சிறிது நேரம் மனைவியைப் பார்த்துக் கொண்டு நின்றவன், அந்த அறையின் ஜன்னலை சாத்த…. ஏன் என்பது போலக் கீர்த்திப் பார்க்க… அவளைக் கண்டுகொள்ளாமல் சாற்றிவிட்டு கட்டிலுக்கு வந்தவன், அவள் முன்பிருந்த தட்டை எடுத்து மேஜையில் வைத்து விட்டு, அவளைக் கைப்பிடித்து எழுப்ப… எதற்கு எனப் புரியாமல் கீர்த்தி எழுந்து நிற்க, தர்மா அவளை இறுக அனைத்திருந்தான்.
அவள் நெற்றி கன்னம் என அழுத்தி முத்தமிட்டவன், அவள் இதழில் அதிக நேரம் எடுத்துக்கொள்ள…. அவள் உண்ட திரட்சையின் இனிப்பு அவன் இதழுக்கு இடம் மாறியது. கீர்த்திக்கும் கிறக்கம் தான். ஆனால் அடுத்து அவன் இதழை அவள் கழுத்துக்கு இடம்மாற்றம் செய்ய…. அவளுக்குப் பயம் வந்துவிட்டது. அவள் பதட்டத்தை உணர்ந்து தர்மாவும் விலகி நின்றான்.