சுடும் பனித்துளியே!
அதற்கு அவள் பதில் சொல்லும் முன்,
“அபி!” என்று சற்றே குரலை உயர்த்தி அழைத்த வேலம்மாள் பொருமலுடன், “இப்படி கூடவே இருந்து ஏமாத்திட்டியே! இதை உன் கிட்ட நான் எதிர்பார்க்கலை” என்றார்.
“எதிர்பார்த்து இருக்கணும்” என்றவன், “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்றதோடு முடித்துக் கொண்டான். அப்பொழுதும் அவன் முகத்தில் சிறு மென்னகை குடிகொண்டிருந்தது தான்.
“போயும் போய்...
சில நொடிகள் யோசித்த பனிமலர், “உங்களுக்காக இல்லைனாலும் இளைய சமுதாயத்துக்கு முன்னோடியா இருப்பதால், சம்மதிக்கிறேன்.. ஒரு வருஷம் வீட்டோட மாப்பிள்ளையா நீங்க இருக்கலாம்.. ஆனா உங்க குடும்பத்தினருடன் எந்த வித தொடர்பிலும் நீங்க இருக்கக் கூடாது” என்றாள்.
வேலம்மாள் கத்த வாயை திறக்க, அவர் பேசும் முன் அபியுதித், “நான் பேசிக்கிறேன்” என்று அழுத்தத்துடன் கூறி...
ஆழ்ந்த மூச்சொன்றை இழுத்து விட்டவன், “ஆல்ரைட்! இந்த தண்டனைக்கு நான் சம்மதிக்கிறேன்.. ஆனா ஒரு வருஷத்துக்கு தான்” என்றான்.
“நானும் அதை தானே சொன்னேன்!”
மறுப்பாக தலை அசைத்தவன், “ஒருவேளை ஒரு வருஷம் கழிச்சு நீ என்னுடன் வாழ்ற முடிவை எடுக்கும் பட்சத்தில்...” என்று இழுத்து நிறுத்தி அவளை ஆழ்ந்து நோக்கினான்.
“அண்ணியா என் கடமையைச் செய்ய தவற...