அஜந்தா தொழிற்சாலை வழக்கை இன்பா எடுத்து நடத்தப்போவதாக அறிந்ததிலிருந்து தர்ஷினி அவனை தவிர்க்க ஆரம்பித்தாள். இன்பா வந்தாலே அந்த இடத்திலிருந்து சென்றுவிடுவாள் தர்ஷினி. அவன் ஏதாவது வம்பு பேசினாலும் எப்பொழுதும் போல இவளும் வம்பு பேசாமல், எந்த பதிலும் கூறாமல் ‘நீ என்ன வேண்டுமென்றாலும் பேசிக்கொள் எனக்கு ஒன்றும் இல்லை’ என்பதாக இருந்துகொண்டாள். தர்ஷினியின் இந்த பாராமுகம் இன்பாவை பாடாய்படுத்தியது.
இந்த ஒருமுறை தர்ஷினிக்காக இந்த வழக்கில் இருந்து பின்வாங்கினால், தர்ஷினி மீண்டும் மீண்டும் தன் தொழில் விஷயத்தில் தலையிடக் கூடும் என நினைத்தான். அதோடு தவறு செய்தவர்கள், தவறை திருத்திக் கொள்வதாக கூறும்பொழுது இன்னொரு சந்தர்ப்பம் அளிப்பதில் தவறில்லை எனவும் நினைத்தான்.
இன்பா அந்த தொழிற்சாலையின் உரிமையாளர் மணிஷ்பாண்டேவை நேரடியாக சந்தித்து பேசியிருந்தான். தொழிற்சாலையை மீண்டும் திறக்க உத்தரவு வந்து விட்டால் எல்லாவற்றையும் சரிப்படுத்தி விடுவதாக உத்திரவாதம் அளித்திருந்தான். அதனால் இந்த வழக்கிலிருந்து அவன் பின்வாங்குவதாக இல்லை. தர்ஷினிக்கு எப்படியாவது புரிய வைத்துவிட வேண்டும் என்று அவளிடம் பேச முயற்சி செய்ய, அவளோ இவனை நிமிர்ந்து பார்க்க கூட தயாராக இல்லை.
தர்ஷினியின் செயலில் இன்பாவுக்கு கோவம் கூட வந்தது. ‘எவ்வளவு நாள் இப்படியே இருந்து விடுவாள்? நானும் பார்க்கிறேன். உனக்குதான் முறுக்கிக்க தெரியுமா? எனக்கும் தெரியும்’ என இன்பாவும் விட்டுவிட்டான்.
அந்த ஞாயிற்றுக்கிழமையில் நசீரின் வீட்டில் இருந்தாள் தர்ஷினி. நூர்ஜஹான் ஏலக்காய் தேநீர் கொண்டு வந்து கொடுக்க, வாங்கிக் கொண்டவள், ஃபெலிஸ் தானியங்களை கொத்தி உண்பதை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“செம போர் தர்ஷினி” என்றான் நசீர்.
“உனக்கு எதுக்கு இப்போ போரடிக்குது?” எனக் கேட்டாள் தர்ஷினி.
“பின்ன…? நீயும் இன்பா அண்ணனும் பேசிக்குறதே இல்லை. தெருவே ரொம்ப அமைதியா இருக்கு. பார்க்க நல்லாவே இல்லை. டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன எப்பவும் பார்த்துக்கிட்டு இருந்த எங்களுக்கு, திடீர்னு சோக படத்தை போட்டு காமிச்சா…? அதான் போரடிக்குது” என்றான்.
அவனுக்கு பதில் கூறாமல், ஃபெலிஸை விட்டு தன் பார்வையை அகற்றவில்லை தர்ஷினி. தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வந்திறங்கினாள் சுப்ரியா. அவள் வந்த பிறகு, ஓரளவு சாதாரணமாக இருந்தாள் தர்ஷினி.
இவர்கள் மூவரும் பேசிக்கொண்டிருக்க, ரம்யா வந்து பேட்மிண்டன் விளையாட அழைத்தாள்.
“நான் வரலை” என்றாள் தர்ஷினி.
“வாக்கா அண்ணன் வீட்டில் இல்லை. எங்களுக்கு படிச்சி படிச்சி ரொம்ப ஸ்ட்ரெஸா இருக்கு. ப்ளீஸ் வாக்கா” என கெஞ்சுதலாய் அழைக்க, மூவரும் சென்றனர். அவர்கள் விளையாட தொடங்கிய சில நிமிடங்களில் இன்பா வீட்டிற்கு வந்து விட்டான். தர்ஷினி அவனை பார்க்காமல் விளையாட்டில் கவனமாக இருந்தாள்.
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சுபாஷினி தான் விளையாட விரும்புவதாக கூற, அவளிடம் ராக்கெட்டை கொடுத்துவிட்டு விலகினாள் சுப்ரியா. இன்பா சற்று தள்ளி ஒரு நாற்காலியில் அமர்ந்து தினசரியை கையில் வைத்துக் கொண்டிருந்தான். யாரும் கவனிக்காத சமயத்தில் தர்ஷினியை பார்த்துக்கொண்டிருந்தான்.
சுப்ரியா இன்பாவின் அருகில் இருந்த மற்றொரு நாற்காலியில் வந்தமர்ந்தாள்.
“தேங்க்யூ… நான் உங்களை விட சின்ன பொண்ணுதான். நீ வா போன்னே பேசுங்க” என்றாள் சுப்ரியா.
சிரித்துக் கொண்டே “ஓகே” என்றான் இன்பா.
“நீங்க அந்த கெமிக்கல் ஃபேக்டரி கேஸை…” என சுப்ரியா ஆரம்பிக்க,
“ஆமாம். உன் ஃப்ரெண்ட் அதான் என்கிட்ட முகம் கொடுத்து கூட பேசுறது இல்லை. இது என்னோட ப்ரொஃபெஷன். நீ அவளுக்கு எடுத்து சொல்லு” என்றான்.
“ப்ரொஃபெஷனல் எத்திக்ஸ் எதுவும் உங்களுக்கு கிடையாதா?” என கேட்டாள்.
“கண்டிப்பா இருக்கு. ஒரு காய்ன்க்கு இரண்டு சைட் இருக்கும். அது உங்களுக்கு புரிய மாட்டேங்குது” என்றான்.
“அப்போ நியாயமான முறையில்தான் வாதாடுவீங்களா?” என சுப்ரியா கேட்க, “கண்டிப்பா என்னோட வேலைக்கு நியாயமாதான் இருப்பேன்” என்றான்.
“அதை விட உங்க மனசாட்சிக்கு நியாயமா இருக்கிறது முக்கியம் இல்லையா?”
“இதுவரைக்கும் என் மனசாட்சி உறுத்துற மாதிரி எதையும் நான் செஞ்சது இல்ல” என்றான்.
“இனிமேல்….?”
சிரித்த இன்பா, “தி ட்ரூத் ரிப்போர்ட்டர்னா சும்மாவா…? இப்ப நீங்க என்னை இன்டர்வியூ பண்றீங்களா என்ன?” எனக் கேட்டான்.
“இல்லை கண்டிப்பா இல்லை” என சிரித்தாள் சுப்ரியா.
“அப்போ சொல்றேன். கேஸ்ல ஜெயிக்க, சில தகிடுதத்தம் வேலைகள் செய்ய வேண்டிதான் இருக்கும். உண்மையைப் பேசிதான் ஜெயிக்கிறேன்னு எல்லாம் சொல்ல மாட்டேன். என்ன பண்றது…? தீர்ப்பு கொடுக்கிற ஜட்ஜ்க்கே உண்மை தெரிஞ்சாலும், ஆதாரம் இல்லாமல் அவரால கூட சரியான தீர்ப்பு கொடுக்க முடியாது. உண்மை ஜெயிக்க கூட பல சமயங்களில் பொய்யோட துணை தேவைப் படுது” என்றான்.
“இது ஏன் இப்படி இருக்கணும்? மாத்த முடியாதா?”
“நிரபராதிகள் யாரும் தண்டிக்கப்படக்கூடாது அப்படிங்கிறதால இது இப்படிதான் இருக்கும். சரியான ஆதாரம் இல்லாம யாருக்கும் தண்டனை வாங்கி கொடுக்க முடியாது”
“நல்லா பேசுறீங்க” என்றாள்.
“அதுதானே தொழிலே” என்றான் இன்பா.
“உங்க ஃபேமிலியை பார்த்தா எனக்கு கொஞ்சம் பொறாமையா இருக்கு” என்றாள்.
“நசீர் சொல்லித்தான் உன்னை பத்தி எனக்கு தெரியும். உன்னை பத்தி தெரிஞ்சதுக்கு அப்புறம் கொஞ்சம் கஷ்டமா கூட இருந்துச்சு. எப்படி திடீர்னு உன் பேரண்ட்ஸ் இறந்தாங்க?”
“ஆக்ஸிடெண்ட்ல இறந்துட்டாங்க” என்றவள், “நான் இதுவரைக்கும் இந்த விஷயத்தை யார்கிட்டயும் சொன்னது இல்லை. உங்ககிட்டதான் ஃபர்ஸ்ட் டைம் சொல்லப் போறேன்” என்றாள்.
தினசரியை மூடி வைத்துவிட்டு, அவள் என்ன சொல்ல போகிறாள் என ஆர்வமாக பார்த்தான்.
“இல்லை… அது கனவு இல்லை. ஒருநாள் ஈவ்னிங் வானத்தை பார்த்து நின்னுகிட்டு இருந்தேன். உண்மையிலேயே என் கண் முன்னாடி நடக்கிற மாதிரி அதை என்னால பார்க்க முடிஞ்சது. ஜஸ்ட் ஃபார் ஃப்யூ செகண்ட்ஸ். அப்போ என்னால எப்படியும் நினைக்க முடியலை. பயமா இருந்திச்சி. என் அப்பாகிட்ட கூட சொன்னேன். அது பிரம்மைன்னு இக்னோர் பண்ணிட்டார். நானும் அப்படியே விட்டுட்டேன். அது உண்மையாவே நடந்துடுச்சு” என்றாள்.
“இது என்ன…? இ எஸ் பி ன்னு சொல்லுவாங்களே எக்ஸ்ட்ரா சென்சரி பெர்சப்ஷன் அதுவா…?”
“தெரியலை” என்றாள்.
“அதுக்கு முன்னாடியோ இல்ல அதுக்கு அப்புறமாவோ இப்படி வேற ஏதாவது நடந்து இருக்கா?” எனக் கேட்டான்.
“இல்ல அப்படி எல்லாம் எதுவும் இல்லை” என்றாள்.
“அப்போ அது உன் அப்பா சொன்ன மாதிரி மனப்பிரம்மையா கூட இருக்கலாம்” என்றான்.
“அப்படித்தான் இருக்கணும்” என கூறினாள் சுப்ரியா.
இதை ஏன் அவள் நண்பர்களிடம் கூட கூறாமல் என்னிடம் பகிர்ந்து கொள்கிறாள் என யோசனையாக அவளை பார்த்து, அடுத்து என்ன பேசுவது என தெரியாமல் அமைதியாக இருந்தான் இன்பா.
சுப்ரியா திரும்பிப் பார்த்தாள். யாரும் இவர்களை கவனிக்கவில்லை. விளையாட்டில் ஒன்றிப்போய் இருந்தார்கள்.
இவள் என்ன சொல்ல வருகிறாள் என அதிர்ந்து போய் அவளை பார்த்திருந்தான் இன்பா.
“என்னையும் உங்க குடும்பத்துல ஒருத்தியா… ஐ மீன்… என்னை நீங்க…”என சுப்ரியா திணறிக் கொண்டிருக்க,
“சுப்ரியா நீ என்ன கேட்க வரேன்னு எனக்கு புரியுது” என்றான்.
சுப்ரியா அவனைப் பார்க்க முடியாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.
“ஐ ஆம் சாரி. உனக்கு இப்படி தோன்ற மாதிரி நான் ஏதாவது நடந்துகிட்டேனா?” எனக் கேட்டான்.
“இல்லை உங்க மேல எந்த தப்பும் இல்லை. சொல்லப்போனா இது நடக்காதுன்னு எனக்குள்ள ஒரு இன்ட்யூசன் இருந்துச்சு. பின்னாடி எப்பவாவது கேட்டு பார்த்திருக்கலாமோன்னு நான் ரெகக்ரெட் பண்ணக்கூடாது இல்லையா…? அதான் கேட்டுட்டேன். என்னை மாதிரி ஒரு ஆர்ஃபனை…”
“ப்ளீஸ் சுப்ரியா… இப்படி எல்லாம் பேசாத. இந்த ஆர்டிகள் எழுதின சுப்ரியாவா இப்படி பேசுறது? இது வேண்டாம்னு நான் மறுக்கிறத்துக்கு காரணம், என் மனசுல வேற ஒரு பொண்ணு இருக்கா… ரொம்ப வருஷமா. இன்னும் அவ கிட்டயே நான் சொல்லலை” என்றான்.
பின்னால் மீண்டும் திரும்பி பார்த்த சுப்ரியா இன்பாவைப் பார்த்து சிரித்தாள். “எனக்கு யாருன்னு கூட ஒரு கெஸ் இருக்கு” என்றாள்.
“உன்னோட கெஸ் 100% கரெக்ட்”
“எனக்கும் டவுட் இருந்துச்சு. ஆனா ரெண்டு பேரும் எப்பவும் சண்டை போட்டுக்கிட்டே இருக்கவும், நான் இப்படி யோசிக்கலை. அவளும் என்கிட்ட எதுவும் சொன்னது கிடையாது” என்றாள்.
“இப்போ நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. இப்ப சொன்னேனா… நான் பல வருஷமா தண்ணி ஊத்தி வளர்த்துக்கிட்டு வர்ற என் காதல் செடிய வேரோடு பிடுங்கி எறிஞ்சிடுவா” என விளையாட்டாகக் கூறினான் இன்பா.
சுப்ரியா சிரித்தாலும் அவளது முகத்தில் வேதனையின் சாயல் தெரிய, “சுப்ரியா எப்பவும் நீ எங்க குடும்பத்துல ஒரு ஆள்தான். இந்த விஷயத்தை நாம மறந்துடலாம்” என்றான்.
“கண்டிப்பா… ஆல் த பெஸ்ட் ஃபார் யுவர் லவ். சீக்கிரம் சொல்லிடுங்க” என்றாள்.
பின் சிறிது நேரத்தில் விளையாட்டை முடித்து விட்டு ரவி, ரம்யா, சுபாஷினி ஆகியோர் படிக்க சென்று விட்டனர். சுப்ரியாவும் கிளம்பிவிட்டாள். நசீர் தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்க்க சென்றுவிட்டான்.
தர்ஷினி நெட்டை அவிழ்த்து கொண்டிருக்க அவளை நோக்கி நடந்து சென்றான் இன்பா.