அந்த நண்பகல் வேளையிலும் செல்வா கணக்கே இல்லாமல் டீ போட்டு குடித்து கொண்டிருந்தான்.
மண்டை அவ்வளவு சூடாகி போயிருந்தது. எத்தனை டீ குடித்தும், அந்த சூடு இறங்கவில்லை.
“ண்ணே.. போதும்ண்ணே. கஸ்டமருங்க வந்தா என்ன பண்றது? மொத்த பாலையும் நீயே காலி பண்ணிடுவ போல” என்று நிறுத்த பார்த்தான் சுப்பிரமணி.
“எவன்டா கஸ்டமரு, நான் தான் கஸ்டமரு. எனக்கு தான்டா மொத்த டீயும்” என்றவன் திரும்ப டீயுடன் அமர்ந்தான்.
நேரம் சென்றது. டீயும் கணக்கே இல்லாமல் அவனுக்குள் சென்றது. சுப்பிரமணி நொந்து போக, “ரவி என்னைப்பத்தி என்னடா நினைப்பான்?” என்று தம்பியிடம் திடீரென கேட்டான்.
“சும்மாவே அவனுக்கு என்மேல காண்டு. இதுல அவன் தங்கச்சி வேற பத்த வைச்சி விட்டிருக்கா?”
“இப்போ நீ விசாரிச்சு சொல்ற வரைக்கும் கூட எனக்கு அந்த பொண்ணு எப்படி இருக்கும்ன்னே ஞாபகம் இல்லைடா”
“பிஞ்சுடும். நான் என்ன சொல்லிட்டிருக்கேன், நீ என்ன சொல்ற”
“நீ தானேண்ணா கேட்ட?”
“டேய். எனக்கு அவளை தெரிய கூட செய்யாதுன்னு சொல்லிட்டிருக்கேன்டா. நல்லா படிச்சு நல்லா தான் இருக்கா. என்னை போய் கட்டிக்கிறேன்னு சொன்னா நம்பவே முடியலைடா. ஒருவேளை லூசா ஏதும் இருப்பாளோ?”
“நல்லா படிச்சு நல்லா இருக்கிறவங்க லூசா இருக்க வாய்ப்பில்லைண்ணா”
“ஆமா தானே? அப்பறம் என்னவாம் அவளுக்கு? நான் ஏன் அவளுக்கு”
“ஏனோ சின்ன பிள்ளையில் இருந்து பிடிக்கும். வளர வளர ஒரு கிரேஸ். இது மாறிடும்னு நினச்சேன். ஆனா இப்போ வரை மாறலை” என்று கோவில் கோபுரத்தை பார்த்தபடி சொன்னாள் முத்து நாச்சி.
செல்வாவிற்கு ஆச்சரியம் தான். “என்கிட்ட அப்படி கிரேஸா இருக்க எல்லாம் ஒன்னுமில்லை” என்று சொல்லியும்விட்டான்.
“உங்களுக்கு கூட தெரியுது, எனக்கு தான் தெரியலை” என்றாள் உதடுகள் விரிந்த புன்னகையுடன்.
“சின்ன வயசுல பிடிக்கிறது எல்லாம் ஒரு விஷயமே இல்லை, இதுக்காக போய் யாராவது கல்யாணம் பண்ணிப்பாங்களா?”
“உன்னை நீயே இழுத்து பிடிக்கிற போல. விட்டுடு. இது வேண்டாம். நான் வேண்டாம்” என்றான் செல்வா உறுதியாகவே.
முத்து நாச்சி கண்களை மூடி திறந்தவள், “இழுத்து பிடிச்சேன் தான். உங்ககிட்ட நான் வராம இருக்க, ம்ப்ச். முடியல. இப்போ உங்க முன்னாடி தான் நான் நிற்கிறேன்” என்றாள்.
“இவ்வளவு கஷ்டப்பட்டு ஏன்? உனக்கென்ன குறைச்சல்? குட் லூக்கிங், நல்ல படிப்பு, நல்ல ஜாப். நானெல்லாம் அசால்ட்டு. விட்டுட்டு நல்ல வாழ்க்கையை அமைச்சுக்க பாரு”
“நீங்க தான் என்னோட அந்த நல்ல வாழ்க்கைன்னு நான் சொன்னா?” பெண் இப்போது அழுத்தம் திருத்தமாகவே கேட்டாள்.
“நான் கஷ்டப்படுறேன் தான். ஆனா அதுக்கு மீனிங் நீங்க சொல்றது இல்லை. உங்ககிட்ட இப்படி கேட்டு நிற்கிறதுக்காக”
“இத்தனை வருஷம் ஆகியும் எனக்கு உங்க மேல வந்த பீலிங்ஸ், உங்களுக்கு என் மேல வரலை. அப்போ என்னோட லவ். அது என்னன்னே எனக்கே தெரியலை”
“சின்னது, பெருசுன்னு என்னோட எல்லா கனவுகளிலும், எல்லா நிலையிலும் நீங்க இருந்திருக்கீங்க. இப்போ உங்க இடத்தில என்னால வேற ஒருத்தரை வைக்க முடியலை. அது எனக்கு நானே செஞ்சிக்கிற துரோகமா இருக்கு”
“பருவத்துல தான் பன்னி குட்டி கூட அழகா இருக்கும்ன்னு சொல்வாங்க. ஆனா இப்போ நான் பருவத்துலயும் இல்லை, நீங்க பன்னி குட்டியாவும் இல்லை. என்னை என்னதான் பண்ண சொல்றீங்க” என்று அவனிடமே கேட்டாள்.
“என்கிட்ட கேட்டா. நான். நான் என்ன சொல்ல?” செல்வாவிற்கு இதென்னடா என்றிருந்தது.
“அதான் என் நிலைமையும். எனக்கு நானே பதில் சொல்றது கஷ்டம். உங்களுக்கு சொல்லிக்கலாம். சோ சொல்லுங்க. உங்களுக்கு இஷ்டமில்லையா?”
“ஆ.. ஆமா.. ஆமா தான்”
“இப்போ என்ன பண்ணலாம்?”
“ஹேய் நீ என்ன எல்லாத்துக்கும் என்னையே கேட்டுட்டு இருக்க?”
“வேற யாரை கேட்க? நீங்க தானே எல்லாத்துக்கும் காரணம். நீங்க ஏன் என் கண்ணுக்கு அழகா தெரிஞ்சிங்க? ஏன் என்னை ரசிக்க வைச்சீங்க? ஏன் என் கனவுல எல்லாம் வந்தீங்க?”
“இதென்ன புது பித்தலாட்டமா இருக்கு”
“ஆமா இவரை அப்படியே வாரி சுருட்ட தான் பித்தலாட்டம் பண்றோம்”
“வேற எதுக்காம்?”
முத்து நாச்சி நிதானித்திற்கு வந்தவள், “ஆமா அதுக்கு தான்” என்றாள்.
“நீங்க பேசி எதையும் நான் புரிஞ்சுக்க போறதில்லை. எனக்கு நானே கேட்டுகிட்ட கேள்விகளை விட நீங்க புதுசா ஏதும் கேட்டு என்னை திருத்த முடியாது. சோ விட்டுடுங்க” என்று தளர்ந்து போய் தான் சொன்னாள்.
‘விவகாரமா இருக்கும் போலயே’ செல்வா மெல்ல அவளின் அருகில் வந்தவன், “ஆமா என்ன பிரச்சனை உனக்கு?” என்று கேட்டு வைத்தான்.
முத்து நாச்சி அவனை மேலிருந்து கீழ் பார்த்தவள், “நீங்க மட்டும் ஒரு ஆளை பார்த்திட்டு போயிருந்தா லவ் பெயிலியர்னு தெளிஞ்சிருப்பேன். இனி அதுக்கும் வாய்ப்பில்லை” என்றாள்.
“இப்போ கூட வேற பொண்ணு பார்த்திடவா” செல்வா தீவிரமாக கேட்டான்.
“டூ லேட் பாஸ். நான் தான் உங்ககிட்ட வந்துட்டேனே. இனி நான் தான் உங்க பொண்ணு, பொண்டாட்டி எல்லாம்” முத்து நாச்சி தெளிவாகவே சொன்னாள்.
“அப்போ என் இஷ்டம், முடிவு”
“உங்க இஷ்டம், கஷ்டம், தொடக்கம், முடிவு எல்லாம் இனி நானே” என்றாள் கையை தூக்கி ஆசீர்வதிப்பவளாக.
செல்வாவிற்கு அவள் பாவனையில் மெல்லிய புன்னகை கூட வந்தது. அப்படியே கீழே சம்மணமிட்டு அமர்ந்து கொண்டவன், “ஏன் பொண்ணுங்களுக்கு எல்லாம் எங்களை மாதிரி ஆளுங்க மேலே இந்த லவ் வருது” என்று நிமிர்ந்து பார்த்து கேட்டான்.
முத்து நாச்சி அவன் முன் மண்டியிட்டு அமர்ந்தவள், “எனக்கு பிடிக்க ஆரம்பிச்சப்போ நீங்க இப்படி இல்லையே” என்றாள்.
“இதுவும் என்னோட தப்பு தான் இல்லை” என்றான் செல்வா சிரித்தபடி.
“நிச்சயமா” முத்து நாச்சி சொல்ல, இருவருக்கும் புன்னகை தான்.