குவியமிடும் நேசம்
அத்தியாயம் 06
மனோவிற்குப் பெரிதும் ஆச்சரியமாக இருந்தது. தனுஜாவுக்கு திருமணம் முடிந்து இரண்டாவது பிள்ளை வர இருக்கும் நிலை, தர்ஷனுக்குத் திருமணமாக உள்ளது இவர்கள் வயது ஷிவன்யாவிற்குத் திருமணம் ஆகவில்லையா!
"ஏன் கல்யாணம் செய்யலை?" வியப்போடு தர்ஷனை நோக்கி வினவ, "மனோ" கண்டித்தான்.
"இல்லைடா நம்ம மலருக்கே முறைப்பையன்னு நீ இருந்தும் இன்னும் ஏன் கல்யாணம் ஆகலைன்னு சொந்தத்துல சோசைட்டில...
சட்டென விளையாட்டைக் கைவிட்டு, தர்ஷனுக்கு அழைத்தபடி எழுந்து சென்றான்.
வேலையின் பரபரப்பிற்கு மத்தியில் தர்ஷன் அழைப்பை எடுத்ததுமே, “உன் ஃப்ரண்ட் ஷிவா ஷிவான்னு சொன்னியே அது பொண்ணுன்னு ஏம்லே சொல்லலை?” காய்ந்தான்.
“டேய் அவ பெயர் ஷிவன்யா! நாங்க ஷிவான்னு தான் கூப்பிடுவோம்” மறுமுனையில் தர்ஷன் பெயர்க் காரணம் கூறிக்கொண்டிருக்க, பொறுமை இழந்திருந்த மனோ, “நல்லா வாயில...
ஒருவாரமும் ஓய்வில்லாது பம்பரமாக சுழன்றது ஸ்டுடியோ. காலையில் முதல் ஆளாக வந்துவிடும் ஷிவி இரவு வரையிலும் இங்குதான் இருந்தாள்.
காலையில் மனோ வரும் போது, ஷிவி அவளறையில் இருந்தாள்.
வெகு நேரமாகியும் காலை உணவிற்குக் கூட எழுந்து செல்லாது, வேலையில் ஆழ்ந்து போய் அமர்ந்திருந்தாள்.
ஒன்பதரைக்கு வேலைக்கு வந்த மனோவின் முதல் பார்வை அவளைச்...
இவளின் மென் குரலிலும் இலகுவான நிலையிலும் கொஞ்சம் தைரியம் வரப் பெற்றவன், ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அவள் முன் அமர்ந்தான்.
“ஏங்க இப்போ எப்படி இருக்கு? ஹாஸ்பிட்டல் போகலாமா?” என்றான் தன்மையாக.
மறுப்பாய் தலை அசையத்தவள், “நோ நீட் டு வொரி, ஐம் ஆல்ரெட்” என்றவள், கையூன்றி தலை குனிந்து, உள்ளங்கைக்குள் முகம் புதைத்துக் கொண்டாள்.
“ஏங்க...
அத்தியாயம் 07
முன்பெல்லாம் ஷிவி தனது வேலைகளில் குறை கூறினாலே வார்த்தைக்கு வார்த்தை வாதாடுவான். அவள் குற்றச்சாட்டுகளைக் கேட்காது அலட்சியப்படுத்துவான் மனோகர்.
ஆனால் இப்போதெல்லாம் காது கொடுத்துக் கேட்டாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவள் அந்தஸ்திற்கும் அனுபவத்திற்கும் தன் வேலையைக் குறை கூறுவது நெருடியது.
முன்பெல்லாம் கோபம் வரும், இப்போதெல்லாம் துவண்டு ஒருநொடி சோர்வை உணர்ந்தாலும் சரியாகச் செய்கிறேன் பாரென...
அத்தியாயம் 09
மனோகருக்கு அன்றும் ஷிவான்யாவால் சிவராத்திரியாகிப் போனது.
மாலை வீட்டிற்குள் வந்ததும் நீண்ட பெருமூச்சை விட்டுக்கொண்டான்.
அவளுக்கு மூச்சு கொடுத்ததில் இருந்து இவன் மூச்சை இழுத்துப்பிடித்துக் கொண்டுதான் இருந்தான்.
அவள் சுயநினைவில் இல்லை, ஆனால் இவன் பரிபூரணமாகத் தெளிவுடன் இருந்தான் தானே? அவள் இயல்பாக நொடியில் கடந்து சென்றுவிட, மனோவால் உண்மையில் முடியவில்லை.
அவள் பழைய பத்திரகாளியாகவே...
அத்தியாயம் 08
நிமிர்ந்து நான்கு புறமும் விழிகளைச் சுழற்றிய ஷிவன்யா, வடமேற்கு மூலையில் சுவரோரம் நின்ற மனோவையும் கண்டுகொண்டாள்.
“என்னை ஏங்க பார்க்குறீங்க? இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்க” அவள் ஒரு பார்வைக்கே இவன் பிதற்றிக் கொண்டிருந்தான்.
அவளோ எப்போதும் போல அலட்சியப்படுத்தி விட்டு, இது அது என்று இல்லாது அனைத்து பொத்தான்களையும் விசை கொண்டு அழுத்தினாள்....
அத்தியாயம் 04
செவ்வரி உதடுகள் துளித் துளியாக கசந்த காஃபியை உள்ளிழுக்க, தொண்டை வழி இறங்கிய இதமான இளஞ்சூடு நெஞ்சத்தின் சூட்டைத் தணிக்க, மெல்ல உடல் தளர்ந்தாள். மூளையின் ஒவ்வொரு செல்லிலும் சோர்வு நீங்கி, புத்துணர்வு பிறந்தது.
“சாஹர், ஜெனி” உரத்த குரலில் ஓங்கி அழைக்க, அடுத்த நொடி, மந்திரவாதியின் அழைப்பிற்கு வரும் பூதம் போல இருவரும்...
அத்தியாயம் 02
மாநகரின் காலை நேரப் பரபரப்பிற்கு சிறிதும் பஞ்சமில்லாமல் இருந்தது மனோவின் அத்தை வீடு.
அத்தை காயத்ரி தலைமை தபால் துறையில் அரசு வேலையில் இருக்க, மாமா செந்தில்நாதன் பல நிறுவனங்களுக்கு ஆடிட்டராக இருக்கிறார்.
செந்தில்நாதனும் இவர்களுக்கு நெருங்கிய சொந்தம். ஆகையால் மனைவியின் உறவுகள் தன் உறவுகள் என்ற வேறுபாடெல்லாம் இவர்கள் வீட்டிலில்லை.
மேல்தட்டு வர்க்கம் இருக்கும் லக்ஸூரி...
அத்தியாயம் 05
புதிய விடியலில் புத்துணர்ச்சியோடு வேலைக்கு வந்திருந்தான் மனோகர்.
"ஹாய் சேச்சி வந்தாச்சா ஓ பேபி?" எனக் கேலியாக கேட்க, யாரைக் கேட்கிறான்? எனப் புரியாது முழித்தார் மாதவி.
அதன் பின்பே ஸ்டைலாக தலை கோதி நடித்துக் காட்ட, அது ஷிவன்யா எனப் புரிபட, சிரிப்புடனே தலையாட்டினார்.
ஷிவன்யா காலை எட்டுமணிக்கு வந்தால் இரவு எட்டு மணிக்குதான் வீடு...
அத்தியாயம் 11
விட்டுவிட மாட்டேன் என்பதைப் போன்று பிடியின் அழுத்தம் கூட்டியவன், "எங்க போறீங்கன்னு சொல்லிட்டுப் போங்க" என்றான் அதிகாரமாக.
முதல் முறையாகப் புன்னகை தொலைத்து, சிறிதும் அச்சமின்றி தன்னைக் கோபமாக முறைக்கும் மனோகரைக் காண, ஏனோ நெருடியது ஷிவன்யாவிற்கு.
கொதித்துப் போனவள், கைகளை உருவிக்கொள்ள முயற்சி செய்தாள். மூக்கு நுனியில் இருந்து காது மடல்கள் வரை...
அத்தியாயம் 03
கதிரேசன் ஊரை விட்டு விரட்டியதால் மட்டும் தலையசைத்து வந்து விடவில்லை மனோகர். அப்படியொன்றும் இவன் தந்தை கிழித்த கோட்டை தாண்டாத தனயனுமில்லை.
இவனுக்கு இவன் கேமராவைச் சரி செய்ய வேண்டி முக்கிய தேவை இருந்தது. ஆகையால் தான் உற்சாகமாக ஊரை விட்டு வந்துவிட்டான்.
இப்போதோ அது முடியாது என்றான பின், புதிதாக ஒன்றை வாங்கும் திட்டம்...