Advertisement

உன்
கண்கள்…
சொல்லும்
வார்த்தைகள்…
கவிதையா??
காவியமா??

“ஹே விக்கலு விக்கலு விக்கலு வந்தா தண்ணிய குட்சுக்கமா…” என்று ஹோம் தியட்டரில் பாடிக்கொண்டு இருந்த அதாவது அலறிக்கொண்டிருந்த பாடலுக்கு ஏற்றாப்போல் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் தன் காலை கடமைகளில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தாள் ஸ்ரீதான்யா.

“தான்யா ஏன்டி காலங்காத்தாலே இப்படி அராஜகம் பண்ணுற?? கொஞ்சமாச்சி பெண் பிள்ளை என்கிற எண்ணம் மனசுல இருக்கா?? எப்ப பார்த்தாலும் இதே சேட்டை தான்.. நிம்மதியா சாமி கும்பிட முடிகிறதா இந்த வீட்டுல?? இவ்வளவு கத்துகிறேன் ளழரனெ ஐ கம்மி பண்ணுறாளானு பாரு.. ஏங்க இதெல்லாம் நீங்க என்னனு கேட்க மாட்டீங்களா??” என்று கிட்டதட்ட அலறினார் ராதா.

“ ராதா சொல்லுகின்ற பேச்சை கேட்கனும் என்று தான் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்து இருக்கோம். கத்துகின்ற பேச்சை கேட்கனும் என்று நாம சொல்லி கொடுக்கவில்லை ராதா. நீ சொல்லி பாரு அவள் கேட்பாள்” என்று தன் மனையாளை மேலும் கடுப்பேற்றிக்கொண்டிருந்தார் ராஜேஷ் குமார்.

ராஜேஷ்குமார் யுnயெ ரniஎநசளவைலல் உயிரியல் பீடத்தில் பேராசிரியராக கடமையாற்றுகின்றார். இளம் வயதிலேயே விரிவுரையாளராக கடமையாற்ற தொடங்கிய இவர் மிகக் குறுகிய காலத்திலேயே சிறந்த பேராசிரியராக போற்றப்பட்டார். ராஜேஷ்குமார் தனது கல்லூரித்தோழியான ராதாவின் அறிவிலும் அழகிலும் மயங்கி காதல் கொண்டு பெற்றோர் சம்மதத்துடன் மணம் புரிந்து கொண்டார். இவர்களின் பரஸ்பர அன்பிற்கும் மனமொத்த வாழ்விற்கும் சான்றாக பிறந்தவர்களே ஸ்ரீதான்யாஇஅனன்யா.

மூத்தவள் ஸ்ரீதான்யா. ஆ.ளுஉ ளுழகவறயசந நபெiநெநச பட்டதாரி. பிரபல ளழகவறயசந உழஅpயலெ ஒன்றில் பணிபுரிகின்றாள்;. குறும்புத்தனம்;இசுட்டித்தனம்இ அறிவுஇவிவேகம்இஅழகுஇஅன்புஇ அனைத்திலும் அவளுக்கு நிகர் அவளே.. இவளுடைய கலகலப்பான பேச்சினை ரசிப்பதற்கே அவளிற்கு ஒரு நண்பர் பட்டாளம் உண்டு.

இளையவள் அனன்யா. ஆடீடீளு 3ஆம் வருடம் கற்கிறாள். தமக்கையின் திறனில் சற்றும் குறையாத அழகும் திறனும் இவளுக்கும் உண்டு. தமக்கைகள் இருவரின் சேட்டைகளும்இ உறவாடலும் இவர்களின் மகிழ்ச்சிக்கு அஸ்திவாரம்.

“ கசோலினா….” என்ற வேற்றுமொழிப்பாடல் இன்னொரு அறையில் இருந்து காதை பிளக்கும் வகையில் ஒலித்துக்கொண்டிருந்தது.

“அனு… ந_யும் ஏன்டி காலையிலேயே இந்த அட்டகாசம் பண்ணுற? காலையிலேயே காலேஜ் கிளம்புகின்ற வழியை பார்க்காம இப்படி புரியாத மொழியில பாட்டுங்கிற பேர்ல பூகம்பத்தில கட்டடம் எல்லாம் இடிஞ்சி விழும் போது அதிர்கின்ற மாதிரி ஒரு சத்ததை அதிரவிட்டுட்டு இருக்கியேடி… அக்காவும் தங்கச்சியும் எந்த விஷயத்தில் அடிச்சிகிட்டாலும் இந்த விஷயத்திலெல்லாம் ரொம்ப ஒற்றுமை தான்டி..”

“ஏன் ராதா பிள்ளைகளை வைகின்றாய்? பாவம் மா பசங்கள். அவங்க ஜாலியா இருக்கிறது பார்த்து உனக்கு பொறாமை ராதா. அதான் ந_ அவங்களை கடிஞ்சி பேசுகின்றாய்”

“ஏங்க உங்களுக்கே இது நியாயமாக இருக்கிறதா?? அது சரி.. உங்களிடம் நியாயம் கேட்பதும் செவிடன் காதில் சங்கு ஊதுவதும் ஒன்றுதான். நீங்க உங்க பிள்ளைகளுக்கு ஜால்ரா தட்டுவதற்கு தான் சரி. எல்லாம் நான் வாங்கிட்டு வந்த வரம். இப்படி உங்களை எல்லாம் கட்டிக்கிட்டு அழவேண்டியதா இருக்கு..” என அங்கலாய்த்துக்கொண்டார்; ராதா.

“ராதா எனக்கு ஒரு டவுட். நீ அடிக்கடி வாங்கிட்டு வந்த வரம் என்று சொல்லுவியே அப்படி என்ன வரத்தை நீ எனக்கு தெரியாம வாங்கிட்டு வந்த??” என்று தன் பங்கை செவ்வனே செய்ய தொடங்கினார்.

“இங்க பாருங்க நேரம் காலம் தெரியாம கடுப்பேத்தாதீங்க. என்னை கடுப்பேற்றி பார்க்கின்றதில் உங்களுக்கு அப்படி என்ன சந்தோஷம்?”

“என்னம்மா ராதா இப்படி சொல்லிட்ட? நீ அப்படி என்ன வரம் வாங்கிட்டு வந்தனு தெரிந்துகொள்ளலாம் என்று கேட்டால் இப்படி கோவித்துக்கொள்கின்றாயே?”

“இங்க பாருங்க உங்களுக்கு ஒரு கும்பிடு உங்கள் பிள்ளைகளுக்கு ஒரு கும்பிடு. என்னை விட்டுவிடுங்கள். உங்களுக்கு வேணும் என்றால் வேலைக்கு லீவ் போடலாம்.ஆனால் நான் ஸ்ட்ரைக் பண்ணேன் என்றால் உங்கள் எல்லோர் நிலைமையும் ரொம்ப மோசமாகி விடும்.”

“தங்கள் ஆணைகளை பின்பற்றாமைக்கு இந்த அடியேனை மன்னிக்க வேண்டும் மகாராணி. இன்று முதற்கொண்டு தங்கள் உத்தரவினை சிரமேற்கொண்டு செய்து முடிப்பான் இந்த அடியவன்.” என்று நாடகப்பாணியில் பேசினார் ராஜேஷ்குமார்.

“ஐயோ… போதுங்க. நடிப்பு தாங்கலைங்க.”
“எனக்கு புகழ்ச்சி புடிக்காது ராது மா..இ இருந்தாலும் நீ என்னை இப்படி புகழக்கூடாது. மாமாக்கு ரொம்ப கூச்சமா இருக்குல்ல..”

“கடவுளே என்னை இவரிடம் இருந்து காப்பாற்று.. என்னால் இவரை சமாளிக்க முடியல. ந_ங்க முதலில் கிளம்புகின்ற வழியை பாருங்கள். ந_ங்க பேசுனது அந்த ரெண்டு வாலுகளுக்கும் கேட்டு இருந்துச்சினா இந்நேரம் அதை வைத்தே ஒரு படம் ஓட்டி இருக்குங்க.”

“இருந்தாலும் நீ உன் பிள்ளைகளுக்கு இப்படி பயப்படக்கூடாது..”

“நீங்க ஏங்க சொல்ல மாட்டீங்க. நீங்களும் உங்க பிள்ளைகளுடன் சேர்ந்துக்கொண்டு அவர்களுக்கு ஜால்ரா தட்டுவீங்க. நான் தனிக்கட்சியா இருந்து மல்லுக்கட்டனும். எல்லா வீட்டுலயும் அம்மாவுக்கு பிள்ளைகள் பயப்படுவார்கள். இந்த வீட்டுல எல்லாம் தலை கீழாக தானே இருக்கு..” என்று புலம்பினார் ராதா.

“சரி ராதா பீல் பண்ணாத. எல்லாம் நீ வாங்கிட்டு வந்த வரம் மா.” என்று தன் மனையாளை சீண்டினார் ராஜேஷ்குமார்;.

“ என்னப்பா வன் மேன் ஸ்டரைக்??” என்று தன் தாயை வாருவதற்கு தன் தந்தையுடன் கூட்டணி அமைத்தாள் ஸ்ரீதான்யா.

“இல்ல அக்கா. அம்மா அப்பாவை செல்லமா கொஞ்சிட்டு இருந்தாங்க.. சோ அது 2 இன் ஸ்டரைக். கரெக்ட் தானே அப்பா?” என்று கூட்டணியில் இணைந்துகொண்டாள் அனு.

“இப்ப சந்தோஷமா உங்களுக்கு?? இதை தானே எதிர்பார்த்தீங்க?”

“நான் என்னம்மா செய்தேன்? ஒரு கேள்வி கேட்டது தப்பா?”

“கேள்வி கேட்டது தப்பில்லை அப்பா.. ஆனால் கேட்ட டைமிங் தான்பா தப்பு.” என்று கூறிக்கொண்டு ஹைபை அடித்துக்கொண்டனர் தமக்கைகள் இருவரும்.

“ஓ… அதுதான் விஷயமா? மன்னிச்சிக்கோ ராதா. இனிமே சரியான டைமிங்கில் பேசுறேன்.”
“அதான் பேச வேண்டியதை எல்லாம் சரியான நேரத்தில பேசிட்டீங்களே…. இன்னும் என்ன மிச்ச மீதி இருக்கு??”

“அப்படியா ராதா? சரியான டைமிங்ல தான் பேசுனேனா? அதான் எனக்கு அப்படி ஒரு புகழ்ச்சி மழையா??” என்று கள்ளச்சிரிப்பு சிரித்தார் ராஜேஷ்.

“ஏங்க நீங்க திருந்தவே மாட்டீங்களா?”

“25 வருடமாக என்னை திருத்தாதது உன்னோட தப்பு ராதா. தப்பெல்லாம் உன்மேல தான். இதுல நீ என்னை கோவிப்பதில் நியாயமே இல்லை.”
“செய்வதை எல்லாம் சிறப்பா செய்துட்டு இப்ப நியாய அநியாயத்தை பத்தி பேசுறீங்களா?”
“கொஞ்சம் இரண்டு பேரும் உங்க பஞ்சாயத்தை நிறுத்துறீங்களா??” திடீரென உரையாடலில் உட்புகுந்தாள் ஸ்ரீதான்யா.

“எப்ப பார்த்தாலும் கிண்டகார்டன் குழந்தைகள் மாதிரி சண்டைபிடிச்சிகிட்டு… கொஞ்சம் சரி பொறுப்பு இருக்கா? காலங்காத்தால பசங்களை கவனிக்காம பஞ்சாயத்து பண்ணிகிட்டு இருக்கீங்க இரண்டு பேரும். சேசே எல்லா வேலையும் நாமலே கவனிக்க வேண்டி இருக்கு” என்று போலியாக அலுத்துக்கொண்டாள்.

“அடியேய் அனு உன்னை நானும் என்னை நீயும் தான் கவனிச்சிக்கனும். இவங்களை நம்பி பயனில்லை.” என்று தன் தாயை வம்பிழுக்கும் எண்ணத்தோடு; தன் தங்கையையும் கூட்டணியில் சேருமாறு மறைமுகமாக அழைப்புவிடுத்து டைனிங்டேபிளில் வந்தமர்ந்தாள் ஸ்ரீதான்யா. அவள் முழங்கிய மேளத்திற்கு ஏற்ப ஜால்ரா தட்ட தொடங்கினான் அவள் உடன்பிறப்பு அனு.

“ ஆமா அக்கா இந்த அப்பா கூட இப்ப எல்லாம் ஒழுங்கா பாக்கெட் மணியே தர்றது இல்லை. இவங்க சண்டையில அவருக்கு இதெல்லாம் நியாபகமே இருக்க மாட்டேன்குது.”
என்று இல்லாத கண்ணீரை துடைத்துவிட்டாள் அனு.
தன் புத்திரிகளின் தந்திரம் அறிந்த தந்தையானவர் அமைதி காக்க தாயாரே அவர்கள் வலையில் அழகாக சிக்கிக்கொண்டார்.

“அனு நேற்று பாக்கெட் மணி தாங்கனு நச்சரிச்சி வாங்கிட்டு போன அந்த 100 ரூபா எந்த கணக்குல சேர்த்தி?”

சமயம் பார்த்து தன்னை கிளீன் போல்ட் ஆக்க நினைத்த தாயை சமாளிக்கும் முகமாக “ பார்த்தீங்களா நீங்களே சொல்லுறீங்க நான் தான் கேட்டு வாங்குனேனு அப்பகூட வயசு பொண்ணுக்கு நிறைய செலவு இருக்கும்னு நீங்களா கேட்டு குடுத்தீங்களா?” என்று தன் தாய் வீசிய அம்பை சமார்த்தியமாக அவர் புறமே திருப்பினாள் அனு.

“ அது கூட பரவாயில்லை அனு. அன்னைக்கு ஏதோ புது டிஸ் ட்ரை பண்ணியிருக்கேன்னு சொல்லி ஆபிசுக்கு குடுத்து அனுப்பினாங்க. நானும் அம்மா ஏதோ ருசியா சமைச்சிருப்பாங்கனு ஆபிஸ்ல உள்ள எல்லாருக்கும் குடுத்தேன். அதை சாப்பிட்ட பாதிபேர் அடுத்த நாள் ஆபிஸ் வரலை. ஏன்டா வரலைனு கேட்டதுக்கு உனக்கு ஏன்டி இப்படி ஒரு கொலைவெறி அந்த சாப்பட்டை குடுத்து எங்களை கொல்ல பாத்தியானு கேட்குறாங்க.”

“அடிப்பாவி இன்னைக்கு நீங்க பண்ண டிஸ்னு சூப்பரா இருந்துச்சி அம்மா அப்படினு என்னை கொஞ்சிகிட்டு ஆபிஸ் முடிந்து வந்தோன கேட்டு வாங்கி ஒரு கட்டு கட்டுனியே..டேஸ்டா இல்லாத டிஸ்ஸையா அப்படி சாப்பிட்ட?”

“அது உன்னோட பிஞ்சு மனசு கஸ்டப்படகூடாதுனு அப்படி பண்ணேன். அதுக்காக உண்மைய மறைக்க முடியுமா மா?”

“சரிடி அம்மா இனிமே உங்களுக்கு அந்த கஷ்டம் வேண்டாம். இனி நீங்களே சமையல் பண்ணிக்கோங்க. நான் எனக்கு மட்டும் தனியா சமைக்கிறேன்” என்று ஜகா வாங்கிய அன்னையிடம் அந்தர் பல்டி அடித்து சரணடைந்தார்கள் தந்தையும் புத்திரிகளும்.

“ராதா என்னை ஏன்மா டீல்ல விடுற? நான் உன்னை ஏதும் சொல்லலையே மா”

“ஆமா மா அக்கா தானே சொன்னா நீ அவளை தண்டிச்சா பரவாயில்லை நாங்க பாவம் மா” என்று தந்தையுடன் ஒத்து ஊதினாள் அனு.
“ஹேய் நான் எப்போ அம்மா சமைச்சது சரியில்லைனு சொன்னேன். அந்த கிறுக்கு பய சுந்தர் சொன்னத சொன்னேன். அவனுக்கு ரசம் எது சூப் எதுனே ஒழுங்கா கண்டுபிடிக்க தெரியாது அவனுக்கு எப்படி அம்மாவோட கைபக்குவம் தெரியும். அவன் சொன்னதெல்லாம் நீங்க பெருசா எடுத்துக்காதீங்க அம்மா.” என்று குட்டிக்கரணம் அடித்தாள் ஸ்ரீதான்யா.

“போதும் கதையளந்தது சீக்கிரம் வேலைக்கு கிளம்புற வழிய பாருங்க எல்லாரும்”
தங்கள் காலையுணவை முடித்துக்கொண்ட அவரவர் கடமைகளை செய்ய கிளம்பினர.;
“அம்மா நான் நைட் டின்னர் முடிச்சிட்டு தான் வருவேன். நேற்றே சொன்னேனே இன்னைக்கு சஞ்சுவோட பேர்த்டே ட்ரீட் குடுக்குறானு. நைட் ஹேமா ட்ராப் பண்ணுறேனு சொன்னா. இப்ப நான் கிளம்புறேன். நைட் பார்க்கலாம். பாய் அப்பா பாய் அம்மா.” என்று கிளம்பினாள் ஸ்ரீதான்யா.

“சரி ராதா நானும் கிளம்புறேன். அனு வாம்மா உன்னை போகிற வழியில டிராப் பண்ணிட்டு போறேன்.” என்று கிளம்பத்தயாரானார் ராஜேஷ்.

“பாய் அம்மா” என்று தந்தையுடன் கிளம்பினாள் அனு.

அனைவரையும் கிளப்பிவிட்டு தன் வேலைகளை கவனிக்க சென்றரர் ராதா.

Advertisement