Sunday, April 20, 2025

    "இதயத்துள் வரலாமா?"

    அத்தியாயம் –  6 மதியம் விக்ரம், நந்தகுமாருடன் சரவணனும் வீட்டுக்கு சாப்பிட வந்திருந்தார். அவர் காலை நேரமே இளம் நாட்டுக் கோழியைப் பிடித்துவந்து தோலுரித்து கொடுத்துவிட்டு தான் வயக்காட்டுக்கு சென்றிருந்தார். நந்தகுமார் உணவுண்ண வரும்போது நண்பனையும் அழைத்து வந்துவிட்டார். “என்ன சுபா, சமையல் ரெடியா...? தெரு முனைலயே வாசனை தூள் பறக்குது...” ஆவலுடன் கேட்ட கணவரிடம், “எல்லாம் தயாரா...
    அத்தியாயம் –  5 “மச்சான், இன்னும் ரெண்டு நாள்ல வீட்டுக்குப் பெயின்ட் அடிக்க ஆளுங்க வந்திருவாங்க, நீங்க விக்கணும்னு சொன்ன மாந்தோப்பைக் கூட என் நண்பர் ஒருவரே வாங்கிக்கறேன்னு சொல்லிருக்கார், நாளை மறுநாள் பார்க்க வரேன்னு சொன்னார்... மாப்பிள கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன், உங்களுக்கும் விவரம் சொல்லிடலாம்னு தான் கூப்பிட்டேன்... உங்களுக்கு சந்தோசமா...?” நந்தகுமார் தொலைபேசியில்...
    அத்தியாயம் – 12 கண்ணில் கண்ட காட்சியில் வெலவெலத்துப் போய் அதைக் காண முடியாமல் அதிர்ச்சியில் திரும்பி நின்றாள் நந்தினி. அந்தப் பெரிய குளியலறையின் வெளியே இருந்த வராண்டாவில் தரையில் தேவி மல்லாந்து படுத்திருக்க அவள் மீது கவிழ்ந்து படுத்திருந்தான் விக்ரம். தேவியின் உடலில் பொட்டுத் துணியின்றி இருக்க, விக்ரம் இடுப்பில் வெறும் டவலுடன் அவள் இதழில்...
    அத்தியாயம் –  8   பழைய வீட்டில் பெயின்ட் அடிப்பதுடன் சில மாற்றங்களை செய்யச் சொல்லி இருந்தான் விக்ரம். அதில் படுக்கையறைகளுக்கு அட்டாச்டு பாத்ரூமும் கட்ட ஏற்பாடு செய்திருந்தான். பெயின்டிங் வேலை ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க பாத்ரூமும் கட்டி முடித்திருந்தனர். சில பொருட்கள் தீர்ந்து விட்டதால் அதை வாங்கிவிட்டு மறுநாள் காலை வேலையைத் தொடர்வதாக சூப்பர்வைசர் சொல்லிவிட...
    அத்தியாயம் 18 கையைப் பிசைந்தபடி போர்ட்டிகோவில் தேவிக்காய் காத்திருந்த விஜயா ஆட்டோ வந்து நிற்கவும், வேகமாய் ஒரு குடையுடன் கேட் அருகே சென்றார். “அ..அக்கா, ஆட்டோவுக்குக் காசு கொடு..த்திருங்க…” எனச் சொல்லி முடிக்குமுன் தேவி மயங்கி விழப்போக வேகமாய் தாங்கிக் கொண்டார். பதட்டத்துடன், “தேவிம்மா…” என எழுப்ப முயல, அந்த ஆட்டோக் காரரும் ஓடி வந்து மறுபுறம் பிடிக்க இருவருமாய் அவளை வீட்டுக்குள் அழைத்து...
    அத்தியாயம் – 13 அன்றைய உறக்கத்தைத் தொலைத்தது நந்தினியின் விழிகள் மட்டுமல்ல, அவளோடு மேலும் நான்கு விழிகளும் உறங்காமல் பழையதை அசை போட்டபடி விழித்திருந்தன. அவ்விழிகளின் சொந்தக்காரர்கள் விக்ரமும், தேவியும். விக்ரமின் மனதில் கல்யாணத்தன்று நடந்த காட்சிகள் ஓடிக் கொண்டிருந்தன. அன்று தேவியின் உயிரைக் காப்பாற்ற மயக்கமாகிக் கிடந்தவளின் உதட்டில் தன் உதட்டைப் பதித்து சுவாசம் கொடுத்ததையே...
    அத்தியாயம் – 10 அந்தப் பெரிய ஹோட்டலின் முன் ஆட்டோவில் வந்திறங்கிய தேவிக்கு சற்று படபடப்பாய் இருந்தது. அத்தை பத்மா, அவளிடம் உள்ள சேலைகளைப் பார்த்து முகம் சுளித்து, நிகிதாவின் சேலை ஒன்றைக் கொடுத்து உடுத்துக் கொள்ள சொல்லி இருந்தாள். ராமர் பச்சையும், கருநீலமும் கலந்திருந்த அந்த சில்க் சேலையை உடுத்ததும் அவளுக்கே சற்று வியப்பாகத்தான்...
    அத்தியாயம் – 11 ஹால் சோபாவில் அமர்ந்து பாத்திரத்திலிருந்த திராட்சையை சுவைத்தபடி கண்களை டிவியில் பதித்திருந்தாள் பத்மா. நந்தகுமாரும், சுபாஷினியும் தேவியை அழைத்துக் கொண்டு கடை வீதிக்கு ஏதோ வாங்க சென்றிருந்தனர். போர்டிகோவில் நின்று யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்த கணேசன் கேட் அருகே ஒரு டாக்ஸி வந்து நிற்பதைக் கண்டுவிட்டு யாரென்று நோக்க, மகள் நிகிதா...
    அத்தியாயம் –  9 “விஜயா, மதியம் சமையல் செய்யும்போது அந்தப் பொண்ணையும் பக்கத்துல வச்சு நம்ம வீட்டுப் பழக்க வழக்கம், யார்க்கு என்ன பிடிக்கும்னு எல்லாம் சொல்லிக் கொடு... தெரிஞ்சுகிட்டும்...” “சரிங்க மா...” “அவ பட்டிக்காட்டுல இருந்து வந்தவ, மெஷின்ல துவைக்கத் தெரியுமோ என்னவோ, எப்படின்னு காட்டிரு...” “சரிங்கம்மா...” விஜயா தலையாட்ட பத்மாவின் கையிலிருந்த அலைபேசி சிணுங்க யாரென்று பார்த்து...
    அத்தியாயம் –  7 “அப்பா, துவைக்க வேண்டிய துணியெல்லாம் எடுத்துப் போடுங்க, நான் ஆத்துல துவைச்சிட்டு வந்துடறேன்...” “எதுக்குடா கண்ணு ஆத்துக்குப் போயிட்டு...? இங்கன கிணத்துத் தண்ணிலயே துவைச்சுப் போட வேண்டியது தான...” சரவணன் கேட்க, “ஆத்துல துவைச்சுக் குளிச்சு ரொம்ப நாளாச்சுப்பா... நந்துவும், நர்ஸக்காவும் கூட வர்றேன்னு சொன்னாங்க, மழை பெய்ததால ஆத்துல நல்லாத் தண்ணி...
    அத்தியாயம் 17 விக்ரம், குப்தாவுடன் அலுவலக அறையில் பேசிக் கொண்டிருக்க, இவர்கள் கீழே வந்ததைக் கண்ட குப்தாவின் மனைவி, “ஆவோ பேட்டி, மழே வர்ற போல இருக்கி. டின்னர் ரெடி, சாப்பிட்லாம்?” என்றவர் மகளிடம் விக்ரமை அழைத்து வரச் சொல்லி அலுவலக அறையைக் காட்டினார். அங்கே குப்தாவும், விக்ரமும் மது அருந்திக் கொண்டே ஏதேதோ விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களிடம்...
    அத்தியாயம் 16 கரும்பச்சை வண்ணத்தில் அழகிய கல் வேலைப்பாடுகள் கொண்ட டிஸைனர் சேலை அணிந்து, அதற்குப் பொருத்தமான நகைகளுடன், அழகாய் தலை முடியைச் சீவி, அழகு மயிலாய் அவளைத் தயாராக்கி வைத்திருந்தாள் நிகிதா. பொதுவாகவே நிகிதாவுக்கு அழகுக் கலையில் ஈடுபாடு அதிகம். பியூட்டிஷியன் கோர்ஸ் படிக்க விரும்பியவளைப் பத்மா தான் சம்மதிக்கவில்லை. அதனால் அவளுக்குப் பிடித்த இன்னொரு...
    அத்தியாயம் 15 தேவி கண்மூடிப் படுத்திருக்க, சட்டென்று அவள் கழுத்தில் ஒரு குறுகுறுப்புத் தோன்றியது. என்னவோ ஏதோவென்று கண்ணைத் திறந்தவளின் முகத்தருகே, மிக அருகில் தெரிந்த விக்ரமின் முகத்தைக் கண்டு அதிர்ச்சியில் கத்தப் போக, குரல் வெளியே வரவே இல்லை. அதற்குள் அவளது இதழ்கள் அவன் இதழால் சிறை செய்யப்பட்டிருந்தன. அவனைத் தன்னிடமிருந்து விலக்க முயன்றவள், தள்ளி விட...
    error: Content is protected !!