Advertisement

மணி 1 ஆனதும் குழந்தையை தூக்கி கொண்டு ..நீங்களும் போய் படுங்கள் என்று இவர்களை அனுப்பி விட்டே சென்றார் .

 

கொஞ்சம் நேரத்தில் பேபி உறங்கி விடுவாள் என்று அவளை படுக்க வைத்து விட்டாள்.

 

அர்ஜுன் வந்தவன் எங்கு படுப்பது என்று முழித்தான்.. “பெட் க்கு போனா மங்கம்மா ஆடிடுவா” என்று யோசித்த கொண்டே நின்று கொண்டு இருந்தான் .

 

அதற்குள் அவனின் மகள் அஜுன் இங்க என்று அவளின் இன்னொரு பக்கத்தை காட்டியது. ..எப்படி பார்த்தாலும் அந்த ரூமில் வேறு எதுவும் இல்லை ..அதனால் அவனும் வந்து படுத்து கொண்டான்.

 

இவள் பேபி ஐ தட்டி கொடுத்துக் கொண்டே  இருந்தாள் .பேபி தூங்க ஆரம்பித்ததும் கூடவே சேர்ந்து இவளும் உறங்கி விட்டாள் 

 

இவள் உறங்கி விட்டாள் என தெரிந்ததும் அர்ஜுன் இவளின் பக்கம் திரும்பி இரண்டு பெயரையும் ரசித்து  கொண்டு இருந்தான் .

 

ஷ்ரத்தா வை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் என்று நினைத்து கொண்டே அவனும் தூங்கி விட்டான்.

 

விடியற்காலையில் பேபி எப்பொழுதும் ஷ்ரத்தா மேல் ஏறி படுத்து கொள்ளும் நினைவில் அர்ஜுன் மேல் ஏறி படுத்து கொண்டதும் .

 

அர்ஜுன் க்கு இந்த உணர்வு எல்லாம் முற்றிலும் புதிது  ..மிகவும் சந்தோசமாக தட்டி கொடுத்துக் கொண்டே உறங்கினான்.

 

பக்கத்தில் குழந்தையை தடவிய ஷ்ரத்தா இல்லை என்றதும் பயந்து எழுந்த சத்தத்தில் அர்ஜுன் முழித்து அவளை பார்த்தான் .

 

அவனின் மேல் குழந்தையை பார்த்த பிறகு தான் தெளிந்து அவளை தூக்கி பக்கத்தில் படுக்க வைக்க வந்தாள்..

 

“வேணாம் இருக்கட்டும்” என்று அர்ஜுன் சொன்னதற்கு …”உனக்கு நேராக தூங்குற  பழக்கமே இல்லை.. நீ நியாபகம் இல்லாம திரும்பிடுவ.. என்று பேபி ஐ இறங்கி படுக்க வைத்து விட்டு மறுபடியும் தூங்கி விட்டாள்”.

 

அர்ஜுன் தான் இன்னுமா இவள் அதை எல்லாம் நியாபகம் வைத்து இருக்கிறாள் என்று பார்த்தான்.

 

தூக்க கலக்கத்தில் அவளும் அர்ஜுன் மேல் கையை போட்டு கொண்டு உறங்க ஆரம்பித்து விட்டாள்.அர்ஜுன் அப்பொழுது தான் முழுமையாக உணர்ந்தான்.பல நாள் தூங்காத தூக்கத்தை தூங்க ஆரம்பித்தான்.

 

மறுநாள் விடியல் பல நாட்களுக்கு பிறகு அர்ஜுன் வீட்டில் சந்தோஷமாக விடிந்தது.

 

மாதங்கி என்ன தான் வீட்டில் வேலை ஆட்கள் வைத்து இருந்தாலும் காலை எழுவது பூஜை செய்வது அனைத்தையும் வழக்கமாக வைத்து இருந்தார் .

 

முன்பு வீட்டில் பேரன் , பேத்தி இல்லை என்ற வருத்தம் எப்பொழுதும் இருக்கும் ..இப்பொழுது ஒரே நேரத்தில் வீட்டில் பேரன் பேத்தி இருவரும் வந்து விட்டனர் என்று சந்தோசத்தில் இன்னும் ஸ்பெஷல் ஆக பூஜை செய்தார்.

 

விக்ரம் மற்றும் குடும்பத்தினர் ஜெட் லாக் என்பதால் அசந்து உறங்கி கொண்டு இருந்தனர் .

 

ஷ்ரத்தா ஒரு 7 மணி போல எழுந்து கீழே வந்தாள்.அர்ஜுன் இருப்பதால் பேபியின் ஒரு பக்கம் தலையணை வைத்து எழுந்து வந்தாள் .

 

ராகவன் வெளியே வாக்கிங் சென்று கொண்டு இருந்தார்.

 

மாதங்கி பூஜை அறை விட்டு வெளியே வந்ததும் “அதுக்குள்ளே எழுந்துட்ட இன்னும் கொஞ்சம் நேரம் தூங்க வேண்டியது தானே “என்றார் .

 

பழகிடுச்சி தூக்கம் வர வில்லை அத்தை.. என்று சொல்லி விட்டு உட்கார்ந்து இருந்தாள்.

 

மாதங்கி கிச்சன் சென்று இருவருக்கும் காபி கொண்டு வந்து அவளுக்கு கொடுத்து விட்டு அவரும் அருகில் உட்கார்ந்து பருக ஆரம்பித்தார்.

 

“உனக்கு காபி ரொம்ப பிடிக்கும் தானே ..வைஷ்ணவி நிறைய டைம் சொல்லி இருக்கா ” என்றார்.

 

” எஸ் ..ரொம்ப பிடிக்கும் .” என்று கண் சிமிட்டினாள்.

 

அத்தை எனக்காக ஒரு ஹெல்ப் பண்றீங்களா என்று கேட்டாள்?

 

“உனக்கு பண்ணாம வேற யாருக்கு பண்ண போறேன் தாராளமா கேளுமா” என்றார்.

 

“அர்ஜுன் கிட்ட பேசுங்க அத்தை ..அதுவும் இத்தனை வருடம் ரொம்ப பெரிய தண்டனை நீங்க கொடுத்தது … பிளீஸ் எனக்காக பேசுங்க என்றாள்.

 

அவர் காபி குடிப்பதை அப்படியே நிறுத்தி விட்டார்.என்ன பெண் இவள் என்று தான் தோன்றியது ..இவளின் வாழ்க்கையை கெடுத்ததுற்காக தான் அவனுக்கு தண்டனை கொடுத்தார் …இப்பொழுது இவள் அவனுக்கு பரிந்து கொண்டு பேசுகிறாள் என்று பிரமிப்பாக இருந்தது .

 

“அம்மா இருந்து இல்லாம போவதின் வலி எனக்கு நல்லாவே தெரியும் அந்த வலியை இதுக்கு மேலயும் அர்ஜுன் க்கு கொடுக்காதீங்க” என்றாள்.

 

இதை எல்லாம் உள்ளே நுழைந்த ராகவனும் கேட்டு கொண்டு இருந்தார்.

 

“மாதங்கி எழுந்து ஷ்ரத்தா நெற்றியில் ஒரு முத்தம் வைத்து நீ இந்த வீட்டுக்கு வர நாங்க ரொம்ப புண்ணியம் பண்ணி வைத்திருக்கிறோம்” என்று கூறினார்.

 

அப்போ எனக்காக இன்னொரு ஹெல்ப் பண்ணுங்க என்றாள்.

 

என்ன? என்றார்.

 

இன்னொரு கப் காபி தாங்க என்றாள்.

 

“அது முடியாது.கொஞ்சம் நேரம் கழிச்சு குடி.”என்று சொல்லி விட்டு ராகவனுக்கு காபி எடுக்க மாதங்கி உள்ளே சென்றார்.

 

அர்ஜுன் எழுந்து விட்டான் ஆனால் பேபி ஐ எப்படி தனியாக விடுவது என்று அவளின் தூக்கம் களையாதவாரு தூக்கி கொண்டு கீழே இறங்கி வந்தான் ..

 

ஒரு உற்சாகமான மன நிலையில் இருந்தான் அர்ஜுன்.

 

அவன் பேபியுடன் வருவதை பார்த்து ஷ்ரத்தா அவளை போய் வாங்கி மாதங்கி அறையில் படுக்க வைத்தாள் ..ஹாலில் இருந்து பார்த்தால் பேபி  தெரியுமாறு உட்கார்ந்து கொண்டாள்.

 

 

மாதங்கி ராகவனுக்கு காபி எடுத்து கொண்டு வந்தவர்  …அர்ஜுன் அங்கு நிற்பதை பார்த்து “கண்ணா உனக்கும் காபி கொண்டு வரவா என்றார்”.

 

கண்ணா என்ற இந்த வார்த்தையை கேட்க ஒவ்வொரு நாளும் ஏங்குவான்.

 

அவர் அப்படி கேட்டதும் அதிர்ச்சியில்  அப்படியே சோஃபாவில் அமர்ந்து விட்டான் கண்ணெல்லாம் கலங்கி விட்டது.

 

மாதங்கி பதறி அருகே சென்றார்..மா” ஐ மிஸ் யூ சோ மச் “என்றான் அவரின் கையை பற்றி கொண்டு .

 

ராகவன் தான் சூழ்நிலையை நார்மல் ஆக்கும் பொருட்டு … “டே மகனே கடைசி இரண்டு நாளாகவே வெறும் உணர்வு பிழம்பாதான் இருக்கு நம்ம வீடு…இன்னைக்கும் காலையிலே ஆரம்பித்து விடாதீங்க டா சத்தியாம என்னால முடியாது “என்று கிண்டல் செய்தார் .

 

“என் பையனையா கிண்டல் பண்றீங்க?” என்று மாதங்கி அவர் குடித்து முடிப்பதற்கு முன்னரே காபி கப்பை வாங்கி சென்று விட்டார்.

 

அவரின் முகத்தை பார்த்து அர்ஜுன் சிரித்து கொண்டு இருந்தான் .

 

ஷ்ரத்தா அனைத்தையும் வெரும் பார்வையாளராக பார்த்து கொண்டு இருந்தாள். 

 

காலையிலே குளித்து அழகான ஒரு குர்தி , லெகின் போட்டு இருந்தாள் .

 

அர்ஜுன் மனதிற்குள் “என்னடா இவள் லவ் பண்ண அப்ப விட இப்போ தான் இவ்வளவு அழகாக இருக்கிறாள்” என்று பார்த்து கொண்டு இருந்தான்.

 

மாதங்கி வந்தவர் இவனின் பார்வையை பார்த்து.  . “டே மங்கம்மா உன்னை வீட்டிற்குள்ளவே சேர்க்க மாட்டாள் நீ இப்படி பார்ப்பதை பார்த்தாள்” என்றார்.

 

அவள் சீரியஸ் ஆக நியூஸ் பேப்பர் படித்து கொண்டு இருந்தாள்.

 

“என் பொண்டாட்டி செம அழகு இல்லமா?என்று அவளை பார்த்து கொண்டே கேள்வியை அம்மாவிடம் கேட்டான்.

 

“மாதங்கி ஷ்ரத்தா வை அழைத்து இவன் என்னவோ கேட்கிறான் பாருமா “என்றார்.

 

ஐயோ திட்டி விடுவாளோ என இவன் திரு திரு வென விழித்தான்.

 

அவனை காப்பாற்றும் விதமாக “மம்மா” என்று பெருங்குரலெடுத்து அவர்களின் மகள் கத்தினாள்.

 

அர்ஜுன்,ராகவன்,மாதங்கி மூவரும் என்னவோ என்று பதறி விட்டனர்..இவள் பொறுமையாக பேப்பர் மடித்து விட்டு 

 

“பதறாதீங்க இது எல்லாம் ஒண்ணுமே இல்லை இதை விட சவுண்ட் ஆக எல்லாம் கத்துவா. சம் டைம்ஸ் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் வந்து திட்டி விட்டெல்லாம் போய்ருகாங்க என்று கூலாக சொல்லி விட்டு பேபி அருகில் சென்றாள்.”

 

பேபி இவள் சென்றதும் இவள் கழுத்தை கட்டிக் கொண்டு மறுபடியும் கண்ணை மூடி கொண்டது ..

 

இதற்காகவா இப்படி ஒரு ஆர்பாட்டம் என்று இவர்கள் மூவரும் பார்த்தனர்.

 

“பேபி எழுந்திரிக்கிறியா?” என்று அவளும் அவள் தலையை தடவி கொடுத்து கொண்டே கேட்டாள்.

 

“வேதாம் நான் எதுன்சா நீ ஹுல் போக சொல்வ” என்றது .

 

“குட்டி சாத்தான் எழுந்திரு நான் ஸ்கூல் போகலாம் சொல்ல மாட்டேன் அதுக்கு தான் இந்த ஆக்டிங் ஆ” என்று அவளின் தலை முடியை ஒதுக்கி கொண்டே  எழுப்பினாள்.

 

இவளின் குரல் வேகமாக வந்ததும் அது கண்ணை திறந்து அங்க அர்ஜுன் இருப்பதை பார்த்து விட்டு எழுந்து அஜ்ஜூன் என்று அவனின் மேல் தாவியது.

 

அவன் அழகாக அவளை பிடித்து கொண்டே வெளியே தூக்கி வந்து சோபா வில் அமர்ந்தான்.

 

அத்தை பால் வேண்டும் என்று ஷ்ரத்தா கிச்சன் உள் சென்றாள்.

 

“என்ன மாது உன் மருமகள் உன் மேல் பயங்கர பாசமா இருக்கா” என்று அர்ஜுன் வம்பிழுத்தான்.

 

அவனின் தோளில் ஒரு செல்ல அடி போட்டு விட்டு அவரும் கிச்சன் சென்றார்.

 

பால் கலக்கி கொண்டு வந்தால் பேபி பால் குடிக்கவே மாட்டேன் என்று ஒரே அடம் .

 

அர்ஜுன் கெஞ்சினான்,ஷ்ரத்தா கொஞ்சினாள் எதற்கும் அசரவில்லை.

 

“இப்போ என்ன தாண்டி வேணும்…?  என்றதும் காம்ப்ளான் வேண்டும் என்றது இவள் திரும்பி பாவமாக மாதங்கி ஐ பார்க்க அவர் காம்ப்ளான்லாம் வீட்டில் இல்லை .10 நிமிடம் அர்ஜுன் போய் பக்கத்து ஷாப்பில் வாங்கிட்டு வா” என்றார்.

 

அத்தை அது எல்லாம் வேணாம் கொஞ்சம் நேரம் அவளை வெளிய வாக் கூட்டிட்டு போங்க கார்டன்ல நான் அதுக்குள்ளே ரெடி பண்ணிடுவேன் என்றாள்.

 

இவர்களுக்கு குழப்பமாக போய் விட்டது காம்ப்ளான் எப்படி வீட்டில் என்று ..இவர்களின் குழப்பத்தை பார்த்து அவளுக்கு பால் புடிக்காது அதை எப்படியாவது குடிக்க வைக்க நான் அதில் பாதாம் பவுடர் சம்டைம்ஸ்  கலந்து கொடுத்துடுவேன் என்றாள்.

 

அது நான் காம்ப்ளான் சொல்லி வைத்து இருக்கிறேன் அவள் கிட்ட என்று விளக்கி விட்டு கிச்சன் சென்றாள்.

 

மாதங்கி கிச்சன் சென்று அவளுக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்து கொடுத்து விட்டு வந்தார்.

 

இவளும் பாலில் கலந்து எடுத்து கொண்டு கார்டன்க்கு எடுத்து சென்றாள்.அங்கு அவர்கள் இல்லாமல் பக்கத்தில் இருந்த உடற்பயற்சி ரூமில் இருந்தனர்.

 

அங்கு சென்று பார்த்தால் அர்ஜுன் புஷ் அப்ஸ் செய்ய அவனின் முதுகின் மேல் பேபி உட்கார்ந்து இருந்தது..அதை பார்த்ததும் அவளுக்கு பழைய நியாபகம் வந்து விட்டது .

 

இதே போல் அவளையும் உட்கார வைத்து செய்திருக்கிறான்…

 

எப்படி வாழ வேண்டிய வாழ்க்கை இப்படி ஆக்கிவிட்டானே என அவனின் மேல் கோவம் வந்தது.

 

“பேபி வந்து குடி வா “என்று சற்று கடுமையாகவே அழைத்தாள் அந்த குரலின் மாறுதலில் அவன் அவளை திரும்பி பார்த்தான்.அவளின் முகத்தில் கோவம் ,அழுகை என்ற இரு உணர்வுகளையும் அடக்கி வைத்து இருப்பது தெரிந்தது.

 

காலையில் இருந்து நல்லா தானே இருந்தால் இப்போ என்ன சடனாக வேறு மாதிரி இருக்கிறாள் என்று யோசித்து கொண்டே அவளின் அருகில் வந்தான்.

 

அதற்குள் பேபி க்கும் பசி என்பதால் பாலை குடித்து விட்டது இவள் கொஞ்சம் எக்ஸ்டிராவாகவே பால் கொண்டு வந்து இருந்தாள்.

 

அர்ஜுன் இவளிடம் வந்து” என்ன ஆச்சு” என்று கேட்டான்.

 

செய்வதை எல்லாம் செய்து விட்டு இப்போ வந்து எப்படி இவ்வளவு ஈஸியாக கேட்கிறான் என்ற கோவத்தில் கையில் இருந்த பாலை அவன் முகத்தில் ஊற்றி விட்டு சென்று விட்டாள்.

 

கார்த்திக்,விக்ரம் இருவரும் அப்பொழுதுதான் எழுந்து வாக்கிங் வந்தவர்கள் இதனை பார்த்து விட்டனர்.

 

அர்ஜுன் முகத்தை கூட துடைக்காமல் அங்கேயே அமர்ந்து விட்டான்.

 

கார்த்திக் தான் அவனின் மன நிலையை மாற்றும் பொருட்டு …”விடு மச்சான் ஆறி போன பால் தானே ஊற்றினால் அதுக்குல்லாம் இவ்வளவு சீன் இல்லை.ஷ்ரத்தா என்னவோ நல்ல மூட் போல அதான் இதோட விட்டுட்டா” என்று அவனை முகத்தை துடைக்க வைத்து உள்ளே அழைத்து சென்றான்.

 

உள்ளே சென்றால் அனைவரும் எழுந்து ஹாலில் உட்கார்ந்து ரோஹிணி யின் குழந்தையும் இருந்ததால் அதை ரசித்து கொண்டு இருந்தனர்.

 

அஜ்ஜூன் இவங்க எதக்கு பேபி ததல வாங்கி கொது என்று பஞ்சாயத்து வைத்தாள் .

 

ரோஷ்ணி தான் ஓய் வாயாடி உன் அப்பா கிட்ட சொன்னாள் நாங்க பயந்து விடுவோமா என்று வம்பிழுத்தாள்.

 

அர்ஜுன் மனநிலை முற்றிலும் மாறி விட்டது . .” ரோஷ் ஏன் என் பொண்ணுக் கிட்ட வம்பிழுக்குற” என்று சிரித்து கொண்டே கேட்டான் .

 

“பாருடா சப்போர்டா” என்று அவனையும் கலாய்த்தாள்.

 

“எங்க அப்பா ஸ்தாங் (strong)..பீம் மாதிரி ஃபைட்த் பத்துவாங்க” என்றது.

 

“ஓ அப்படியா ! யார் சொன்னா அப்படின்னு என்று இப்பொழுது ரோஹினி கேட்டு விட்டு ரோஷ்ணி க்கு ஹை- ஃபை கொடுத்தாள்.

 

“மம்மா தான் ஒரு தடவை சொன்னாங்க .. ஷ்தூல்ல என்னை ஹரி அடிச்சுத்தான்..அப்ப மம்மா சொன்னாங்க பப்பா வந்து பீம் மாரி எல்லாத்தையும் அடிப்பாங்க “என்று சொல்லி விட்டு பெருமையாக அர்ஜுன் ஐ பார்த்தாள்.

 

ஆனால் இப்பொழுது அனைவரும் ஷ்ரத்தா முகத்தை பார்த்தனர்.குழந்தை இருப்பது கூட அப்பாவிற்கு தெரிய வில்லை ஆனால் மகளுக்கு அப்பாவின் பெருமைகள் சொல்லி வளர்த்திருக்கிறாள்.

 

ஷ்ரத்தா அங்கிருந்து நகர்ந்து கிச்சன் பக்கம் வந்து விட்டாள் 

 

அதன் பிறகு நேற்று மாதிரி கார்த்திக் மடியில் பேபி உட்கார்ந்து குழந்தையை கொடுத்தனர்.

 

கொஞ்சம் நேரம் கழித்து ஷ்ரத்தா வந்து அங்கு அமர்ந்தாள்.

 

விக்ரம் ரோஷ்ணி திருமணம் முடிந்து 3  வருடம் மேல் ஆகி விட்டது ஆனால் குழந்தை இல்லை ..இப்பொழுது குழந்தைக்காக மிகவும் எதிர்பார்த்து கொண்டு இருந்தனர். 

 

 

ஷ்ரத்தா ரோஷ்ணி அருகில் சென்று அவள் காதில் கேட்டாள் .. ரோஷ்ணியும் உடனே எழுந்து ரூமிற்கு சென்றாள்.

 

இன்று அல்லது நாளை டெஸ்ட் செய்ய வேண்டும் என்று நினைத்து இருந்தாள் ..இப்பொழுது ஷ்ரத்தா சொன்னதும் உடனே டெஸ்ட் செய்ய சென்றாள்.

 

ரோஷ்ணி ரூம் உள் சென்றது ஷ்ரத்தா டென்ஷன் ஆக அமர்ந்து இருப்பது அனைத்தையும் மாதங்கி,பெரியம்மா இருவரும் கவனித்து கொண்டு இருந்தனர்.

 

ரோஷ்ணி சென்ற சிறிது நேரத்திற்குள் அண்ணி கூபிடுறாங்க என்று விக்ரமை உள்ளே அனுப்பினாள்.

 

விக்ரம் உள்ளே சென்றால் அங்கு ரோஷ்ணி கண்ணை மூடி கொண்டு பிரேக்னேன்ஸி கிட் முன்னாடி நின்று கொண்டு இருந்தாள்.

 

விக்ரம் சென்றவன் அவளின் கண்ணை திறக்க சொன்னான் .கண்ணை திறந்து முதலில் கிட்டை பார்த்ததும் பாஸிடிவ் என்று இருந்தது ..

 

அவ்வளவு தான் விக்ரமை பார்த்து “நமக்கு பேபி வர போகுது”என்று கட்டி அணைத்து முத்தமிட்டாள்.

 

விக்ரமிற்கு கண்ணே கலங்கி விட்டது அவளின் நெற்றியில் முத்தம் வைத்து தேங்க்ஸ் பேபி என்றான்.

 

காத்திருந்து கிடைத்த கிஃப்ட் என்பதால் இன்னும் ஸ்பெஷல் ஆக உணர்ந்தனர்.

 

வா வெளியே போய் சொல்லலாம் என்று ரோஷ்ணியை அழைத்தான்.

 

 

இவர்கள் இருவரும் சந்தோசமாக வெளியே வருவதை பார்த்தே ஷ்ரத்தா கண்டு கொண்டாள் ..

 

விக்ரம் நேராக வந்தவன் ஷ்ரத்தா விடம் கட்டை விரலை காட்டினான் .. ரோஷ்ணிக்கு கூட புரிய வில்லை .

 

இவர்கள் இருவரும் கோரசாக அம்மா,அப்பா,அத்தை ,மாமா நீங்க பாட்டி ,தாத்தா ஆக போறீங்க என்று கத்தினர். ரோஷ்ணியை பார்த்து கண் அடித்தான்.

 

அவ்வளவு தான் பெரியம்மா,பெரியப்பா இருவருக்கும் தலை கால் புரியவில்லை ..

 

அனைவரும் இருவருக்கும் வாழ்த்து சொல்லி விட்டு … டிபனில் ஸ்வீட் செய்ய மாதங்கி கிச்சன் சென்று விட்டார்.

 

 

அர்ஜுன் ரோஷ்ணியை அனைத்து விடுவித்து சூப்பர் கா ரொம்ப ஹேப்பி என்றான்.உணர்ச்சி வசப்படும் போது மட்டும் தான் அக்கா என்பான் அவளும் பாசமாக அவன் தலையை தடவி கொடுத்தாள்.

 

இந்த நிகழ்வை பார்த்த பிறகு ஷ்ரத்தா விற்கு ஏனோ மனதிற்குள் வெறுமை வந்து விட்டது …அது ரோஷ்ணி மேல் வந்த பொறாமை அல்ல ..

 

தான் கருவுற்றிருக்கும் போது யாரிடமும் சொல்ல கூட முடியாத நிலை .. சொன்னவர்களும் இதை கேட்டு சந்தோசப்படவில்லை .

 

இவள் மகளின் அருகில் அமர்ந்து அவளின் தலையை தடவி கொடுத்தாள்.அதற்கும் என்ன புரிந்ததோ அம்மாவிற்கு ஆறுதல் கொடுக்கும் விதமாக அவளை அனைத்து கொண்டது.

 

ஷ்ரத்தா வின் கண் கலங்கி விட்டது அதை மறைப்பதற்காக பேபி ஐ தூக்கி கொண்டு நகர்ந்து விட்டாள்.

Advertisement