அத்தியாயம் 1
சென்னை ஓ. எம். ஆர் சாலை, நேரம் நள்ளிரவு இரண்டு மணி. ரேஸ் விட்டது போல இரண்டு கார்கள் சீறிப்பாய்ந்து செல்ல, அந்த இரண்டில் ஒன்றில் இருந்த விஷால் அதிகபடியாகக் குடித்திருந்தபடியால்… சற்றே அவனின் கவனம் சிதற, பாதையின் நடுவே இருந்த டிவைடர்ல் மோத இருந்தவன், கடைசி நொடி சுதாரித்துக் காரை திருப்ப, கட்டுபாட்டை இழந்த கார், தெருவோரம் இருந்த மரத்தில் பெரும் சத்தத்துடன் மோதி நின்றது.
எல்லாம் பத்து நிமிடங்கள் தான். பிறகு சாதாரணமாக நண்பர்களுடன் ஜோக் அடித்துக் கொண்டு வந்தான். இப்போது அவன் முகம் வசீகரமாக இருந்தது.