கண்ணே முத்து பெண்ணே
அறையை விட்டு வெளியே வந்த நொடி, அளவுக்கு அதிகமாக வெப்பத்தை உணர்ந்தான்.
அவ்வளவு நேரம் ஜில்லிட்டு இருந்தவன், இப்போது மூச்சையும் நன்றாக இழுத்துவிட்டு கொண்டான்.
ஒரு வார்த்தை கூட விட்டு விட கூடாது என்பதில் கவனமாக இருந்தவன், இப்போது ஆசுவாசத்துடன் அந்த கேட்டை விட்டு வெளியே வந்தான்.
அந்த தெரு முடியும் இடத்தில் ரவி காத்திருந்தவன், "மாப்பிள்ளை" என்று...
கண்ணே முத்து பெண்ணே 24
செல்வம் கிளம்பி கொண்டிருக்க, அரக்க பறக்க ஓடி வந்தான் ரவி.
"மாப்பிள்ளை. நானும் வரேன். போயிடலாம்" என்று நின்றான்.
செல்வத்துக்கு யோசனை. எதற்கு வர சொல்லியிருப்பார்கள் என்ற அனுமானம் உண்டு.
அங்கு ரவி வருவது, அவனுக்கு எந்தளவு பாதுகாப்பு என்று செல்வத்திற்கு தெரியவில்லை.
எனவே, "நீ வேணாம் மச்சான். நான் பார்த்துகிறேன்" என்றான்.
"இல்லை. நான் வரத்தான்...
கண்ணே முத்து பெண்ணே 17
மிகவும் எளிய வகையில் அவர்களின் திருமணம் நடைபெற்றிருந்தது. கோவிலில் வைத்து எண்ணிவிடும் ஆட்களின் முன், அவனின் முத்து பெண்ணுக்கு மாங்கல்யம் சூட்டினான் செல்வம்.
தம்பதி சகிதமாக இருவரும் நின்றதே, மணமக்களுக்கு நிறைவை தந்துவிட்டது.
செல்வம் குறைந்த நேரத்தில் தேடி பிடித்த முகூர்த்த புடவையில் முத்து பெண் மிளிர்ந்தாள். தங்க நகைகள் பெரிதாக அணியவில்லை.
செல்வம்...
கண்ணே முத்து பெண்ணே 8
மகள் இங்கு இருப்பாளோ என்ற சந்தேகத்திலே கோவிலில் இருந்து கிளம்பி வந்த நாராயணனுக்கு நாச்சி அங்கு தான் இருந்ததில் எதையும் யோசிக்காமல் காரை நிறுத்திவிட்டார்.
அவரை தொடர்ந்து மற்றவர்களும் நிறுத்தி இறங்கிவிட, நாராயணன் ம்ப்ச் என்று தலையில் தட்டி தன்னை சமாளித்து கொண்டார்.
எல்லோரும் உள்ளே வந்துவிட, "பொண்ணு இங்க தான் இருக்கா"...
கண்ணே முத்து பெண்ணே 4
செல்வாவிற்கு ரெஜிஸ்டர் ஆபிஸ் ஏன் என்ற கேள்வி?
அதை கேட்கவும் செய்ய, "நீ முதல்ல வந்து இப்படி உட்காரு" என்று திரும்ப தன் பக்கத்தில் அமர வைத்து கொண்டார் அண்ணாச்சி.
அவனுக்கு குடிக்க டீ கொண்டு வர சொல்ல, "இருக்கட்டும் அண்ணாச்சி" என்று மறுத்துவிட்டான்.
"அது செல்வா. நாராயணனுக்கு அவ ஒரே பொண்ணு. பாசம்...
கண்ணே முத்து பெண்ணே 11
அகிலனுக்கு அழைத்த செல்வம், அவன் எடுக்காமல் போக புருவத்தை சுருக்கினான்.
அமைச்சர் சொன்னாரா என்று நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்! அதற்கு அகிலன் மட்டுமே ஒரே வழி.
இப்போது அவனும் அழைப்பை ஏற்கவில்லை எனும் போது எப்படி தெரிந்து கொள்ள? வேகமாக யோசித்தான்.
அண்ணாச்சியின் திட்டபடி தான் நடந்தது. ஆனால் முன்பிருந்த செல்வம் இவன்...
கண்ணே முத்து பெண்ணே 18
ரவி அவனின் அம்மாவுடன் வீட்டிற்கு வர, நாராயணன் வாசலிலே அமர்ந்திருந்தார். கதவை திறந்து வீட்டிற்குள் கூட செல்லவில்லை.
"என்னங்க இங்கேயே உட்கார்ந்திட்டிங்க? வாங்க, உள்ள வாங்க" என்று கமலா கதவை திறந்து கணவரை அழைக்க, நாராயணன் அமர்ந்த இடத்திலே மனைவியை பார்த்தார்.
கமலா கைகளை பிசைந்து நிற்க, ரவி கார் நிறுத்தி வந்தவன்,...
கண்ணே முத்து பெண்ணே 14
அதிகாலையில் எப்போதும் போல் சென்னைக்கு கிளம்பிய முத்து நாச்சியை காணவில்லை என்று ஓடி வந்தான் ரவி.
செல்வம் புது கடையிலே இருந்தான். இரவு நாச்சியிடம் பேசி முடித்தபின் அவனின் தந்தை அழைத்திருந்தார்.
'என்ன இந்த மனுஷன் புதுசா போன் எல்லாம் பண்றார்? அதுவும் இந்த நேரத்துல?' செல்வம் நினைத்தபடி எடுக்க, "முக்கியமான விஷயம்...
கண்ணே முத்து பெண்ணே 5
அண்ணாச்சி பரபரப்பாக சாலையையவே பார்த்திருந்தார். நேரம் நெருங்கிவிட்டது. செல்வம் இன்னும் வரவில்லை.
"அவன் வர மாட்டான்" என்றார் நாராயணன்.
"அவன் வரலைன்னா ஆப்பு நமக்கு தான். மறந்துட்டியா நாராயணா" அண்ணாச்சி கேட்க,
"எல்லாம் தெரிஞ்சு தானே இறங்கினோம், பார்த்துக்கலாம்" என்றார் அவர்.
"உனக்கு உன் பொண்ணு பைத்தியம் பிடிச்சுடுச்சு. அவளை காப்பாத்துறேன்னு நாம தான் மாட்டிக்க...
கண்ணே முத்து பெண்ணே 15
'இவன் என்ன முடிவெடுக்கிறது? அப்புறம் அப்பன்னு நான் எதுக்கு இருக்கேன்?’ என்ற நாராயணன் கோவத்தை எல்லாம் செல்வம் கணக்கிலே வைக்காமல் கிளம்பிவிட்டான்.
ரவி தான் அவன் பின்னே ஓடிவந்தவன், "என்னடா பண்ண போற?" என்று கேட்டான்.
"தெரியலை. உன் காரை எடுத்துகிறேன்" என்று செல்வம் காரில் ஏற,
"தெரியலையா? டேய் இருடா நானும் வரேன்"...
கண்ணே முத்து பெண்ணே 9
செல்வத்தை தன் ஆள் அகிலனிடம் அறிமுகம் செய்து வைத்த அமைச்சர், பார்ட்டியை தொடங்கிவிட்டார்.
எல்லாரும் கையில் கிளாஸுடன் மிதக்க, அகிலனும் எடுத்து கொண்டு வந்தான்.
செல்வம் அவனுக்காக வந்த சோடாவை மறுத்துவிட, "இப்படி வாங்க" என்று அவனை தனியே அழைத்து கொண்டு வந்தான் அகிலன்.
இருவரும் ஓர் இருக்கையில் அமர, அண்ணாச்சி பார்வை இவர்களையே...
கண்ணே முத்து பெண்ணே 19
செல்வத்திற்கு அடுத்து என்ன என்ற கேள்வி?
நாராயணன் அவரின் மகளிடம் எல்லாம் சொல்லிவிட்டார். அவனின் முத்து பெண் இவனை தான் பார்த்திருக்கிறாள்.
'இவர் சொல்றது உண்மையா?' என்று கண்களால் கேள்வி கேட்டு கொண்டிருக்கிறாள்.
செல்வம் அவளின் பார்வையை எதிர்கொண்டானே தவிர, பதில் அளிக்கவில்லை.
"நாச்சி. அப்பா சொல்றது உண்மை நாச்சி. பாரு அங்க அந்த பெட்டி...
கண்ணே முத்து பெண்ணே 13
இன்னமும் அவர்கள் முத்து பெண் வைத்து பேசியது செல்வத்துக்கு பிடிக்கவில்லை. அப்பாவா இருந்தா என்ன? யாரா இருந்தா என்ன?
அவங்க எப்படி இவளை இழுக்கலாம்? அதனாலே நாள் பார்க்க அவளிடம் கேட்டான் செல்வம்.
நாள் குறிக்கணுமா? திடீரென ஏன் இப்படி கேட்கிறார் என்று புரியாமல் செல்வத்தை பார்த்தவள், "ஏன் இப்போ இந்த பேச்சு?...
எல்லாம் இருக்கும் போது சார் தான் என்பதால், "சொல்லுங்க செல்வம்" என்றான் அகிலன்.
"அது அண்ணாச்சி, என்கிட்ட ஷேர் பத்தி பேசினார். அதான் உங்ககிட்ட கேட்டு"
"செல்வா, செல்வா என்ன பேசுற நீ? அதெல்லாம் ஒன்னுமில்லை" என்று அண்ணாச்சி பதறி போய் செல்வத்தின் கையை பிடித்து நிறுத்தினார்.
"என்ன ஷேர்?" அகிலன் அவன் பொறுப்புக்கு வந்து கூர்மையாக கேட்டான்.
"அது...
கண்ணே முத்து பெண்ணே 12
அண்ணாச்சி சொல்ல வரும் விளக்கத்தை எல்லாம் அமைச்சர் கேட்கும் நிலையிலே இல்லை.
கட்சி பெயர் மீடியாவில் கிழிந்து கொண்டிருக்க, அவரின் மேலிடம் அமைச்சரை காய்ச்சிவிட்டது.
அந்த நிரூபர் மிக தெளிவாக கட்சியின் பெயரில் இவர்கள் செய்த சம்பவத்தை வெளியிட்டிருந்தான்.
"உன் தொகுதியில நடந்த வேலை இது. நீ தான் இதுக்கு பொறுப்பெடுக்கணும். மேலிடத்துக்கு பதிலும்...
"மணி. நான் சீரியஸா சொல்றேன். என்னோட இருந்தா உனக்கு என்ன கிடைச்சுடும்? டீ கடை எல்லாம் ஒரு தொழிலா நம்ம ஆளுங்க பார்க்கிறதில்லை. உனக்கும் வயசு ஆகுது. கல்யாணம் காட்சின்னு"
"ண்ணா. டீ கடையிலே லட்சம் சம்பாதிக்கிறவங்க எல்லாம் இருக்காங்க"
"டேய் நம்ம ஆளுங்களுக்கு அதெல்லாம் தெரியாது. நீ நான் சொல்றதை கேளு. கிளம்பு"
"ஏன் என்னை துரத்திட்டு...
செல்வம் அமைதியாக நிற்க, அண்ணாச்சி மேலும் பேசினார். "முன்ன நாம பேசி வைச்சது தான் அதுவரைக்கும் இந்த விஷயம் வெளிய தெரியாம பார்த்துக்கலாம்" என்றார்.
"என்ன தான் நாராயணன் எனக்கு பங்காளியா இருந்தாலும், நீயும் என் தங்கச்சி மகன் தான் செல்வம். அவன் உன்னை இப்படி பேசினத்துக்காகவே நாம இதை எடுத்து செய்யலாம். அப்புறம் இவனை...
கண்ணே முத்து பெண்ணே 22
எண்ணிவிடும் நாட்களே மிச்சமிருக்க, செல்வம் அடுத்து என்ன செய்ய என்று பார்த்து கொண்டிருந்தான்.
பத்திர பதிவுக்கு தேவையான அத்தனையும் அகிலன் தான் செய்து கொண்டிருக்க, செல்வம் அதில் மெல்ல உள் நுழைந்தான்.
"இதுக்கு என்ன பண்ற, யாரை கேட்கிற, எவ்வளவு பணம்?" என்று அத்தனை கேள்விகள்.
ஒருவேளை இவன் பயப்படுறானோ என்று நினைத்த அகிலன்,"உனக்கு...
கண்ணே முத்து பெண்ணே 20
முத்து பெண்ணை கல்லாவில் பார்த்ததும் செல்வத்திற்கு அதிர்ச்சியே!
அடுத்து அவள் என்ன செய்ய போகிறாள் என்பதை மிக தெளிவாக காட்டிவிட்டாள்.
ஆனால் அது கணவனுக்கு தான் ஒப்பவில்லை.
எனக்கு தான் தலையெழுத்து, இவளுக்கு என்ன?
நல்லா படிச்சு, அருமையான வேலையையும் விட்டு, இதென்ன?
செல்வம் முகம் சுருங்க, மேலேறிவிட்டான். நேரம் எடுத்து குளித்து வர, சமையல் அறையில்...
கண்ணே முத்து பெண்ணே 23
எப்படி நடந்தது இது? எப்படி, எப்படி? என்று அண்ணாச்சி திணறி கொண்டிருந்தார். அவருக்கு நடந்ததை ஏற்று கொள்ளவே முடியவில்லை.
திடீர்ன்னு சொத்தை என் பேர்ல எழுதுற அளவுக்கு, என்ன நடந்திருக்கும்? யார் பார்த்த வேலை இது? சுத்தி உள்ள அனைவரையும் யோசித்தார். நாராயணன், செல்வம் உட்பட. எவ்வளவு யோசித்தும் பதில் மட்டும்...