நதியின் ஜதி ஒன்றே!
நதியின் ஜதி ஒன்றே 22
அஜய் மனைவியின் விருப்பப்படி அவளை சென்னையிலே விட்டு, தான் மட்டும் ஊருக்கு கிளம்பிவிட்டான்.
ஜீவிதா தன் நாட்களுக்கு திரும்ப முயன்று கொண்டிருந்தாள். ஒரு வாரம் கடந்துவிட்டது. இன்னமும் முயன்று கொண்டே தானிருக்கிறாள்.
மனம் நினைப்பதை எல்லாம் செயல்படுத்த முடியாது, கூடாது என்று மெல்ல மெல்ல உணரவும் செய்கிறாள்.
முன்பே அவளின் எல்லாம் அஜய்! இப்போது...
பெண் புரியாமல் பார்க்க, "என்ன முழிக்கிற? நான் மேரேஜ்க்கு முன்னாடி ஒரு நாள் பேசினோமே. உன் வேலை பத்தி" என்றான்.
"ஆஹ்ன். அது அப்புறம் பேசுவோம் அஜு. எனக்கு பலாப்பழம் வேணும்" என்றாள்.
"ம்ஹூம், முடியவே முடியாது. நேத்தே அவ்வளவு சாப்பிட்ட" என்று மறுக்க, இவள் அடம் பிடிக்க ஆரம்பித்தாள்.
அஜய் அவன் பிடியில் நிற்க, "சரி முந்திரி...
நதியின் ஜதி ஒன்றே! 21
மணமக்கள் தங்கள் குலதெய்வ கோவில் பூஜை முடித்து, பலராம் வீட்டிற்கு மறுவீடு வந்திருந்தனர். இரண்டு நாள் ஆகிற்று. இன்று சீருடன் ஜீவிதா தன் வீடு திரும்புகிறாள்.
பலராமின் சொந்த ஊரில் விருந்து என்பதால் அவரின் உறவுகள் அதிகம் இருந்தனர். சேனாதிபதியும் குடும்பத்துடன் வந்திருந்தார்.
சங்கர் தங்களின் உறவுகளுடன் வந்திறங்கினார். பலராம் வாசலிலே காத்திருந்து...
முதலில் இருந்த ஒரு தடுமாற்றமும் அஜய் கொண்டே.
இத்தனை வருடங்களில் அஜய் மீதான தன் உரிமையை சொல்ல ஒரு போராட்டம். சொல்லியபின் உரிமையை கைப்பற்ற மற்றுமொரு போராட்டம்.
இதற்கிடையில் பெண்ணுக்கான ரகசிய கனவுகள் அவளுக்கும் உண்டு.
அதிலும் எல்லாம் கை கூடி, திருமணம் முடிவான நாளில் இருந்து கனவில், நினைவில், கற்பனையில் பல முறை தனக்குள் கண்ட காட்சி...
நதியின் ஜதி ஒன்றே! 20
அஜய், ஜீவிதா திருமணத்தை தொடர்ந்து, சடங்குகள் நடந்து கொண்டிருந்தது. ஜீவிதா புகுந்த வீட்டிற்குள் வலது கால் எடுத்து வைத்து நுழைந்தாள். பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட்டாள்.
தம்பதிகள் வீட்டின் பெரியவர்களிடம் ஆசீ வாங்கி கொண்டனர். விருந்தினர் வருகை மதிய உணவோடு குறைய ஆரம்பித்தது.
மாலை போல் ஜீவிதா உறவுகளும் விடைபெற்றனர். அம்மா வீட்டை...
"அவன் உங்களுக்கு சப்போர்ட் பண்ணத்தான் சென்னையில் இருந்து கிளம்பி வந்தான். நான் தான் போன் பண்ணி அவன்கிட்ட கெஞ்சி கேட்டுக்கிட்டேன். அப்போவும் எனக்கு அவன் சப்போர்ட் பண்ணலை. கல்யாண்க்கு ஒரு வாய்ப்பு தான் வாங்கி கொடுத்தான்"
"என் மாமனார் போன் பண்ணி பேசினார். இப்போ விட்டா வேற எப்போவும் நீ கல்யாணை நினைச்சு பார்க்க முடியாது....
"பொண்ணை பெத்தவருக்கு நீங்க புத்தி சொல்லணும்ன்னு இல்லை மாமா. தாரணி விஷயத்திலே நீங்க பண்ணது போதும். இதை அஜய் பார்த்துப்பான்"
"உங்களுக்கு எல்லாம் இவரை பத்தி தெரியலை. என் சம்மந்தியை சமாளிக்க எனக்கு மட்டும் தான் தெரியும்" என்று மீசையை முறுக்கி விட்டு கொள்வார்.
"எனக்கு என்னமோ அப்பா சொல்றது சரி மாதிரி தான் இருக்கும்மா. அங்கிள்...
நதியின் ஜதி ஒன்றே! 19
"உன் அப்பாகிட்ட பேசு. அவரை முழு மனசோட சம்மதம் சொல்ல வை" என்று அஜய் கிளம்பிவிட்டான்.
ஜீவிதாவிற்கு தான் அப்படியான ஒன்று மிகவும் கடினமாக இருந்தது.
பிடிவாதம், அடம் எல்லாம் அவளுக்கு கை வந்த பாடு. எத்தனை நாள் என்றாலும் சுலபமாக சமாளிப்பாள்.
ஆனால் இந்த பொறுமை, பேச்சு வார்த்தை நடத்துவது எல்லாம் அவளின்...
பலராம் அவனை கண்களை சுருக்கி பார்க்க, ஜீவிதா அதிர்ந்து பார்த்தாள்.
"எனக்கு தெரியும் தாரணி விஷயத்துல உங்களுக்கு என்மேல கோவம்ன்னு. அது சரியும் கூட" என்றவனை பலராம் சந்தேகமாக பார்த்தார்.
ஜீவிதாவிற்காக இப்படி சொல்கிறானா?
அஜய் அதை புரிந்து மறுப்பாய் தலையசைத்தவன், "நான் சொல்றது இத்தனை வருஷ அனுபவத்துல உணர்ந்து சொல்றது அங்கிள். தாரணி மேல.. உங்க பொண்ணு...
நதியின் ஜதி ஒன்றே 18
அஜய் "எனக்கு டைம் கொடு" என்று ஜீவிதாவிடம் கேட்டான். அவளும் ஏற்று கொண்டாள்.
ஆனால் இருவரின் வீட்டினரும் அதற்கு தயாராக இல்லை போல.
சூட்டோடு சூட்டாக பானையை அடுப்பில் ஏற்றி வைத்திருந்தனர்.
முதலில் நான் தயாராக வேண்டும். அதன் பின் தந்தையை சமாளிக்க வேண்டும். இறுதியாக தான் பலராமிடம் பேச வேண்டும் என்ற அஜயின்...
ஒரே பெண். சென்னையில் வேலை பார்க்கிறாள். பெரிய குடும்பத்தில் கொடுக்க ஆசைப்பட்டு அஜய்க்கு கேட்டது.
"இல்லைம்மா" என்று அவளின் அப்பா பேச வர,
"இது எதிர்பாராம நடந்த மாதிரி தான் இருக்கு. பெருசு பண்ண வேண்டாம்ப்பா" என்றாள் அவள் தெளிவாக.
"MP மாமா கொண்டு வந்த சம்மந்தம். தெரிஞ்சே அவரும் பண்ண மாட்டார். விடுங்க" என்றார் அவரின் மனைவியும்.
பெண்ணை...
நதியின் ஜதி ஒன்றே 17
பெண் பார்க்கும் ஏற்பாடுகள் தடல் புடலாக நடந்து கொண்டிருந்தது. அஜய்யிடம் பேசிவிட்டு கீழிறங்கி வந்த ஜீவிதா ஓர் இடமாக பார்த்து அமர்ந்து கொண்டாள்.
கல்யாண் அவளிடம் பேச முனைய, மறுப்பாக தலையசைத்தாள் பெண். அவளின் முகமும் சொல்லி கொள்ளும் படி இல்லாததால் கல்யாண் விலகி நின்றுவிட்டான்.
அவளை வேறொருவரும் கவனித்து கொண்டே தான்...
"என்ன புதுசு. அதெல்லாம் இல்லை, நீங்க எப்போவும் என் அஜு தான்" என்றாள் பெண்.
அஜயின் முகம் மாற ஆரம்பித்தது. கீழ் உதட்டை மடக்கி கடித்தான். "நீங்க கோவப்பட்டீங்க எனக்கு பேச முடியாது" என்றாள் உஷாராக.
அஜய், "மேல சொல்லு" என்றான்.
"அதான் சொல்லிட்டேனே" என்றாள் பெண்.
"என்ன சொன்ன?"
"நீங்க என் அஜுன்னு" பெண் குரல் மெலிதாக மாற, பார்வை...
நதியின் ஜதி ஒன்றே 15
அஜய் வீட்டிற்க்கு ஜீவிதாவின் உறவுகள் எல்லாம் முன் தினமே கிளம்பிவிட்டனர். விடிந்தால் கட்டிட திறப்பு விழா. ஜீவிதாவிற்கு கடைசி நேர வேலை.
முடிக்க வேண்டிய ப்ரொஜெக்டில் அவளும் இருந்தாள். விடுமுறை கிடைக்கவில்லை. வேலை சேர்ந்த புதிது என்பதால் கல்யாண், "ஒரு நாள் லீவ் கிடைச்சா போதும். விடு" என்றான்.
ஜீவிதாவிற்கு வருத்தம் தான்,...
நதியின் ஜதி ஒன்றே 14
அஜய் கிளம்பிய பின்னும் ஜீவிதா அறையை விட்டு வெளியவே வரவில்லை. கல்யாண் வந்தவன் நேரே அவளிடம் சென்றான்.
தாரணிக்கு அப்போது தான் தெரிந்தது தங்கை இவ்வளவு நேரம் உள்ளே இருந்ததே. இருக்கும் கோவம் இன்னும் உச்சிக்கு வந்துவிட்டது.
"ஏன் ஜீவிம்மா. வெளியே வந்து அவன்கிட்ட பேசியிருக்கலாம் இல்லை" கல்யாண் கேட்க,
"இவ ஏன் அஜய்கிட்ட...
தாரணியிடமும் விசாரித்து கொள்வான். கல்யாணிடம் அவளின் படிப்பை பற்றி அறிந்து கொள்வான். அவ்வளவு தான் அந்த நேரம் அவனுக்கு செய்ய முடிந்தது.
ஏதோ நம்ம மேல கோவம். சின்ன பொண்ணு தானே. புரிஞ்சுப்பா என்று விட்டுவிட்டான். ஆனால் இதுவே வருடங்கள் சில கடந்து சிறியவள், பெரியவளாகி சம்பாதிக்கவும் ஆரம்பித்த பிறகும் தொடர்கிறதே.
அஜய்க்கு நேரில் அவளின் வளர்ச்சி...
நதியின் ஜதி ஒன்றே 13
பெண் கிளம்பியிருக்க, அஜய் காரிலே இருந்துவிட்டான். அவன் கண் முன் அந்த பார்சல்.
அவளுக்காக எடுத்து வந்ததை வைச்சுட்டு போவாளா? இன்னமும் அவனால் நம்ப முடியவில்லை.
இவ்வளவு கோவமா என் மேல? ஆனால் ஏன்? அஜய்க்கு புரியவில்லை.
தாரணி திருமணத்தில் வைத்து நான் பேசினது எதார்த்தம். உண்மை.
நான் தூரம் வந்துட்டேன். அங்கிள்க்கும் என்மேல மனசு...
"யாரு நான் பேட்"
"ஆமா. நீங்க ஏன் அக்காவை லவ் பண்ணீங்க, அதனால தான் இவ்வளவு பிரச்சனை. அஜு எங்களை விட்டு தள்ளி போயிட்டான், அப்பா அவரை எவ்வளவு பேசுறார் தெரியுமா? உங்களுக்கு ஹெல்ப் பண்ண போய் அஜு தினமும் திட்டு வாங்குறாங்க"
"ஜீவிம்மா. நான் பாவம் இல்லையா? என் கதையை விட்டுடேன்"
"நீங்க எங்க வீட்டு மாப்பிள்ளை...
நதியின் ஜதி ஒன்றே 12
பெண் மனதில் அஜய் பற்றிய உணர்வுகள் மிகவும் விநோதம் ஆனது. இது தான், இப்படி தான் என்று எதிலும் இணைக்க முடியா உறவு அது.
ஜீவிதாவிற்கு அவனை பிடிக்கும், பிடிக்காது என்பதை எல்லாம் கடந்து அவளில் அவன் மிக மிக முக்கியமானவன்.
குழந்தையில் அவள் முகம் பார்த்து மனதில் பதிய வைக்க தொடங்கிய...
நதியின் ஜதி ஒன்றே 11
சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் தாரணி குடும்பம் பரபரப்பாக கிளம்பி கொண்டிருந்தது. கல்யாண் மதிய உணவை பேக் செய்தவன், மகளின் வருகையில் அவளிடம் சென்றான்.
தாரணி தங்களின் மூன்று வயது மகள், 'ஜியா'வை குளிக்க வைத்து கணவனிடம் கொடுத்தாள்.
"நீ கிளம்பிடு. நான் பாப்பாவை பார்த்துகிறேன்" என்ற கல்யாண், மகளுக்கு உடை அணிவித்து, உண்ண...