Sunday, April 20, 2025

    Anbum Arivum Udaithaayin

    அத்தியாயம் 8 கிட்டத்தட்ட இருபத்தி நான்கு மணி நேர பிரயாணத்தில் LAX விமான நிலைய டெர்மினலுக்கு மூவரும் வந்து சேர்ந்தனர். கொரோனா அச்சத்தால், ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை என தெளிக்கப்படும் கிருமிநாசினியின் வாசம் மூக்கைத் துளைத்தது. மாமிக்கு அந்த வாசம் குமட்டியது, அங்கேயே பணியாளர்கள் தரும் முக கவசம் வாங்கி அணிந்து கொண்டனர். உடல் வெப்பம் பரிசோத்திக்கும்...
    "இருக்குங்க இருக்கு. நீங்க கேட்டதுக்கு மேல நான் அவகிட்ட பேசிட்டேன். ஒரே வார்த்தைல 'என்னால கேவலப்பட முடியாது'ங்கறா, பிடிவாதம்தான், ரொம்ப பிடிவாதக்காரிதான், ஆனா, அதுக்காக அவள விட்டுத் தர முடியாதுங்க", என்று குரல் கமற எஸ்தர் கூற.. அவரை இழுத்து அருகில் அமர வைத்து, "தரு, நான் எப்படா அவளை விட்டுத்தா -ன்னு சொன்னேன்? கொஞ்சம்...
    அத்தியாயம் 9 1 கூடத்தில் சோஃபாவைச் சாய்த்து படுக்கையாக நீட்டி, அதில் படுத்திருந்த அறிவழகியின், மனம் அவளையே கேள்வி கேட்டுக் கொண்டிருந்தது. 'அவன் சாதாரணமாகத்தான் தாழ் குறித்துக் கேட்டான், ஏன் நான் வசமிழந்தேன்? ஏன் கோபம் வந்தது?',  'யார் என்ன பேசினாலும், எது வரினும், உணர்ச்சி வசப்படக் கூடாது என்ற என் தீர்மானம் எங்கே போயிற்று?',...
    கூடவே, மனதில் 'நாளைக்கு நிறைஞ்ச முகூர்த்த நாளா இருக்கு, ஸ்டோர் வீட்டுக்கு போயி விளக்கேத்திட்டு வரலாமா?', என்று கமலம்மா கேட்டது ஓடியது. அது விளக்கேற்றுவது மட்டுமல்ல குடிபோவது என்பது புரிந்து மெளனமாக இருந்தாள். வீட்டின் லேண்ட் லைனில் அழைப்பு வந்தது, சுசித்ரா எடுத்து, "ஹலோ", என்றாள். "..." "சொல்லுங்க மாமா" "..." "சரி மாமா, தோ இப்போவே போயி எடுத்து வைக்கறேன்,...
    அத்தியாயம் 5 "பாய்ங்.. ", "ஹூம்......",  என்ற விதவிதமான ஹாரன் ஒலிகள் பின்னாலிருந்து ஒலிக்க.. தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அன்பரசன் நிகழ்காலத்துக்கு வந்தான். போக்குவரத்து நெரிசல் இல்லாத அந்த நெடுஞ்சாலையில்.. இவன் ஒருவன் மாத்திரமே மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தான். அதை உணர்த்துவதற்காகவே மற்ற வண்டிகளின் ஒலிப்பான் அடித்தது. காரணம் சில நேரங்களில் உறக்கக் கலக்கத்துடன்...
    அவளது கிண்டல் புரிய... முகத்தில் செம்மை படர்ந்தாலுமே, "என்ன கைய பிடிச்சு இழுத்தியா?", என்று கெத்தாக அறிவழகி சொல்ல.. கலகலத்து சிரித்த சுசி, "வா வா வீட்டுக்கு வருவல்ல? அப்ப மாமா முன்னால கேக்கறேன்", என்று தன் கிண்டலை தொடர.. வேறு சட்டை மாற்றி கீழே வந்தவனைப் பார்த்து, "ஏனுங்க.. உங்க கொழுந்தியா எதோ என்றகிட்ட கேக்கனுமாமாமா",...
    அத்தியாயம் 19 காரில் ஏறிய அன்பரசன் சில நொடிகள் பொறுத்திருந்தான். அறிவழகி அசைவில்லாமல் நின்றிருக்க, காரின் ஒலிப்பானை அழுத்தினான். அறிவழகி அவ்வொலியில் விதிர்த்து, திரும்பி அன்பரசனைப் பார்த்தாள், அதில் உலகமே அந்நியப்பட்டுப்போன ஒரு பாவனை. அமைதியாக காரில் அமர்ந்தவளுக்கு பேச ஏதுமில்லை. 'என்னை போ வென்று சொல்லிவிட்டானே? அப்போது நான் அவனுக்கு தேவையில்லாதவளா? இப்போது சில...
    அத்தியாயம் 4 அறிவழகியின் முகத்தில் தெரிந்த பாவத்தைப்  பார்த்தவனுக்கு, தான் அவளை, தனது வீட்டிற்கு கூப்பிட்டது பிடிக்கவில்லை என்று புரிந்தது. எனவே, பேச்சை மாற்றும் விதமாக, "சரி நீ என்ன பண்ற? பேங்க் எக்ஸாம் பாஸ் பண்ணி, ஹைதராபாத் போஸ்டிங் ஆன வரைக்கும் தெரியும். ரெண்டு மூணு வாட்டி, உன் ஆபிஸ்க்கு நான் போன் பண்ணினேன்,...
    அத்தியாயம் 18 இறை தரிசனம் முடித்து கோவிலை விட்டு வெளியேறி அனைவரும் காரில் ஏறி வீட்டிற்கு கிளம்பினார்கள். இப்பொழுதும் ஆகாஷே அன்பரசனின் அருகே அமர்ந்தான். சிறிது நேரத்தில் சுசித்ராவிடமிருந்து  போன் வந்தது. "மாமா, ஆஷி தூங்கிட்டானா? பசங்க தொந்தரவு பண்றாங்களா?", என்று கேட்டாள். "அதெல்லாம் ஒன்னுமில்லை. ஜாலியா பாட்டுப் பாடிட்டு வந்தாங்க" "புடவை குடுத்துட்டீங்களா?" "ம்ம். கொடுத்தாச்சு. இப்போ வீட்டுக்கு...
    ரெக்லைனரில் படுத்திருந்த அறிவழகி, டேபிளில் இருந்த அன்பரசனின் பேசியிலிருந்து பார்வையை திருப்பி, மணி பார்த்தாள். அதிகாலை நான்கு இருபது என்று சுவர்கடிகாரம் காட்டியது. அது இந்தியாவில் நன்பகல் நேரம், அழைப்பை அசட்டை செய்து திரும்பி படுத்து விட்டாள். ஜெட் லாக்-கிலும், நேற்றைய மனக் குழப்பத்திலும் உறங்கியும் உறங்காமல் படுக்கை அறையில் இருந்த அன்பரசன்,  அவனது பேசியின்...
    அத்தியாயம் 20 பார்ட் 3 இரவு ஆறு மணி சுமாருக்கு ஸ்டோர் வீட்டினை அடைத்து விட்டனர், அறிவழகியும் அன்பரசனும். காரிலிருந்து இறங்கியதும், " கொஞ்ச நேரம்  நில்லுடா, ஆரத்தி சுத்தணும்", என்று கமலம்மா சொல்லி இருவரையும் வாசலிலேயே  நிறுத்த, ஆரத்தி கரைத்து எடுத்து வந்தது மாமியும், தருவும். "ஹே தரூ..., ஹையோ மாமி..., எப்பிட்றீ?",  என்று மகிழ்ச்சியில்...
    அத்தியாயம் 6 ஜாங்கிரியை பிய்த்துப் போட்ட மாதிரி இருந்த அறிவிப்புப் பலகையின் எழுத்துக்களில், சித்தூர் இனிதே வரவேற்றது. இன்னமும் கடந்த காலத்தில் இருந்து மீளாமல், அவனது இருப்பிடம் வந்து சேர்ந்த அன்பரசன், காரை அதற்குரிய இடத்தில் நிறுத்திவிட்டு, அவனது அறைக்கு சென்றான். பசித்தது, மதியம் அக்ஷியோடு திருப்பதி தேவஸ்தானத்தில் சாப்பிட்டதுதான், பின் பழைய நினைவுகளை அசை போட்டதில்,...
    ஜெய் ஸ்ரீராம்  அன்பும் அறிவும் உடைத்தாயின் அத்தியாயம் - 1 "இது உன் பையனா?", என்று திடுமென எதிரில் நின்று கண்ணோடு கண் நோக்கிக் கேட்டவனைப் பார்த்ததும், அறிவழகிக்கு மனம் தடதடக்க ஆரம்பித்தது. கேட்ட அவன் குரலில் கட்டுப்படுத்த நினைத்தும் வெளிப்பட்ட, அப்பட்டமான குற்றம் சாட்டும் தொணி. அவள் கையைப் பிடித்து நின்றுகொண்டிருந்த நான்கு வயதே நிரம்பிய அக்ஷிதாவைப்...
    "அதெல்லாம் நான் பாத்துக்கறேன். நீ சேஃபா சீக்கிரமா குட்டி பாப்பாவோட வீட்டுக்கு வர பாரு." "நீ வேணா பாரேன், நிச்சயமா ரெண்டே நாள்ல வந்துடுவேன்", சிரித்தபடி காரில் ஏறும் தோழியைப் பார்த்தாள். போனமுறை அக்ஷி பிறப்பதற்கு டெலிவரிக்கு செல்லும் முன் எத்தனை அழுகை?. ம்ம். பார்த்துக்கொள்ள ஆட்கள் இருக்கிறார்கள் என்ற பலம் அல்லது பெரியவர்களின் ஆசி,...

    Anbum Arivum Udaithaayin 3

    0
    அத்தியாயம் 3 ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அறிவழகிக்கு, அலைபேசி அழைப்பில் விழிப்பு வந்தது, உறக்கம் இன்னமும் கலையாதிருக்க, கண்களைத் திறவாமல் கைகளால் அளைந்து, பேசியை எடுத்துப் பார்த்தாள். அதில் எண் மட்டுமே தெரிய, "யாரது காலங்காலைல?" சன்னமாக முனகியபடி.. "ஹலோ", என்றாள். அவளது குரலில் இருந்த கரகரப்பில், தூக்கியவளை எழுப்பி இருக்கிறோம் என்பது புரிந்து, "ஹாய்.. இன்னுமா...
    பின் காலையில் அப்பா அடித்தது, மயங்கி விழுந்தது ஞாபகம் இருந்தது.  அப்பா, எப்போதோ சிறுவயதில் அவனை அடித்ததுண்டு, ஆனால் அன்பரசனுக்கு சற்று விபரம் தெரிந்தபின் கை நீட்டியதில்லை. பார்வையில் கண்டனத்துடன், வார்த்தையை சாட்டையாய் சொடுக்குவாறே தவிர, பிள்ளை செய்யும் தவறுகளுக்கு அடிக்கும் தந்தையில்லை இவர். இன்னமும் மதமதவென மூளையில்  போதையின் தாக்கம் இருந்தும், அவர் அடித்ததில்...
    "ம்ம். போட்டுட்டு கிளம்பி போயிட்டே இருக்க வேண்டியதுதானே?", என்று வார்த்தைகளை விட்டவன், காரை சாலை ஓரத்தில் நிறுத்தினான். கதவின் பக்கவாட்டில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து கைகளை கழுவி பின், அறிவழகியை நோக்கி கைநீட்ட, அவள் திரு திருவென விழித்தாள். அவன் இவள் மடியிலிருந்த பார்சலைப் பார்க்க, "ஓஹ். சாரி மறந்துட்டேன்", என்று அவசரமாக பிரித்து...
    ஜெய் ஸ்ரீராம் அத்தியாயம் - 2 "ம்மா, நா காலேஜ் போய்ட்டு வரேன், உனக்கும் தோசை டப்பால வெச்சிருக்கேன், சாப்பிட்டு போ இல்லன்னா பைல போட்டு எடுத்துக்க. அவங்க வீட்ல நிறைய பதார்த்தம் செய்ய வேண்டி இருந்தது, விசேஷ வீடு...  வேல நிறைய கிடந்ததுன்னு சாக்கு சொல்லி.. பட்டினி கிடக்காத..",  அம்மாவிடம் பேசியபடியே வாசலில் கிடந்த செருப்பை...
    அத்தியாயம் 14 1 அலைபேசியில் நேரம் பார்த்து இந்தியாவில் காலை ஐந்து மணி சுமார் இருக்கும் என நினைத்தவள், திரை பார்க்க அது மூர்த்தி ஆபிஸ் என்று உமிழ்ந்தது.  பார்த்தவள் எடுக்காமல் விட்டு விட்டாள், ஆமாம் யாரென்று அவளை அறிமுகப்படுத்திக் கொள்வாள்?, 'வீட்டுக்கு உன்னைப் பற்றி எதுவும் கூறாமல் வந்தேன்', என்று அவன் கூறியது வேறு...
    அன்பரசன் எதிர்கொண்டது இன்னமும் சிக்கலான பிரச்சனை, நண்பர்கள் என்று அவனைச் சுற்றித் திரிந்தவர்களே, "என்ன மச்சி, பாக்கவே மாட்டென்ன, மொத்தமா முடிச்சிட்ட?", "எப்படி இருந்தது?", "அதான் லைசென்ஸ் கட்டிட்டல்ல, என்ஜாய் பண்ணாம.. ?" என்று நாராசமாக கேட்க, தரங்கெட்ட அந்த நண்பர்கள் குழுவையே மொத்தமாக தவிர்த்தான். 'இடுக்கண் களைவதாம் நட்பு', என்பதற்கு ஏற்றாற்போல் மெக்கானிக்...
    error: Content is protected !!