banumathi jayaraman
Well-Known Member
ஹா... ஹா... ஹா.............பானுமதி analysis பிரமாதம். James Bond பிச்சை வாங்கணும்.
தரணிக்கு மண்டை கிறுகிறுன்னு சுத்துதாம் . அவங்க கீழே விழுந்து அடிப்பட்டா
நீங்கதான் பொறுப்பு. சொல்லிட்டேன்.
Monies எல்லா characters மேலேயும் சந்தேகப்படுறாங்க
சமீரா நிவேதாவின் அம்மா அப்படீங்கறாங்க.
எனக்கு என்னவோ அங்கே இருந்து இதைஎல்லா பார்த்துக்கிட்டிருந்த
ஐயர் மேலேதாங்க சந்தேகம்.
போயும், போயும், கல்யாணம்
பண்ணி வைக்க வந்த ஐயர்
மீது=தானா, உங்களுக்கு
சந்தேகம், பிரசன்னாராஜா மேடம்?
அவர் ஏதோ பாவம், கல்யாணத்தை
செய்து நாலு காசு தட்சிணை
வாங்கிண்டு சிவனேன்னு,
போறவரைப் போய், இப்படி
சொல்லிட்டீங்களே,
பிரசன்னா மேடம்?
நிவி @ நிவேதாவை அடிக்க
உரிமை உள்ளவர்கள் நான்கு
பேர் மட்டுமே, பிரசன்னா மேடம்
நிவியை அடிக்க உரிமையுள்ள
முதலாவது ஆள், சுபாஷ்
அவன் எந்தக் காலத்திலையும்
மனைவியை அடிக்கணும்னு
கை தொடமாட்டான்
ஏன்னா, தன்னோட ரேஞ்சுக்கு
நிவேதா மாதிரி, ஒரு பணக்கார,
அழகுப் பெண், சகல வசதிகளுடன்
தனக்கு மனைவியாக வந்ததே
பெரிது=ன்னு நினைச்சு, மனைவிக்கு
தோப்புக்கரணம் போடுபவன்,
இந்த சுபாஷ்
அடுத்து, அண்ணன் குரு
குருமூர்த்தி, பாசமுள்ள
அண்ணனாகத்தான், இருக்கிறான்
ஆனால், தங்கை அப்படியில்லையே
அதனால் குரு, அடிப்பதற்காகக் கூட
தங்கையை கை தொட மாட்டான்
அடுத்து, அப்பா கிருஷ்ணமூர்த்தி
ஒரே மகளின் மீது ஓவரா பாசம்
வைத்துள்ள, கண்மூடித்தனமான
பாசம் வைத்துள்ள கிச்சுப்பா,
நிவேதாவை அடிக்க மாட்டார்
இன்று விஜி டியர் கொடுத்த அடுத்த
எபியிலும், நாலு பேர் முன்னாடி,
பெண்ணை அடித்ததற்காக
மனைவியைத்தான் கோபித்துக்
கொண்டாரேத் தவிர, மகளை
ஒன்றும் சொல்லவில்லை
நாலு பேர் முன்னாடி அண்ணியை,
நிவி பேசுவாளாம்
வீட்டில் போய் இவர் அவளைக்
கண்டிப்பாராம்
என்னய்யா, நியாயம் இது?
எஞ்சி இருப்பது, சுலோச்சனாம்மாதான்
நிவி நல்லது செய்யும்பொழுது
அவள் செய்ய மாட்டாள், அது வேறு விஷயம்
யாரும் கண்டுக்க மாட்டாங்க
அதே அது, நிவி செய்யும் தப்புக்குப்
பெண்ணை வளர்த்திருக்கிறார்=ன்னு
சுலோ அம்மாவுக்குத்தானே,
ஏச்சும், பேச்சும் வரும்
அது ஒரு காரணம்
இரண்டாவது, மகன் மீது
சுலோம்மாவுக்குப் பாசம் உண்டு
அவனோட மனைவியை, மகள்,
இழிவாகப் பேசினால், பார்த்துக்
கொண்டு சும்மா நிற்பாரா?
ஏற்கனவே, இந்திரா மீது இவருக்கு,
சுலோம்மாவுக்கு, நல்ல பெண்
என்ற நல்ல அபிப்பிராயம்தான்,
பிரசன்னா மேடம்