தகிக்கும் தீயவள்
*4*
தன்னருகில் அமர்ந்திருக்கும் சக்தியை பார்ப்பதுமாய் பின் குனிந்து கொள்வதுமாய் இருந்த நிலாவை கண்ணாடி வழியே கோவத்துடன் பார்த்த ரவி, “இன்னாத்துக்கு இப்போ நீ க்காவை லுக் வுட்டுட்டு இருக்க? அதான் இளையராஜாகிட்ட பாடம் கத்துக்கிட்டதாட்டம் சோககீதம் வாசிச்சு அட்டை மாதிரி ஒட்டிக்கிட்டியே.” என்று அதட்டலாய் பேச, “ரவி கம்முனு இரு.” என்ற சக்தியின் கண்டனம்...
*5*
எழுந்ததிலிருந்து அவனை ஓரக்கண்ணால் நோட்டமிட்டபடி பரபரப்பாய் அங்குமிங்குமாய் சுழன்று கொண்டிருந்தவளை நாற்காலியில் அமர்ந்து கன்னத்தில் கை வைத்து பார்த்துக்கொண்டிருந்தான் சக்திவேலன்.
“எதுக்கு இப்போ இப்படி பாத்துட்டு இருக்கீங்க? போய் வேற வேலை இருந்தா பாருங்க.” அவன் பார்வை வீச்சை பொறுக்க 7முடியாமல் சிணுங்கினாள் அழகி.
“என் வேலையைத் தானடி பாக்குறேன்.” என்றான் இவனும் கிறக்கமாய்.
“நீங்க இப்படி என்னை...
*10*
அன்று பள்ளி முடிந்ததற்கான பெல் அடிக்கவும் அரட்டையடித்துக்கொண்டு மாணவர்கள் வெளியேற, கயல்விழி பேக்கை மாட்டிக்கொண்டு வகுப்பறையில் இருந்து மெதுவாக ஆசிரியர் அறை நோக்கி நடந்தாள். எதிர்ப்பட்ட நிலா இவளைக் கண்டதும் அப்படியே நிற்க, அவளை கூர்ந்து பார்த்த கயல்விழி உதடு சுழித்தபடி கடந்தாள்.
‘இந்த சிறுசு கூட மதிக்க மாட்டேங்குது. என்ன பொழப்புடா இது.’ விரக்தி...
*9*
அன்று தீபாவளிப் பண்டிகை. ஊரே விழாக்கோலம் பூண்டிருக்க, சக்திவேலன் எழுவேனா என்று உறக்கத்தை தழுவியிருந்தான். அவன் அழகியும் விடுவேனா என்று தலை குளித்து துவட்டிய துண்டின் நுனியை மெலிதாக சுருட்டி அவன் செவி துவாரத்தில் விட்டு தீண்டினாள். உறக்கம் தடைபட முகம் சுழித்து செவி தீண்டுவதை தட்டிவிட்டு முகத்தை மறுபுறம் திருப்பி உறக்கத்தை தொடர,...
*8*
வாக்கு கொடுத்தது போல் மாலை பள்ளி முடித்து வீடு வந்து வயிற்றை கவனித்து உடை மாற்றி கயல்விழியை கடற்கரைக்கு அழைத்துச் சென்றான் சக்திவேலன். மாலை மங்கி இருள் கவிழத் தொடங்கியது. சிலிர்க்க வைக்கும் தென்றலின்றி மனதை இலகுவாக்கும் காற்றாய் தேகம் உரசிச் செல்ல, ஆங்காங்கு மக்கள் கூட்டம்.
கடலூரில் கடற்கரை இருந்தாலும் அவர்கள் இருந்த இடத்திலிருந்து...
*7*
வழக்கம் மாறாது நாட்கள் அதன்போக்கில் நகர, அப்பாவும் மகளும் அப்பள்ளியில் கச்சிதமாக பொருந்திவிட்டார்கள். வார விடுமுறை தினமான அன்று இருவரும் நன்றாக இழுத்துப் போர்த்தி உறங்கிக்கொண்டிருக்க, அழைப்பு மணி சத்தத்தில் கண் விழித்தான் சக்திவேலன். தன் மேல் கால் போட்டு உறங்கும் மகளை நகர்த்திவிட்டு எழுந்தவன் அணைவாய் தலையணை வைத்துவிட்டு கண்களை கசக்கிக்கொண்டே வந்து...
*11*
“அக்கா, இவங்க கயல் பாப்பாவோட அப்பா, எங்க ஸ்கூல்ல சயின்ஸ் டீச்சரா இருக்காங்க.” என்று நிலா சக்திவேலனை காண்பித்து சக்தியிடம் சொல்லியவள், “சார் இவங்கதான் என்னை காப்பாத்தி வேலையில் சேர்த்துவிட்டு இந்த நிலைமையில வச்சிருக்காங்க. சக்தி அக்கா.” என்று சக்திவேலனிடம் அவளை அறிமுகப்படுத்தி வைத்தாள்.
இருவருக்குமே அவள் சொல்வது எதுவும் சிந்தையில் ஏறவில்லை. பல வருட...
கடலூர் மாவட்டத்தில் ஒரு பகுதியின் பெயரை சொல்லி அங்கிருக்கும் பள்ளியின் பெயரை குறிப்பிட்டவள், “நான் அங்க ரெண்டு வருஷம் படிச்சேன் சார். நீங்ககூட எனக்கு அப்போ சயின்ஸ் க்ளாஸ் எடுத்தீங்க, குடும்ப கஷ்டம்னு ஒருதடவை புக்ஸ், நோட்ஸ் வாங்க ஹெல்ப் கூட பண்ணீங்க.” என்று அவளே அறிமுகப்படுத்திக்கொள்ள, அந்த ஊர் மற்றும் பள்ளியின் பெயரைக்...
*12*
ஊர் அடங்கி சாய்ந்த வேளையில் அவளெதிரே அமர்ந்திருந்தான் ராஜா. கண்களும் கன்னங்களும் உப்பி, நாசி சிவந்து, கலைந்த கோலமாய் இருந்தவள் அவளாகவே வாய் திறக்கட்டும் என்று அமைதியாய் இருந்தான். வழக்கமாக இது போன்ற பின்னிரவு நேரங்களில் அவள் வீட்டிற்கு வருவதை தவிர்த்து விடுபவன் இன்று ஒரு வேலை சம்மந்தமாக பேச வந்தபோது அவளின் உருக்குலைந்த...
*13*
வாசலை பார்ப்பதுமாய் ஓரமாய் இருக்கும் கூடையை பார்ப்பதுமாய் இருந்த சக்தியின் கவனத்தை காலடி சத்தம் கலைத்தது. நிமிர்ந்து பார்த்த சக்தி ஆசுவாசம் கொண்டவளாய் பெரிதாக புன்னகைத்து, “உனக்காக தான் காத்திட்டு இருந்தேன்மா. எனக்கு ஒரு உதவி ஆகணும் உன்னால.”
“காலையிலேயே போன் போட்டு கூப்புட்டிருக்கீங்க, உதவின்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க. என்னனு ஆடர் போடுங்க அக்கா.”...
*15*
உறக்கம் கலைந்து எழ முனைகையில் அருகில் உறங்கிக்கொண்டிருந்த கயல்விழி மீது லேசாக கை பட்டுவிட, சட்டென தன் குட்டி இமைகளை பிரித்து விழித்தவளோ சிணுங்கினாள். ஐயோ என்று நெற்றியில் கை வைத்து பதறிய அழகி அவளை தூக்கி தோளில் போட்டு தட்டி கொடுத்துக்கொண்டே பக்கவாட்டில் திரும்பிப் பார்க்க, சத்தத்தில் புரண்டு படுத்தான் சக்திவேலன்.
“அப்பா தூங்குறாங்கடா...
“என்னமா எல்லா இடத்துலயும் கை விரிச்சிட்டாங்களா? இந்த சமுதாயமே அப்படிதான். தேவைங்கும் போது கூட நிக்காது. கொள்ளையடிக்கத்தான் பார்க்கும், இந்த ஆஸ்பித்திரி மாதிரி.” என்று மருத்துவமனையை பார்க்க,
“ஏதோ ஐட்டம் அதுஇதுனு சொன்னீங்களே. என்ன அது?” தயக்கம் இருந்தாலும் அழகுராணிக்கும் வேறு வழி தெரியவில்லை. என்னதான் சொல்கிறார் பார்ப்போம் என்று கேட்டாள்.
“பெருசா ஒன்னுமில்லைமா. எங்கிட்ட ஒரு...
*14*
அனைத்தையும் விட்டுவிடலாம் என்று இலகுவாக சொல்லியிருந்தாலும் ரவி காவல் நிலையத்தில் இருக்கிறான் என்றதும் அப்படியே அனைத்தையும் விட்டுவிட முடியும் என்று தோன்றவில்லை சக்திக்கு. அதுவும் போதை பொருள் வழக்கில் கைதாகி இருப்பவனை முயன்றுதான் வெளியே எடுக்க வேண்டும். அதற்கு தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி சில பல காரியங்களை மீண்டும் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்....
“சக்திவேலன் அட்டெண்டென்ட் யாரும் இருக்கீங்களா?” செவிலியர் வந்து கேட்கவும் பதறி எழுந்தவள், “அவருக்கு ஒன்னுமில்லைல நல்லா இருக்காருல்ல?”
“உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லைம்மா. மத்ததை டாக்டர் சொல்வாங்க. போய் பாருங்க.” என்று மருத்துவர் அறைக்கு வழிகாட்டினார்.
படபடத்து கனத்திருக்கும் இதயத்தோடு கயல்விழியை தன்னுடன் இறுக்கிப் பிடித்தபடி மருத்துவரிடம் சென்றாள்.
“அவர் பழையபடி எழுந்து நடமாடனும்னா மூளையில ஒரு ஆப்ரேஷன்...