வீரா, அதனை பெரிது படுத்தாமல்… “எனக்கு இப்படிதான்… ரவி, மாலை, மந்திரம், பூஜை, இதிலெல்லாம் பெரிதா… ஈர்ப்பு இல்ல ப்பா…….
அங்க வந்து, எல்லா செய்யனும்… என்னால் முடியாது… ரவி…
ப்ளீஸ்… நான் ஒன்னு ஒன்னுக்கும் சத்தம் போடுவேன்… தயங்குவேன்… ஏதோ தப்பு செய்ய மாதிரி தோணும்…
என்னை விட்டுடேன்… இந்த ஒரு விஷயம் மட்டும்…….” என்றான் மன்றாட்டமான குரலில்…
பைரவிக்கு என்னமோ தோன்றியது… அவளின் மூளை இப்போது எதையோ யோசித்தது.. ‘அப்போ இவர்…இதெல்லாம் சொல்லத்தான் இப்போதும் பேசினாரா…’ என எப்போதும் போல எண்ணம் வந்தது…
அந்த இருட்டில் அவனின் முகம் பார்த்து இதனை சிந்திக்க… வீராவின் பயிற்சியும் அவளின் சிந்தனையை, அவனுக்கு உரைத்ததோ… “என்னடி யோசிக்கிற” என்றான் இத்தனை நேரமிருந்த இலகுவை கைவிட்டு…
பைரவியும் அழைக்கவில்லை… என்ன சொல்லி அழைப்பது என தெரியவில்லை… அமைதியாக அமர்ந்து கொண்டாள்..
வீரா, அங்கு தூங்கி கொண்டிருந்த, அவனின் டிரைவரை எழுப்பிக் கொண்டு தனது இருப்பிடம் நோக்கி சென்றான் வீரா. தனது பணிக்கு காலையில் செல்ல வேண்டுமே…
அவன் செல்லும் வரை… தன் வீட்டு வாசலிலேயே அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்… பின், கூர்க்க.. விசில் ஊதி வரும் சத்தம் கேட்கவும் தன் அன்னைக்கு அழைத்து… உள்ளே சென்றாள்.
நாட்கள் இப்படியே கடந்தது..
அவளுக்கு மட்டும் தயக்கமாக இருந்தது வீராவிடம் பேச… சொல்லி சென்றுவிட்டான் எல்லாவற்றையும். எனவே, என்ன செய்வது என தெரியவில்லை.. ஆனாலும் பேசவில்லை அமைதியாக இருந்தாள்.
வீட்டில் எல்லோரும் வீராக்கு, அழைத்து.. ஓய்ந்துபோய்… ஒரு வழியாக எல்லோரும் பைரவியை கேட்டனர்.. ‘எங்கு திருமணம்.. எப்படி’ என.
அப்போதுதான் புரிந்தது… ஆக, அவன் பேசமாட்டான்.. ‘எப்படியோ நீ பார்த்து செய்’ என சொல்லி சென்றிருக்கிறான் என அப்போதுதான் புரிந்தது… அவளுக்கு.
அவளும் முகம் மாறாமல்.. “கல்யாணம் அவர், சொல்ற மாதிரி நடக்கட்டும் மாமா…
நம்ம இங்கேயே ரிசப்ஷன் கிராண்டா பண்ணிடலாம்..
நான் அப்பாட்ட பேசறேன்…
இங்கே செய்துக்கலாம் மாமா…” என இருமுறை அழுத்தி சொன்னாள்…
லிங்கமும் “ஒன்னும் பிரச்சனையில்லையே..” என்றார், அவளின் குரல் பேதத்தை உணர்ந்து. கவலை தோய்ந்து இருந்ததோ… அவரின் குரல்.
நம்மகிட்ட ஆளுங்க இருக்காங்க… நான் ஏற்பாடு பண்றேன்… அந்த முதல் தேதி ஒகே தானே டா…
நீ சந்தோஷமா இரும்மா…
எதுக்கும் அலட்டிக்காத…
மாமா, இது வேணும்னு சொல்லும்மா… செய்திடலாம்…
அவன், ஒ…ன்னும்…. ஏதும் பேசிடலையே…” என்றார் வாஞ்சையாய்…
“அதெல்லாம் இல்ல மாமா… நான் நல்லா இருக்கேன்… அவர் டெய்லி நைட் பேசிடுவார் மாமா… நீங்க, வேலைய பாருங்க… மாமா” என்றாள். ப்பா இப்போதுதான் எல்லோருக்கும் திருப்தி…
அதன்பின் நேரம் நிற்கவில்லை… ராகவ், அன்று கிளம்பியிருந்தார்… இரவே வந்துவிடுவார் சென்னைக்கு…. எனவே வேலைகள் ரெக்கை கட்டி பரக்க தொடங்கியது…
அடுத்தடுத்து.. சரியாக இருந்தது வேலைகள்… தாத்தா… ரிஜிஸ்டர் மேரேஜ்க்கு ஏற்பாடு செய்தார்… கூடவே ஆஸ்ரமம் சென்று, சொல்லி வந்தார்… எனவே அவரும் அமர முடியாமல் அலைந்தார்.
வீரா வீட்டினர், அடிக்கடி சென்னை வந்தனர்… பத்திரிக்கை வைக்க, புடவை எடுக்க… விழாவின் ஏற்பாடுகள் கவனிக்க என அவர்கள் வந்து செல்ல… தண்டபாணி தாத்தா வீடு வசதியாக இருந்தது அவர்களுக்கு..
அர்ச்சனா எல்லாவற்றுக்கும் பொறுப்பாக வந்து ஆசையாக செய்தாள்…
அஞ்சலியும் பெரிதாக அலட்டாமல்.. தேவைக்கு வந்து நின்றாள்… அஞ்சலிக்கு, வீரா பற்றி தெரியாது.. காற்று வழி செய்தியாக கேட்டது மட்டும்தான் தெரியும்…
ஆனால், இப்போது புரிந்தது.. அவன் விருப்பமின்றி.. அங்கு துரும்பும் அசையவில்லை… அப்படிதான் நடந்தது…
பங்ஷனுக்கு உடை கூட இன்னும் வாங்க வரவில்லை அவன்… நாட்கள் நெருங்கிக் கொண்டிருந்தது.. இன்னும் பதினைந்து நாட்கள்தான் இருந்தது…
எல்லோரும் இப்போது ரவியை கேட்க தொடங்கினர்… ‘எப்போ வரான்’ என, என்ன சொல்ல முடியும்… இன்னும் பேசவேயில்லையே அவனிடத்தில், அவள்…
இன்று பேசிவிட வேண்டும் என… அழைத்தாள் மாலையே.. ஒரே ரிங்கில் எடுத்தான். “அர்ஜென்ட்டா…” என்றான்…
“இல்லைங்க…” என்க… “சரி, அப்புறம் கூப்பிடறேன்… கொஞ்சம் வேலை” என்றவன் வைத்து விட்டான்.
இவளுக்கு வேலையே ஓடவில்லை… கோவமோ… என இத்தனை நாள் இல்லாத எண்ணம் இப்போது வாட்டியது.
ஒரு வழியாக… இரவு அழைத்தான்… அன்றிலிருந்து அவனும் அழைக்கவில்லை அவளுக்கு… எதிர்பார்ப்புடன்தான் போனை எடுத்தால் ரவி.