ஆள வந்தாள்
அத்தியாயம் -16(2)
பசி மறத்து போயிருக்க சாப்பாடு என்பதை மறந்தே போயிருந்தான் சேரன். தென்னந்தோப்பில் போர் செட்டில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்க அங்கிருந்து எல்லா தென்னை மரங்களுக்கும் நீர் செல்ல வசதியாக வகை செய்ய பட்டிருந்தது.
நாடா கட்டில் ஒன்று தோப்பின் மத்தியில் கிடக்க அதில்தான் படுத்திருந்தான் சேரன். மதுராவின் தரப்பிலிருக்கும் நியாயத்தை புரிந்து கொள்ள முடியவில்லை...
அத்தியாயம் -20(3)
மாலையில் காரோடுதான் வந்தான் சேரன். வாடகைக்கு ஓட்ட டிரைவர் ஒருவனை மதன் ஏற்பாடு செய்து விட்டான். அக்காவுக்கும் அத்தானுக்கும் கூட விவரம் சொல்லி வீட்டுக்கு வர சொன்னான் சேரன்.
முகத்தை தூக்கி வைத்திருந்த கனகா சின்ன மகனிடம், “இந்தா இவன் கார் வாங்கிப்புட்டான்னடா, நீ என்ன இதுக்கு உன் மாமனார்கிட்ட கார்...
“என்னை கேட்டா லவ் பண்ணின? முடியாது போடா”
“ஆமாம் நீ மட்டும் என்கிட்ட சொல்லிட்டுதான் என் மாமன் மவள லவ்ஸ் பண்ணினியா? என் உசுர கொடுத்து உங்கள சேர்த்து வைக்கல நான்?”
“உசுர கொடுத்தியா? ஏதாவது அசிங்கமா சொல்லிடுவேன்டா” என்றவன் மதன் பேசிய பேச்சில் இன்னும் திட்டி இறுதியாக, “அது படிக்கிற புள்ளை, படிப்பு முடியற வரை...
ஆள வந்தாள் -12
அத்தியாயம் -12
காலையிலேயே குளித்து துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள் மதுரா. எழுந்து வந்த சேரன் அம்மாவிடம் சூடாக காபி கேட்டு வாங்கி மனைவியிடம் எடுத்து சென்று நீட்டினான்.
“இவன் பொண்டாட்டிக்கு நான் என்ன வேலையாளா?” என அப்போதே முணு முணுப்பாக புலம்ப ஆரம்பித்து விட்டார் கனகா.
“சும்மான்னு இல்லாம நீங்களே ஏன் வம்பை விலை கொடுத்து...
ஆள வந்தாள் -22
அத்தியாயம் -22(1)
சரவணன் சுகந்தி திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுக்க ஆரம்பித்திருந்தனர். நான்கு நாட்களாக உறவுகளுக்கு பத்திரிகை கொடுக்க கணவனோடு அலைந்து திரிந்ததில் சோர்ந்து விட்டார் கனகா.
கிராமப் புறங்களில் முக்கிய உறவுகள், நட்புகளுக்கு ஆண், பெண் இருவரும் சேர்ந்து பத்திரிக்கை வைக்கா விட்டால் மரியாதை குறைவாக நினைப்பார்கள். ஆகவே கனகா...
இரண்டு அடிகள் முன்னெடுத்து வைத்த சேரன் வனராஜனை கண்டு கொள்ளாமல் பின்னால் நின்றிருந்த இரு பெண்மணிகளையும் பார்த்து, “வாங்க” என்றான்.
அந்த அழைப்பில் அஞ்சலைக்கு உயிர் வந்தது போல இருந்தது. நெஞ்சில் கை வைத்து ஆசுவாச மூச்சு விட்டவர் “நல்லா இருக்கீயளா தம்பி?” என மலர்ந்த முகத்தோடு நலம் விசாரித்தார்.
ஆம் என தலையசைத்துக் கொண்ட சேரன்...
அத்தியாயம் -19
பைக் திரும்ப வந்து விட்டதை சரவணன் மூலமாக அறிந்திருந்த மதுராவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. சமையல் வேலையெல்லாம் முடித்தவள் முகம் கழுவி தலை வாரி தெளிவாக இருந்தாள். அழுததால் ஏற்பட்டிருந்த கண்களின் வீக்கம்தான் முழுதுமாக சரியாகியிருக்கவில்லை.
மூங்கில் தட்டில் பூவோடு வந்த அண்ணனை பார்த்த சரவணன், “என்ன ண்ணா இது?” எனக் கேட்டான்.
“ம்ம்ம்… புடலங்காய்… போடா…”...
அத்தியாயம் -23(2)
இப்படி அழுகிறாள் என்றால் விபரீதமாக என்ன நடந்ததோ என உள்ளுக்குள் வேறு பதற ஆரம்பித்திருக்க, “கோவத்தை கூட்டாம என்னன்னு சொல்லுடி” என சத்தமாக அதட்டினான்.
“உங்கம்மா வீட்டை பூட்டி வெளியில நிறுத்திட்டாங்க என்னை, போதுமா?” சீற்றமாக கேட்டவளுக்கு மூச்சு வாங்கியது.
“என்ன…” சேரனுக்கு விளங்கிக் கொள்ள முடியவில்லை.
அவள் சொன்னதை இன்னொரு...
ஆள வந்தாள் -18
அத்தியாயம் -18(1)
சேரன் வெளியில் சென்ற சிறிது நேரதுக்கெல்லாம் சித்திக்கு அழைத்த மதுரா சீர் என எதுவும் கொண்டு வந்து விட வேண்டாம், பிறகு பேசுகிறேன் என சொல்லி வைத்து விட்டாள்.
அவளுடைய சித்திக்கும் மதுராவை நினைத்து கவலையாகத்தான் இருந்தது. மீண்டும் அவளுக்கு அழைத்து தொந்தரவு செய்ய விரும்பாமல் தன்...
அவர் சொன்ன படியே மதுராவும் செய்ய “அப்படித்தான் ஆயி, நல்லா புழியுற, எம்மூட்டுல கொப்பரை தேங்கா காயுது, நான் கெளம்புறேன்” என சொல்லி கிளம்பி விட்டார் பாட்டி.
மதுராவுக்கு சரியாக செய்ய வந்தாலும் குனிந்து கொண்டு செய்ய சிரமப்பட்டாள். எட்டு மணிக்கே சூரியன் தன் இருப்பை வலிமையாக உணர்த்திக் கொண்டிருந்தது. காய வைக்காத கூந்தலை அள்ளி...
ள வந்தாள் -8
அத்தியாயம் -8(1)
வீட்டு ஆண்கள் வெளியில் சென்ற பிறகு மாமியார் சாப்பிட வருவாரா என மதுரா பார்த்துக் கொண்டிருக்க கனகாவோ வெளியில் வருவதாக தெரியவில்லை. அவளுக்கு நன்றாக பசிக்க மாமியாருக்கு தனியே உணவு எடுத்து வைத்து விட்டு சாப்பிட்டு விட்டாள்.
சற்று நேரத்தில் ஒரு வயர் கூடையோடு வீடு வந்தாள்...
அத்தியாயம் -8(2)
சேரனின் பைக் ஊரை கடக்கும் போது வழியில் தென்பட்டவர்கள் அனைவரும் அவர்கள் செய்து கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு இந்த புது மண ஜோடியை ரசனையாகவும் ஆராய்ச்சியாகவும் கிண்டலாகவும் என பல விதமாக பார்த்தனர்.
“இதென்ன காணாதத கண்ட மாதிரி உத்து உத்து பார்க்கிறாங்க எல்லாரும்” எனக் கேட்டாள் மதுரா.
“அவ்வோ என்னமாவது பண்ணிட்டு போவட்டும்....
ஆள வந்தாள் -13
அத்தியாயம் -13
சரவணன் அவனது பெற்றோர், பூங்கொடியின் பிள்ளைகள் அவளது மாமனார் மாமியாரும் கூட அந்த காரில் சென்று கொண்டிருந்தனர். அந்த காரை தொடர்ந்து சேரன், மதுரா ஜோடியும் மோகன், பூங்கொடி ஜோடியும் தனித் தனி பைக்கிலும் சரவணனின் நண்பர்கள் இரண்டு பேர் இன்னொரு பைக்கிலுமாக சென்றனர்.
சரவணனுக்கு பெண் பார்ப்பதற்கான பயணம் அது....
ஆள வந்தாள் -7
அத்தியாயம் -7
வீட்டின் உள்ளே வந்த சேரன் செய்வதறியாது கூடத்தின் ஓரமாக நின்று கொண்டிருந்த மதுராவை கண்டு உருகிப் போனவனாக, “மதுரா…” என அழைத்தான்.
அவனை கண்டவள் வேகமாக அவனருகில் வர, அதே சமயத்தில் செழியனும் உள்ளே நுழைய மீண்டும் தள்ளிப் போய் நின்று கொண்டாள்.
“சேரா, உன்கிட்ட மாமா என்னமோ பேசணுமாம் கூப்பிடுறார்” என...
ஆள வந்தாள் -14
அத்தியாயம் -14
சேரன் களத்து மேட்டில் இருக்க அவனை காண செழியன், மதன் இருவரும் வந்தனர். ஆட்கள் நெல்லை எடை போட்டு மூட்டைகளில் கட்டிக் கொண்டிருக்க மேற்பார்வை செய்து கொண்டிருந்தான் சேரன்.
“என்ன மாப்ள… நீ செஞ்ச கூத்துல கட்டிலு காலு உடைஞ்சு போச்சுதாம், மாமா புதுக் கட்டிலுக்கு ஆர்டர் கொடுத்திருக்காவோ! பாத்து சூதானமா...
சேரனின் கூற்றை மறுத்து பேசவில்லை வனராஜன். ஆனால் சேரனையும் அவனை சார்ந்தவர்களையும் முறைத்த வண்ணம் நின்றிருந்தான்.
“பாத்தீயளா ஸார், உங்க முன்னாடியே எப்படி நிக்குறாப்ல? இந்தாள் க்ரூப்பால எங்க எல்லார் உசுருக்கும் ஆபத்து இருக்குதுங்க ஸார்,எங்களுக்கு பாதுகாப்பு வேணும் ஸார்” என்ற செழியன் எஸ் பி பார்த்த பார்வையில் வாயை மூடிக் கொண்டான்.
முகத்திலும் உடம்பிலும் ஆங்காங்கே...
ஆள வந்தாள் -5
அத்தியாயம் -5(1)
பீமனாக வேடமிட்டு ஆட என ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை அனைத்து ஊர் தலைவர்களும் சேர்ந்து ஒரு மனதாக தேர்ந்தெடுப்பார்கள். திருவிழாவின் தொடக்க நாளில் இருந்து தினமும் முன் மாலை நேரத்தில் கொட்டு மேளம் முழங்க பீமன் வீதி உலா புறப்படும்.
ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு நாள்...
ஆள வந்தாள் -23(pre final -1)
அத்தியாயம் -23(1)
மதிய உணவையும் முடித்துக் கொண்டுதான் மதுரா பிறந்த வீட்டிலிருந்து புறப்பட்டாள். பேருந்து ஏற நிற்கும் போது மனைவிக்கு அழைத்து பேசி விட்டு வைத்தான் சேரன்.
கந்தசாமி, சரவணன் இருவரும் மாலையில்தான் வீடு திரும்புகின்றனர். ஆகவே தனக்கு மட்டும் தயிர்சாதம், மாவடு என எளிமையாக தயாரித்த...
மகனை முறைத்தவர், “நானே விளக்கேத்துறேன், அவ இந்த நேரம் தூங்கிட்டு இருந்தா லட்சுமி பின் வாசல் வழியால போயிடும். அப்பப்பா! என்ன பேச்சு பேசுறான்” என சொல்லி முகத்தைத் திருப்பிக் கொண்டார்.
“ஹாஹான்… லட்சுமிக்கு போன் போட்டு அப்படிலாம் போவாதம்மா தாயேன்னு நான் சொல்லிக்கிறேன், நீ கவலை படாத” என்றான் சேரன்.
“அடங்கொப்புறானா!” என்றவர் மாலை நேரத்தில்...
ஆள வந்தாள் -26(final)
அத்தியாயம் -26(1)
வீட்டில் செய்ய வேண்டிய திருமண வேலைகள் எதையுமே கனகாவால் செய்ய இயலவில்லை. வெளிச்சம் பார்த்தால் கண் கூசியது, முகத்தின் காயங்கள் எரிச்சலை கொடுத்தது. படுக்க சொல்லியே உடம்பு படுத்தி வைத்தது.
மலைத்து போகாமல் அனைத்தையும் மதனின் அம்மா, பூங்கொடியின் மாமியார் என மூத்த பெண்மணிகளிடம் கேட்டு கேட்டு...