Advertisement

நீ…
நான்…
என்ற
இரு சொல்…
நாம்…
என்று
மாறும் நாள்…
அருகிலா
தொலைவிலா??

அன்றும் வழக்கம் போல் தன் காதலி நிலவை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு தன் கடமையை செய்ய புறப்பட்டான் கதிரவன். தன் வரவுக்காக காத்து நிற்கும் அனைவரையும் மகிழ்விக்க தயாரானான் ஆதவன். அவனது வரவை முன்கூட்டியே அறிவிக்கும் முகமாக அவனது உற்ற தோழனும் நலன் விரும்பியுமான சேவல் உச்சஸ்தாயில் கூவியது. தனது நண்பனின் ஆர்பாட்டமான வரவேற்பில் மகிழ்ந்த ஆதவன் தனது கதிர்களை மெல்ல பரப்ப ஆரம்பித்திருந்தான். இவ்வாறு சூழல் விழித்தெழ அதைபற்றி கவலையின்றி இன்னும் உறங்கிக்கிடந்தது அத்தெரு.

அந்த தெருவின் பிரமாண்டமேஇ இது செல்வந்த பிரபுக்கள் வாழும் இடம் என பரிந்துரைக்கும.; “மாடமாளிகைகள் கூடகோபுரங்கள்” என்ற உயர்வு நவிற்சி அணிக்கு சற்றும் குறையாத கட்டமைப்புடனும் செல்வ செழிப்புடனும் வியத்தகு வகையில் காட்சி அளித்தது அந்த தெரு. மேலும் இயற்கையின் சில படைப்புக்களும் மெழுகூட்ட அத்தெரு இன்னொரு தேவலோகமாக மிளிர்ந்தது.
அந்த தெருவின் மற்றைய மாளிகைகளை விட பிரமாண்டத்தின் உச்சகட்டமாக திகழ்ந்த லஷ்மி இல்லமே நம் கதையின் கதைகளம்.

என்றும் போல் அன்றும் தன் பூஜை புனஸ்காரங்களை முடித்துவிட்டு தன் அன்புக் கணவனை கவனித்துக் கொண்டிருந்தார் சுபலஷ்மி. நானும் உனக்கு சளைத்தவனல்ல என்று தன் மனையாளை சீண்டிக்கொண்டிருந்தார் யோகேந்திரமூர்த்தி.

யோகேந்திரமூர்த்தி-சுபலஷ்மி இருவரும் மனம் ஒத்த தம்பதிகள். யோகேந்திரமூர்த்தி நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். தனது தந்தையின் தொழிலான புடவைத் தொழிலில் புதுப்புது உத்திகளை கையாண்டு சிறிது சிறிதாக விருத்தி செய்தார். அவர் தொழிலில் கால்பதிக்க தொடங்கிய காலகட்டத்தில் அவரது அத்தை மகளான சுபலஷ்மியை தன் மனையாளாக்கிக்கொண்டார்.

யோகேந்திரமூர்த்தியின் கடின உழைப்பாலும் சுபலஷ்மியின் திறமையான வீட்டு நிர்வாகத்தினாலும் அவர்களது செல்வ நிலை உயர்ந்தது. பொருளால் மட்டுமல்லாது குணத்தாலும் அவர்களது செல்வ நிலை உயர்ந்தே நின்றது.

இத்தம்பதியினரின் சீமந்த புதல்வர்களே ரிஷிகேஷ் மற்றும் ரித்விராஜ்.

மூத்தவன் ரிஷிகேஷ். இளம் தொழிலதிபர். டுழனெழn ரniஎநசளவைல ல் ஆ.ஊழஅ பட்டப்படிப்பை முடித்துவிட்டு தன் தந்தையின் தொழிலை பொறுப்பேற்று உலகம் முழுவதும் கிளைகளை கொண்ட வெற்றிகரமான தொழிலாக விஸ்தரித்துள்ளான். விவேகமும்இ இளமையும் இவனது பலம்.

“ரிஷிராஜ் வுநஒவடைநள” இவர்களின் தொழில் சாம்ராச்சியத்தின் திருநாமம்.

இளையவன் ரித்விராஜ். டீ.வுநஉ பட்டதாரி. சுயமாக தனக்கு விருப்பமான துறையில் தொழிலொன்றை தொடங்க வேண்டும் என்ற அவாவினாலும் தன் தமையனை போல் வெற்றியடைய வேண்டும் என்ற உந்துதலினாலும் சிறிய அளவில் யுனஎநசவளைiபெ கம்பனி ஒன்றினை ஆரம்பித்து கடந்த இரண்டு வருடங்களில் பெரும் நிறுவனங்களுடன் போட்டி போடும் அளவிற்கு நிறுவனத்தின் நிலையை உயர்த்தி தன்னுடைய வெற்றியை அறிவித்தான். குறும்பும்இ பிடிவாதமும் அவனது பிறவிக்குணம்.
மீண்டும் நாம் கதைக்கு வருவோம்.

“என்ன சுபா டீலா நோடீலா? என்று தன் மனையாளை வம்பிழுக்க தயாரானார் மூர்த்தி.

“என்னங்க சொல்லுறீங்க? நீங்க சொல்லுறது எனக்கு புரியலங்க” என்று அப்பாவியாய் தன் கணவரிடம் வினவினார் சுபலஷ்மி.

“இவ்வளவு நேரம் நீ பேசுன டீலிங்கோட சநளரடவ என்னனு கேட்டேன்?”

“ஏங்க நான் சாமி கும்பிடுவது உங்களுக்கு டீலிங் பேசுற மாதிரி இருக்கா?”

“ஆமா மா. சாமிகிட்ட நீங்களாம் டீலிங் தானே பேசுவீங்க. எங்கள மாதிரி அப்பாவிங்கள படுத்துனது பத்தாதுனு அவரையும் இப்படி படுத்துரீங்களே மா..”

“இப்ப எனக்கு ஒன்னு தெரிஞ்சாகனும். அப்படி நான் என்ன படுத்தினேன் உங்களை??”

“என்ன செய்யலனு கேளுமா. காலங்காத்தாலே மணி அடிச்சி தூங்குற மனுசனை எழுப்பிட்டு என்ன செய்தேனு கேட்கிறாயா?? நல்லதுக்கு காலமில்லடா சாமி…” என்று போலியாக புலம்பினார் மூர்த்தி.
“சாமி கும்பிடுவது தப்பாங்க?”

“சாமி கும்பிடுவது தப்பில்ல மா. ஆனா இப்படி காதிலேயே வந்து மணி அடிக்கிற பாரு அதுதான் தப்பு.”

“சரி இனிமே உங்களுக்கு பெட் காபி கட். நீங்க எப்ப எழும்புறீங்களோ அப்ப கேட்டு குடிச்சிக்கோங்க.

பெட் காபி மட்டும் இல்ல எல்லாமே” என்று எல்லாமே என்பதை சற்று அழுத்தமாக கூறினார் சுபா.

“ஏன் சுபா இப்படி அடி வயித்துலயே கை வைக்கிற? தெரியாம சொல்லிட்டேன் மன்னிச்சிக்கோ. என்னோட எனர்ஜி பூஸ்டர்ஸ் அதுங்க தான் மா. இந்த அப்பாவிய மன்னிச்சி விட்டுரு.”

“அந்த பயம் இருக்கட்டும். இருந்தாலும் உங்களுக்கு இம்புட்டு அலும்பு ஆகாதுங்க”

“அப்ப எவ்வளவு வேணும்ணு சொல்லுற?”

“ஐயா சாமி உங்ககிட்ட வாய் குடுத்தது தப்பு தான். இப்போதைக்கு ஆள விடுங்க.”

“சுபாமா நீ தான் என் ஆளு உன்னை அப்படி எல்லாம் விடமுடியாது.”

“பிள்ளை இல்லாத வீட்டுல கிழவன் துள்ளி விளையாடுறானாம்…
பேரப்பிள்ளைகள் எடுக்குற வயசாச்சி. உங்களுக்கு ரொமன்ஸ் ஒன்னு தான் குறை.”

“ரொமன்ஸ்கு ஏதுமா வயது? 6 இலும் காதல் 60 இலும் காதல்னு நம்ம பெரியவங்க சொல்லி இருக்காங்க மா. நீ என்ன இப்படி சொல்லுற?”

“6 இலும் சாவு 100 இலும் சாவு னு தான் கேள்விபட்டு இருக்கேன். இது என்னங்க புதுசா இருக்கு?’
“பழமொழி சொன்னா அனுபவிக்கனும். இப்படி ஆராயக்கூடாது.”

“சரி விடுங்க. உங்க ரொமன்ஸ்ஸ பிறகு பார்த்துக்கலாம். இப்ப உங்க பிள்ளைக்கு ஒரு வழி செய்ங்க. நம்ம ரிஷிக்கு இந்த வருஷத்துக்குள்ள கல்யாணத்த முடிச்சா தான் அடுத்தவனுக்கு பார்க்க ஆரம்பிக்கலாம். இந்த புள்ள என்னடானா பிடி குடுக்க மாட்டேங்கிறான். காலாகாலத்துல செய்ய வேண்டியத செய்யணுங்க. நீங்க தாங்க அவனோடு பேசனும்.”

“நீ சொல்வதும் யோசிக்க வேண்டிய விஷயம் தான். அவனோடு நான் பேசுறேன். ஆனால் அவனை வற்புறுத்தவோ கட்டாயப்படுத்தவோ என்னால முடியாது.”

“ஐயோ நீங்க வேற புரியாம பேசாதீங்க. நான் என்னவோ அவனை நாளைக்கே கல்யாணம் பண்ணிக்க சொன்ன மாதிரி பேசுறீங்க. நான் கல்யாணம்னு ஆரம்பிச்சாலே அவன் காற்றாக மறைந்து போகிறான். மொதல்ல நான் சொல்லுறத பத்தி யோசிக்க சொல்லுங்க. அவனுக்கு பிடிச்சிருந்த மற்றையதை பார்க்கலாம்.”

“உத்தரவு மகாராணி. தங்கள் உத்தரவு படியே நடக்கட்டும். தாங்கள் உத்தரவை சிரமேற்கொண்டு செய்து முடிப்பான் இந்த அடிமை.” என்று நாடகப்பாணியில் பேசினார் மூர்த்தி.

“ஐயா சாமி உங்க லொள்ளு தாங்கலை. இன்னைக்கு இந்த ரவுண்டு போதும். நாளைக்கு கொஞ்சம் மிச்சம் வைங்க.”

“பாத்தியா உனக்கே பழகிவிட்டது. அது தான் ஐயாவோட திறமை.”

“போதும் உங்க அரட்டை. பிள்ளைகள் சாப்பிட வந்திருவாங்க. அவங்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்கனும.; வாங்க டைனிங் ஹாலுக்கு போகலாம்.” என்றவாறு அறையை விட்டு வெளியேறினார்.

“கட்டின புருஷன் பேசுறத அரட்டைனு சொல்லுற பொண்டாட்டி இவ மட்டுமா தான் இருப்பா. ஆண்டவா இதெல்லாம் உனக்கு தான் வெளிச்சம்” என்று தனக்குள் அங்கலாய்த்தவாறு தன் மனையாளை பின்தொடர்ந்தார் மூர்த்தி.

“என்னமா உன்னோட பசங்க வந்துட்டாங்களா?”
“இல்லைங்க. இரண்டு பேரும் கிளம்புறதுக்கு இன்னும் நேரம் இருக்குங்க. நீங்க சாப்பிடுங்க. இன்னைக்கு எங்கயோ போகனும்னு சொன்னீங்களே. சாப்பிட்டு கிளம்புங்க.”

“ஏன்மா என்னை விரட்டுவதிலேயே குறியாக இருக்க?”

“ ஐயா சாமி தெரியாம சொல்லி;ட்டேன். உங்களுக்கு எப்ப தோன்றுகிறதோ அப்ப கிளம்புங்க. இப்ப ஆளை விடுங்க.”

“கோவிக்காத சுபா. இதெல்லாம் இல்லனா வாழ்க்கை சுவாரஸ்யமா இருக்காது மா. சரி பிள்ளைகள் வருகிறார்கள். அவர்களை கவனி. அப்புறம் ஐயாவை கவனிக்கலாம்”

“இந்த லொள்ளுக்கு ஒரு குறைச்சலும் இல்ல.”

“புழழன ஆழசniபெ அம்மாஇஅப்பா”

“புழழன ஆழசniபெ ரிஷி” என்று ஒரு சேர கூறினர் அவனது பெற்றோர்.

“ என்னப்பா இன்னைக்கு சீக்கிரம் கிளம்பிட்ட போல. உங்க அம்மா அடிச்ச மணி உன்னையும் தூங்க விடலயா?”

“ஆமா அப்பா. இன்னைக்கு ஒரு முக்கியமான அநநவiபெ இருக்கு. அலாரம் வைக்க மறந்துட்டேன். டீரவ அம்மாவோட மணி சத்தம் இருக்க பயமேன்??”
“அப்பாவும் மகனும் கூட்டணி போட்டுவிட்டீர்களா? இனி என்னோட தலை உருளப்போவது கன்போர்ம்.”
“அப்பா ஏதும் கட்சி ஆரம்பிக்க போறேன்னு அம்மா கிட்ட சொன்ன_ங்களா?”

“இல்லையேடா. அப்படி ஏதும் சொன்னதா எனக்கு ஞாபகம் இல்லையே டா.”

“ அம்மா கூட்டணி பத்தி சொன்னாங்களே.. அதான் கேட்டேன்.”

“டேய்இ ஏன்டா காலையிலேயே இப்படி அப்பாவும் மகனும் என்னை பந்தாடுறீங்க. அம்மாவ பார்த்த பாவமா தெரியல?”

“பாவமா இல்லை தான் ஆனா இன்னைக்கு கோட்டா இவ்வளவு தான். மிச்சத்த நாளைக்கு வச்சிக்குவோம்.”

“டேய் இது என்ன டெஸ்ட் மேட்ச்சா? 2னெ இன்னிங்ஸ்கு விளையாடலாம்னு சொல்ல?” என்று சுபா பதற
“அம்மா இது கிரிகட் இல்லை மா. நம்ம ஊர் டிவி சீரியல் மாதிரி. ஒவ்வொரு நாளும் போய்கிட்டே இருக்கும்”

“ இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க இப்ப மனசுக்கு திருப்தியா இருக்க?”சூழ்நிலையில் தன் நிலையினை காக்க எண்ணிய ராஜேஷ்
“டேய் மகனே என் முன்னாடி என் பொண்டாட்டிய நீ இப்படி படுத்த கூடாது.”

“ஐயோ என்னப்பா இப்படி அந்தர் பல்டி அடிக்கிற_ங்க?”

“மகனே இப்படி எல்லாம் குட்டிக்கரணம் அடிச்சா தான்பா அவன் குடும்பஸ்தன்”

“குடும்பஸ்தனுக்கு தான் அப்பா இந்த கஷ்டம். எனக்கு இல்லை. இது தான் டீயஉhநடழச டகைந ல உள்ள கிக். அதெல்லாம் உங்களுக்கு புரியாது.”

“டேய் ரிஷி இதெல்லாம் தாண்டி தான் நாங்களும் வந்திருக்கோம். பிரம்மச்சாரி வாழ்க்கையை விட சம்சாரி வாழ்க்கையில் தான் சுவாரஸ்யம் அதிகம். அது வாழ்ந்து பார்த்தவங்களுக்கு தான் புரியும்.”

“சரி அப்பா. அது வரும் போது பார்த்துக்கலாம். இப்ப நான் கிளம்புறேன். கெட்டிங் லேட் அப்பா. டிலந அம்மா டிலந அப்பா. டேக் கெயர்.”

“சரி பா. பார்த்து போய்ட்டு வா.”

“ஓகே டா. ஓபிஸ் ல பார்க்கலாம். டேக் கெயர்”;
ரிஷி கிளம்பியதும் சுபா தன் கணவரிடம் “ பார்த்த_ங்களா? எப்படி நழுவுறானு.. இவனை என்னங்க செய்யலாம்??”

“பொறு சுபா. அவன் சின்ன பையன் இல்லை. இவ்வளவு பெரிய பிசினஸை திறம்பட நடத்துகின்றவனுக்கு எதை எப்போ செய்ய வேண்டும் என்று தெரியும். கொஞ்சம் விட்டு பிடிப்போம்”

“ஏதோ சொல்லுற_ங்க. எல்லாம் நல்லபடியா நடந்தா சரி தான்”

“எல்லாம் நடக்கும் சுபா. சரி… எங்க ரித்வியை இன்னும் காணோம்??”

“அவன் நேற்று நைட் வர லேட் ஆகிவிட்டது. அசந்து தூங்குகின்றான். பதினொரு மணிக்கு மேலே ஆபிஸ் போனால் போதும் என்று சொன்னாங்க”

“சரி சுபா நானும் கிளம்புறேன். ரங்கன் வ_ட்டுக்கு போகனும். அவன் இன்;னைக்கு நைட் டண்டன் கிளம்புறான். கொஞ்சம் ஆபிஸ் விஷயமா பேச வேண்டி இருக்கு.”

“சரிங்க பார்த்து போய்ட்டு வாங்க. டரnஉh கு வருவ_ங்க தானே?”

“ஆமா சுபா. டரnஉhகு வந்திடுவேன். இப்ப கிளம்பட்டுமா? இல்லாட்டி வேறு ஏதாவது உத்தரவு பாக்கி இருக்கா இந்த அடியேனுக்கு??”

“அவ்வளவு தான். தாங்கள் கிளம்பலாம்..” என்று சிரித்தவாறு விடை கொடுத்தார் சுபா.
சிரித்தவாறு விடை பெற்றார் மூர்த்தி.

Advertisement