Advertisement

முகிழ் – 6

 

அவரிடம் இருந்து அந்த கேஸ் சம்மந்தப் பட்ட கோப்பை வாங்கி சென்றவள் உடனடியாக யாரிடமும் சொல்லாமல் ஒரு பூங்காவிற்கு சென்றாள். அங்கே தன்னை தனிமை படுத்திக்கொண்டு அந்த கோப்பை புரட்டியவள் எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியாமல் திணறினாள்.

 

இறுதியாக பாதிக்கபட்டவரின் எண்ணிக்கையை கணக்கிட்டவள் திடுக்கிட்டாள், 47 நபர்கள் இதுவரையிலும்.

 

இந்த சம்பவத்தை அறிய, முதல் முடிச்சை அவிழ்பதே சரியாக இருக்கும் என்றெண்ணி முதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரை சந்திக்க கிளம்பினாள்.

 

அதில் இருந்த கோப்புகளில், சிலரது புகை படம் இருந்தது, பலருடைய புகை படம் இல்லாதிருந்தது. பத்திரிக்கை நிறுவனத்திடம் இதுபோல செய்திகளில் 75% சதவீதம் புகை படம் கொடுக்க விருப்பம் காட்டமாட்டார்கள் என்பதை உணர்ந்து அவள் இந்த கேசில் பல முடிச்சுகள் இருப்பதையும் உணர்ந்தாள்.

பிறகு தாமதிக்காது, முதல் நபரின் வீட்டை நோக்கி பயணமானாள்.

 

ஆதித்யன் க்ரூப்ஸ் ஆப் கம்பெனியில் அன்றைய நேர்காணலுக்கு வந்திருந்த வேறு ஒரு ரிபோர்டரை சந்தித்த ஆதி, கோவத்தின் உச்சிக்கு சென்றான், மதி வேண்டுமென்றே தான் வராமல் இருகின்றாள் என்று எண்ணினான். அவளுக்கு தான் எத்தனை அலச்சியம், அவள் கர்வத்தை அடக்காமல் விடுவதில்லை என்று சூளுரைத்தான்.

 

தன்னுடைய சந்திப்பிற்கு தவமிருப்பவர்களையே சந்தித்து பழக்கப்பட்டவன், இன்று மதி வராமல் இருந்தது, கோவிலில் அவனை எதிர்த்து பேசி அவன் பதிலுக்கு காத்திராமல் சென்றது என அவன் மனக்கண்ணில் வலம் வந்தது.

 

ஆதி, கோவத்தை கட்டுபடுத்த தெரிந்தவன். அவன் முகத்தில் என்ன இருகின்றது என யாராலும் புரிந்துக் கொள்ளமுடியாதபடி சம நிலையில் வைக்கும் வித்தை அறிந்தவன்.

 

ஆனால் நடந்த 2 சந்திப்புகளில் மதியிடம் மட்டும் அவனின் ஏளனம் அவன் கண்களே அவளுக்கு பறைசாற்றியது.

 

இப்போதும் அவனின் திறமை கொண்டு, எதிரில் இருப்பவனிடம் (ரிப்போர்டர். சிநேகன் ப்ரம் சத்யம்) கோவத்தை காட்டாது, அவனுக்கு தகுந்த பதில் குடுத்துக் கொண்டிருந்தான். சுமார் 1 மணி நேரம் நடந்த பேட்டியில் சிநேகன், ஆதித்யனின் தீவிர விசிறியாகி போனான்.

 

ஆதித்யனின் லாவகமான பேச்சு, கேள்வி கேட்பவரை அசரடிக்க வைக்கும் பதில், ஆட்களை எடை போடும் பார்வை, மற்றவர்களை அவன் இல்லா நேரத்தில்லும் வேலைப் பார்க்க வைப்பது, இந்த எக்ஸ்போர்ட்ஸ் அண்ட் இம்போர்ட்ஸ் மட்டும் அல்லாது, பல ரிசொர்ட் களும் அவன் நடத்திக்கொண்டு இருக்கிறான் என்பதை அறிந்து பிரமித்து போனான்.

 

இங்கே மதியோ, பாதிக்கப்பட்டவரின் உறவினரை சந்தித்து விபரம் சேகரித்துக்கொண்டிருந்தாள். அவள் எதிர் பார்த்த விவரங்கள் கிட்டாது போயினும் கிடைத்த நூற்களை கொண்டு வலை பின்ன வேண்டும் என திட்டமிட்டாள்.

 

அதன் பிறகு சில புகை படங்கள் எடுக்க எண்ணி அவளிடம் கேமரா இல்லாது போக, யாரை அழைக்கலாம் என்று சிந்திதவள், சினேகனுக்கு அழைத்தாள்.

 

பேட்டி முடிந்த தருணம், சரியாக சிநேகனது தொலைப்பேசி அழைக்க, ஆதித்யனின் பார்வை தன் இச்சையாக சினேகனின் தொலைப்பேசி திரையை தீண்டியது.

அழைப்பது மதி என்பதை அறிந்த ஆதியின் முகத்தில் கடும்மை பரவ ஆரம்பித்தது. “ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ் மீஎன்று ஆதியிடம் பணிவாக கூறி விட்டு அழைப்பை ஏற்ற சிநேகன், “சொல்லு மதி, இல்ல என்னோட வொர்க் டன். சோ உனக்கு ஹெல்ப் பண்றதுல ஏதும் பிரச்சனை இல்லைஎன்று கூறி முடித்தான். “ஒகே மதி நீ ஆதித்ய குரூப் ஆப் கம்பனிக்கு வந்துரு, வில் வெயிட் இன் என்ட்ரன்ஸ்என்று இயல்பாக கூறிய சிநேகனிடம் ஆதித்யனின் பார்வை நிலைத்திருந்தது.

 

இறுதியாக ஆதியிடம், சிநேகன் அவனின் விசிறியாகி போனதையும் இந்த 1 மணி நேரத்திற்கு நன்றியையும் கூறி விடைப்பெற்றான். ஒரு சிறு புன்னைகையுடனும், தலை அசைவுடனும் அதை ஆதித்யன் ஏற்றுக் கொண்டான்.

 

வெளியில் மதிக்காக காத்திருந்த நிமிடங்களில், ஒரு சில மலை வாழ் மக்களை சந்தித்த சினேகன், அவர்கள் சென்னையில் எப்படி என்னும் யோசிக்கும் பொழுதே அவர்கள் அவனை நெருங்கி, “க்ரிஷ்ணவ் அய்யாவை பார்க்கணும்ங்கஎன்று கூறினார்கள்.

 

க்ரிஷ்ணவ் என்று சினேகன் சிந்திக்கும் பொழுதே, ஹெல்மெட்டுடன் தனது ஸ்கூட்டியில் வந்த மதி, சிநேகனிடம் விவரம் கேட்க, அவனோ, “க்ரிஷ்ணவ்னு யாரையோ கேட்குறாங்க மதிஎன்றான்.

 

ஆதித்யன் குரூப் ஆப் கம்பெனியோட எம்.டியை தான் கேட்குறாங்கஎன்று கூறினாள்.

 

இந்த தொழில் வட்டாரத்துல அவர் பெயர் மிஸ்டர் ஆதித்யன் னு தான் நம்ம எல்லாருக்கும் தெரியும். பட் அவரோட முழு பெயர் மிஸ்டர்.ஆதித்ய க்ரிஷ்ணவ், அவரைத்தான் தேடி வந்திருப்பார்கள்என்று கூறியவளை விநோதமாக பார்த்தான் சினேகன்.

 

அதை கண்டுக்கொண்ட மதி அவசரமாக, அன்று தான் அவரை பேட்டி காண சென்ற பொழுது அவரது டேபிள் மீதிருந்த பெயர் பலகையில் பார்த்ததாக கூறினாள்.

 

வேகமாக யோசித்த சினேகன், “அப்படியும் இருக்கலாம் ஏனென்றால் இன்று பேட்டி நடந்த இடம் கான்பிரன்ஸ் ரூம்என்று மனதிற்குள் மதி சொல்வதை ஒப்புக்கொண்டான்.

 

அந்த மலை வாழ் மக்களுள் ஒருவர், “நம்ம க்ரிஷ்ணவ் அய்யாவ எல்லாருக்கும் தெருஞ்சிருக்கே அம்பூட்டு உசத்தியானவரு நம்ம அய்யாஎன்றனர். மற்றொருவர், “ஆமாம் க்ரிஷ்ணவ் அய்யா ரொம்ப தங்கமானவருஎன்று ஒரு முதியவர் கூறினார்.

 

அந்த வார்த்தைகள், “க்ரிஷ்னவு அய்யா ரொம்ப தங்கமானவருமதியின் காதுகளில் ஒலிக்க தொடங்கியது. அவளது மனம் அடுக்கம் காட்டு பகுதி நோக்கி பயணிக்க தொடங்கியது.

அவள் மனம் ஒரு நிலையில் இல்லாமல், அந்த பெரியவரின் வார்த்தையே அவளுக்கு கேட்க தொடங்கியது. ஆதலால் இந்நிலையில் வண்டி ஓட்டுவது இயலாது என கருதி, அவளுக்கு கொஞ்சம் உடல் நலம் சரி இல்லை என்றும் அதனால் வண்டியை சினேகன் ஓட்டுமாறு மதி கேட்க, சிநேகனோ யோசித்து விட்டு அவளது வண்டியை அங்கயே பார்கிங்யில் நிறுத்திவிட்டு தன்னுடன் பைக்கில் வருமாறு கூறினான்.

 

மதியும் யோசித்து விட்டு, வேலை முடிய இரவு ஆகிவிடும், அப்போது கண்டிப்பாக ஆதித்யன் இங்கு இருக்க போவதில்லை. பிறகு வந்து எடுத்துக் செல்லலாமென கருதியவள், அவளது வண்டியை ஆதித்யனின் நிறுவனத்தில் நிறுத்தி விட்டு சினேகனுடன் கிளம்பினாள்.

 

அவள் செல்வதை ஆதித்யன் அவன் அறையின் கண்ணாடி வழி பார்த்துக்கொண்டிருந்தான்.

 

சிநேகனின் பைக் முன்னேற தொடங்கியதும், மதியின் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தது அடுக்கம் காட்டு பகுதிக்கு.

 

குறுஞ்சி ஆண்டவர் கோவிலில் அவனை சந்தித்த அன்று மதியால் அவனை பின் தொடர்ந்து போக முடியவில்லை. அவளது தோழிகள் தாமதம் ஆகிவிட்டது என்று அவளை அழைத்து இல்லை இல்லை இழுத்துச் சென்றுவிட்டனர்.

 

கிட்ட தட்ட 2 வாரங்கள் அவளின் கண்களில் ஆதித்யன் படாமல் விதி ஆட்டம் காண்பிக்க மதி அவனை எப்படி அறிவதென சிந்தனையோடு மலை வாழ் மக்களை பற்றி செய்திகள் சேகரிக்க சென்றாள். அங்கு சென்று அவர்களின் தொழில் பற்றி கேட்கும் பொழுது அவர்கள் கூறிய பதில் அவளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

 

இந்த காலக் கட்டத்தில், அழகிய தங்கும் விடுதிகள் (ரிசார்ட்) அமைப்பதற்காக காடுகளையும் காடு சார்ந்த பகுதிகளையும் அழித்து மனிதனின் அடிப்படை தொழில், விலங்குகளின் உறைவிடம் இவ்வற்றை அழிக்கும் மனிதர்களையே எதிர்பார்த்து வந்த மதிக்கு அவள் எதிர்ப் பார்ப்பை பொய்யாக்காமல் சில ரிசார்ட்டுகளின் தகவல்கள் கிடைத்தது.

 

ஆனால் இன்று அவளுக்கு கிடைத்த தகவல், விலங்குகளின் உறைவிடத்தை அழிக்காமல், அங்கு இருபவர்களின் அடிப்படை தொழிலையும் அழிக்காமல் மேற்க கொண்டு இப்போது கட்டிகொண்டிருக்கும் ரிசார்ட்டுக்கு சொந்தக்காரன் அவர்களின் ஓய்வு நேரத்தில் அதில் அவர்களுக்கு பணிநியமனமும் செய்வதாக கூறியுள்ளான் என்று அவர்களின் பேச்சிலிருந்து புரிந்துக்கொண்டாள் மதி.

 

அவனது பெயரை கேட்ட பொழுது, அவர்கள் க்ரிஷ்ணவ் என்றுக் கூறினர். மேலும் அங்கிருந்த ஒரு முதியவர், “எங்கள க்ரிஷ்னவு அய்யா ரொம்ப தங்கமானவருஎன்றுக் கூறினார்.

மதி, இது தான் பார்த்த க்ரிஷ்ணவ்ஆ இல்லை வேறு யாருமா என்று யோசித்துக் கொண்டு இருக்கையில் அவர்களில் ஒருவர் தூரத்தில் இருக்கும் குடிலில் நுளைபவனை பார்த்து, “அது தான் எங்க க்ரிஷ்ணவ் அய்யாஎன்று கூறினார்.

 

அவன்….அவனே தான்.” என்று அவள் மனம் சந்தோஷ கூச்சலிட, ‘க்ரிஷ்ணவ்என்று ஒருமுறை அவளது உதடு அவன் பெயரை உச்சரித்தது.

 

மதியின் மனதில் ஆயிரம் பட்டாம் பூச்சிகள். இனம் புரியா சந்தோசம், அவள் ஏன் அத்தன்னை சந்தோஷ படுகிறாள் என்று அவள் யோசிக்கவில்லை. க்ரிஷ்ணவ் பற்றி அவள் அறிந்துக் கொண்டாள். அவனின் தொழில்யை அறிந்துக் கொண்டாள். அதற்காக தான் சந்தோசம் என்று அவள் மனம் நம்பியது.

 

அவள் தெரிந்துக் கொள்ள ஆசைப்பட்டதை தெரிந்துக் கொண்டாள். அவ்வளவே. அதற்கு மேல் எதுவும் இல்லை என நம்பினாள்.

 

இப்படியே ஆதித்யனின் அன்றாட செயல்களை அவ்வபோது மதி கவனித்து வந்தாள். அவளை அறியாமலே அவள் ஆதியின் விசிறியாகி போனாள். இப்படியே சில வாரங்கள் சென்றது. இன்று வரை ஆதியின் முன் மதி தன்னை வெளிபடுத்திக் கொள்ளவில்லை. என்ன சொல்லி வெளிப்படுத்துவது. உன்னைசைட்அடிகிறேன், உனது தீவிர விசிறியாகி போனேன் என்றா. அப்படி சொல்ல நேர்ந்தால் மதியின் கவுரவம் என்ன ஆவது.

 

அப்படியே அவள் போய் சொன்னாலும் அவன் மதியை பற்றி என்ன எண்ணக் கூடுமோ இப்படியே அவள் உழன்றுக் கொண்டிருந்தாள்.

 

இன்னும் மூன்றே நாட்களில், மதி இந்த பகுதி விட்டு கிளம்பவேண்டும். அவளது ப்ராஜெக்ட்டும் நிறைவு பெற வேண்டிய நாள் நெருங்கிற்று. ஆதியின் மேல் காதல் இல்லை என நம்பினாள்.  அவன் செய்யும் நற்செயல், அவனின் ஆளுமை திறன் இது தான் அவளை அவன் பால் இழுத்தது. அது காதல் இல்லை என தனக்கு தானே சொல்லிக் கொண்டாள். அவனுடன் பேச வேண்டும் அவ்வளவே. ஒருவேளை அவனிடம் பேசினால் நிச்சயமாக இந்த ஈர்ப்பு குறைந்து விடுமென நம்பினாள்.

 

அவனிடம் தன்னை ஒரு காலேஜ் ஸ்டுடென்ட் என்று அறிமுகம் செய்துக் கொண்டு ரிசார்ட் பற்றி விவரம் சேகரிப்பதற்காக அவனிடம் வந்ததாக பாதி பொய்யும் பாதி மெய்யும் கலந்து சொல்லாம் என முடிவெடுத்து அவன் தங்கி இருக்கும் குடில் நோக்கி பயணித்தாள்.

 

அவன் தங்கியிருக்கும் குடில் கொஞ்சம் தனிமை வாய்ந்தது. நக்ஷத்திரம் போல வடிவமுடைய அக்குடிலில் தங்கித் தான் அவன் ரிசார்ட் வேலையை மேற்பார்வை பார்த்தான்.

இதே போலவே ரிசார்ட்டில் பல இடங்களில் குடில் அமைக்க வேண்டும் என்பது அவனது திட்டமென கேள்வி பட்டிறிந்தாள். அவன் தனியே வசிக்கும் இடத்திற்கு செல்வது முறையா என்ற கேள்வி எழும்பினாலும், அதை தவிர்த்து அவனை பேட்டி காணவே செல்வதாக மனதினுள் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டாள்.

 

அவன் தங்கிருக்கும் பகுதி வரை சென்றவள், நுழைவாயிலில் நின்று சிந்தனையோடு ஏறிட்டு கொண்டிருந்தாள். அப்பொழுது இருவர் அவசர அவசரமாக வர, மதிக்கு ஏதோ உள்ளுணர்வு தோன்ற ஒரு மரத்தின் பின்னல் மின்னலென மறைந்தாள்.

 

அவர்களும் அதே மரத்தின் கீழ் வந்து ஆசுவாச பெரு மூச்சு விட்டனர். அவர்களுள் ஒருவன்தலைவா உன்ன அன்னைக்கு கோயில எல்லார் முன்னாடியும் அடிச்சவன சூப்பரா பழிவாங்க திட்டம் போட்டுட்ட, உன்மேல கை வச்சவனுக்கு இது தேவை தான்என கூறினான்.

 

உடனே மற்றொருவன், “ஆமம்ட எம்புட்டு துணிச்சலிருந்தா என்மேல கைவைப்பான் ********* அவனலாம் ***” என்று மேலும் சில கீழ் தரமான வார்த்தைகளை உபயோகப்படுத்தினான்.

 

மேலும் தொடர்ந்தான், ” அன்னைக்கு எனக்கு அவன் அடிச்ச அடி ஷாக் அடிச்சமாதி இருந்துச்சு, ஆனா இப்ப ஹி ஹி அவனுக்கு உண்மையிலே ஷாக் வச்சுட்டேட, அந்த சுச்சிய தொட்டது அவன் பரலோகம் போறத யாராலும் தடுக்க முடியாதுஎன்று கூறிக்கொண்டே அவர்கள் இருவரும் வேகமாக சென்று மறைந்தனர்.

 

இதைக் கேட்டுக் கொண்டிருந்த மதி ஸ்தம்பித்து நின்றாள். மறுகணம் வேகமாக தனது ஸ்கூட்டியை கிளப்பிக்கொண்டு அவன் குடில் நோக்கி விரைந்தாள்.

 

அவள் கண்களில் அவன் தென்பட்டான். அப்பொழுதும் மதிக்கு முதுகு காட்டிக் கொண்டு தான் நின்றிருந்தான்.

அவள் அவன் குடில் அருகில் முன்னேறிய தருணம் அவன் கை வெராண்டாவில் இருந்த சுவிட்ச்யை தொட்ட மறுநொடி ஆதித்யன் வீசி எறியப்பட்டான்.

 

அவன் மண்ணில் சரியவும், க்ரிஷ்ணவ்என்ற அழைப்புடன் மதி சர்ர்ர்ர்ர்ர் என்று தனது வண்டியை பிரேக் போடவும் சரியாக இருந்தது.

 

Advertisement