட, அரண்மனையே பொன்னிறத்தில் பேரழகாக ஜொலித்தது.
அரண்மனையின் பின்புறத்தில் சில மாளிகைகளைக் கடந்து இருக்கும் குதிரை இலாயத்திலிருந்து, செறிந்த பிடரி மயிரினை உடைய நான்கு வலிமையான குதிரைகளை, அழைத்துக் கொண்டு...